வராஹமிகிரரின் "பிருகத் ஜாதக'த்தில் செவ்வாய் "வக்ரா' என்றும். ஒரு இளமையான, கொடூர கண்களுடைய நிலையற்ற மனமுடையவர் என்று குறிப்பிடுகிறார். செவ்வாய்மீதான இத்தகைய அபிப்பிராயங்கள் ஒருவரை, இது சக்திமிக்க கிரகம் மட்டுமின்றி, துன்பத்தை மட்டுமே தருகின்ற கிரகமென சந்தேகம் கொள்ளவைக்கிறது.
ஆனால், வெளிப்படையான எதையும் நேருக்குநேராக சொல்லிவிடும் குணமுள்ள செவ்வாயை, நாம் அவ்வாறு எண்ணலாகாது. அவரது சுறுசுறுப்பு மற்றும் திறமை வியக்கத் தக்கதாகும்.
கோள்களுக்குள் முதன்மை படைத் தளபதியாக போற்றப்படும் செவ்வாய் பகவான், மகாவிஷ்ணுவால் தனக்களிக்கப் பட்ட அடிப்படை குணங்கள் மற்றும் கடமைகளால், சந்தேகமற ஜோதிடவுலகில் பிரபலமான இடத்தில் இருக்கிறார். அவரது தாக்கம் இவ்வுலக வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், செயல்பாடுகளிலும் இல்லாமல் இருப்பதில்லை. உண்மையைக் கூறவேண்டுமானால், நவீன உலகின் பிரதிநிதியாக செவ்வாய், ஒருவர் மட்டுமே திகழ்கிறார்.
அப்பேற்பட்ட செவ்வாய், தீயகோள் என சித்தரிக்கப்படுவது வருத்தப்படவேண்டிய ஒன்று. இன்னும் சிலரால், ராசி மண்டலத்தின் சேட்டைக்கார பையன் என செவ்வாய் அழைக்கப்படுமளவுக்குப் போய்விடுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. அவர் பலமிழந்த நிலையில் இருந்தாலொழிய, துஷ்டத்தனங்கள் செய்யமாட்டார். ஏன்? தேவர்களுக்கு குரு, வல்லவன், நல்லவன், குலக்கொழுந்து என்றெல்லாம் போற்றப் படும் தேவகுருவான குருவேகூட பலமிழந்த நிலையில் துஷ்டத்தனம் செய்யத்
வராஹமிகிரரின் "பிருகத் ஜாதக'த்தில் செவ்வாய் "வக்ரா' என்றும். ஒரு இளமையான, கொடூர கண்களுடைய நிலையற்ற மனமுடையவர் என்று குறிப்பிடுகிறார். செவ்வாய்மீதான இத்தகைய அபிப்பிராயங்கள் ஒருவரை, இது சக்திமிக்க கிரகம் மட்டுமின்றி, துன்பத்தை மட்டுமே தருகின்ற கிரகமென சந்தேகம் கொள்ளவைக்கிறது.
ஆனால், வெளிப்படையான எதையும் நேருக்குநேராக சொல்லிவிடும் குணமுள்ள செவ்வாயை, நாம் அவ்வாறு எண்ணலாகாது. அவரது சுறுசுறுப்பு மற்றும் திறமை வியக்கத் தக்கதாகும்.
கோள்களுக்குள் முதன்மை படைத் தளபதியாக போற்றப்படும் செவ்வாய் பகவான், மகாவிஷ்ணுவால் தனக்களிக்கப் பட்ட அடிப்படை குணங்கள் மற்றும் கடமைகளால், சந்தேகமற ஜோதிடவுலகில் பிரபலமான இடத்தில் இருக்கிறார். அவரது தாக்கம் இவ்வுலக வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், செயல்பாடுகளிலும் இல்லாமல் இருப்பதில்லை. உண்மையைக் கூறவேண்டுமானால், நவீன உலகின் பிரதிநிதியாக செவ்வாய், ஒருவர் மட்டுமே திகழ்கிறார்.
அப்பேற்பட்ட செவ்வாய், தீயகோள் என சித்தரிக்கப்படுவது வருத்தப்படவேண்டிய ஒன்று. இன்னும் சிலரால், ராசி மண்டலத்தின் சேட்டைக்கார பையன் என செவ்வாய் அழைக்கப்படுமளவுக்குப் போய்விடுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. அவர் பலமிழந்த நிலையில் இருந்தாலொழிய, துஷ்டத்தனங்கள் செய்யமாட்டார். ஏன்? தேவர்களுக்கு குரு, வல்லவன், நல்லவன், குலக்கொழுந்து என்றெல்லாம் போற்றப் படும் தேவகுருவான குருவேகூட பலமிழந்த நிலையில் துஷ்டத்தனம் செய்யத்தான் செய்கிறார் என்பதை நாம் மறக்கலாகாது.
ஜோதிட மேதை டாக்டர் பி.வி. ராமன் செவ்வாயை பூமியின் மைந்தன் எனப் படும் "பூமிபுத்ரா' என்றும், இரத்தத்தைக் கட்டுப்படுத்துபவனாக "ருத்ர'னென்றும், எரியும் நிலக்கரியென்ற "அங்காரக'னென்றும், மூர்க்கமான முகத்தோற்றம் உடையவன் எனப் பொருள்படும் "லோகிடங்கா' என்றும் குறிப்பிடுகிறார்.
மேலும் செவ்வாய் திருமண விஷயத்தில், அவரது அனுகூலமற்ற தாக்கத்தால் ஏற்படும் செவ்வாய் தோஷத்தால் அனைவராலும் அறியப்பட்டவராவார்.
இயற்கையில் அசுபராகிய செவ்வாய், தைரியம், வீரம், பொது அறிவு, உணர்ச்சி, மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தனம், பலம், சுய தைரியம், சகிப்புத்தன்மை, "துணிந்து செல், நிமிர்ந்து நில்' என்ற உத்வேகம், விவாத குணமுள்ள ஆசிரியத் தன்மை, அதிரடியான நகைச்சுவை உணர்வு, கஷ்டம் எதையும் திட்டமிட்டு நிறைவேற்றும் தன்மை, நிகழ்ச்சிகளை, விழாக்களைத் திறன்பட ஏற்பாடு செய்கிற திறமை, சுதந்திரமான செயல்பாடுகள், தலைமைக்கான தகுதிகள், வெற்றிபெற நினைக்கின்ற உழைப்பு மற்றும் முனைப்பு, இயங்குதல், தீ, வெப்பம், உந்துதல், ஊக்குவித்தல், கட்டுமானம், சுயகட்டுப்பாடு, பயமின்மை, உயர்ந்த எண்ணம் மற்றும் தியாக குணம் போன்றவற்றை பலம்மிக்க, நல்ல நிலையிலுள்ள, அனுகூலமிக்க நிலையில் அமர்ந்து அந்த அதிர்ஷ்டமுள்ள ஜாதகரை, வாழ்வில் கஷ்டங்களிலிருந்தும், நஷ்டங்களிலிருந்தும், இறுக்கமான நிலைகளிலிருந்தும் விடுவித்துவிடுகிறார். அதன்காரணமாக அந்த ஜாதகரை அதிர்ஷ்டத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றுவிடுகிறார்.
பெருந்தன்மை மிக்கப் பேராளன் செவ்வாய், ஒருவரை தைரியமிக்கவராகவும், வீரம் மிக்கவராகவும், எவராலும் வெல்ல முடியாதவராகவும், பயத்தாலும், ஆபத்து களாலும் பாதிப்படையாதவராகவும், தடைகளை தைரியத்தோடு எதிர் கொள்பவராகவும், எதிலும் எச்சரிக்கை உடையவராகவும் இருக்கச்செய்கிறது. என டாக்டர் பி. வி.ராமன் மேலும் கூறுகிறார். நமது செவ்வாயைப் பற்றிய கூற்றையும் நியாயப்படுத்துகிறார்.
ஒரு இயற்கை பாவராக, அனுகூலமற்ற நிலையில் செவ்வாய் என்ன செய்கிறாரெனப் பார்ப்போம். எச்சரிக்கை உணர்வில்லாது, சிந்தித்து செயல்படாதவராகவும், பிறருக்கு அடங்கி நடப்பதையும், பிறரால் கட்டுப்படுத்துவதை விரும்பாதவராகவும், தன் நடவடிக்கைகளில் பிறரின் தலையீட்டை வெறுப்பவராகவும், துரதிர்ஷ்டம், விவகாரம், வழக்குகள், எதையும் துணிவுடன் எதிர்க்கும் தன்மை, தவறான தகுதியற்ற தலைமை, விபத்துகள், நேர்மையற்ற காமவுறவு, வெட்டுக்காயம், புண்கள், அறுவை சிகிச்சை, ரத்தம் வீணாகுதல், உடல்வலி, சட்டப்படி தண்டனையடைதல், அடாவடித் தனம், சண்டையிடுதல், தரக்குறைவான பேச்சு, வெட்கங்கெட்ட தன்மை, கொடுமையான, மூர்க்கத்தனமான, போர்க்குணமுள்ள, ஓய்வற்ற, பொறாமை யுள்ள, அடிபணியாத, சட்டத்தை மதிக்காத, சுயக்கட்டுப்பாடற்ற, கர்வமிக்க, கோப முள்ள, நிலையற்ற மனமுடைய, கடினமான மனமுடையவராகவும், போராட்டம் மற்றும் குழப்பவாதியாகவும் ஆக்கிவிடுகிறார்.
மேலும் மேற்கண்ட துர்குணங்களை ஜாதகருக்குத் தந்து, தேவையற்ற வீண் விவகாரங்களில் தலையிடவைத்துத் துன்பங்களுக்கு ஆளாக்கி துரதிர்ஷ்டசாலியாக்குகிறார் என்றால், அது செவ்வாய் வலுவிழந்த நிலையில் மட்டுமேயாம்.
மேஷம், விருச்சிகம் ஆகிய இரு ராசிகளுக்கு அதிபதியான செவ்வாய், இளைய சகோதரர் மற்றும் பூமிகாரகனும் ஆவார். இவ்விரு ராசிகளில் செவ்வாய் நமது வாழ்க்கையின் தொடக்கத்தொடும், முடிவொடும் அதாவது ஆரோக்கியம், சக்தி மற்றும் ஆயுளோடும் தொடர்புடையவராகி றார். எனவே, ஒருவரின் ஆயுள், ஆரோக் கியத்தை ஜாதகத்தில் ஆராயும்போது ஆயுளுக்கு காரணியான 1-ஆம் பாவம், 8-ஆம் பாவம், சூரிய- சந்திரர்கள் மற்றும் செவ்வாயைக் கருத்தில்கொள்ள வேண்டும். நல்ல நிலையிலுள்ள செவ்வாய் ஒருவரின் நல்லாரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை உறுதிசெய்கிறது என்றால் மிகையாகாது.
இவ்விடத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது யாதெனில், மேஷ ராசியானது செவ்வாயின் நேரிடையான அல்லது சாதகமான, அனுகூலமான பலன்களை யாள்கிறது. மேலும் இந்த ராசியில்தான் எதிர்ப்பு குணமுள்ள கிரக சக்திகளான, சூரியன் உச்சமும் சனி நீசமும் அடைகின்றனர் என்பதை நமது ஜோதிடப் பார்வையிலிருந்து விலக்கிவிடக்கூடாது. ஏனெனில், இக்கோள்களும் ஆயுள், ஆரோக்கியத்தை ஆள்பவர்கள்தானே. எனவே, மேஷம் ஒரு சக்திமிக்க ராசியாக திகழ்கிறது. இங்கு பலமிக்க பல கிரகங்கள் கூடியிருக்க, அந்த ஜாதகர் எல்லாராலும் மதிக்கப்படுபவராக வும், உயர்ந்த நிலையை உடையவராகவும் இருப்பார், மேலும், மேஷம் லக்னமாகி, அதில் சந்திரனும் புதனும் இடம்பெற, மிகப்பெரிய அளவில் அதன் விசேஷ குணங்களை ஜாதகருக்கு அளித்துவிடுகிறது.
விருச்சிக ராசினது ஸ்திர ராசி. நீர்ப் பிடிப்பான இது செவ்வாயின் எதிர்மறையான விளைவுகளைக் கையாள்கிறது. மேற்சொன்ன சந்திரன் நீசம், புதன் இணைவு விருச்சிக ராசியில் ஏற்பட, ஜாதகரை- அவர் தவறுகளே செய்திருந்தால்கூட எளிதில் எவரும் ஒன்றும் செய்துவிடமுடியாது. மேலும், விருச்சிக ராசியில் எந்தவொரு கோளும்- அது நற்கோளாக இருந்தால்கூட தனது இயற்கை நற் குணங்களையிழந்து, தனது தசாகாலங்களில் ஜாதகருக்குக் கஷ்டங்களைக் கொடுத்துவிடுகிறது.
ஒவ்வொரு கிரகமும் தனது தகுதிக்குத் தக்கவாறு தனித்தனி வழிகளில் நம் பாவங் களுக்குத் தக்க தண்டனையை அளிக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும்.
உதாரணமாக, சனி தனது தடை, தாமத குணத்தால், மனதளவில் இன்னலுறச் செய்து தண்டித்துவிடுகிறான். ஆனால் செவ்வாயோ, மற்றவர்களுடன் சண்டைபோடச் செய்து, வழக்கு விவகாரங்களில் ஈடுபடவைத்து, பல சிக்கல்களைக் கொடுத்து தண்டிக்கிறார். இது உடலளவிலானது. இதன் காரணமாக நாம் பொறுமையிழந்து, உணர்ச்சிவசப்பட்டு கோபமுறச் செய்து துன்பமளிக்கிறான்.
ஆனால், கோள்கள், பரிசுகளும் தந்து மகிழ்வதுண்டு. சனி நமக்குப் பொறுமை யையும், கட்டுப்பாட்டையும், ஒருமுகத்தன்மை யையும் அளித்து மகிழ்விக்கிறது. மேலும், அவன் மனிதகுலத்துக்கும், கடவுளுக்கும் நாம் ஆற்றவேண்டிய கடமைகளை உணர்த்துகின்றன.
செல்: 97891 01742