பூர்விக சொத்து யோகம்! -முனைவர் முருகு பாலமுருகன்

/idhalgal/balajothidam/ancestral-wealth-yoga-munaivar-murugu-balamurugan

வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் என்பார்கள். அவர்கள் சேர்த்துவைத்த புண்ணியங்கள் இன்றைய தலைமுறையினரைக் காப்பது போல, அவர்கள் செய்த பாவ காரியங்களும் நம்மைப் பாதிக்கத்தான் செய்யும். நாம் வாழும் வாழ்க்கை சுகமானதாக இருக்கவேண்டும் என்பதுபோல, நமக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறையினரும் சுகமாக வாழவேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம்.

சிலர் தம் முன்னோர்கள் சேர்த்துவைத்த சொத்துகளை வாழையடி வாழையாக காப்பாற்றி, பெருக்கிக்கொண்டே வந்து கோடீஸ்வரராகவும், குபேரராகவும் வாழ்கின்றனர். இப்படி பூர்வீகச் சொத்து களை அனுபவிக்கக்கூடிய யோகம் எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை. எப்படி முன்னோர் செய்த நற்செயல்கள் நமக்கு நல்ல வாழ்க்கையையும், பலனையும் தருகிறதோ அதுபோல, அவர்கள் செய்த பாவ காரியங்களால் பூர்வீக வழியில்

வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் என்பார்கள். அவர்கள் சேர்த்துவைத்த புண்ணியங்கள் இன்றைய தலைமுறையினரைக் காப்பது போல, அவர்கள் செய்த பாவ காரியங்களும் நம்மைப் பாதிக்கத்தான் செய்யும். நாம் வாழும் வாழ்க்கை சுகமானதாக இருக்கவேண்டும் என்பதுபோல, நமக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறையினரும் சுகமாக வாழவேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம்.

சிலர் தம் முன்னோர்கள் சேர்த்துவைத்த சொத்துகளை வாழையடி வாழையாக காப்பாற்றி, பெருக்கிக்கொண்டே வந்து கோடீஸ்வரராகவும், குபேரராகவும் வாழ்கின்றனர். இப்படி பூர்வீகச் சொத்து களை அனுபவிக்கக்கூடிய யோகம் எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை. எப்படி முன்னோர் செய்த நற்செயல்கள் நமக்கு நல்ல வாழ்க்கையையும், பலனையும் தருகிறதோ அதுபோல, அவர்கள் செய்த பாவ காரியங்களால் பூர்வீக வழியில் அனுகூலப் பலனை அடையமுடியாமல் எத்தனையோ பேர் அவதிபடத்தான் செய்கிறார்கள்.

பூர்வீக வழியில் புண்ணியங்களை அடைய அவரவர்களின் ஜெனன ஜாதகத்தில் ஐந்தாம் பாவமானது பலமானதாக அமைய வேண்டும். தாய்- தந்தையர் சேர்த்துவைத்த சொத்துகளில் மகனுக்கும், மகளுக்கும் எவ்வளவு உரிமை உள்ளதோ அதைவிட உரிமை பேரன்- பேத்திகளுக்கே அதிகமாக உள்ளது.

aa

ஒருவரது ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் பாவாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும், நட்பு வீட்டில் இருந்தாலும், பூர்வீகச் சொத்து கண்டிப்பாக இருக்கும். 5-ஆம் வீட்டையும், 5-ஆம் அதிபதியையும் குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்வதுமூலம் பூர்வீக வழியில் அனுகூலங்கள் அதிகரிக்கும். 5-ஆம் அதிபதி கேந்திர திரிகோணாதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்றோ, சேர்க்கைப் பெற்றோ அமைந்திருந்தாலும் பூர்வீக வழியில் அனுகூலங்கள் இருக்கும்.

ஒருவர் ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி வலுவாக அமையப் பெற்று தந்தை ஸ்தானமென வர்ணிக்கப்படக்கூடிய 9-ஆமிடமும் சாதகமாக அமையப்பெற்று, தந்தைகாரகன் சூரியன் பலமாக அமையப்பெற்றால், தந்தைவழியில் மூதாதையர் சேர்த்த சொத்துகளை அனுபவிக்கக்கூடிய உன்னதமான நிலை உண்டாகும்.

குறிப்பாக தந்தைகாரகன் சூரியன் பலமிழந்தாலோ, சூரியன், ராகு அல்லது கேது சேர்க்கைபெற்றோ, சூரியனின் வீடான சிம்மத்தில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்றாலோ, தந்தைக்கு தோஷத்தை யும், தந்தைவழியில் பூர்வீக சொத்துகளை அடைய தடைகளையும் ஏற்படுத்தும்.

ஒருவர் ஜாதகத்தில் 5-ஆமிடம் பலமாக இருந்த தாய்காரகன் சந்திரனும், தாய் தானமான 4-ஆமிடமும் வலுவாக இருந்தால், தாய் வழியில் பூர்வீக சொத்தை அடையக்கூடிய யோகம் உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி 4-ஆம் அதிபதியுடன் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும், 4-ஆம் அதிபதியின் சேர்க்கை பெற்றிருந்தாலும் பூர்வீகச் சொத்துகளை அனுபவிக்கக்கூடிய யோகம் உண்டாகும். 5-ஆம் அதிபதி 10-ஆம் அதிபதியும் பரிவர்த்தனைப் பெற்றிருப்பதால், மூதாதையர்கள் செய்த தொழிலை வம்சா வழியாக ஜாதகரும் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். பூர்வீக தொழில் யோகமும், அதன்மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகமும் உண்டாகும்.

5-ஆம் அதிபதி பலமாக அமையப்பெற்று 6-ஆம் அதிபதியுடன் சேர்க்கை பெற்றாலோ, 6-ல் இருந்தாலோ, 5-ஆம் அதிபதி கேது சேர்க்கை பெற்றிருந்தால் சொத்து கள் தொடர்பாக வம்பு, வழக்குகளை சந்தித்து வெற்றிபெற நேரிடும். அதுவே 5-ஆம் அதிபதி பலகீனமாக இருந்து 6-ஆம் அதிபதியின் சேர்க்கைப்பெற்றால் சில தேவையற்ற வம்பு, வழக்குகளைச் சந்தித்து, அதனால் பூர்வீக சொத்துகளை இழக்க நேரிடும்.

ஐந்தாம் அதிபதி நீசம் பெற்றாலும் 6, 8, 12-ல் அமைந்து பலகீனமாக இருந்தாலும் பாதக ஸ்தானத்தில் அமைந்தாலும் பூர்வீக சொத்துவகையில் அனுகூலமானப் பலன்கள் ஏற்படாது.

அதுபோல சனி, ராகு போன்ற பாவிகள் 5-ல் அமையப்பெற்றாலும், 5-ஆம் வீட்டை சனி பார்வை செய்தாலும் பூர்வீக வழியில் அனுகூலங்கள் இருக்காது. குறிப்பாக சனி 5-ல் இருப்பது தோஷம் என்றாலும், சனி தன் சொந்த வீட்டிலிருந்து அது 5-ஆம் பாவமாக இருந்தாலும், லக்னாதிபதியாகி 5-ஆம் வீட்டை பார்வை செய்தாலும் கெடுதியைக் கொடுக்காமல் பூர்வீக வழியில் நற்பலனைத் தருவார்.

நவகிரகங்களில் சகலவிதமான தோஷங்களை விலக்கக்கூடிய குருபகவானின் பார்வை 5-ஆம் வீட்டிற்கோ, 5-ஆம் அதிபதிக்கோ இருந்தால் பூர்வீக வழியில் சிறிதளவாவது அனுகூலங்கள் ஏற்படும்.

bala201224
இதையும் படியுங்கள்
Subscribe