கரசை
இந்தக் கரணத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் திட்டமிட்டு செயல்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் சிறந்த பேச்சுத்திறனுடன் அதிகம் பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
அதிதேவதை - பூமி
மிருகம் - யானை
கிரகங்கள் - குரு, சந்திரன்
மலர் - செம்பருத்தி
ஆகாரம் - பால்
ஆபரணம் - மாணிக்கம்
தூபம் - நீலவுண்டை
வஸ்திரம் - கருப்பு
பாத்திரம் - ஈயம்
கிழமை - வியாழன்
தேவதை - பூமிதேவி
யானையின் உருவம் கண்ணில் படும்படியான போட்டோக்கள், பொம்மை கள், ஓவியங்கள் வீட்டில் இருப்பது சிறப்பாகும். கதவு, ஜன்னல் போன்றவற்றில் யானையின் உருவப் படம் இருப்பதுபோல போட்டுக்கொள்ளலாம். சில கோவில்களின் வாசலில் யானை உருவம் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அந்தக் கோவிலின் தெய்வத்திற்கும் கரசை கரணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். இந்தக் கரணத்தில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க கஜமோட்ச ஸ்தலங்களை வணங்கலாம். கபிஸ்தலம் வரதராஜப் பெருமாள் கோவில் வழிபாடு சிறப்பு.
கரசைக் கர்ணத்தில் பிறந்தவர்களுக்கு எக்காலத்திலும் எதிர்பாலினத்தின்மீது விருப்பம் இருக்கும். இதனால் எதிர்பாலின நண்பர்களால் திடீர் பாதிப்பையும் இவர்கள் அடைவார்கள். விருப்ப உணவு முறைகளைப் பொறுத்து இவர்களின் உடல் அமைப்பு இருக்கும். ஏழ்மையில் இருந்தவர்களும் பணக்காரர்களாக மாறுவார்கள். பொது மக்களுக்காகவும், நிர்வாகம் சார்ந்த மேடைப் பேச்சுகளையும் சிறப்பாக பேசுவார்கள் இவர்கள். சாஸ்திர அறிவும், பெரும் அறிவாளிகளின் மீது மிகுந்த ஈர்ப்பும் உடையவர்கள். பாரம்பரிய நிகழ்ச்சிகளில் இவர்களின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும். இதனால் பலவிதமான சந்தோஷத்தையும் அடைவார்கள். கரசைக் கரணத்தில் பிறந்தவர்கள் போட்டியாளர்களை வெல்லக்கூடிய சக்தியையும் மன உறுதியையும் பெறுகிறார்கள். தேர்தலில் வெற்றிபெறுவதற்கும், முகூர்த்தத்துக்கும் இக்கரணம் சிறந்ததாகும் கற்பனைத் திறன் அதிகம் கொண்டவர்கள் இந்தக் கரணத்தில் பிறந்தவர்கள் என்பதால் ஓவியம், சிற்பம், கவிதை, நாடகம் போன்ற கலைகள் சம்பந்தமான துறைகளில் சாதிப்பார்கள். அவற்றால் சந்தோஷப்படுவார்கள். இவர்களுக்கு கொஞ்சம் சலன புத்தி இருக்கிறது.
ஜாதகர் ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். ஜாதகர் பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். .அதிக கவனமாக இருந்தால் மட்டுமே வாழ்வில் நிம்மதி ஏற்படும். கரசையில் பிறந்தவர்களுக்கு அரசாங்கத்தின்மூலம் பணவரவுகள் கிடைக்கும். அரசாங்க உதவிகள் கிடைக்கும். எதிரிகளை எளிதில் வெல்லக் கூடும். எல்லாருக்கும் உதவும் தர்ம சிந்தனை உடையவர்களாக இருப் பார்கள்.
இந்தக் கர்ணத்தில் பிறந்தவர்களுக்கு பிரச்சினைகள் வரும்போது பால் அன்னம், பால் சாதம் போன்றவற்றை தெய்வத்துக்கு படைத்து பிரார்த்தனை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.
மேலும் கருப்பசாமி கோவிலுக்கு கருப்பு துணி வாங்கிக் கொடுக்கலாம். ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்பவர்களுக்கு கருப்பு ஆடையை தானமாக கொடுக்கலாம். பூஜையறையில் சிறிய யானை படத்தை வைக்கலாம். பூஜையறைக் குள் உள்ள தெய்வங்களுடன் கரணநாதனின் தெய்வங்களையும் வைக்கலாம். நித்திய பூஜைகளில் செம்பருத்திப் பூக்களை வைத்து மாலையாக கோர்த்து வழிபட்டு வரலாம். வழிபாடு செய்து பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை பயன்படுத்தலாம்.
நீங்கள் வழிபடும் தெய்வத்திற்கு பாலாபிஷேகம் செய்து நீல உருண்டைப் பொடியை ஈய பாத்திரத்தில் கலக்கி அபிஷேகம் செய்து கருப்பு துணிகொண்டு அலங்கரித்து மாணிக்க மாலை அணிவித்து பாலால் செய்யப்பட்ட படையல் வைத்து செம்பருத்தி பூக்களை அர்ச்சித்து வழிபட்டுவர தெய்வம் மனம் குளிர்ந்து கரணநாதன் பூரண பலமடைகிறார். யானைக்கு உணவு கொடுப்பதும், யானையிடம் நீங்கள் ஆசீர்வாதம் பெறுவதும் உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். உங்களால் முடிந்த அளவுக்கு யானைக்கு பராமரிப்பு செலவு கள் செய்வது நல்லது.
எந்த சூழ்நிலையிலும் நீங்கள் யானைக்கு எந்தவிதத்திலும் துன்பத் தையோ அல்லது தொல்லையோ தரக் கூடாது. எந்த ஒரு சுபகாரியத்துக்கு செல்லும் பொழுதும் அருகிலுள்ள விநாயகரை வழிபாடு செய்துவிட்டு போகும் போது வெற்றி கிடைக்கும். வருடத்திற்கு ஒரு முறையாவது காரைக்குடி அருகிலுள்ள திருப்பத்தூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிள்ளையார்பட்டிக்கு சென்று கற்பக விநாயருக்கு சதுர்த்தி திதியன்று அருகம்புல் மாலை சாற்றி விநாயகரின் மூல மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்துவர வேண்டும். சிதறு தேங்காய் உடைப்பது அவர்களுக்கு ஒரு சிறப்பான பலனைத் தரும்.
கட்டுரை மற்றும் ஜோதிடம் தொடர்பாக பேச:
90802 73877