மேஷம்

உங்களின் 4-ஆமிடத் தில், குரு உச்சம் அடைந்து இருப் பின், பெற்றோர் மூலம் நிறைய தங்க நகை கிடைக்கும். உங்களின் குரு நீசமாகி இருப்பின், தங்க நகைகள் கிடைப்பது சிரமம் தான். அப்படியே சின்ன நகை கள் செய்தாலும், அதில் நீலக் கல் பதித்து நகை அணியவும். அப்போது, அங்கு நீசபங்கம் ஏற் பட்டு, நகைகள் சேர ஆரம்பிக்கும். அல்லது நகை இழப்புகள் ஏற்ப டாமலும் ஆகும். மேஷத்திற்கு, வைரம் பற்றி பேசும்போது மேஷத்தின் 12-ஆமிடத்தில், சுக்கிரன் உச்சம் ஆவார். ஒன்று உங்களின் வைர நகைகள் லாக்கரில் இருக்கும். அல்லது முதலீடாக சென்றுவிடும். சுக்கிரன் மேஷத் தின் 6-ஆமிடத்தில் நீசமடைவார். எனவே வைர நகை கள் நிரந்தரமாக அணிந்துகொள்ள விரும்பும், மேஷ லக்னத்தார், வெறும் வைரக் கற்கள் மட்டு மின்றி, மரகதக் கற்களை சேர்த்து நகைசெய்து அணிந்தால், நகை சேதாரம் இன்றியும், திருட்டுப் போகாமலும் இருக்கும். மகா லட்சுமி தாயாரை குங்குமம் கொண்டு வணங்கவும்.

dd

ரிஷபம்

உங்களின் உடன் பிறந்த சகோதரர்கள் நிறைய தங்க நகை, வரை நகைகள் வாங்கிக்த் தருவர் அல்லது உங்களுக்கு வரும் மருமகள் நிறைய வைர நகையோடு வருவார். உங்கள் ரிஷப லக்ன ஜாதக அடிப்படை அமைப்புப்படி, குரு, உங்களின் 9-ஆமிடத்திலும், சுக்கிரன் 5-ஆமி டத்திலும் நீசம் அடைவர். எனவே, அனேக ரிஷப லக்ன, ரிஷப ராசியாருக்கு, பிறந்த வீட்டில் நகை நட்டு கிடைக்க வாய்ப் பிருக்காது. உங்க ளின் உடன்பிறப் புகள், வளர்ந்து ஓரளவு நல்ல நிலைக்கு வந்த வுடன், நகை யோகம் கூடிவரும். மகாலட்சுமியை கற்கண்டு கொண்டு வணங்க வும்.

மிதுனம்

உங்கள் ஜாதகப்படி, குரு 2-ஆமிடத்தி லும், சுக்கிரன் 10-ஆமிடத்திலும் உச்சம் பெறுவர். எனவே, உங்கள் குடும்பமும் சரி, உங்கள் வாழ்க்கைத் துணையும் சரி, ஏதோ ஒருவகையில், தங்க ஆபரணத் தொழில் சம்பந்தம் பெற்றிருப்பர். இதற்கு மாறாக குரு 8-லும், சுக்கிரன் 4-லும் நீசம்பெற்றிருப்பின், பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டிலும் பேப்பரில்கூட நகை என எழுத முடியாது. நகை விருத்தி உண்டாக மகாலட்சுமி தாயாருக்கு. பச்சை சேர்த்த கதம்பம் வாங்கி கொடுத்து வணங்கவும்.

கடகம்

உங்கள் கடக லக்ன, கடக ராசியில் குரு உச்ச மடைவார். எனவே உங்களின் சுய முயற்சியில், தங்க நகை வாங்கி சேர்த்துவிடுவீர்கள். வைர ஆபரணத்தை பொறுத்தவரை, உங்கள் தந்தை, கடனை உடனை வாங்கி, உங்களுக்கு வைர நகைபோட்டு விடுவார். உங்களின் தங்க நகையைக் குறிக்கும் குரு 7-லும், சுக்கிரன் 3-லும் நீசம் அடைந்திருப்பதால், உங்கள் வாழ்க்கைத் துணை, உங்களின் இளைய உடன்பிறப்பால் நகை இழப்பு ஏற்படும். எனவே இவர்களிடம் நகையை கொடுத்தால் திரும்ப கிடைக்க வாய்ப்பில்லை. கவனம் தேவை. மகாலட்சுமி தாயாருக்கு பன்னீரும், பன்னீர் புஷ்ப சரமும் வாங்கி கொடுத்து வணங்கவும்.

சிம்மம்

இந்த சிம்ம லக்னம், சிம்ம ராசி எப்போதுமே ஒரு எறுக்கு மாறு ராசிதான். நகை விஷயத்திலும் பாருங்கள். தங்க நகைக்குரிய குரு 12-ஆமிடத்தில் உச்சமாகிறார். வைர நகைக்குரிய சுக்கிரன் 8-ஆமிடத்தில் உச்சமாகிறார். வௌங்கினாப்புலதான். மறைவு ஸ்தானங்களில், உச்சம்பெற்ற கிரகம் என்ன செய்ய ஏலும்? ஒன்று நிறைய தங்க, வைர நகை கிடைத்தாலும், அதனை அனுபவிக்க முடியாது. ஒன்று லாக்கரில் மறைத்து வைத்துவிடுவர். அல்லது எங்காவது பதுக்கி வைத்து புதையலைப்போல் பாது காப்பர். அல்லது முதலீடாக மாற்றிவிடுவர். இது சர்க்கரை வியாதி உள்ளவருக்கு, ஒரு தட்டு நிறைய கிடைத்த இனிப்பு கதையாகத் தான் இருக்கும். குரு 6-ஆமிடத்தில் நீசமும், சுக்கிரன் 2-ஆமிடத்தில் நீசமும் அடைவ தால், நகை இருக்காது. இருந்தாலும் கடனுக்கு அனைத்தும் போய்விடும். அல்லது வீட்டிலிருந்து, திருட்டுப் போய்விடும். மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபமேற்றி வணங்கவும்.

கன்னி

கன்னி ராசிக்கு தங்க நகைக்குரிய குரு, இவர் களின் லாபஸ்தானத்தில் உச்சமடைவார். இவ்விதம் உச்சமடைந்த குரு, இவர்களின் பிறந்த இடம் மற்றும் புகுந்த வீட்டில் தங்க ஆபரண இருப்பைச் செழிக்கச் செய்வார். இதேபோல் சுக்கிரன் உச்சமாகி இருப்பின், வைர நகைகளும் வளமாக இருக்கும். கணவர் அல்லது தந்தைமூலம் வைர நகை சேர்க்கை உண்டாகும். இதே குரு நீசமானால், பரம்பரையே, நகைகளை கண்ணால் பார்க்க இயலாது. சுக்கிரன் லக்னத்தில் நீசமாவதால், வைரத்தை அது இருக்குமிடம் அருகில்கூட செல்ல முடியாது. மேலும் இவர்கள் வைர நகைகளை பயன்படுத்தவும் கூடாது. மகாலட்சுமி தாயாருக்கு துளசியும், மரிக் கொழுந்தும், ஜாதி மலரும் சேர்த்த கதம்ப பூச்சரம் வாங்கி கொடுத்து வணங்கவும்.

துலாம்

துலா லக்னத்துக்கு தங்க நகைகாரக குரு, உங்களின் தொழில் ஸ்தானத்தில் உச்சம் அடைவார். எனவே, இந்த உச்ச குரு, உங்களை தங்கம் சம்பந்த தொழில், வேலை, கமிஷன், அடகு பிடிப்பது, தங்க கடன் என இவை சம்பந்தத்தில் ஈடுபடச் செய்வார். நகை என்பது கௌரவம் தரும் விஷயமாக ஆகிவிடும். சுக்கிரன் உங்களின் 6-ஆமிடத்தில் உச்சம் ஆவார். அதனால் துலா ராசி, துலா லக்னத்தார் எக்குத் தப்பில் வைர நகை வாங்கினாலும், உடனே தொடர்ச்சியாக பயன்படுத்தக்கூடாது. வைர நகையை கொஞ்சகாலம் அணிந்து பாருங்கள். அது உங்களுக்கு சரிப்பட்டு வந்தால், அதனை வீட்டில் வைத்துக்கொள்ளவும். ஒருவேளை வைர நகை வந்த நேரம், ஏதேனும் கெட்ட செய்தி, இன்னல் வீட்டில் ஏற்படின், கொஞ்சமும் தயங்காமல், வைரத்தை திருப்பிக் கொடுத்து விடுங்கள். இது துலா லக்னத்துக்கு மட்டுமல்ல, எல்லா ராசி, லக்னத் துக்கும் பொருந்தும். துலா லக்னத்துக்கு 4-ல் நீசமாகும் குரு, வீடு விஷயமாக நகையை விற்கச் செய்வார். 12-ல் நீசமாகும் சுக்கிரன், வைரம் சம்பந்தமான வீண் விரயம், வெட்டி அலைச்சல், அபவாதம் என இவற்றைத் தருவார். பெரும்பாலும், நீச சுக்கிரன், வைரம் பக்கம்கூட தலை வைத்து படுக்கவிட மாட்டார். மகாலட்சுமி தாயாரை வெள்ளைநிற மலர்களுடனும், இனிப்புக்களுடனும் வணங்கவும்.

விருச்சிகம்

இந்த விருச்சிக லக்னத்துக்கு 9-ஆமிடத் தில் குரு உச்சமாவார். இந்த உச்ச குரு பரம்பரை, பூர்வீக நகைகளை பத்திரமாக பாதுகாத்து, உங்களுக்குத் தருவார். ஏதோ ஒருவகையில் தங்க நகை, தங்க காசு அதிர்ஷ்டமுள்ளவர்களாக இருப்பீர்கள். இதேபோல் வைரத்துக்குரிய சுக்கிரன் 5-ஆமிடத்தில் உச்சமடைவார். இதன் மூலமும் பரம்பரை வைர நகைகள் புழங்கும் யோகம் உண்டு. அல்லது வைர கற்கள் வியாபாரம் செய்யும் குடும்பம் வாழ்க்கைத் துணையாக அமையும். இதே குரு நீசமானால், போட்டி, பந்தயம், ஒப்பந்தம், தவறான தகவல் போன்றவற்றால் நகை இழப்பு ஏற்படும். சுக்கிரன் நீசமானால் அரசியல் அல்லது மறைவான துணை தொடர்புகளால் வைர இழப்புண்டு. இந்த விருச்சிக ராசிக்கு, சுக்கிரன் உச்சமடைந்தால், காதல் விஷயமாக வைர மோதிரம் கிடைக்க வாய்ப்பு வரும். மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்து வணங்கவும்.

தனுசு

தனுசு லக்னத்தாருக்கு, குரு 8-ஆமிடத்தில் உச்சமடைவார். இந்த உச்ச குரு, உங்களுக்கு தங்க நகை புதையலை அள்ளி கொடுப்பார். இது உங்கள் பிறப்பு ஜாதக அமைப்புப்படி தங்க புதையல், அல்லது ஒரேயொரு தங்க காசு கிடைப்பது என்று அமையும். இதில் இன்னொரு விஷயம், தனுசு லக்ன, ராசிக்காரர் களுக்கு நிறைய தங்க நகை இருப்பினும், அதனை அனுபவிக்கும் யோகம் அவ்வளவாக கூடிவராது. உச்ச சுக்கிரன், தாய்வீட்டில் வைர நகைகளை அள்ளித்தருவார். அல்லது உங்கள் தாயாரின் வைரக் கம்மலாவது உங்களுக்கு கிடைத்துவிடும். நீச குரு, நகை வாங்க காசு பணமே இல்லாமல் பண்ணிவிடுவார். பின் எங்கிருந்து நகை வாங்கமுடியும்? நீச சுக்கிரன், ஏதோ ஒருவகையில், வாழ்க்கைத் துணையின் குடும்பத்தை வைர நகையால் அவமானப்பட்டிருக்க வைத்திருப்பார். மகாலட்சுமி தாயாரை தாமரை மலர் கொண்டு வணங்கவும்.

மகரம்

மகர லக்னத்திற்கு 7-ஆமிடத்தில் குரு உச்சமடைவார். எனவே வாழ்க்கைத்துணை வீட்டில் நகை ஏராளமாக புழங்கும். இன்னும் சிலர் நகை வியாபாரக் குடும்பமாக திருமணம் செய்துகொள்வர். சுக்கிரன் மகர ராசி, லக்னத்தாரின் 3-ஆமிடத்தில் உச்சமடைவார். வைர வியாபாரம், வாங்கி விற்கும் தரகு சம்பந்தமாக பெரும் புகழ் பெற்றிருப்பார். அல்லது இவர்களின் இளைய சகோதரன் அல்லது மாமனார் வைர வியாபாரம் சம்பந்தம் கொண்டிருப்பர். குரு நீசம் பெற்றால், இவர்களின் லக்னத்தி லேயே நீசம் அடைவதால், கனவில்கூட தங்க நகையை பார்க்க இயலாது. சுக்கிரன், இவர்களின் 9-ஆமிடத்தில் நீசம் பெறுவதால், இவர்களின் தந்தை வீட்டில் வைர சம்பந்தமும், வைர அதிர்ஷ்டமும் இன்றி அமையும். மகாலட்சுமியை நெய் விளக்கேற்றி வணங்கவும்.

கும்பம்

கும்ப லக்னத்துக்கு தங்க நகை குரு, இவர்களின் 6-ஆமிடத்தில் உச்சமாவார். இதனால் தாய்மாமன்மூலம் நகை சேர்க்கை உண்டாகும். கடன் வாங்கி நகை வாங்குவர். சிலர் பொதுப்பணிகள், சேவைகள்மூலம் நகை பெருக்கம் பெறுவர். சில அரசியல் வாதிகள், பணத்துக்கு பதில் நகையாக பெற்று செழிப்பர். சுக்கிரன் கும்ப லக்ன 2-ஆமிடத்தில் உச்சம் பெறுவார். குடும்பவழி வைர நகைகள். இருக்க வாய்ப்பு உள்ளது. இவர்களின் பெற்றோர் வைர நகை அணியும் பாக்கியம் பெற்றவராக இருப்பர். குரு நீசமா னால், இவர்களின் விரயத்தில் நீசமாவார். இதனால் வீட்டில் இருக்கும் சிறு மூக்குத்தி திருகாணிகூட அவசரத்தில் விற்கும் நிலை ஏற்படும். இவர்களின் வைர நகைக்குரிய சுக்கிரன் 8-ஆமிடத்தில் நீசமடைவதால், இவர்கள் வீட்டில் யாருக்கும் வைரம் என்று பெயர்கூட இருக்க வாய்ப்பில்லை. மகாலட்சுமி தாயாருக்கு நெய் விளக்கேற்றி வணங்கவும்.

மீனம்

மீன லக்னத்துக்கு, 5-ஆமிடத்தில் குரு உச்சமடைவார். எனவே பரம்பரையாக வந்த நகைகள் நல்ல காத்ரமாக, பொலிவுடன், கௌரவத்தை தரும்விதமாக அமையும். இவர்களில் சிலர் வழிவழியாக தங்க நகை வியாபாரம் செய்வர். சுக்கிரன் இவர்களின் லக்ன, ராசியிலேயே உச்சமடைவார். எனினும் வைர நகைகள் இவர்களுக்கு அவ்வளவு தூரம் ஆகிவருமா என சொல்ல இயலாது. மீன லக்னத்துக்கு சுக்கிரன் 3 மற்றும் 8-ஆம் அதிபதி. எனவே, அவர் உச்சம் அடைந் தாலும், நீசம் அடைந்தாலும், மீனத்துக்கும் வைரத்துக்கும் சரிப்பட்டு வரும் என உறுதியாக கூற இயலாது. மீன லக்னத்துக்கு குரு 11-ல் நீசமடைவார். நீசமான குரு, தங்க லாபத்தையோ, பெருக்கத்தையோ தர மாட்டார். மகாலட்சுமியை மஞ்சள் கொண்டு வணங்கவும்.

மேற்கண்ட 12 லக்னத்துக்கும் குரு, சுக்கிரன் உச்ச, நீசம் பொறுத்து நகை வாங்கும் நிலை கூறப்பட்டுள்ளது. குரு, சுக்கிரன் 6, 8, 12-ல் இல்லாமல் வேறு இடங்களில் சுபமாக இருப்பின், அதனை பொறுத்து நகை வாங்கும் யோகம் உண்டாகும். குரு, சுக்கிரனின் சுப தசா புக்தி, அந்தரக் காலங்களில் நகை வாங்குவீர் கள்.

குரு, நீசபங்கம் பெற்ற நிலையில் ஜாதகம் இருப்பின் தங்கத்துடன், நிலக்கல் அல்லது பவளம் சேர்த்து, நகை செய்து அணியவும்.

சுக்கிரன் நீச பங்கம் பெற்றிருப்பின், வைரத் துடன் பச்சைக் கற்கள் பதித்து அணிந்து கொள்ளவும்.

வைர நகை பற்றிய பொதுவான சாஸ்தி ரம் ஒன்று உண்டு. வைர நகை வாங்கி, கொஞ்ச காலம் வீட்டில் வைத்து பார்க்கவேண்டும்.

கெட்ட செய்திகள் காதில் படவில்லை என்றால் மட்டுமே, அந்த வைர நகையை வீட்டில் நிரந்தரமாகவைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அதனை திருப் பிக் கொடுத்துவிட வேண்டும்.

செல்: 94449 61845