"நோய்நாடி நோய்முதல் நாடி

அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

' என்பது வள்ளுவர் வாக்கு.

Advertisment

இதன் பொருள், ஒருமுறை ஒரு நோய் வந்தால், வந்த நோய் என்ன காரணத்தினால் வந்ததென்று அறிந்துகொண்டு, மீண்டும் அந்நோய் வராமல் தடுக்கின்ற அறிவும் அது சார்ந்த ஞானமும் பெற்றாகவேண்டும் என்பதாகும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழியாக இருந்தாலும், மனிதனாய்ப் பிறந்த அனைவருக்கும் நோய் என்பது வந்தே தீரும். ஒருசிலருக்கு ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை, ஆண்டுக்கு ஒருமுறை என்று காய்ச்சல், தலைவலி போன்ற சிறுசிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். ஒருசிலர் அடிக்கடி கை, கால், கண், பல், காது, வயிறு என்று ஏதாவது உடல்நலக் குறைவுக்கு வைத்தியம் செய்துகொண்டே இருப்பார்கள். சிலர் வீட்டையே மருத்துவமனையாக மாற்றிவிடலாமோ என்று தோன்றும் வகையில், வைத்தியத்திற்காக வாழ்நாளின் பெரும் பகுதியை மருத்துவமனை யில் கழிக்கிறார்கள். சிலர் உயிர்போகும் நிலையில் இருந்தால்கூட மருத்துவமனை செல்லாமல் கை வைத்தியம் செய்துகொண்டு வீட்டில் இருப்பார்கள்.

Advertisment

dd

இதுபோன்ற அனைத்திற்கும் உடல்காரகன் சந்திரனே காரணம். சந்திரன் ஜாதகத்தில் பலவீனப் பட்டிருக்கும் காலத்திலும், லக்னாதிபதி, சனியுடன் இணையும் காலகட்டங் களிலும், கோட்சாரத்தில் 6-ஆமதிபதி பலம்பெற்று, லக்னாதிபதி வலுக்குறையும் காலகட்டங்களிலும் ஒருவருக்கு எளிதாக நோய் தாக்கும். உடல்காரகனான சந்திரன் ஆறாமிடத்தில் பயணிக்கும்பொழுது, ராகு- கேது, சனியின் தொடர்பைப் பெறும்பட்சத்தில் நோய் எளிதாகத் தாக்கும். அதேபோல் பலர் ஆறாமதி பதி வலுத்தால் மட்டுமே நோய்த் தாக்கம் உருவாகுமென்று நினைக்கிறார் கள். சுக ஸ்தானமான நான்காமிட அதிபதி பலமிழந்து தசாபுக்தி நடத்தும் காலகட்டங்களில் ஏற்படும் நோய் ஜாதகருக்கு மிகுந்த இன்னலைத் தருகிறது. கோட்சாரத்தில், அஷ்டம, அர்தாஷ்டம ஸ்தானங்களில் சனி, ராகு- கேது வரும் காலகட்டங்களிலும் உடலுக்கு எதிர்ப்புசக்தி குறைந்து மருத்துவமனைக்குச் செல்லநேரும்.

நோய்களை எளிதில் குணமாகும் நோய், தீராதநோய் அல்லது வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டிய நோய் என இரண்டா கப் பகுக்கலாம். அதன் படி கோட்சாரத்தில் 4, 6-ஆமிடம் பாதிக்கும் காலகட்டங்களில் உருவாகும் நோய், எளிதாக குறிப்பிட்ட காலகட்டங்களில் வலிமையிழக்கும். சனி, ராகு- கேது தசைக் காலகட்டங்களில், கோட்சாரத்தில் 4, 6, 8 பலமிழக்கும் காலகட்டங்களில் கர்ம வினைத் தாக்கத்தால் ஏற்படும் சர்க்கரை நோய், ரத்த அழுத் தம், தைராய்டு, ஆர்த்ரைடிஸ் போன்ற நோய்கள், ஜாதகத்தில் ஆறாம் பாவகம் வலுத்து, நான்காமதிபதி வலுக்குறைந்து, ஆறு, எட்டாமதிபதியின் தசையோ அல்லது லக்ன அவயோக தசையோ நடப் பில் இருக்கும்போது நோய் தொடங்கும்.

குறிப்பாக முன்னோர்களின் பரம்பரை நோய்கள் அனைத்தும் ஜாதகரை எளிதில் வந்தடையும்.

தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவின் வம்சாவளியினரை அவதிப்படுத்திய அனைத்துவிதமான உடல் பலவீனங் களும் மெதுவாகத் துவங்கி, ஜாதகரின் வயதிற்கேற்ப பாதிப்பை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும். ஒருவருக்கு வரும் நோய்களை மூன்றுவிதமாகப் பிரிக்கலாம். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.

வாதம்

வாத நாடியானது மூச்சு வெளிவிடுதல் மற்றும் மூச்சை உள்ளே இழுக்கும் தன்மையை உணர்த்தும். வாத நோய்க்கான காரக கிரகங்கள் சனி, புதன், ராகு. காற்று, நிலத் தத்துவம். அதாவது செயலற்ற அல்லது குறைவான இயக்கம். உதாரணமாக பக்கவாதம், ஜீரணக் கோளாறு, வாயுப் பிடிப்பு, மூச்சுப்பிடிப்பு போன்றவற்றைக் கூறலாம். வாத நாடியா னது பாதிக்கப்பட் டால் உடலுறுப்புகள் செயலிழத்தல், உடல்வலி, மூட்டுவலி, உணர்விழத்தல், தசைச் சுருங்கல், சரும வறட்சி, நாவில்‌ ருசி குறைதல்‌, மலக்‌கட்டு, உடலில்‌ நீர்‌ குறைந்து போதல்‌, உடல்‌சோர்வு, தூக்கமின்மை, மயக்கம்‌ போன்றவை உண்டாகும்‌.

உதாரணமாக சிலருக்கு குளிர் காலங் களில், காலையில் எழுந்தவுடன் அல்லது அதிக நேரம் உட்கார்ந்துவிட்டு நடக்கும் போது பாதத்தில் இறுகப் பிடித்துக் கொள்ளும். ஒருசில நிமிடங்களுக்கு கால்பிடிப்பு நீடித்து பின் சகஜ நிலைக்குத் திரும்பும். வாதத்தில் இது ஒருவகை.

பித்தம்

பித்த நோய்க்கு காரக கிரகம் சூரியன், செவ்வாய், கேது. நெருப்புத் தன்மை. உணரும்‌ தன்மை, உணவு செரிமானம்‌, சருமநிறம்‌, கண்‌ பார்வை, வியர்வை, ரத்தம்‌, இதயம்‌ சரியான முறையில்‌ இயங்கச்‌ செய்வது போன்றவை பித்த நாடியின்‌ செயல்களாகும். உடல்சூடு, நெஞ்செரிச்சல், தொண்டை எரிச்சல், நீர்க்கடுப்பு, மூலம், அலர்ஜி, அரிப்பு, அல்சர், குடல்புண், கட்டி, கொப்புளம், ரத்த அழுத்தம், தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, படபடப்பு முதலானவையும் பித்தம் சம்பந்தப்பட்டவை.

பித்த நாடி பாதிப்படைந்தால்‌ ஈரல்‌ மற்றும்‌ கல்லீரல்‌ நோய்‌ ஏற்படுதல்‌, பார்வைத் ‌திறன்‌ குறைதல்‌, கண்ணில்‌ படலம்‌ ஏற்‌படுதல்‌, உடலின்‌ தோல்‌ சுருங்கி கறுப்பாக மாறுவது, முடியின்‌ கறுப்புநிறம்‌ மாறி வெள்ளை முடி தோன்றுதல்‌, மூச்சு வாங்குதல்‌, இதயம்‌ சம்பந்தமான நோய்கள்‌ மற்றும் மனிதனின்‌ உடலமைப்பில் வயோதிக தோற்றம் காணப்படும்‌.

கபம்

கபத்திற்கான காரக கிரகம் சந்திரன், சுக்கி ரன். நீர் தத்துவம். சளி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, சீதளம், வயிற்றுப் போக்கு, ஆறாத புண், சர்க்கரை நோய், கணையம், சிறுநீரகச் செயல்பாடு, தைராய்டு, நுரையீரல் தொற்று இவையனைத்தும் கபம் சார்ந்தவை.

கப நாடியானது இயல்பாக இருக்குமே யானால் உடலுக்கு குளிர்ச்சி, உடல்வலிமை, தோல் பளபளப்பாக இருத்தல், கண்கள் குளிர்ச்சியாகவும் எவ்வித பாதிப்புமில்லா மல் தெளிவான பார்வை இருத்தல், முடி சிறப்பாக அடர்த்தியாக வளர்தல், பேச்சில் குரல் தெளிவோடு இருத்தல், உடல் மென்மையாக, இயல்பாக இருத்தல், நாக்கில் சுவைத்தன்மை சரியாக இருத்தல் போன்றவையோடு இயல்பாக இளமையோடு காட்சிதருவார்கள்.

கப நாடி பாதிக்கப்பட்டால் இருமல் மற்றும் சளி உண்டாதல், தொண்டை வறட்சி, ஆஸ்துமா, சைனஸ், தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், ரத்த அழுத்தம் அதிகமாதல், சருமம் வறண்டு காணப்படு தல், அதிகத் தூக்கம், நடந்தால் மேல் மூச்சு வாங்குதல், நெஞ்சு படபடப்பு, வேலை பார்ப்பதில் உற்சாகம் குறைந்து காணப் படுதல், பசி இல்லாதிருத்தல், உமிழ்நீர் சுரப்பு அதிகரித்துக் காணுதல், மலம் வெளுத்துச் செல்லுதல், சிறுநீர் அதிகமாகச் செல்லுதல் போன்றவை காணப்படும்.

ஆக, உடலில் வாத, பித்த, கப நாடி இயல்பாக இயங்கும்வரை எந்த நோயுமில் லாமல் நிறைந்த ஆயுளுடன் வாழமுடியும். ஏதேனும் ஒரு நாடி பாதிக்கப்பட்டால் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது மீண்டும் நிலை திரும்பி ஆரோக் கியத்துடன் வாழமுடியும். இந்த மூன்றும் உடலில் சரியான அளவில் இயங்க உணவியல், வாழ்வியல் முறையையும் மாற்றியமைக்க வேண்டும்.

பலர் எந்த நோய் பாதிப்பாக இருந் தாலும், சொந்த வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைக்குத் தற்காலிகத் தீர்வாக தூக்கத்தை அதிகப்படுத்தும் அலோபதி மருந்துகளை நாடுகின்றனர். "நோய்நாடி நோய்முதல் நாடி' என்பதற்கிணங்க, அவருக்கு ஏதாவது மனச்சோர்வோ மனக் கசப்போ குடும்பப் பிரச்சினையோ இருந்தால், முதலில் அதைத் தீர்க்க முயல வேண்டும். அதன்பிறகு நோய்க்கான காரணத்தை நன்கறிந்து, அந்த நோய்க் கான மூலகாரணம் அறிந்து, அதைத் தணிக்கும் வழியை அறிந்து சரியாக செயல்படவேண்டும். நோயிலிருந்து மீள்வதற்கு சரியான வழிகாட்டுதலும், ஆறுதலும் மிக முக்கியம்.

பரிகாரம்

எண்ணெயில் பொறித்த உணவைத் தவிர்க்கவேண்டும்‌. தினமும்‌ ஒரு பழம்‌, வேகவைத்த காய்கள், நீராவியில்‌ வெந்த உணவு வகைகளை சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்‌ கொள்ளவேண்டும்.

சிறுதானிய உணவுகள்‌, கொட்டை, பருப்புவகைகள்‌ போன்றவற்றை அன்றாட உணவில்‌ தேவையான அளவு எடுத்துக்‌ கொள்ளவேண்டும். குறைந்தபட்சம் எட்டு மணிநேரம் தூங்கும்போது வாதம்‌, பித்தம்‌, கபத்தை சீராக வைத்‌துக்கொள்ளமுடியும்.

தீய பழக்கத்திலிருந்து விடுபட்டு போதிய நீர் அருந்தி, தினமும் உடற்பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவையும் மேற்கொள்ளவேண்டும். வாத நோயை மிகைப்படுத்தும் சனி, ராகு, புதன் தசாபுக்திக் காலங்களில் கருடரை வழிபடவேண்டும்.

பித்த நோயை ஏற்படுத்தும் சூரியன், செவ்வாய், கேது தசாபுக்திகளில் ஆஞ்சனேயரை வழிபடவேண்டும்.

கபம் தொடர்பான நோயை வெளிப் படுத்தும் சந்திரன், சுக்கிர தசை கால கட்டங்களில் வளர்பிறைச் சந்திரனை வழிபடவேண்டும். பௌர்ணமியன்று சித்தர்களை வழிபடவேண்டும்.

செல்: 98652 20406