சுமார் 35 வயதுடைய ஒரு இளைஞர், நாடியில் பலன்காண வந்தார். அவரை அமரவைத்து, "என்ன காரியமாக பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

ஐயா, "இவ்வளவு வயதுவரை என் வாழ்வில் விவசாயம், தொழில் என எதுவும் உயர்வை தரவில்லை. நான் செய்யும் எதுவும் எனக்கு நன்மையை உண்டாக்கவில்லை. என் "விதி' என்னவென்று தெரியவில்லை. நானும் வாழ்வில் உயர்வடைய அகத்தியரிடம் வழிகேட்டு வந்துள்ளேன்'' என்றார்.

ஜீவநாடியில் பலன்கேட்க வருபவர்கள், காரியத் தடை, குறைகளைக் கூறி, அதற்கு நிவர்த்திகேட்டு வருவார்கள். ஆனால் இவர் தன் விதியைக் கேட்டு வந்துள்ளாரே! என்று நினைத்துக் கொண்டு, நாடியைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.

அகத்தியர் ஓலையில் எழுத்து வடிவாகத் தோன்றி, தன் இப்பிறவி வீதி பற்றிக் கேட்க வந்துள்ளானே, இவன் பாரம் பரியமான செல்வந்தர் குடும்பத் தில் பிறந்தவன். பொதுவாக மிகவும் நல்லவன். கஷ்டப்படுபவர்களுக்கு தன்னிடம் உதவிகேட்டு வருபவர் களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்வான். கோவில் பணிகளில் ஈடுபட்டு செயல்படுவான். பொதுவாக "நாலு பேருக்கு நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும்' என்ற சொல்லை நம்பி, செயல்பட்டு வாழ்ந்துகொண்டு, தன் வாழ்வை தொலைத்துக்கொண்டு இருக்கின்றான்.

Advertisment

as

இவனின் இந்த நிலைக்கு காரணத்தைக் கூறுகின்றேன். இவன் தகப்பனின் பாட்டனார்,

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த வன். ஆனால் அவன் மனைவி, அதாவது- இவன் தகப்பனின் பாட்டி, மிகப்பெரிய செல்வந்தர், பண்ணையார் குடும்பத்தில் பிறந்த ஒரே பெண். அவ்வளவு சொத்து களுக்கும் அவள் ஒருத்திதான் வாரிசு. ஆனால் பாட்டி சிறிது ஊன முற்றவள். அதனால் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த, தூரத்து உறவான பாட்டனுக்கு அவளை திருமணம் செய்துவைத்தார்கள். எல்லா சொத்துகளுக்கும் அதிபதியாக்கினார்கள்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பாட்டன் மனைவி யோகத்தால் பெரிய செல்வந்தன் ஆனான். இவன் பாட்டனும், தகப்பனும், அந்த சொத்துகளை பாதுகாக்காமல், மேலும், மேலும் விருத்திசெய்து சொத்து சேர்க்காமல், தங்கள் மனைவியையும், குடும்பத்தில் வாழவந்த பெண்களையும் மதிக்காமல், கோவில், தேர், திருவிழா, ஆடல், பாடல், வேசிகள் உறவு என சுகபோக வாழ்க்கை வாழ்ந்து, பெரும்பாலான சொத்துகளை அழித்தார்கள். குடும்ப பெருமை யையும், புகழையும் கெடுத்தார்கள். அவர்கள் அழிக்காமல், மீதம் இருந்த கொஞ்சம் சொத்து கள்தான், இப்போது இவனுக்கு சொந்தமாக உள்ளது. அந்த சொத்தில் இருந்தும் பெரிய வருமானம் இல்லை. இப்போதும் வறுமைதான்.

இவன் வாழ்க்கையின் உயர்வு, இவன் முன்னோர்களால் தடுக்கப்பட்டது. பூர்வீக சொத்துகளை அனுபவிக்கக்கூடாது. அந்த சொத்துகளால், பெரிய விருத்தி நன்மைகளை அடையக்கூடாது என்பது இவன் விதி. இனிவரும் வாழ்வில், இந்த வம்சவிதியை தடுத்து, நல்ல வாழ்க்கை அடைய அகத்தியன் யான், ஒரு சூட்சுமமான வழிமுறையைக் கூறுகின்றேன். விதியை தடுக்கும் அந்த வித்தையைக் கடைப்பிடித்து, நடைமுறை வாழ்வில் செயல்பட்டு வாழச்சொல்.

இவனுக்கு, இன்னும் திருமணமாகவில்லை. முன்னின்று திருமணம் செய்துவைக்க, நெருங்கிய உறவுகள் இல்லை. தனக்கு சரியான தொழிலோ, வருமானமோ இல்லை. திருமணம் செய்து, மனைவி, குழந்தைகள் என்றாகிவிட் டால் அவர்களை காப்பாற்ற பணம் வேண்டுமே என்ற பயம் மனதிலுள்ளது. மனதில் தன்னம் பிக்கையில்லை. தான் சுயமாக உழைத்து, சம்பாதித்து, அனைத்து வசதிகளையும் அமைத்துக்கொண்ட பின்தான், திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று எண்ணி காலம் தாழ்த்தி வருகின்றான். இவன் நினைப் பதுபோல் எந்த வசதியும் அமையவில்லை. அதனால் திருமணமும் நடக்கவில்லை.

இவன் வாழ்வை யாரும் கெடுக்கவில்லை, தன்னையறிந்து, சுய அறிவு கொண்டு செயல்பட்டு வாழாமல், வாழத் தெரியாமல், வாழ்ந்து இவன் வாழ்வை இவனே கெடுத்துக்கொண்டு இருக்கின்றான்.

இவன் வம்ச முன்னோர்கள் காலத்தில் இருந்தே, இவன் குடும்பத்திற்கு வாழ வரும் பெண்களால், மனைவியால்தான் யோகம் என்ற விதி உள்ளது. இவன் பாட்டனுக்கும், மனைவி யோகத்தால் சொத்து அமைந்தது. அதனால் இவனை, முதலில் திருமணம் செய்துகொள்ளச் சொல். மனைவி வந்தபின்பு சிறப்பும், செல்வமும் வாழ்வில் சேரும்.

திருமணத்திற்குப்பின்பு, தற்போது இவனிடமுள்ள வீடு, சொத்து, நிலம் குடும்ப நிர்வாகம் என அனைத்தையும், அவளின் நிர்வாக பொறுப்பில் விட்டுவிட வேண்டும். இவன் பாட்டன், தகப்பனைப் போன்று, ஆணாதிக்கம் கொண்டு, தான் என்ற அகம்பாவத்தில் வாழக்கூடாது. மனைவியை மதித்து அவள் சொல்வதை மட்டும் கேட்டு, செயல்பட்டு வாழவேண்டும்.

இவன் இதுவரை வாழ்ந்தது போன்று வாழக்கூடாது. தன் குணத்தையும் செயலையும், மாற்றிக்கொண்டு வாழ்ந்தால், இவன் மனைவி, சொத்துகளையும், இவனையும் காப்பாற்றிவிடுவாள். இவன் குடும்பத்திற்கு தலைவனும் அவள் தான், தலைவியும் அவள்தான். இவன் வாழ்வின் உயர்வு, இவனின் மனைவி கையில்தான். மனிதர்களின் வாழ்வில் உயர்வு நம்பிக்கையில் இல்லை. அவன் உழைப்பிலும், அறிவிலும், நடைமுறை செயலிலும்தான் உள்ளது. இவன் விதியை மனைவி தன் மதியால் தடுத்துவிடுவாள். விதியை மதியால் தடுத்துக்கொள்ளலாம் என்பதை புரிந்துகொள்ளச் சொல்.

இவன் பாட்டி ஒருத்திதான், இவனுக்கு உறவாக இவனுடன் இருக்கிறாள். அந்தப் பாட்டி, இவனுக்கு திருமணம் செய்துவைக்க, ஒரு பெண்ணை பேசி வைத்திருக்கிறாள்.

எந்த மறுப்பும் சொல்லாமல் அவளை மணந்து கொள்ளச்சொல், மனைவி யோகத்தால் வாழ்வில் உயர்வடைவான் என்று கூறிவிட்டு, ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியர் கூறியதைக்கேட்ட அந்த இளைஞனும், எனக்கு நல்ல வாழ்வு, மனைவியால்தான் என்பதை அறிந்துகொண்டேன். திருமணம் செய்து கொண்டு, அகத்தியர் கூறிய வழிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்வேன். விதியை மதியால் தடுத்து கொள்வேன் என்று கூறி விடைபெற்று சென்றார்.

செல்: 99441 13267