சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், தன் மனைவியுடன் ஜீவ நாடியில் பலன் கேட்க வந்தார். கணவன்- மனைவி இருவரும் செல்வச் செழிப்புள்ள தோற்றத் துடன் இருந்தனர்.
ஆனால் அவர்கள் முகத்தில் மலர்ச்சி இல்லை. ஒருவித கவலை தெரிந்தது.
என்ன? காரணமாக, பலன் கேட்க வந்துள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ள பிரசன்ன ஓலையை எடுத்துப் பார்த்தேன். அதில் திருமணம் சம்பந்தமாகவும், சொத்துப் பிரச்சினை பற்றியும் பலன் கேட்க வந்துள்ளார்கள் என்று அறிந்தேன்.
ஓலையில் அறிந்ததை அவர்களிடம் கூறா மல், "ஐயா, என்ன விஷயமாக நாடியில் பலன் கேட்க வந்துள்ளீர்கள்?'' என்றேன்.
"ஐயா, நான் அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவி வகித்து. ஓய்வுபெற்றுவிட்டேன். எனக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உண்டு. மகளுக்கு 35 வயதும், மகனுக்கு 32 வயதும் ஆகிறது. இருவருக்கும் திருமணம் தடையாகிக் கொண்டே வருகிறது. மேலும் எனது பூர்வீக குடும்பச் சொத்தில் பிரச்சினையும் உள்ளது. இவை இரண்டும் நல்ல விதமாக தீர்வு கிடைக்க நாடியில் பலன் அறிந்து கொள்ள வந்துள்ளோம்'' என்றார்.
"உயர்ந்த பதவியை வகித்துள்ளீர்கள். வசதி, வாய்ப்பு, பணத்திற்கு குறைவில்லை. இருந்தும் 35 வயதுவரை மகளுக்கு திருமணம் செய்யாமல் ஏன் இவ்வளவு காலம் தாழ்த்தினீர்கள்?'' "ஐயா, எனது மகள், மகன் இருவரும் நன்கு படித்தார்கள். அவர்களுக்கு கல்வியின் மீதுள்ள ஆர்வத்தையும் அறிந்து, அவர்கள் விருப்பப்படி படிக்க வைத்தேன். அவர்களும் நன்கு படித்து, மூன்று பட்டங்களைப் பெற்று, இப்போது வெளிநாட்டில் நல்ல உத்யோகத்தில் உள்ளார்கள்.
மகளுக்கு 29 வயதிற்கு மேல் வரன் தேடத் தொடங்கினோம். கடந்த ஆறு வருடமாக, எவ்வளவோ மாப்பிள்ளைகள் ஜாதகம் வந்தும், ஒன்றும் சரியாக அமையவில்லை. இப்போது மகள் இவ்வளவு வயதிற்குமேல் திருமணம் வேண்டாம் என்கின்றாள். மகனோ, அக்காளுக்கு திருமணம் முடிந்த பிறகு நான் திருமணம் செய்து கொள்கின்றேன் என்று கூறுகிறான். இருவருக்கும் வயது கூடிக்கொண்டே போகின்றது.
ஜோதிடர்கள் நிறைய பேரிடம், இருவரின் ஜாதகத்தையும் கொடுத்து பலன் பார்த்து, அவர்கள் கூறிய அனைத்துப் பரிகாரங்களை யும் முறையாகச் செய்துவிட்டோம். ஆனால் பலன்தான் கிடைக்கவில்லை. அதனால்தான் அகத்தியரை நாடி வந்துள்ளோம். அவர் தான் தடை விலக்கி திருமணம் நடக்க வழி காட்டவேண்டும்'' என்றார்.
ஜீவநாடி ஓலையை படிக்கத் தொடங்கி னேன். "இவரின் வம்ச முன்னோர்கள் காலத்தில், சகோதரர் களுக்குள் சொத்துப் பிரச்சினை ஏற்பட்டு, அதில் சகோதரர்களுக்குச் செய்த பாவமும், பாதிக் கப்பட்டவர்கள் விட்ட சாபமும் இப்போது செயல்பட்டு, பூர்வீக சொத்தில் பிரச்சினையைத் தந்து இப்போது அனுபவிக்கச் செய்கிறது.
"இவர் கூறும் பிரச்சினை உள்ள சொத்தின் அருகில், ஒரு அம்மன் ஆலயம் உள்ளதா?' என்று கேள் என அகத்தியர் கூறினார்.
அவரிடம் நான், "பிரச் சினையுள்ள சொத்து இருக்கும் இடத்திற்கு அருகில், நெருப்பு சம்பந்தமான அம்மன் ஆலயம் உள்ளதா?'' என்று கேட்டேன். அவரும், "ஆமாம். தீப்பாய்ந்த அம்மன் என்ற பெயருடைய ஒரு அம்மன் ஆலயம் உள்ளது'' என்றார்.
ஓலையை மறுபடியும் படித்தபோது, இந்த சொத்து இவருக்கு வேண்டாம். இந்த பாகச் சொத்திற்குரிய பணத்தைப் பெற்றுக்கொண்டு, மற்றவரிடம் சொத்தைக் கொடுத்துவிடச் சொல்!' என்று பதில் வந்தது. இதை அவரிடம் கூறினேன்.
அவரும், "அகத்தியர் கூறியபடியே விற்று விடுகின்றேன்'' என்றார்.
"இவர் குழந்தைகளின் திருமணத் தடைக்கு காரணத்தைக் கூறுகின்றேன். மனைவியின் வம்ச முன்னோர்கள் காலத்தில், அவளின் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, வாழ வந்தபெண், பல சிரமங்களை அடைந்து, நல்லபடி வாழமுடியாமல் வாழ்விழந்தபெண் மனம் வெறுத்துவிட்ட சாபம், இவள் மனைவிக்குத் தொடர்ந்து வந்து, இவள் பெற்ற பிள்ளைகளுக்கு நல்ல குடும்ப வாழ்க்கையை அடையமுடியாமல், பெண் சாபத்தடை தடுத்து வருகிறது' என்று ஓலையில் விளக்கம் வந்தது.
அந்த தாய், "ஐயா, எங்கள் குடும்பத்தில் எந்தப் பெண்ணும் பாதிப்பு அடையவில்லை'' என்றார்.
நாடியை மறுபடியும் படித்தேன்.
"அவள் குடும்பத்தில் பாதிக்கப்பட்ட பெண் யார்? எந்த தலைமுறையில், என்ன பாவம் செய்யப்பட்டு, துன்பம் அடைந்தாள் என்று விளக்கமாக நடந்ததைக் கூறி, "இது உண்மையா? உனக்குத் தெரியுமா? தெரியாதா? அகத்தியன் யான் உன்னிடம் பொய் கூறத்தேவையில்லை' என்று படித்தேன். அதன்பிறகு "ஓலையில் கூறியது, அனைத்தும் எனது பாட்டனார் காலத்தில் நடந்தது'' என்று ஒப்புக்கொண்டார்.
"ஐயா, பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகள் வாழ்வை பாதிக்கும் என்று கூறுவதை எங்கள் வாழ்வின் அனுபவத்தில் தெரிந்து கொண்டோம். இந்த பாவ- சாபம் தீர்ந்து, எங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாழ்வு அமைய வழி கூறுங்கள்'' என்றார்.
"இவள் மகளுக்குத் திருமணம் நடக்கவேண்டும் என்றால், அவளின் தம்பிக்கு முதலில் திருமணம் நடந்தால், சாப நிவர்த்தி ஏற்பட்டு, மகளுக்கு திருமணம் நடக்கும். என்பது அவளின் பிறப்பின் விதி. எனவே முதலில் இளையவனான மகனுக்கு மணம் முடிக்கச் சொல்' என்று கூறிவிட்டு, மேலும் "மகளுக்கு கணவனாக வரக் கூடியவனைப்பற்றி அனைத்து விவரங்களை யும் கூறிவிட்டு, மேலும் பாவ- சாபம் தீர சில நடைமுறை நிவர்த்திகளையும், பிரார்த்தனைகளையும் கூறிவிட்டு, ஓலையில் எழுத்து வடிவில் இருந்து அகத்தியர் மறைந்தார்.
ஜீவநாடி ஓலையில் கூறப்பட்ட பலன்களைக் கேட்ட அந்த தம்பதியர், "ஐயா, தாங்கள் கூறியபடியே அனைத்தையும் செய்கிறோம். இதுவரை இவர்களின் ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொன்னவர்கள் இது போன்று கூறவில்லை. சில தோஷங்களைக் கூறி பரிகாரம்தான் செய்யக்கூறினார்கள். நீங்கள் ஜாதகத்தையும் பார்த்து, பலன் கூறுங்கள்'' என்றார்.
அவரின் விருப்பப்படியே அவர் மகளின் ஜாதகத்திலுள்ள ராசிக்கட்டத்திலுள்ள கிரகங்களின் நிலையை, தமிழ் சோதிட முறையில் ஆய்வு செய்து பலன் அறிந்தபோது, ஓலையில் கூறியபடியே, இளைய மகன் திருமணம் முடிந்த பின்பே மகள் திருமணம் முடியும் என்ற நிலையில் கிரகங்கள் அமைந் துள்ளதை அவருக்கு விளக்கமாகக் கூறி அனுப்பிவைத்தேன்.
பெரிய பெரிய பதவியில் இருந்தாலும், பணச் செழிப்பு உள்ளவரானாலும், பெரிய பக்திமானாக இருந்தாலும், முற்பிறவி பாவ- சாபங்களின் பிடியிலிருந்து தப்பமுடியாது என்பதை நானும் அறிந்துகொண்டேன்.
அந்த பெண்ணின் ஜாதக கிரக நிலையை அறிவோம்.
இந்த பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய்- கணவனைக் குறிக்கும். புதன்- இளைய சகோதரம்; சுக்கிரன்- ஜாதகி.
இதில் சுக்கிரனை ஜாதகியாகவும், இளைய சகோதரரின் மனைவியாகவும் கருதலாம்.
முதலில் இளைய சகோதரன், தன் மனைவி சுக்கிரனை அடைகிறான். இந்த ஜாதகிக்கு செவ்வாய் குறிக்கும் கணவன், அவளைத் தேடி வந்து மணம் புரிவான்.
இந்த கிரக அமைப்பை "நந்தி யோகம்' எனக் கூறுவர். மூத்தவளின் திருமணத்தை அவரின் இளைய சகோதரம், நந்திபோல் தடுத்து மறைத்து வந்தது. அவன் திருமணம் முடிந்தபின் தடை விலகி மூத்தவளுக்கு திருமணம் நடைபெறும் என்பது தமிழ் சோதிட முறைப் பலனாகும்.
செல்: 99441 13267