ஒரு ஆணும், பெண்ணும் ஜீவநாடி பலன்கேட்க வந்திருந்தார்கள். அவர்களிடம் என்ன காரணத்திற்காக ஜீவநாடி பலன் காணவேண்டும் என்றேன்.
"இவள் என் மனைவி. எனக்கு இதுவரை நிலையான தொழில், வருமானம் இல்லை. என் குடும்பத்தாரும், சகோதர்களும், எனக்கு முறையாக தரவேண்டிய, குடும்ப சொத்தினை, பாகப் பிரிவினை செய்து கொடுக்க மாட்டேன் என்று மறுத்து வருகின்றார்கள். என் ஊராரும், உறவுகளும் எனக்காக அவர் களிடம் பரிந்து பேசமாட்டேன் என்கிறார்கள். என் தாயும், சகோதரர்களும் என்னை ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.
என் வாழ்வில் எல்லா குடும்ப உறவுகளும், குடும்ப சொத்துகளும் இருந்தும் நான் எதுவுமில்லாதவ னாக வாழ்கின்றேன். அவ்வப் போது ஏதாவது வேலை செய்து சம்பாதித்து வருகின்றேன். என் மனைவி, குழந்தைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமையை செய்யமுடியவில்லை. என் மனைவிதான் உழைத்து என்னையும், என் குடும்பத்தை யும் காப்பாற்றிவருகின்றாள். இப்பிறவியில் என்னுடைய இந்த வாழ்க்கை நிலைக்கு காரணமும் தெரியவில்லை. இந்த கஷ்ட நிலையை போக்கிக்கொள்ள
ஒரு ஆணும், பெண்ணும் ஜீவநாடி பலன்கேட்க வந்திருந்தார்கள். அவர்களிடம் என்ன காரணத்திற்காக ஜீவநாடி பலன் காணவேண்டும் என்றேன்.
"இவள் என் மனைவி. எனக்கு இதுவரை நிலையான தொழில், வருமானம் இல்லை. என் குடும்பத்தாரும், சகோதர்களும், எனக்கு முறையாக தரவேண்டிய, குடும்ப சொத்தினை, பாகப் பிரிவினை செய்து கொடுக்க மாட்டேன் என்று மறுத்து வருகின்றார்கள். என் ஊராரும், உறவுகளும் எனக்காக அவர் களிடம் பரிந்து பேசமாட்டேன் என்கிறார்கள். என் தாயும், சகோதரர்களும் என்னை ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.
என் வாழ்வில் எல்லா குடும்ப உறவுகளும், குடும்ப சொத்துகளும் இருந்தும் நான் எதுவுமில்லாதவ னாக வாழ்கின்றேன். அவ்வப் போது ஏதாவது வேலை செய்து சம்பாதித்து வருகின்றேன். என் மனைவி, குழந்தைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமையை செய்யமுடியவில்லை. என் மனைவிதான் உழைத்து என்னையும், என் குடும்பத்தை யும் காப்பாற்றிவருகின்றாள். இப்பிறவியில் என்னுடைய இந்த வாழ்க்கை நிலைக்கு காரணமும் தெரியவில்லை. இந்த கஷ்ட நிலையை போக்கிக்கொள்ள சரியான வழியும் தெரியவில்லை. இந்த நிலைமாற எனக்கு சரியான வழிகாட்டுவார் என்று அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
ஓலையை படிக்கத் தொடங்கி னேன். அகத்தியர் எழுத்துவடிவாகத் தோன்றி, இவன் கூறிய அனைத்தையும் அறிவோம். இப்பிறவியில் இவனின் இந்த நிலைக்கு முற்பிறவியில் செய்த பாவமே காரணம்.
முன்பிறவியில் இவன் பாரம்பரியமான ஒரு செல்வ குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தான். இவனும், சகோதரர்களும் இளம் வயதாக இருக்கும்போதே இவன் தந்தை இறந்துவிட்டான். குடும்பத்தில் மூத்தவன் என்பதால், குடும்ப பொறுப்பினை ஏற்று வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.
சகோதரர்களும், இவனும் ஒற்றுமை யாக இருந்து உழைத்தார்கள். பூர்வீக சொத்துகளுடன், இன்னும் கொஞ்சம் சொத்துகளை இவன் பெயரில் வாங்கினார் கள். மூத்தவன் என்பதால் இவனுக்கு முதலில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கொஞ்ச நாட்களில் இவன் மனைவி யால் குடும்பத்தில் குழப்பம் உண்டானது.
மனைவியின் பேச்சைக்கேட்டு, எல்லா சொத்துகளும் என் பெயரில்தான் உள்ளது. நான்தான் சம்பாதித்தேன். எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று கூறி, உடன்பிறந்த சகோதரர்களுக்கு முறையாக தரவேண்டிய பங்கு சொத்தினை கொடுக்க மறுத்தான். ஊராகும் உறவு களும் பஞ்சாயத்து வைத்து பேசியதால், ஏதோ கொஞ்சம் கொடுத்துவிட்டு, குடியிருந்த வீடும் தனக்கே சொந்தம் என்று கூறி தாயையும், சகோதரர்களையும் வீட்டைவிட்டு வெளியேற்றினான்.
பெற்ற தாயும், உடன்பிறந்த சகோதர, சகோதரிகளும் சொத்துகளை இவனிடம் இழந்து வறுமையில் வாடியபோது, இவனும் மனைவி, குழந்தைகளும் அறுசுவை உணவை உண்டு, ஆடம்பரமாக அனைத்து சுகத்தையும் அனுபவித்து வாழ்ந்தார்கள்.
சகோதரர்கள், தங்கள் உழைப்பில் வாங்கிய சொத்துகளை இழந்தோமே என்று, மனம் வெறுத்து, மண்ணை வாரி வீசி சாபம்விட்டார்கள். அந்த சகோதர பங்காளி சாபத்தின் தாகத்தின் விளைவுதான் இப்பிறவியில் இவனின் இந்த வாழ்க்கை நிலைக்கு காரணம்.
முற்பிறவியில், இவன் தாயும், சகோதரர்களும், ஒரு பிரிவாகவும், இவன் மனைவி, குழந்தைகள் ஒரு பிரிவாக இருந்தார்கள். பாதிக்கப்பட்ட சகோதரர் கள் விட்ட சாபம் செயல்பட்டு, அந்த செயலுக்கு தண்டனையாக, இப்பிறவியில், இவனின் சகோதரர்களும், உறவு களும் ஒரு பிரிவாகவும், இவனும், மனைவியும், குழந்தைகளும் ஒரு பிரிவாக பிரிந்து வாழ நேர்ந்தது. தந்தைவழி உறவு களால் இவன் ஒதுக்கப்பட்டு வாழ்வதற்கு இவன் முற்பிறவி செயலால் உண்டான சாபம் தான் காரணம்.
முற்பிறவியில், எல்லா சொத்துகளையும், இவன் ஒருவனே உரிமை கொண் டாடி, அபகரித்துக் கொண்டு அனுபவித் தான். சகோதரர் களுக்கு கொடுக்க மறுத்தான். இந்த பிறவியில், பூர்வீக குடும்ப சொத்துகள் அனைத்தை யும், இவனின் சகோதரர்கள், இவனுக்கு தராமல் அவர்கள் அனுபவித்து வருகின் றார்கள். இவனுக்கு தராமல் அலட்சியப் படுத்தி வாழ்கின்றார்கள். இப்போது இவன் வறுமையில் வாடுகின்றான். இது முற்பிறவியில் ஏற்பட்ட சகோதர கடன்.
முற்பிறவியில், தொழில், வியாபாரத் தில், கூட்டுத் தொழில் செய்தபோது தன் தொழில் கூட்டாளிகளுக்கு தெரியாமல் பொய் கணக்கு எழுதி, அவர்களை ஏமாற்றி, தொழிலில் நஷ்டம் எனக்கூறி பணத்தை அபகரித்தான். பணத்தை இழந்த தொழில் கூட்டாளிகள், மனம் வெறுத்துவிட்ட சாபத்தால், இப்பிறவியில் அதற்கு தண்டனையாக, சரியான தொழில், வியாபாரம் அமையாமலும், நிரந்தர வருமானத் திற்கு வழி இல்லாமல் வாழ்கின் றான்.
முற்பிறவியில் தன் சகோதரர் களையும், வியாபார கூட்டாளி களை ஏமாற்றியதிற்கு இவன் மனைவியின் தூண்டுதல் தான் காரணம். இதற்குரிய தண்டனையாக, இப் பிறவியில், இவன் மனைவி உழைத்து தன் கணவனை யும், குழந்தைகளை யும் காப்பாற்றவேண்டிய விதி அமைப்புடன் வாழ்கின்றாள் என்பதே இவர்களின் இந்நிலைக்கு காரணம் என இன்னும் பல விவரங்களை அகத்தியர் கூறி தெளிவுபடுத்தினார்.
இப்பிறவியில் இவன் வாழ வேண்டிய வழிமுறைகளையும், செய்யவேண்டிய சரியான தொழில், வியாபாரத்தையும் கூறிவிட்டு அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.
எங்கள் வாழ்க்கையின் இந்த நிலைக்கு உண்மையான காரணத்தை அறிந்து கொண்டோம். அகத்தியர் கூறிய வழிமுறைகளைக் கடைபிடித்து அவர் கூறிய தொழிலை, அவர் கூறியபடிசெய்து, சாபநிவர்த்தி பிரார்த்தனைகளையும் செய்கின்றோம் என்று கூறிவிட்டு, அகத்தியரை வணங்கி அந்த தம்பதியர் விடைபெற்றார்கள்.
செல்: 99441 13267