சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர். 32 வயதுடைய தனது மகளுடன் ஜீவநாடி பலன்கேட்க வந்தார். அவரிடம் என்ன விஷயமாக பலன்கேட்க வந்துள்ளீர்கள் என்றேன்.
"இவள் எனது மகள், இவளுக்கு 32 வயது ஆகின்றது. படித்துக்கொண்டு இருந்ததால், 27 வயது முதல்தான் திருமணம் செய்ய முயற்சித்து வரன் தேடத் தொடங்கினேன்.
இவளை பெண் பார்த்த மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் இவள் ஜாதகத்தில் கடுமையான ராகு, கேது, நாகதோஷம் உள்ளது என்று நாங்கள் பார்த்த ஜோதிடர்கள் கூறுகின்றார் கள் என்று கூறி மணம் புரிய மறுத்து விடுகின்றார்கள். நாங்களும் இந்த தோஷம் நீங்க ஒவ்வொரு ஜோதிடரும் என்னென்ன பரிகாரங்களைக் கூறினார்களோ, அத்தனை விதமான பரிகாரங்களையும் செய்து விட்டோம்.
ஒரு கல்யாணத்திற்கு எவ்வளவு பணம் செலவாகுமோ, அவ்வளவு பணம் பரிகாரத் திற்கு செய்துவிட்டோம். எனது நண்பர் ஒருவர் தங்களைப் பற்றிக்கூறி, ஜீவநாடி படித்துப் பார்
சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர். 32 வயதுடைய தனது மகளுடன் ஜீவநாடி பலன்கேட்க வந்தார். அவரிடம் என்ன விஷயமாக பலன்கேட்க வந்துள்ளீர்கள் என்றேன்.
"இவள் எனது மகள், இவளுக்கு 32 வயது ஆகின்றது. படித்துக்கொண்டு இருந்ததால், 27 வயது முதல்தான் திருமணம் செய்ய முயற்சித்து வரன் தேடத் தொடங்கினேன்.
இவளை பெண் பார்த்த மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் இவள் ஜாதகத்தில் கடுமையான ராகு, கேது, நாகதோஷம் உள்ளது என்று நாங்கள் பார்த்த ஜோதிடர்கள் கூறுகின்றார் கள் என்று கூறி மணம் புரிய மறுத்து விடுகின்றார்கள். நாங்களும் இந்த தோஷம் நீங்க ஒவ்வொரு ஜோதிடரும் என்னென்ன பரிகாரங்களைக் கூறினார்களோ, அத்தனை விதமான பரிகாரங்களையும் செய்து விட்டோம்.
ஒரு கல்யாணத்திற்கு எவ்வளவு பணம் செலவாகுமோ, அவ்வளவு பணம் பரிகாரத் திற்கு செய்துவிட்டோம். எனது நண்பர் ஒருவர் தங்களைப் பற்றிக்கூறி, ஜீவநாடி படித்துப் பார்த்தால், அகத்தியர் ஏதாவது நல்ல வழிகாட்டுவார் என்று கூறினார். அதனால் தான் உங்களை நாடிவந்தோம்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் படிக்கத் தொடங் கினேன். "இவன் மகள் திருமணம் ராகு- கேது கிரகங்களால் தடைப்படவில்லை.
ஜாதக பலன் கூறும் சில ஜோதிடர்களால்தான் தடைப்படுகின்றது என்பதே உண்மை. ராகு- கேது பாம்புகள் அல்ல; "ராகு'' என்பது ஒருவர் முன்பிறவிகளிலும், வம்ச முன்னோர்கள் தங்கள் வாழ்வில் செய்த பாவங்களையும், "கேது'' என்பது முற்பிறவிகளில் பெற்ற சாபங்களையும் குறிக்கின்றது என்பதை முதலில் ஆணையும், பெண்ணையும் பெற்ற பெற்றோர்கள் தெரிந்துகொள்ளட்டும்.
இந்த மகளைப் போன்றே ஏராளமான ஆண்களும், பெண்களும், செவ்வாய் தோஷம், சர்ப்பதோஷம் என்று ஜோதிடர்கள் கூறுவதால், திருமணம் தடைப்பட்டு, வாழவேண்டிய வயதில் வாழ்க்கை அமையாமல், மனம் வருந்தி நடை பிணமாய் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். மனிதர்கள் செய்யும், செய்த, தவறுகளுக்கு விதி கிரகங்கள் காரணம் என்று கூறிவிடுகின்றார்கள் சில ஜோதிடர்கள்.
இந்த மகளின் திருமணத் தடைக்கு, இவளும், இவள் குடும்பத்தினருமே காரணம். இவள் நன்கு படித்து, இப்போது நல்ல உத்தியோகத்தில் இருக்கின்றாள். இவன் குடும்பமும் கொஞ்சம் வசதியான குடும்பம் என்பதால், இவர்களின் அந்தஸ்திற்குத் தகுந்த, மகளின் தகுதிக்குத் தகுந்த, மணமகனைத் தேடிவருகின்றார்கள். இந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்த வரன்கள், தங்கள் அந்தஸ்த்திற்குத் குறைந்த வர்கள் என்பதாலும், மேலும் இவர்கள் எதிர்பார்த்தபடி இல்லையென்று, அந்த மாப்பிள்ளைகளை இவர்களே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார்கள்.
இந்த மகளின் திருமணத் தடைக்கு மூன்று காரணங்கள் உண்டு. இவர்களின் வம்ச முன்னோர்கள் காலத்தில், முன்னோர்களில் ஒருவன், இவர்கள் குடும்ப அந்தஸ்த்திற்குக் குறைந்த, ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். இவன் குடும்ப முன்னோர்கள், அவளை வீட்டிற்கு வாழவந்த பெண் மருமகள் என்றும் மதிக்காமல் மிகவும் கீழ்த்தரமாகவும், கேவலமாகவும், ஒரு வேலைக்காரியைப்போல் நடத்தினார் கள். வாழணென்றும் வந்த பெண் நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தாள். துன்பங்களையே அனுபவித்த அந்தப் பெண் மனம் வெறுத்து விட்டசாபம், வம்சத்தில் பிறந்த வாரிசுப் பெண்ணான இவளை தொடர்ந்து, இப்போது இவள் வாழ்க்கையை தடுத்துவருகின்றது.
சில ஜோதிடர்கள் ராகு- கேது தோஷம் என்று கூறி தங்கள் பங்கிற்கு இவள் திருமணத்திற்குத் தடையை ஏற்படுத்தி வருகின்றார்கள். மேலும் இவள் குடும்பத்தினரும் தங்கள் அந்தஸ்து, தகுதி இவற்றுக்கு சமமான மாப்பிள்ளையை எதிர்பார்த்து, இவளுக்கு வரன் தேடுகின்றார் கள். இதுபோன்று வம்ச சாபத்தாலும், ஜோதிடர்களாலும், குடும்பத்தினராலும் இவள் திருமணம் தடையாகிக்கொண்டே வருகின்றது.
ஒரு ஆணிற்கு யார் மனைவி? பெண்ணிற்கு கணவன் யார் என்று அவர்கள் பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டுதான் பிறக்கின்றார்கள். பெற்றவர்கள், ஜோதிடர்கள், மற்றவர்களால் தீர்மானிக்கப்படுவது இல்லையென்று கூறி இவளுக்கு கணவனாக அமையப் போகின்றவனைப்பற்றி அனைத்து விவரங்களையும் கூறிவிட்டு, வம்சத்தில் வாழவந்து, சீரமத்துடன் வாழ்ந்து மறைந்த பெண் சாபம் நீங்க பரிகார நிவர்த்தி வழிமுறைகளையும், எதிர் காலத்தில் நல்ல உயர்ந்த வாழ்க்கையை அமைய நடைமுறை வாழ்வில் செயல்பட்டு வாழவேண்டிய வழிமுறைகளையும் கூறிவிட்டு, அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியபடியே வம்ச பெண் சாப நிவர்த்தியைச்செய்து, அவர் கூறியபடி மாப்பிள்ளை அமைந்தால், இனி ஜாதகம், பொருந்தம் பாராமல், அவர் கூறிய சுபமுகூர்த்த நாளிலேயே மகளுக்குத் திருமணம் செய்கின்றோம் என்று மகிழ்ச்சியுடன் கூறிச் சென்றார்.
செல்: 99441 13267