குலதெய்வம் பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு, பாலஜோதிட வாசகர்கள் நிறைய பேர், பலவிதமான கேள்விகளை கேட்டுள்ளீர்கள். இவை அனைத்திற்கும், பொதுவான விளக்கங்களை, சில வருடங்களுக்குமுன்பு ஒருவர் கேட்ட இதேபோன்ற கேள்விகளுக்கு ஜீவநாடியில் அகத்தியர் கூறிய பதில்களை இப்போது அறிவோம்.

சுமார் 80 வயதுடைய ஒரு பெரியவர், 20 வயதுடைய தனது பேரனுடன் ஜீவநாடி பலன்கேட்க வந்திருந்தார்.

அவரிடம் என்ன "விஷயமாக பலன் கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

ஐயா, "என்னைத் தவறாக நினைக்காதீர்கள். நீண்டகாலமாக சில கேள்விகளுக்கு விடைதேடி அலைகின்றேன். மடாதிபதிகள், பீடாதிபதிகள், டி.வி.யிலும், கோவில்களும், கடவுளைப் பற்றிய கதைகள் கூறுபவர்கள், வேதம், சாஸ்திரம் படித்த விற்பன்னர்கள், பெரிய ஜோதிடர்கள் என நிறைய பேரிடம் எனது இந்த கேள்விகளுக்கு விடைகூறுமாறு கேட்டேன்.

Advertisment

ss

என் கேள்விகளுக்குப் பதிலாக, அவர்கள் அனைவரும், வேதம், புராணம், இதிகாசம், சாஸ்திரங்களில் கூறப் பட்டுள்ளது என்று எதையெதையோ கூறினார்கள்.

அவர்கள் கூறியது எனது கேள்விகளுக்கு சரியான பதிலாகத் தெரியவில்லை. என் கேள்விகளுக்கு சரியான பதில் அகத்தியரிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்துள்ளேன்'' என்றார்.

உங்கள் கேள்விகளைக் கேளுங்கள், அகத்தியர் பதில் கூறினால் அதைப் படித்துக் கூறுகின்றேன் என்றேன்.

மனிதர்கள் வாழ்வில் உண்டாகும் சிரமம், கஷ்டம், தடைகளுக்கு ஏராளமான பாவ- சாப- தோஷங்களை ஜோதிடர்கள் கூறி, இவை தீர பலவிதமான பரிகாரஙகளைச் செய்தும், சிரமம், தடைகள் தீரவில்லை. இது என் வாழ்வின் அனுபவம். உண்மையில் மனிதர்களை பாதிக்கும் பாவ- சாப- தோஷங் கள் எவை? அவைகள் யாரால்? யாருக்கு? எப்படி உண்டாகின்றது. இந்த பாவ- சாபங் களை தீர்க்கும் சக்தி எது?

முன்னோர்கள் செய்த பாவங்கள் அந்த வம்சத்தில் பிறக்கும் வாரிசுகளையும் தொடர்ந்து வந்து பாதிக்கும் என்று கூறுகின்றார்கள். வம்சத்தில் உண்டான பாவ- சாப- தோஷம், குடும்ப வாரிசுகளுக்கு தொடர்ந்துள்ளது என்பதை எப்படி அறிந்துகொள்வது.

குலதெய்வம் தெரியாதவர்கள், குலதெய்வ வழிபாட்டை எப்படி? எங்கே செய்வது? இந்த கேள்விகளுக்குத்தான் விடை தெரியவேண்டும்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் பதிலைக் கூறத் தொடங்கினார். பிறர் சொல்வதைக்கேட்டு, அதனை நம்பி வாழாமல், எதையும் ஏன்? எதற்கு? அப்படி செய்தால் எனக்கு ஏற்படும் நன்மை- தீமை, லாபம்- நஷ்டம் என்ன என்று அறிவால் கேள்விகளைக் கேட்பவன், அனைத் தையும் அறியத்துடிப்பவன், ஞானத்தை தேடுபவன் அவன் சித்தத்தில் ஞான ஒளி வீசி வெளிப்படத் தொடங்கிவிட்டது. கேள்வி களைக் கேட்டு எதையும் அறிந்துகொள்ள துடிப் பவனே அகத்தியரின் சீடன் ஆவான். இவன் தன் வாழ்விற்கு பலன் கேட்காமல், கேள்விக்கு பதில் கேட்டு வந்துள்ளான். பதிலைக் கூறுகின் றேன். அறிவால் அறிந்து, புத்தியால் புரிந்து, அனு பவத்தில் உண்மையை தெரிந்துகொள்ளச் சொல் என்று கூறி பதில் சொல்லத் தொடங்கினார்.

இவனின் முதல் கேள்வி, ஜோதிடர்கள் கூறும் பலவிதமான பாவ- சாப- தோஷங் களைக் கூறினான். ஆனால் உண்மையில் ஒன்பது விதமான பாவங்களே, மனிதன் வாழ்க்கை யைப் பாதிக்கும். ஒருவன் தன் குடும்ப உறவு களுக்கு செய்யும் தீமைகள், கொடுமைகளே பாவ- சாபமாகி அவனவன் அடுத்தப் பிறவி வாழ்க்கையில் சிரமம், தடை, இழப்புகளைத் தந்து அனுபவிக்கச் செய்கின்றது. அவரவர் செயல்களே அவரவர்க்கும், வம்ச வாரிசுகளுக் கும் பாவ- சாப- தோஷ பாதிப்புகளை உண்டாக்கின்றது.

பெற்ற தந்தைக்குச் செய்யும் கொடுமை, தீமைகள் பித்ருதோஷம். பெற்ற மகனுக்குச் செய்யும் கொடுமைகள், தீமைகள் புத்திர தோஷம். தாய்க்குச் செய்யும் கொடுமைகள் தாய் சாபம். வாழவந்த பெண் சாபம். சகோதரன், சகோதரிகளுக்கு செய்யும் தீமைகள் சகோதர சாபம், தாய்மாமன், வியாபார கூட்டாளி களுக்குச் செய்யும் தீமைகள் தாய்மாமன் சாபம். ஆணவ, அதிகாரத்தால் தனக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு செய்யும் பிரம்ம (மனிதன்) ஹத்திதோஷம்.

மனைவிக்கு செய்யும் கொடுமை, துரோகம் களத்திரதோஷம். வேலைக்காரர்களின் கூலியை தராமல் ஏமாற்றுவது பாமர சாபதோஷம்.

இந்த ஒன்பதுவிதமான பாவ- சாப- தோஷங்களே மனிதர்கள் வாழ்வில் பிறவி களில் தொடர்ந்து, அனுபவிக்கச் செய்யும். வேறு எந்த செயலாலும் பாவ- சாபங்கள் உண்டா காது. வாழ்வில் சிரமம், தடைகளைத் தராது.

ஒருவருக்கு உண்டான பாவ- சாப- தோஷங் களை இவனுக்கு ஜோதிடர்கள் கூறிய பக்தியால், பணத்தால், தான, தர்மங்களால், இறைவழிபாடு, அர்ச்சனை, அபிஷேகம், பலவிதமான அன்னதானம், பூஜை, ஹோமம், யாகம், பிரார்த்தனைகளால் தீர்க்கமுடியாது; தீராது. இன்னும் ரிஷிகள், சித்தர்கள், முனிவர் கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், குரு, மகான், ஆச்சார்யர்கள் என கூறிக்கொள்பவர் களாலும், அவர்களின் அருள், ஆசியாலும் தீர்க்கமுடியாது.

பாவ- சாப- தோஷங்கள் யாரால் தீர்க்க முடியும், தீரும் என்பதையும் கூறுகின்றேன்.

இந்த பாவ- சாப- தோஷங்களை தீர்க்கும் சக்தி எது என்றும் கூறுகின்றேன். முற்பிறவி களில், நமது கொடுமை செயல்களால், எந்த உறவு பாதிக்கப்பட்டு, மனம் வெறுத்து வாக்கு சாபம் விட்டதோ, அந்த உறவுகளால் மட்டுமே சாப நிவர்த்தியை தரமுடியும்; தீர்க்கமுடியும். ஒருவன் தன் முற்பிறவிகளில் தனது குடும்ப உறவுகளுக்கு எந்தவிதமான தீமைகளைச் செய்தானோ, அதனை தெளிவாக அறிந்து, இந்தப் பிறவியில் அந்த உறவுகள் மனம் மகிழ்ச்சி யடையும்படி நன்மைகளைச் செய்து, தேவை களை நிறைவேற்றி, அந்த உறவுகளிடம் பாசமா இருந்து, முற்பிறவியில் செய்த பாவத்தை தீர்த்துக்கொள்ளவேண்டும். சிரமம், தடைகள் இல்லாத நல்ல வாழ்க்கையை நாமே அமைத்துக்கொள்ளலாம். முற்பிறவி பாவ- சாபங்களை நீக்கும் சக்தி, அவரவர் குடும்ப உறவுகளுக்கே உண்டு. வேறு எந்த சக்தியாலும், எந்த செயலாலும், தீர்க்கமுடியாது என்பதே உண்மை.

ஒருவன் தன் முற்பிறவியில், தந்தைக்குச் செய்த பாவம் பித்ருதோஷம் ஆகும். இந்த தோஷபாதிப்பு உள்ளவர்கள், இந்தப் பிறவியில் தனக்கு யார்? தந்தையாக உள்ளனோ, அந்த தந்தையின் மனம் மகிழும்படி எந்தக் குறையும் இல்லாமல், காப்பாற்றி, தந்தையின் ஆசியையும், நல்வாக்கினைப் பெற்றால் மட்டுமே பித்ரு- சாப- தோஷம் விலகும். வம்ச வாரிசுகளை இந்த தோஷம் பாதிக்காது. இதுபோன்று ஒன்பதுவிதமான தோஷங்களையும் அறிந்து, நமது குடும்ப உறவுகளின் நல் ஆசியைப் பெற்றால், அந்தந்த தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பதை இவன் அறிந்துகொள்ளட்டும்.

கலிகாலத்தில், ஏராளமான தெய்வங் களை உருவாக்கி வைத்துகொண்டு வழிபாடு வார்கள். சாலையில் தூரத்தைக் குறிக்கும் அளவு கல் (பர்லாங்கல்) எவ்வளவு உள்ளனவோ அவ்வளவு தெய்வங்கள் ஆஸ்திகர்களால் உருவாக்கி வைக்கப்படும். ஜோதிடர்கள் ஒவ்வொரு பாவ- சாப- தோஷத்தை நீக்க ஒவ்வொரு கோவிலையும், தெய்வத்தையும் கூறுகின்றார்கள். ஆனால் உண்மையில் அவரவர் குடும்ப உறவுகள்தான் கிரகங்களும் ஆவார்கள். அவர்களே தெய்வங்களும் ஆவார்கள்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 99441 13267