ரு அம்மன் பற்றி தெரிந்துகொண்டோம். இனி இன்னொரு பெண் தெய்வம் அம்மன் எங்குள்ளது என்பதைப் பற்றிக் கூறு என்றார்கள். இன்னொரு அம்மன் நெருப்பு சக்தி கொண்ட மாரியம்மன். அது இருக்கும் இடம் இவன் பாடம் வசித்த இடத்தில் இருந்து, கிழக்கு திசையில், சுமார் 30 மைல் தொலைவில் உள்ளது. அந்த கோவில் இருக்குமிடம், நீர்நிலை, நதிக்கரை, நண்டுகள் வசிக்கும் பகுதி, குளம், குட்டை, மதகு என பள்ளமான பகுதி, விவசாயம் வயல், சார்ந்த நன்செய் நிலப்பகுதியில் அந்த அம்மன் ஆலயம் உள்ளது. அதன் சுற்றுப்புற ஊர்களில் பிரபலமான தெய்வ ஆலயங்கள் இருக்கும் என்றேன்.

ஒரு நண்பர், நான் சொன்னதைக் கேட்டவுடனே, சட்டென்று, நீ சொன்ன அடையாளங்களை வைத்துப் பார்த்தால், அது சமயபுரம் மாரியம்மன்தான் என்றார். சமயபுரம் மாரியம்மன் கோவில் ஒரு சிறிய வாய்க்கால் கரையில் உள்ளது. அது விவசாயம் செய்யும் நன்செய் நிலப்பகுதி. அருகிலுள்ள மாகாளி குடி என்ற ஊரில், விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜயினி மகாகாளி அம்மன் கோவில் உள்ளது. மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் ஆலயம், திருவானைக் கோவிலில்

ஜம்புலிங்கேஷ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆலயம், சமயபுரத்திற்கு சற்று தொலைவில், திருவெள்ளறைப் பகுதியில், வெண்மையான பாறைக் குன்றுகளுக்கிடையே ஒரு பெருமாள் ஆலயம், அதே ஊரில் குகை போன்ற ஒரு இடத்தில் ஜம்பு மகிரிஷி (சிவப்பிரகாச சுவாமிகள்) வாழ்ந்த இடம் உள்ளது. சமயபுரத்தைச் சுற்றி நான்கு திசைகளிலும் இவ்வளவு பிரசித்தமான கோவில்கள் இருக்கின்றதால், இவரின் குலதெய்வத்தில் மற்றொரு அம்மன் சமயபுரம் மாரியம்மன்தான் என்றார்.

இரண்டு அம்மன் தெய்வங்களையும், அவை இருக்கும் இடத்தையும் அறிந்துகொண்டோம். இனி ஆண் கருப்பு தெய்வங்களையும், அவை இருக்கும் இடத்தையும் ஊர்களையும் கூறு என்றார்கள் நண்பர்கள்.

Advertisment

இந்த நண்பருக்குத் தெரிந்த முதல் தலைமுறை பாட்டன். அதாவது இவரின் பாட்டனின் பாட்டன் பெயர் மருதை. இது "மதுரைவீரன்' என்ற கருப்பு தெய்வத்தைக் குறிக்கின்றது. மதுரை வீரசுவாமி இருக்கும் ஊரைத் தேடி அலையவேண்டாம். இப்போது எப்படி? விநாயகரை, நமக்கு தேவைப்படும் இடத்தில், சாணத்திலும், மஞ்சளிலும் செய்துவைத்து வணங்குகின்றோமோ,

அதேபோன்று நாம் வசிக்கும் வீட்டிலேயே மதுரை வீரசுவாமிக்கு, படையல் போட்டு வணங்கலாம். பொதுவாக மதுரை வீரசுவாமி காவல் தெய்வம் என்பதால், எல்லாரின் குலதெய்வ அம்மன் ஆலயங்களிலும் மதுரை வீரனுக்கு தனிச் சந்நிதி இருக்கும்.

(இன்றையநாளிலும் கிராமங்களில் வசிக்கும் மக்கள், ஆடு, மாடு வாங்கினா

Advertisment

லும், விற்றாலும், மாடு வீட்டில் கன்று குட்டி போட்டாலும், புதிதாக பூமி, நிலம், ஒரு சொத்து, வாகனம் வாங்கினாலும், முதலில் மதுரை வீரனுக்கு படையல் போட்டு படைப்பார்கள். மதுரை வீரசுவாமி எல்லாருக்கும் பொதுவான தெய்வம்.

முதல் தலைமுறை பாட்டனாராகிய மருதை என்பவரின் மகன் பெயர், வேம்படி இவர் தந்தையின் பாட்டனார். இது வேம்படி என்ற கருப்பு சாமியைக் குறிக்கும் பெயர். இது இருக்குமிடம், வியாபாரக் கடைகள் உள்ள வீதிப்பகுதி, பெண்கள் குழுமிருக்குமிடம், நீர்நிலை, வாய்க்கால், விவசாயம், வயல் சார்ந்த சேற்றுப் பகுதியில் இந்த வேம்படி கருப்பரின் ஆலயம் உள்ளது.

ss

ஒரு நண்பர் நான் சொன்னதைக் கேட்டுவிட்டு, சமயபுரத்தில் நீங்கள் கூறியது

போன்ற பகுதியில், ஒரு வேம்படி கருப்பு சாமி கோவில் உள்ளது. இது சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்திலுள்ளது என்றார்.

வேம்படி என்பவர் எனது தகப்பனாரின் பாட்டன். இவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பெயர் பெரியசாமி, இன்னொருவர் பெயர் காத்தமுத்து. இவர்கள் இருவரும் எனது பாட்டனார்கள் என்றார் எனது நண்பர்.

இவரின் பாட்டனார்களில் பெரியசாமி என்ற பெயர். ஒரு கருப்பு தெய்வத்தைக் குறிக்கின்றது. இந்த தெய்வம் இவர் பாட்டனார் வசித்த ஊரில் இருந்து, சுமார் 60 மைல் தொலைவில் வடக்கு திசையில் உள்ளது. இது இருக்குமிடம் மலைகள் நிறைந்த காட்டுப்பகுதி, மரங்கள் அடர்த்தியாக உள்ள பகுதி, முட்செடிகள், கரடு, முரடான கற்கள், சிறு பாறைகள், சுற்றிலும் சின்னச் சின்ன குடியிருப்புகள், ஆடு, மாடு, மேயும் பகுதி என்றேன்.

நீங்கள் சொல்லும் அடையாளங்கள் அனைத்தும், திருச்சி மாவட்டத்தில் துறையூர்ப் பகுதி கொல்லிமலையிலுள்ள பெரியசாமி கோவில்தான் என்றார் ஒரு நண்பர்.

வேம்படி என்பவரின் மற்றொரு மகன் பெயர் காத்தமுத்து. இந்தப் பெயர் "காத்தவராயசுவாமி' என்ற கருப்பு தெய்வத்தைக் குறிப்பிடுகின்றது. இது இருக்கும் இடம், நதிக்கரை, மரங்கள் அடர்ந்த சோலை, வாகனங்கள் செல்லும் சாலைப்பகுதி, நீர் சேமிப்பு பகுதி, ஏரி, குளம் உள்ள பகுதி என்றேன்.

நண்பர்களில் ஒருவர், திருச்சி மாவட்டம் "வாத்தலை' என்ற ஊரில் காவேரி நதியில் முக்கொம்பு மேலணை உள்ள இடத்தில் நீங்கள் கூறிய அடையாளப்படி காத்தவ ராய சுவாமி கோவில் ஒன்று உள்ளது என்றார்.

நண்பரின் குலதெய்வம் இவைகள் தானா?

என்பதை முழுமையாக நிர்ணயம் செய்வோம் என்று கூறி, குடும்ப குல தெய்வம், மனிதர்களைப் போன்றே, ஒரு குடும்பம் சார்ந்த உறவுகளாகவே இருக்கும். காமாட்சியம்மன் வகையைச் சேர்ந்த தெய்வங்கள் எது? மாரியம்மன் வகையைச் சார்ந்த தெய்வங்கள் எது? என்று உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள், அப்போது தான், இவைகள்தான் நண்பரின் குலதெய்வங் கள் என்று உறுதியாக சொல்ல முடியும் என்றேன்.

காமாட்சி அம்மனின் அண்ணன் பெரியசாமி கருப்பு. இதனை பெரியண்ணசாமி என்றும் கூறுவார்கள். காமாட்சி அம்மனின் மகன் காத்தவராய சாமி இந்த மூன்று தெய்வங்களும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை. காத்தவராய சாமியின் தாய்மாமன் பெரியசாமி கருப்பு தெய்வம்.

சமயபுரம் மாரியம்மனும், வேம்படி கருப்பு சாமியும் ஒரு குடும்பம் என்று விளக்க மாகக் கூறினார் ஒரு நண்பர். நண்பரின் குலதெய்வங்களை அவரின் ஜாதகம்மூலம் அறிந்துகொண்டோம்.

குலதெய்வம் எது என்று கேட்ட நண்பர் அளவில்லாத மகிழ்ச்சிகொண்டு எனக்கு நன்றி கூறினார். நான் அவரிடம் நீங்கள் நன்றி கூறவேண்டியது எனக்கோ, அகத்தியருக்கோ அல்ல, நான் சொன்ன இடங்களின் அடை யாளங்களைக்கொண்டு, தெய்வங்களின் பெயர்களையும், அவைகள் ஆலயம்கொண்டு அமர்ந்திருக்கும் ஊர்களையும் தெளிவாகக் கூறிய நமது நண்பர்களுக்கு நன்றியைக் கூறுங்கள் என்று கூறிவிட்டு, இனி என் குலதெய்வம் எங்கே உள்ளது என்று கேட்க, என்னையும், அகத்தியரையும் தொல்லைப் படுத்த மாட்டீர்களே என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். அனைத்து மக்களுக்கும் சில தெய்வம் என்பது அம்மன், கருப்பு தேவதைகள் இணைந்து, கிராம தேவதைகளாக மட்டும்தான் இருக்கும். இன்றையநாளில் சிலர் சிவன், பெருமாள், முருகன், விநாயகர் போன்ற தெய்வங்கள்தான் எங்கள் குலதெய்வம் என்று கூறிக்கொள்கின்றார்கள். இந்த தெய்வங்கள் குலதெய்வமாகாது.

தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களில், குடும்பத்தில் மனிதனாகப் பிறந்து வாழ்ந்து, மறைந்த தங்கள் முன்னோர் களையே குலதெய்வமாக கொடை விழா, படைப்பு செய்து வழிபட்டு வருகின்றார்கள்.

உதாரணமாக, இசக்கி, பேச்சி, வெள்ளையம் மாள் போன்ற இன்னும் பல தெய்வங்களை குலதெய்வமாக வணங்கி வருவதில் இருந்து அறிந்துகொள்ளமுடிகின்றது.

செல்: 99441 13267