ஜீவநாடியில் பலன்காண ஒரு தம்பதியர் வந்தனர். அவர் களை அமர வைத்து நாடியில் பலன்காண வந்த காரணத் தைக் கூறுங்கள் என்றேன். நான் கேட்டதற்கு அவர்கள் எந்தவொரு பதிலையும் கூறாமல் மௌனமாகவே இருந்தார்கள். நான் அவர் களை பார்த்தபோது, கண்ணீர் தலும்பிய கண்களுடன் முகவாட்டத்துடன், சோக மாக இருப்பது தெரிந்தது. நான் மறுபடியும் கேட்ட வுடன் அவர்கள் பலன்கேட்க வந்த காரணத்தை அவர் கூறத் தொடங்கினார்.
ஐயா, "எங்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். மூன்று மாதத்திற்குமுன்பு, 20 வயதுடைய எங்கள் மகன் ஒரு விபத்தில் இறந்துவிட்டான். இவன் மரணம் இயற்கையாக அமையவில்லை. நோய் வாயப்பட்டும் இறக்கவில்லை. மகன் மரணத்திற்கு ஏதாவது கெட்ட சக்திகள் காரணமா? அல்லது எனது தொழில் எதிரிகளால், நிகழ்த்தப்பட்டதா? என் சொத்திற்காக என் உறவு களின் செயல்களா? என்று காரணம் தெரியவில்லை.
என் மகன் ஜாதகத்தில் அவன் 80 வயது வரை வாழ்வான் என்று ஜோதிடர்கள், குறிப்பிட்டு எழுதியும், பலன்கூறியும் வந்தார்கள். ஆனால் என் மகன் 20 வயதி லேயே இறந்து போனான். என் வம்சம் என்னோடு முடிந்துவிட்டது. மகனின் மரணத்திற்கு உண்மை யான காரணத்தை அறிந்து கொள்ளவே, அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கி னேன். அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி மகனின் மரணத்தைப் பற்றிய கேள்விக்கு பதில் கூறத் தொடங்கினார்.
இவன் மகன் மரணத்திற்கு இவன் சந்தேகப்படுவது, நினைப்பது என எதுவும் காரணமில்லை. யாரும் ஏவல், பில்லி, சூனியம் செய்து இவன் மகனுக்கு ம
ஜீவநாடியில் பலன்காண ஒரு தம்பதியர் வந்தனர். அவர் களை அமர வைத்து நாடியில் பலன்காண வந்த காரணத் தைக் கூறுங்கள் என்றேன். நான் கேட்டதற்கு அவர்கள் எந்தவொரு பதிலையும் கூறாமல் மௌனமாகவே இருந்தார்கள். நான் அவர் களை பார்த்தபோது, கண்ணீர் தலும்பிய கண்களுடன் முகவாட்டத்துடன், சோக மாக இருப்பது தெரிந்தது. நான் மறுபடியும் கேட்ட வுடன் அவர்கள் பலன்கேட்க வந்த காரணத்தை அவர் கூறத் தொடங்கினார்.
ஐயா, "எங்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். மூன்று மாதத்திற்குமுன்பு, 20 வயதுடைய எங்கள் மகன் ஒரு விபத்தில் இறந்துவிட்டான். இவன் மரணம் இயற்கையாக அமையவில்லை. நோய் வாயப்பட்டும் இறக்கவில்லை. மகன் மரணத்திற்கு ஏதாவது கெட்ட சக்திகள் காரணமா? அல்லது எனது தொழில் எதிரிகளால், நிகழ்த்தப்பட்டதா? என் சொத்திற்காக என் உறவு களின் செயல்களா? என்று காரணம் தெரியவில்லை.
என் மகன் ஜாதகத்தில் அவன் 80 வயது வரை வாழ்வான் என்று ஜோதிடர்கள், குறிப்பிட்டு எழுதியும், பலன்கூறியும் வந்தார்கள். ஆனால் என் மகன் 20 வயதி லேயே இறந்து போனான். என் வம்சம் என்னோடு முடிந்துவிட்டது. மகனின் மரணத்திற்கு உண்மை யான காரணத்தை அறிந்து கொள்ளவே, அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கி னேன். அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி மகனின் மரணத்தைப் பற்றிய கேள்விக்கு பதில் கூறத் தொடங்கினார்.
இவன் மகன் மரணத்திற்கு இவன் சந்தேகப்படுவது, நினைப்பது என எதுவும் காரணமில்லை. யாரும் ஏவல், பில்லி, சூனியம் செய்து இவன் மகனுக்கு மரணத்தை உண்டாகவில்லை. தொழில் எதிரிகளாலும், சொத்திற்கு ஆசைப்படும் உறவுகளாலும், வேறு தீய சக்திகளாலும் இந்த சோக நிகழ்வு உண்டாகவில்லை. எல்லாருக்கும் ஆயுள் காலம் நிர்ணயித்து பலன்களும். ஜோதிடர்களுக்கே அவர்கள் ஆயுள் காலம் எத்தனை வயதுவரை வாழ்வான் என்று அவனுக்கே தெரியாது. இந்த பூமியில் பிறந்த ஒருவனின் ஆயுள் காலம் எவ்வளவு என்று ஜோதிடர்களுக்கும் தெரியாது. மனிதர்களை மரணத்தில் இருந்து காப்பாற்றும் என்று அவர்கள் கூறும் கடவுளுக்கும் தெரியாது. மரணத்தை, கண்டத்தை உண்டாக்கும் என்று ஜோதிடர்கள் கூறும் கிரகங்களுக்கும் தெரியாது. அதேபோன்று ஒருவனின் மரணத்தை தானம், தர்மம், பூஜை, யாகம், நிதர்சனமான உண்மை என்பதை இவன் புரிந்துகொள்ளட்டும்.
இந்த தென்புலமான திராவிட நாட்டுப் பகுதியில், பிறந்த சித்தர் பெருமக்கள் நாங்கள் 18 பேர்கள் மட்டுமே வாசியோகம் செய்து, உயிர்க்காற்றை எங்கள் உடலினுள் அடக்கி, மரணத்தை வென்று, மரணமில் லாப் பெருவாழ்வு பெற்று இன்றும் உயிரு டன் வாழ்ந்துவருகின்றோம். இந்த பூமியில் மனிதனாகப் பிறந்தவர்கள் என்று கூறப் படும் கடவுள் அவதாரங்கள், ரிஷிகள் முனிவர்கள், ஞானிகள், மகான்கள் தங்களை கடவுளின் தூதர்கள், மக்களை காப்பாற்றவே பிறந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மடாதிபதிகள், பீடாதிபதிகள், ஆச்சார் யார்கள், அரசர்கள் என அனைவரும் இறந்து போய்தான் உள்ளார்கள். இருப்பவர்களும் ஒருநாள் இறந்துதான் போவார்கள்.
ஒருவர் பிறக்கும்போது, அவரின் சுவாச மூச்சுக்காற்று, எத்தனை கோடி என்று கணக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ, அவ்வளவு காலம் மட்டுமே சுவாசித்து உயிர் வாழலாம்.
மூச்சுக்கணக்கு முடிந்து, கடைசி மூச்சுக் காற்று, உடலைவிட்டு வெளியேறிவிட்டால், மரணம் அடைந்துவிடுவான். மூச்சுக்காற்று கணக்கு தீராமல் இருப்பவன். எவ்வளவு பெரிய நோய், விபத்து, கண்டம் இருந்தாலும் தப்பித்து அதில் பிழைத்து உயிர் வாழ்வான். மூச்சுக்காற்று கணக்கு முடிந்தவன் ஒரு சிறிய நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் அல்லது ஏதாவது ஒரு சம்பவம், நிகழ்வு நடந்தாலும் மரணம் அடைந்து விடுவான். மரணமடைய காரணம் தேவையில்லை. சுவாச மூச்சுக் காற்றின் கணக்குதான் என்பதை இவன் அறிந்துகொண்டு மனஅமைதியை அடையச் சொல்.
இவன் மகன் மரணத்திற்கு காரணம், இவன் முற்பிறவியில் தான்பெற்ற மகனுக்கு செய்த துரோகம், இப்பிறவியில் புத்திரனை இழக்கச்செய்து புத்திர சோகத்தை, அனுபவிக் கச் செய்கின்றது. இவன் இந்தப் பிறவியில், பெற்ற மகனை இழந்து, புத்திர சோகத்தை அனுபவித்து வாழவேண்டும் என்பது தனக்கு நிர்ணயிக்கப்ட்ட விதி என்பதை அறிந்துகொண்டு, பெற்றவர்கள் மனம் அமைதிகொள்ளட்டும். இவன் முற்பிறவி யில், தான்பெற்ற மகனுக்கு செய்த பாவ செயலைக் கூறுகின்றேன் அறிந்து கொள்ளட்டும்.
இவனின் முற்பிறவியில், ஒரு பெண்ணை மணந்து, மனைவியாக அடைந்தான்.
அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு நான்கு வயது ஆகும்போது, மனைவி இறந்துவிட்டாள். மகன் தாயற்ற குழந்தையானான். தாயில்லாத தன் மகனை தனது குடும்பத்து உறவுகளின் உதவியுடன் வளர்த்து வந்தான். ஒரு வருடகாலம் சென்ற பின்பு, தனது குடும்பத்தினர், கூறியதாலும், தன் உடல் தேவைக்காகவும் மற்றும் ஒரு பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டான். இரண்டாவது மனைவி கர்ப்பம் அடைந்த பின்பு, மூத்த மனைவிக்கு, பிறந்த மகனை சரியாக கவனிக் காமல், அவனை துன்புறுத்தவும் செய்தாள். மனைவியின் பேச்சைக்கேட்டு இவனும் பெற்ற மகனிடம் பாசத்தை குறைத்தான்.
முதல் மனைவியின் பெற்றோர், இவனின் செயலை அறிந்து, நான்கு வயது பாலகனை, தங்கள் பேரப் பிள்ளையை, தாங்களே வளர்ப்ப தாக கூறி, அழைத்துச்சென்று, தங்கள் வீட்டில், தங்கள் பராமரிப்பில் வளர்த்துவந்தார்கள். இவன் மகன் தந்தையின் பாசமின்றி, தாய்மாமன் வீட்டிலேயே வளர்ந்தான். இதனால் இவன் மகன், பெற்ற தந்தையான இவன்மீது வெறுப்பும், கோபமும் கொண்டான். மகன் வளர்ந்து, பெரியவனாகி, திருமணம் செய்யும்போதுகூட தன் தந்தையை அழைக்கவில்லை, ஏன்? தன் ஆயுள்வரை, தந்தையிடம் சேராமல் ஒதுக்கிவைத்தே வாழ்ந்தான்.
இவன் முற்பிறவியில், தான்பெற்ற மகனைக் காப்பாற்றாமல், ஒரு மகனுக்கு தந்தை செய்யவேண்டிய கடமையைச் செய்யாமல், வெறுத்து ஒதுக்கியதால், பெற்ற மகன் மனம் வெறுத்துவிட்ட புத்திர சாபம் இவனை பற்றியது. அந்த சாப தாக்கம் இந்த பிறவியில் பெற்ற மகனை இழந்து, மனம் வருந்தச் செய்துவிட்டது.
இந்த பிறவியில் இவனுக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தையும் பிறந்த இரண்டாவது நாளிலேயே, மருத்துவமனையிலேயே இறந்து போனது. மூன்றாவதாக இந்த மகன் பிறந்தான்.
ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை இந்த இரண்டு குழந்தைகள் போதும் என்று நினைத்து, அடுத்து கரு உண்டான மூன்று குழந்தைகளையும், இவர்கள் கர்ப்பத்திலேயே கலைத்துவிட்டார்கள்.
முற்பிறவி புத்திர சாப தாக்கத்தினால், இவனுக்கு எத்தனை ஆண் குழந்தைகள் பிறந்தாலும், அவை அனைத்தும் இறந்து போகும். எத்தனை ஆண் கரு கூடினாலும் அவை கலையும் அல்லது இவர்களாலேயே கலைக்கப்படும். இப்பிறவியில் இவன் புத்திர சோகத்தை அனுபவித்து வாழ்ந்துதான் மறையவேண்டும் என்பதே இவனின் பிறப் பின் காரணம்.
இந்த மண்ணுலகில், மனிதனாகப் பிறந்த கடவுள் அவதாரங்கள், ரிஷிகள், முனிவர்கள், மன்னர்கள் என நிறைய பேர், புத்திர சோகத்தை அனுபவித்து வாழ்ந்துள்ளார்கள் என்பதை இவன் தெரிந்துகொண்டு, மகனின் இறப்பு விதிப்படி நடந்து என்பதை புரிந்து, மனதின் சோகத்தை விட்டுவிட்டு வாழ்க்கையை அமைதியாக வாழச்சொல். இனி வருங்கால வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக்கொள்ளும் வகையில் பொருளாதாரநிலையை உயர்வடைய செய்து இவனை வாழச்சொல் என்று கூறிவிட்டு அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியதை அவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டு, காரணம் இல்லாமல் மனிதன் வாழ்க்கையில் எந்த காரியமும் நடக்காது. மகன் இறப்பிற்கு காரணத்தை தெரிந்துகொண்டீர்கள். இனியும் சோகத்திலேயே வாழ்ந்துகொண்டு இருக்காதீர்கள் என்று கூறி அனுப்பி வைத்தேன்.
(இன்றையநாளில் வேத ஜோதிடர்கள் புத்திர சாபம் என்று பொதுவாக கூறி விடுவார்கள். இந்த புத்திர சாபம் நான்கு விதமாக பிரிந்து மனிதன் வாழ்வில் செயல்பட்டு பலன்தரும். புத்திர சாபம், புத்திர சோகம், புத்திர தோஷ, புத்திர சோகம் என்ற நிலையில் இவை நான்கும் வெவ்வேறு விதமான பலன்களைத் தரும்).
செல்: 99441 13267