சிங்கப்பூரிலிருந்து 35 வயதுடைய ஒருவர் அலைபேசியில் தொடர்புகொண்டு, "ஐயா, நான் "பாலஜோதிடம்' வாசகர். நீங்கள் எழுதும் அகத்தியர் ஜீவநாடி கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். பல பேரின் வாழ்க்கைப் பிரச்சினைகள், தடைகளுக்கு நல்ல வழிகாட்டும் அகத்தியர் என் பிரச்சினை தீர வழி கூறுவாரா?'' என்றார்.

"அகத்திய மாமுனிவர், யாருடைய பிரச்சினையைத் தீர்க்கவேண்டுமென்று எண்ணுகிறாரோ, அவர்கள் மனதில் நாடியில் பலன்கேட்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டி, அவர்களை தேடி வரச்செய்து நல்லவழி கூறுவார். உங்கள் மனதில் நாடி படிக்கவேண்டுமென்ற எண்ணம் தோன்றியதால் கண்டிப்பாய் நல்லவழி கூறுவார். உங்கள் பிரச்சினையைக் கூறுங்கள்'' என்றேன்.

ss

"தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் நான்.

இப்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறேன். இந்த நாட்டுப் பிரஜையாகி விட்டேன். இப்போது உங்களை நேரில் வந்து பார்க்கமுடியாது. நாடிப்பலனை செல்போனில் கூறுங்கள்.

இதுநாள்வரை என் வாழ்க்கையில் மூன்று பெண்கள் பழக்கம் கொண்டார்கள். ஆனால் என்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார்கள். வயதுதான் ஆகின்றதே தவிர, இன்னும் வாழ்க்கை அமையவில்லை. எனக்குத் திருமணம் நடக்குமா? நடக்குமென்றால் எனக்கு மனைவியாக வரப்போகிறவள் யார்? இதுதான் என் கேள்வி'' என்றார்.

சிங்கப்பூர் வாசகருக்கு, அலைபேசி யிலேயே பலன்கூற அகத்தியர் எண்ணி விட்டார் என்று நினைத்து, அவருக்காக ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். எழுத்து வடிவில் தோன்றி அகத்தியர் பலன்கூறத் தொடங்கினார்.

"மூன்று தலைமுறைக்குமுன்பு, இவன் பாட்டன் ஒருவன், இந்த தமிழ்மண்ணில் இருந்து, இராவணன் தேசத்திற்கு (இலங்கை) பஞ்சம் பிழைக்க தன் இளம் வயதிலேயே சென்றான். அங்கு ஒரு தோட்டத்தில் கங்காணியாக வேலை செய்துவந்தான்.

அங்கு சிங்களமொழி பேசும் ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்தான். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. சில காலம் சென்றபின்பு, இங்கிருந்த பெற்றோரும், உறவுகளும், திரும்ப தமிழ்நாட்டிற்கு வரச்சொல்லி வற்புறுத்தியதால், தன் சொந்த ஊருக்கு வந்தான். அப்போது அவனுக்கு வயது நாற்பது.

இவன் குடும்பத்தினர், "இனி சிலோனுக்குச் செல்லவேண்டாம், ஒரு பெண்ணை மணந்து, இங்கேயே இருந்துவிடு' என்று கூறினார்கள். இவன் தனக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதைப்பற்றிக் கூறினான். இவன் கூறியதை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. தங்கள் உறவுப் பெண் ஒருத்தியைத் திருமணம்செய்து வைத்தார்கள். அதன்பின் இவன், ஒருமுறை இலங்கை சென்று, அங்கு சம்பாதித்த சொத்துகளை அந்த மனைவி, குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு வந்துவிட்டான். அதன்பின்பு, அவர்கள் உறவு அறுந்துவிட்டது. பிறகு இங்கேயே இரண்டாவது மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து மறைந்தான்.

சிங்கள மனைவி, இரண்டு குழந்தை களையும் வளர்த்து, அங்கு தன் இனத்தைச் சேர்ந்தவர் களுக்கு மணம் முடித்து வைத்தாள். அந்த வம்சத்தைச் சேர்ந்து ஒரு குடும்பம், இலங்கையிலிருந்து, வெளியேறி இப்போது சிங்கப்பூரில் வசித்துவருகிறார்கள். இவன் பாட்டனின் சிங்கள மனைவி வம்சத்தில் பிறந்த ஒரு பெண்தான் இந்தப் பிறவியில் இவனுக்கு மனைவியாக வரவேண்டும் என்பதுதான் இவன் திருமண விதி.

இவன் பாட்டன் தமிழ்நாடு வந்து ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்தாலும், தன் முதல் மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் மறக்கமுடியாமல் அவர்களை நினைத்தே தான் வாழ்ந்து மறைந்தான்.

அவன் ஆத்மா, அந்தப் பெண்ணையே இவனைத் தேடி வரச்செய்யும்.

இன்னும் சில மாதங்களில் இவனுக்கு வாகனத் தால் விபத்து ஏற்பட்டு, கால்களில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவான். இவன் படுக்கைக்கு அருகில், ஒரு வயதான, சிங்கள மூதாட்டியும் அங்கு சிகிச்சைப் பெறுவாள். அவள் மகன் வயிற்றுப் பேத்தி அவளை கவனித்துக்கொள்ள அவளுடனேயே தங்கியிருப்பாள்.

அந்தப் பெண்தான். இந்தப் பிறவியில் இவனுக்கு மனைவியாக வரப் போகிறவள்.

அந்த மூதாட்டி, இவனிடம் தன் குடும்ப வரலாற்றைக் கூறி, இவனைப் பற்றியும், இவன் வம்ச முன்னோர்களைப் பற்றியும் கேட்பாள். அப்போது, இவன் பாட்டன் கால வாழ்க்கை, உறவு நிலை வெளிப்படும். இவனும் தன் உறவுதான் என்று தெரிந்தவுடன், அந்தக் குடும்பத்தினர் மனம் மகிழ்ந்து, அந்தப் பெண்ணை இவனுக்கு மணம் முடித்து வைப்பார்கள். தன் பாட்டான், தன் மனைவி, குழந்தைகளுக்குச் செய்த பாவத்தை, இந்தப் பெண்ணை மணந்து நிவர்த்தி செய்யச்சொல். இவன் பாட்டன் ஆத்மா சாந்தியடையும்; இவனுக்குத் துணையாக இருந்து காப்பாற்றும்'' என்று கூறி ஓலையிலிருந்து மறைந்தார்.

திருமணத்தடைக்கு, முற்பிறவியில், வம்ச முன்னோர் கள் காலத்தில் செய்த தவறு களும், பாவங்களும் தன் பேரன் காலத்தில் வாழ்க்கையில் தீர்க்கவேண்டுமென்று ஏராளமான காரணங்களுண்டு என்றும்; திருமணம் மொழி, மதம், சாதி, இனத்திற்கு சம்பந்தமில்லாதது; ஒருவரின் பிறப்பின் விதி அறியாதவர்கள், குடும்பத்தினர், வாழவேண்டியவர்களின் வாழ்க்கையைத் தடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் நானும் தெரிந்து கொண்டேன்.

செல்: 99441 13267