கற்பனையில் கணவனை தேடிய பெண்ணிற்கு கணவனை அடையாளம் காட்டிய அகத்தியர்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/agathiya-identified-husband-woman-who-was-looking-husband-her-imagination

ரு தம்பதியர், ஜீவ நாடியில் பலன்காண வந்திருந்தனர்.

அவர்களை அமரவைத்து, என்ன காரியமாக பலன்கேட்க வந்துள்ளீர்கள் என்றேன்.

ஐயா, "எனது மகளுக்கு 33 வயதாகின்றது. கடந்த ஐந்து வருடமாக மாப்பிள்ளை தேடிவருகின்றேன்.

SS

எந்த வரனும் சரியாக அமையவில்லை. இதற்கு காரணமும் தெரியவில்லை. இதுவரை நான் பார்த்த ஜோதிடர்கள் கூறிய, அனைத்து பரிகாரங்களையும் செய்துவிட்டேன். ஆனால் எந்தப் பலனும் இல்லை. திருமணமும் கூடிவரவில்லை. எனது நண்பர் ஒருவர், தங்களைப் பற்றிக் கூறி, நீங்கள் சென்று அகத்தியர் ஜீவநாடியில் பலன் கேளுங்கள். அகத்தியர் திருமண தடைக்கு சரியான காரண, காரியத்தைக் கூறி, திருமண தடை விலக சரியான வழி கூறுவார் என்று கூறினார். அதன்பிறகுதான், என் மகள் திருமணம் நல்லவிதமாக நடைபெற அகத்தியர் நல்ல வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையுடன் ஜீவநாடியில் பலன்கேட்க வந்துள்ளேன்'' என்றார்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழு

ரு தம்பதியர், ஜீவ நாடியில் பலன்காண வந்திருந்தனர்.

அவர்களை அமரவைத்து, என்ன காரியமாக பலன்கேட்க வந்துள்ளீர்கள் என்றேன்.

ஐயா, "எனது மகளுக்கு 33 வயதாகின்றது. கடந்த ஐந்து வருடமாக மாப்பிள்ளை தேடிவருகின்றேன்.

SS

எந்த வரனும் சரியாக அமையவில்லை. இதற்கு காரணமும் தெரியவில்லை. இதுவரை நான் பார்த்த ஜோதிடர்கள் கூறிய, அனைத்து பரிகாரங்களையும் செய்துவிட்டேன். ஆனால் எந்தப் பலனும் இல்லை. திருமணமும் கூடிவரவில்லை. எனது நண்பர் ஒருவர், தங்களைப் பற்றிக் கூறி, நீங்கள் சென்று அகத்தியர் ஜீவநாடியில் பலன் கேளுங்கள். அகத்தியர் திருமண தடைக்கு சரியான காரண, காரியத்தைக் கூறி, திருமண தடை விலக சரியான வழி கூறுவார் என்று கூறினார். அதன்பிறகுதான், என் மகள் திருமணம் நல்லவிதமாக நடைபெற அகத்தியர் நல்ல வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையுடன் ஜீவநாடியில் பலன்கேட்க வந்துள்ளேன்'' என்றார்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி, பலன் பதில் கூறத் தொடங்கினார்.

இவனின் மகள் திருமணத்திற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் இவன் முற்பிறவியில், தான் பெற்ற மகளுக்கு செய்த துரோகம். அதைப்பற்றி முதலில் கூறுகின்றேன். அறிந்துகொள்ளச் சொல்.

முற்பிறவியில் இவனுக்கு இரண்டு மனைவிகள் உண்டு. முதல் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்தது. ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டு இரண்டாம் தாரமாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, முதல் மனைவியையும், அவள் மகளையும், வீட்டைவிட்டு வெளியேற்றி, விலக்கி வைத்தான். இரண்டாவது மனைவியுடன் குடும்பமாக வாழ்ந்துவந்தான்.

முதல் மனைவிக்கும், மகளுக்கும் உணவு, உடை, இருப்பிடம் தந்து கவனிக்கவில்லை. தாயும், மகளும் அன்றாடம் கூலி வேலைசெய்து, தங்களைக் காப்பாற்றிக்கொண்டு வாழ்ந்தார்கள். முதல் மனைவிக்கு பிறந்த பெண்ணிற்கு திருமண வயது வந்தும், தந்தை என்ற முறையில் அவளுக்கு திருமணம் செய்து வைக்க இவன் எந்த முயற்சியும் செய்யவில்லை; பொறுப்பேற்கவில்லை.

இவன் முதல் மனைவி, தன் உறவில், ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு தன் மகளைத் திருமணம் செய்துவைத்தாள். மகளின் திருமணத்திற்குக்கூட இவன் செல்லவில்லை. கட்டிய கணவன் உயிருடன் இருந்தும், பெற்ற மகள் திருமணத்திற்கு வரவில்லையேயென்று மனைவியும், பெற்ற தந்தை இருந்தும், தன் திருமணத்திற்குப் பொறுப்பாக இருந்து, தந்தையின் கடமையை செய்யவில்லையே என்று மகளும், மனம்வெந்து சாபம் விட்டார்கள். ஊராரும், உறவுகளும் இவனை கேவலமாக நினைத்து, கீழ்த்தரமாக பேசினார்கள்.

முற்பிறவியில் தான்பெற்ற மகளுக்குச் செய்த பாவமும், அதனால் உண்டான சாபமும், இப்பிறவியில் செயல்பட்டு, இவனின் மூத்த மகளின் வாழ்வில் அந்த ஆத்மாக்களின் கோபம் அடிவான இடிபோல் அம்பாய் பாய்ந்து, திருமணத்தடையைத் தந்து, இவன் மகள் ஒரு மணாளனை அடையமுடியாமல், மணவாழ்வை தடுத்துவருகின்றது. இவனால், தன் மகளுக்கு திருமணம் செய்துவைக்கமுடியவில்லையென்று, இப்போது ஊராரும், இவன் உறவுகளும் இவர்களைப் பார்க்கும்போது எல்லாம், மகள் திருமணத்தைப் பற்றியே கேள்வி கேட்கின்றார்கள். மறைவாக கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் எண்ணுகின்றார்கள். இது இவனுக்கே தெரியும்.

இவன் மகளின் திருமணத் தடைக்கு இன்னுமொரு காரணம் உண்டு. அதையும் கூறுகின்றேன். இந்த தடை இவர்களே உருவாக்கிக்கொண்டது. இவன் மகள் மருத்துவம் படித்து, மருத்துவராக தொழில் செய்து வருகின்றாள். தன் மகளையும், ஒரு மருத்துவருக்குத்தான் மணம்செய்து வைக்கவேண்டும். இவளும், தன்னைப்போன்று மருத்துவம் படித்து, மருத்துவராக தொழில் செய்பவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதத்துடன் உள்ளாள். தகப்பனும், மகளும் கற்பனையில் கணவனைத் தேடி, தேடி அலைந்துகொண்டு திருமணத்தை இவர்களே தடை செய்துவருகின்றார்கள். இவன் மகளுக்கு மருத்துவ தொழில் செய்பவன் கணவனாக அமையமாட்டான் என்பதே அவளுக்கு நிர்ணயித்த விதி.

இவனின் இந்தப்பிறவி மகளுக்கு கணவனாக அமைந்து வாழவேண்டியவன் யார்? என்ற விவரத்தைக் கூறுகின்றேன். இவன் மகளைத் திருமணம் செய்துகொள்ளப் போகின்றவன், இவளைத் தேடிவந்து திருமணம் செய்துகொள்வான் என்று கூறிவிட்டு, மணமகனாக வரப்போகின்றவன் தொழில், குடும்பம், குணம், திருமணம் செய்யவேண்டிய வழிமுறை, திருமணத்திற்குப் பின்பு வாழவேண்டிய வாழ்க்கை முறைகள் என அனைத் தையும் தெளிவாகக் கூறிவிட்டு, முற்பிறவியில், தன் முதல் மனைவிக்கும், பெற்ற மகளுக்கும் செய்த பாவமும், அதனால் உண்டான சாபமும், அந்த ஆத்மாக்களின் கோபமும், சாந்தியடைய சரியான நிவர்த்தி பிரார்த்தனை வழிமுறைகளைக் கூறிவிட்டு, ஓலையில் இருந்து அகத்தியர் மறைந்தார்.

ஜீவநாடியில் மகளின் திருமணம் பற்றி பலன்கேட்டு வந்திருந்த தம்பதியிரிடம், இதனை விளக்கமாகக் கூறிவிட்டு, ஐயா, "உங்கள் கற்பனை, ஆசைப்படி மணமகனைத் தேடாதீர்கள். அகத்தியர் கூறியபடி மணமகனைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவையுங்கள்' என்று கூறி அனுப்பி வைத்தேன்.

செல்: 99441 13267

bala241123
இதையும் படியுங்கள்
Subscribe