சுமார் 75 வயதுடைய ஒரு பெரியவர், நாடியில் பலன்கேட்க வந்தார். அவரை அமரவைத்து, "என்ன காரியமாகப் பலன்கேட்க வந்தீர்கள்' என்றேன்.
"ஐயா, சுமார் பத்து அல்லது பன்னிரண்டு வருடங்களுக்குமுன்பு, தங்களிடம் வந்து ஜீவநாடியில் பலன் தெரிந்துகொள்ள வந்தேன். ஓலையைப் படித்து நீங்களும் என் முற்பிறவி, வம்ச முன்னோர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும், அதனால், இந்த பிறவியில் நான் அனுபவிக்கப்போகும் நன்மை- தீமை பலன்களைக் கூறி, பாவ- சாபப் பதிவுகள் என்னைப் பாதிக்காமல், விதியைத் தடுத்துக்கொள்ளும் வழிமுறைகளைக் கூறி அதனைக் கடைபிடித்து வாழ்ந்துவரக் கூறினீர்கள்.
அகத்தியர் ஓலையில் கூறியபடியே, எனது முன்னோர் கள் தேடிவைத்துச் சென்ற பூர்வீக சொத்துகள் அனைத் தையும், எனது மூன்று மகன்களுக்கும், சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தேன். மூன்று மகன்களுக்கும், அவர்கள் ஜீவனத்திற்கு, அகத்தியர் கூறியபடியே அவரவர்க்குரிய தொழிலை அமைத்துக்கொடுத்தேன். கூட்டும் குடும்ப மாக வசிக்கக்கூடாது, என் மகன்களை விட்டுப் பிரிந்து என்னைத் தனியே வசிக்கச் சொன்னீர்கள். அதேபோன்று, அவர்களுக்கு தனித்தனியே வீடு கட்டித்தந்து, அவர் களையும் தனித்தனி குடும்பமாக வசிக்கவைத்தேன்.
அவர்கள் மூன்று பேரும், தனித்தனியாக, அவரவர் மனைவி, குழந்தைகளுடன் வசித்துவருகின்றார்கள். என் மகன்கள் மூன்று பேரிடமும், என் வாழ்க்கைக்காக, பணம், பொருள் என எதுவும் வாங்கக்கூடாது, நானும் அவர்களுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்று கூறினீர்கள். அதேபோன்று, நான் தனியாக தொழில் செய்து, சம்பாதித்து, என் உழைப்பில் கிடைக்கும் வருமானத்தில்தான் வாழ்ந்துவருகின்றேன். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் என் மகன்களிடம் நான் எதுவும் வாங்குவதில்லை. அவர்களுக்கு நான் எதையும் கொடுத்து உதவிசெய்வது இல்லை என்றார்.
இப்போது நானும், எனது மகன்களும் அவரவர் அறிவு, உழைப்பு முயற்சியினால் நிறைய சொத்து, பணம் சம்பாதித்து, சேர்த்து, எந்த விதக் குறையும் இல்லாமல், அனைவரும் ஒற்றுமையாக உறவு குறையாமல் வாழ்ந்துவருகின் றோம். ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்த நான், இன்று நான் வசிக்கும் ஊரில் ஒரு பெரிய மனிதனாக, செல்வந்தனாக பிறர் மதிக்க வாழ்கின்றேன் என்றால், அதற்கு அகத்தியர் காட்டிய வழிதான் காரணம்'' என்றார்.
"அகத்தியர் கூறிய வழிமுறைகளை, வாழ்வின் நடைமுறை செயல்களில் கடைப்பிடித்து, செயல்பட்டு நல்லமுறையில் புகழுடன் வாழ்கின்றேன் என்று கூறுகின்றீர்கள். இப்போது நாடியில் எதற்காக பலன் கேட்க வந்துள்ளீர்கள்'' என்றேன்.
"75 வயதாகிவிட்ட எனக்கு, முன்புபோல் அலைந்து, ஓடியாடி தொழிலைக் கவனிக்க முடியவில்லை.
என் உதவிக்கு நம்பகமான ஒருவரை வேலைக்கு வைத்துக்கொள்ள எண்ணுகின்றேன். வெளியாட்களை வேலைக்கு வைத்துக்கொள்ளவும் எனக்கு விருப்பம் இல்லை. என் தொழில் பெருந்தொகை வரவு- செலவு உள்ள தொழில், அதனால் என் மூன்று மகன்களுக்கும் பிறந்த பேரன்கள் இருக்கின்றார்கள். அவர்களில் யாராவது ஒருவரை, என் தொழிலைக் கவனிக்க, எனக்கு உதவியாக வைத்துக்கொள்ள நினைக் கின்றேன். என் எண்ணம் சரிதானா? இல்லை வேறுவழி ஏதாவது அகத்தியர் கூறுகின்றாரா? என்பதை அறிந்து கொள்ளவே தங்களை நாடி வந்துள்ளேன். அகத்தியர் எப்படி கூறினாலும் சரி, அவர் கூறுவதையே செய்கின்றேன்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
அகத்தியன் யான் கூறியதைக் கடைப்பிடித்து வாழ்ந்து, இன்று தானும், தன் மகன்களும், நல்லநிலையில் உள்ளதாகக் கூறினான். அகத்தியனுக்கு மிக்க மகிழ்ச்சி. இவன் தீர்த்து முடிக்கவேண்டிய முற்பிறவி சாபம் இன்னும் ஒன்று உள்ளது. இவன் முற்பிறவியில், பறவை, மிருகங்களை வேட்டை யாடி, அதன் இறகுகளை, கால்களை ஒடித்துக் கொன்று விடுகிறான். மேலும் தன்னைவிடக் கீழானவர்களை, உடல் ஊனமுற்றவர்களை, தரக்குறைவாகப் பேசி, அடித்து துன்புறுத்தி னான். இதனால் பாமர சாபம் உண்டானது. இந்த சாபத்தை நான் கூறுவதைப் போன்று செயல்பட்டு, முற்பிறவி பாவத்தை இந்த முதுமைக் காலத்தில் நிவர்த்தி செய்யட்டும்.
இவனின் மூன்று மகன்களில், 3-ஆவது மகனுக்கு பிறந்த குழந்தைகளில் ஒரு மகன், உடல்ஊனமுற்றவனாகப் பிறந்துள்ளான். முற்பிறவியில் உண்டான பாமர சாபம், வம்சத்தில் தொடர்ந்தது. இவன் செய்த பாவம், இவன் வம்சத்தில் பிறந்த பேரனைத் தாக்கி அவனை ஊனமுற்றவனாகப் பிறக்கச் செய்தது. இவன் செய்த பாவத்திற்குண்டான பலனை, அந்தப் பேரன் அனுபவிக் கின்றான்.
இந்த ஊனமுற்ற பேரனை இவனுக்கு உதவி யாக வைத்துக் கொள்ளச் சொல். இந்த பேரனுக்கு மாதந்தோறும் ஒரு தொகையை ஊதியமாகக் கொடுத்துவிடச் சொல். முற்பிறவியில் ஊனமுற்றவர்களை கேவலமாகப் பேசினான். இப்பிறவியில் அவனுக்கு பதவி கொடுத்தால், அவனை யாரும் ஊனமுற்றவன் என்று கேவலமாக நினைக்கமாட்டர்கள். அவனை மதிப்பார்கள். இவன் தொழிலும் விருத்தியாகும், பாமர சாபமும் நிவர்த்தியாகும்.
இவன் ஆயுள்வரை, தான் பெற்ற மகன் களுடன் சேர்ந்து வாழக்கூடாது. தனியாகத் தான் வாழவேண்டும். இவன் சம்பாதித்த அனைத்து பணம் சொத்துகளையும் மூன்று மகன்களுக்கும் சரிசமமாக பிரித்து எழுதி வைத்துவிடச் சொல். இவன் ஆயுளுக்குப் பிறகு, அவர்கள் அதை அடைந்து கொள் ளட்டும். இவன் உயிருடன் இருக்கும் போது, எதையும் மகன்களுக்கு கொடுத்துவிடக் கூடாது என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
என் 3-ஆவது மகன்களில் ஒருவன், உடல்ஊனமுற்றவ னாக இருக்கின்றான். அகத்தியர் கூறியது உண்மைதான். அகத்தியர் கூறியபடியே, அந்தப் பேரனை எனக்குத் துணையாக வைத்துக் கொள்கின்றேன் என்று கூறி, அகத்தியரை வணங்கிவிட்டு என் னிடம் விடைபெற்றுச் சென்றார்.
வம்சத்தில் பாட்டன் சம்பாதித்த ஆஸ்தி, சொத்து களை அனுபவிப்பது போன்று, பாட்டன்கள் பாவ- சாபத்தையும், அந்த வம்சத்தில் பிறந்த வாரிசுகள், பேரன்கள் அனுபவித்து தீர்க்க வேண்டும் என்ற உண்மையை நானும் அறிந்து கொண் டேன்.
செல்: 99441 13267