சுமார் 40 வயதுடைய ஒருவர், நாடியில், பலன்கேட்க வந்திருந்தார் அவரை வைத்து "என்ன விஷயமாகப் பலனறிய வந்தீர்கள்'' என்றேன்.
ஐயா, "எனக்கு திருமணம் தடையாகி வருகின்றது. நிறைய பெண்களைப் பார்த்தும், எதுவும் சரியாக அமையவில்லை. ஜோதிடர் களிடம் பலன் பார்த்து, அவர்கள் கூறிய பரிகாரங்கள் அனைத்தையும் செய்தேன். ஆனால் எந்தப் பலனும் இல்லை. ஜாதகமும், ஜோதிடமும், பரிகாரங்களும் என் வாழ்வின் அனுபவத்தில் பொய்யாகிவிட்டது. இதை நம்பி செயல்பட்டு வாழ்ந்து, என் வயதுதான் கூடிக்கொண்டே போனதே தவிர, எனக்கு வாழ்க்கை அமையவில்லை. என் திருமண நிலை பற்றி அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
விதி அறியாத ஜோதிடமும், வினை அறியாத ஜோதிடனும் சொல்லும் பரிகாரங் களும் எந்த பலனையும் தராது. இவன் கைலாயம் சென்று சிவனையும், வைகுந்தம் சென்று விஷ்ணுவையும் கண்டு வணங்கினா லும் இவன் கர்மவினையைத் தீர்க்கமுடியாது என்பதை புரிந்துகொள்ளட்டும். இவன் திருமணத் தடைக்கு காரணம் கூறுகின்றேன் அறிந்துகொள்ளட்டும்.
முற்பிறவியில் இவன், ஒரு பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதி கூறி பழகினான். திருமண சமயத்தில், இவன் பெற்றோர்களுக்கு அந்தப் பெண்ணை இவனுக்கு திருமணம் செய்துவைக்க விருப்பமில்லை. இருவரின் ஜாதகத்தையும், ஒரு ஜோதிடனிடம் கொண்டுசென்று பலன் பார்த்தார்கள். அவன் இந்தப் பெண் ஜாதகம் தோஷமுள்ளது; பொருத்தமில்லை. பரிகாரம் செய்தாலும் பலன் தராது. வேறு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்யுங்கள் என்று கூறிவிட்டான். ஜோதிடன் கூறியதை நம்பி, இவனும் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யும் எண்ணத்தை மாற்றிக்கொண்டான்.
இவனின் பெற்றோர், அந்தப் பெண்ணிற்கு தோஷ ஜாதகமென்று மற்றவர்களிடம் கூறி விட்டார்கள். இதனால் அந்தப் பெண்ணை மணம்புரிய எவரும் முன்வரவில்லை. அந்தப் பெண்ணின் திருமணம் தடையாகிக் கொண்டேபோய், பின்பு, அவளை ஒருவன் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டான். இவன் பெற்றோர் இவனுக்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார்கள்.
முற்பிறவியில், இவன் தன்னை விரும்பிய பெண்ணை ஒதுக்கிவிட்டு, இவன் பெற்றோர் ஜோதிடம், ஜாதகம், தோஷமென்று ஏதேதோ கூறி அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் தடையை ஏற்படுத்தினார்களோ, எந்தப் பாவப் பலனாக, இந்த பிறவியில் இவன் பார்க்கும் பெண்களெல்லாம், இவனை மணம்புரிய மறுத்து ஒதுக்குகின்றார்கள். உறவுகளும், ஊராரும், இவனை ஆண்மைக் குறைவு உள்ளவன் என்று கேலியாகப் பேசுகின்றார்கள். இவன் ஜாதகத்தைப் பார்த்து, ஜோதிடர்களும், பலவிதமான தோஷமுள்ளது என்று கூறிவிடுகின்றார் கள். இவனாலும், இவன் பெற்றோராலும் முற்பிறவியில் ஒரு பெண் எந்தெந்த வகையில் பாதிக்கப்பட்டாளோ, எத்தனை வழிகளா லும், பாதிக்கப்பட்டு இவன் திருமணம் தடை யாகிக்கொண்டே வருகின்றது.
இவன் தாய்- தந்தையும், இவனும், ஒரு கன்னிப் பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டுமென்று எண்ணி பெண் தேடிவருகின்றார்கள். ஆனால் இவர்கள் விரும்புவதுபோல், இந்த பிறவியில் ஒரு கன்னிப் பெண் இவனுக்கு மனைவியாக அமையமாட்டாள். அவள் ஏற்கெனவே திருமணம் முடிந்து, வாழ்க்கையை இழந்த விதவை, விவாகரத்து ஆனவள் போன்ற பெண் தான் மனைவியாக வருவாள். அவர்களைப் போன்ற பெண்ணைத் தேடச் சொல், பெண் அமைந்து இவனுக்கு திருமணம் நடைபெறும்.
திருமணமாகாத கன்னிப் பெண் எனக்கு மனைவியாக அமையமாட்டாளா? காரணம் என்ன? ஒரு கன்னிப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள அகத்தியர் பரிகாரம் கூறினால் செய்கின்றேன் என்றார்.
இவன், இதுவரை எத்தனையோ, ஆன்மிக பரிகாரங்களைச் செய்து பலன் கிடைக்கவில்லை. இப்போது என்னிடம் பரிகாரம் கேட்கின்றான். அகத்தியன் யான் ஜோதிடன் அல்ல, இவன் கர்மவினை, விதி யைக் கூறி, அதனை அறிந்து, நல்ல வாழ்வை, காரிய சித்தியை அடைய வழி கூறுபவன் என்பதை புரிந்துகொள்ளச் சொல்.
முற்பிறவியில், ஒரு பெண்ணை விரும்பி, பழகி, உறவு கொண்டுதான் அவளை விலக்கி னான். அவள் இவனால் களங்கப்பட்டு, அதன் பின்பு மற்றொருவனுக்கு மனைவியாகி வாழ்ந்தாள். இவனின் இந்தச் செயலால் உண்டான பாவப்பலனை, அனுபவித்து, நிவர்த்தி செய்யவேண்டும் என்பதே மனைவி நிலையில் நிர்ணயிக்கப்பட்ட விதி, இந்த பிறவியில், வேறு ஒருவனிடம் வாழ்ந்து, முடித்த பெண்தான் மனைவியாக அமைவாள்.
விதியறிந்து ஒரு பெண்ணைத் தேடி திருமணம் செய்துகொள்ளச் சொல். திருமணம் நடக்கும்.
ஒருவன் முற்பிறவியில் செய்த பாவ- புண்ணிய கணக்கின்படியே இப்பிறவி வாழ்வில் நன்மை- தீமைகளை அனுபவிக்க வேண்டும் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியபடியே பெண் பார்த்து, திருமணம் செய்து, என் முற்பிறவி கர்மவினையை நிவர்த்திசெய்து, நல்ல வாழ்வை எனக்கு நானே அமைத்துக்கொள்கின்றேன் என்று கூறிவிட்டு என்னிடம் விடைபெற்றுச் சென்றார்.
ஒரு மனிதன் முற்பிறவி வாழ்வில், பாவ- புண்ணியம் என்று எதை விதைக்கின்றானோ, அதனை மறுபிறவியில் அறுவடை செய்து அனுபவிக்கின்றான் என்பதை நானும் அறிந்துகொண்டேன்.
செல்: 99441 13267