ஒரு தம்பதியர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து, "என்ன விஷயமாகப் பலன் அறிந்துகொள்ள வந்தீர்கள்' என்றேன். "ஐயா, எங்களுக்கு இரண்டு மகள்கள் உண்டு. பெரிய மகளுக்கு 31 வயது. இளைய மகளுக்கு 27 வயது. மூத்தவளுக்கு திருமணம் செய்ய கடந்த ஐந்து வருடமாக முயற்சி செய்து வருகிறோம். ஆனால் சரியான வரன் அமைய வில்லை. திருமணம் தடையாகிக்கொண்டே வருகின்றது.
மகளின் திருமணத் தடை விலக, பல ஜோதிடர்களிடம் சென்று, பலன் கேட்ட போது, ஒவ்வொரு ஜோதிடரும், ஒவ்வொரு விதமான தோஷங்களைக் கூறினார்கள். நட்சத்திர தோஷம், ராசி தோஷம், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், மேலும் 7-ஆமிடம், 8-ஆமிடம் என்று அவரவர் மனதில் எண்ணியதையெல்லாம் கூறினார்கள். இந்த தோஷங்கள் விலக, அவரவர் விருப்பப்படி பரிகாரங்களையும் கூறினார்கள். நாங்களும் அவற்றையெல்லாம் செய்தோம். ஆனால் எந்தப் பரிகாரமும் பலன் தரவில்லை, மகள்களுக்கு திருமணமும் நடக்கவில்லை.
மகள்கள் திருமணத் தடைக்கு காரணத்தை அறியவும், அந்தத் தடைவிலகி திருமணம் நடைபெற
ஒரு தம்பதியர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து, "என்ன விஷயமாகப் பலன் அறிந்துகொள்ள வந்தீர்கள்' என்றேன். "ஐயா, எங்களுக்கு இரண்டு மகள்கள் உண்டு. பெரிய மகளுக்கு 31 வயது. இளைய மகளுக்கு 27 வயது. மூத்தவளுக்கு திருமணம் செய்ய கடந்த ஐந்து வருடமாக முயற்சி செய்து வருகிறோம். ஆனால் சரியான வரன் அமைய வில்லை. திருமணம் தடையாகிக்கொண்டே வருகின்றது.
மகளின் திருமணத் தடை விலக, பல ஜோதிடர்களிடம் சென்று, பலன் கேட்ட போது, ஒவ்வொரு ஜோதிடரும், ஒவ்வொரு விதமான தோஷங்களைக் கூறினார்கள். நட்சத்திர தோஷம், ராசி தோஷம், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், மேலும் 7-ஆமிடம், 8-ஆமிடம் என்று அவரவர் மனதில் எண்ணியதையெல்லாம் கூறினார்கள். இந்த தோஷங்கள் விலக, அவரவர் விருப்பப்படி பரிகாரங்களையும் கூறினார்கள். நாங்களும் அவற்றையெல்லாம் செய்தோம். ஆனால் எந்தப் பரிகாரமும் பலன் தரவில்லை, மகள்களுக்கு திருமணமும் நடக்கவில்லை.
மகள்கள் திருமணத் தடைக்கு காரணத்தை அறியவும், அந்தத் தடைவிலகி திருமணம் நடைபெற அகத்தியரிடம் வழிகேட்டு வந்தோம். அவர்தான் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்'' என்று ஒரே மூச்சில் கூறினார்.
அவர் கூறியதை பொறுமையாகக் கேட்டு விட்டு, ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
இவர்கள் பெண்களின் திருமணத் தடைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. பெற்ற தாய் ஒரு காரணம், வம்ச சாபம் ஒரு காரணம் என்றார்.
அகத்தியர் கூறியதைக்கேட்ட அந்தத் தாய், என் குழந்தைகளின் திருமணத் தடைக்கு, நான் காரணம் என்று அகத்தியர் கூறுகின் றாரே, அவர்களுக்கு திருமணம் நடைபெறவேண்டும் என்று நான் போகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை, செய்யாத பரிகாரம், பூஜை, விரதமில்லை.
ஆனால் என்னால் திருமணம் தடையாகி றது என்று கூறுகிறீர்களே, ஓலையில் அகத்தியர் கூறுகிறாரா; அல்லது நீங்களே கூறுகிறீர்களா? என்றார்.
அந்தத் தாய் கூறியதைக்கேட்டு சிரித்துக் கொண்டே, அம்மா உங்களுக்கும், எனக்கும் பகையா? ஓலையில் வந்ததைத்தான் கூறினேன்.
திருமணத் தடைக்கு நீங்கள் எப்படி காரணமா கின்றீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தத் தாய், திருமணப் பொருத்தம் பற்றி பல ஜோதிடர்கள் கூறியதையும், பல புத்தகங்களைப் படித்துவிட்டும், ஏன்? இவரே ஒரு திருமணப் பொருத்தம் பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கி வைத்துள்ளார். அந்தப் புத்தகங்களைப் படித்துவிட்டு, பெண் கேட்டுவரும் பையன்களின் ஜாதகத் தில் பொருத்தம் பார்த்து, நட்சத்திரப் பொருத்தம், ராசிப் பொருத்தம் என பத்துப் பொருத்தத்தில் ஏதாவது ஒன்று சரியாக இல்லையென்று இவரே தடுத்துவிடுகிறாள்.
இந்தத் தாய், தன் மகள்களுக்கு எப்படிப் பட்ட மாப்பிள்ளை அமையவேண்டும் என்று தன் மனதில் மாப்பிள்ளை பற்றியும், அவன் தொழில், குடும்பம் எப்படி இருக்கவேண்டும் எனத் தீர்மானித்து, இவர் விரும்புவதுபோல் மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருக்கின்றார்.
இவர் நினைத்ததுபோல் இல்லையென்றால், வேண்டாம் என்று கூறிவிடுகின்றார். அதனால்தான் இவர்கள் மகள் திருமணம் தடையாவதற்கு இந்தத் தாயும் ஒரு காரணம் என்று கூறினேன். அகத்தியன் நான் கூறியது உண்மையா? இல்லையா என்று அவளிடமே கேள்.
ஓலையில் கூறியதைக்கேட்ட அந்த அம்பாள், எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தார். அவள் கணவர் என்னைப் பார்த்து அகத்தியர், ஓலையில் கூறியது அனைத் தும் உண்மைதான். பெண் கேட்டுவரும் நிறைய வரன்களை, இவளே ஜாதகம் பார்த்து நட்சத்தி ரம் சேரவில்லை, பொருத்தம் இல்லையென எதையாவது கூறி, அந்தப் பையன் வேண்டாம் என்று கூறிவிடுகின்றாள். நல்ல குடும்பம், நல்ல உத்தியோகம் இருந்து, பெண் கேட்டுவந்தவர் களில் என் பெண்ணிற்கும், எனக்கும் பிடித் திருந்தாலும், இவளால் தடையாகிப் போனது உண்டு என்று கூறினார்.
திருமணத் தடைக்கு மற்றொரு காரணத் தையும் கூறுகின்றேன். இந்தக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணிற்கு, குடும்பத்தின் முன்னோர்கள் செய்த ஒரு பாவச் செயலால், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்விட்ட சாபம், மூத்த மகள் திருமணத்திற்கு தடுப்பு சுவர்போல் இருந்து, தடையாக்கிவருகிறது என்று கூறியவர் மகளுக்குத் தடை விலகி திருமணம் நடக்கவேண்டும் என்றால், இவர் களின் இளைய மகளுக்கு முத-ல் திருமணம் நடக்கவேண்டும். அதன்பிறகுதான் மூத்த வளின் திருமணம் நடக்கும்.
அகத்தியர் கூறியதைக்கேட்ட அந்த தாய், மூத்தவள் இருக்க, இளையவளுக்கு, எப்படி திருமணம் செய்வது? சமுதாயமும், உறவுகளும் என்ன சொல்லும் என்றார்.
ஓலையைப் படித்தேன். சாஸ்திரம், பரிகாரம், சமூக சம்பிரதாயங்கள், முற்பிறவி பாவ- சாபத்தை தீர்க்க உதவாது. இவளின் இளைய மகளுக்கு, உறவிலேயே மாப்பிள்ளை யைத் தீர்மானித்து உள்ளார்கள். மூத்தவளின் திருமணத் தடையால்தான் தங்கையின் திருமணமும் தடையாகின்றது. இந்தத் தாய் தன் மகள்களின் வாழ்க்கையைவிட சாஸ்திரம், சமூக சம்பிரதாயங்கள்தான் முக்கியம் என்று நினைத்தால், இவள் விருப்பம்போல் செய்யட்டும். அகத்தியன் கூறுவதுபோல் செய்தால், இளைய மகள் திருமணம் முடிந்த ஆறுமாத காலத்தில் மூத்தவள் திருமணம் நடைபெறும் என்று கூறிவிட்டு அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் வாக்குபடியே, இளையவளுக்கு உடனடியாக, திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறோம் என்று கூறிவிட்டு இருவரும் விடைபெற்றுச் சென்றார்கள்.
செல்: 99441 13267