சுமார் 35 வயதுடைய ஒரு பெண்ணும் அவள் தாயும், நாடியில் பலன் கேட்க வந்தனர். அவர்களை அமரவைத்து, "என்ன காரியமாக பலன் கேட்க வந்தீர்கள்' என்றேன்.
இவள் என் மகள், திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளது. இவளுக்கு கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து இப்போது எங்களுடன் வசித்து வருகின்றாள். இவர்கள் பிரிவிற்கு காரணம் தெரியவில்லை. என் மகளும், மருமகனும் சேர்ந்து வாழ்வார்களா? பிரிவிற்கு காரணம் என்ன? சேர்ந்து வாழ வழி கேட்டு அகத்தியரை நாடி வந்துள்ளேன் என்றார்.
ஜீவ நாடி ஓலையைப் பிரித்து படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி பலன் கூறத் தொடங்கினார்.
இந்த தாய், கணவன்- மனைவி பிரிவிற்கு, காரணம் அறிய சென்று பலன் பார்த்த ஜோதிடர்கள் கூறியது போன்று கிரகங்களோ, கால நேரமோ, பாவ- சாபங்களோ, காரணமில்லை.
இவள் மகளுக்கு இளம் வயதில் இருந்தே, புதுப்புது இடங்கள், ஊர்களைச் சென்று சுற்றிப் பார்க்கவேண்டும். தான் விரும்புவதை, விரும்பியபடி, அடைந்து அனுபவிக்கவேண்டும். எங்கும்,
சுமார் 35 வயதுடைய ஒரு பெண்ணும் அவள் தாயும், நாடியில் பலன் கேட்க வந்தனர். அவர்களை அமரவைத்து, "என்ன காரியமாக பலன் கேட்க வந்தீர்கள்' என்றேன்.
இவள் என் மகள், திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளது. இவளுக்கு கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து இப்போது எங்களுடன் வசித்து வருகின்றாள். இவர்கள் பிரிவிற்கு காரணம் தெரியவில்லை. என் மகளும், மருமகனும் சேர்ந்து வாழ்வார்களா? பிரிவிற்கு காரணம் என்ன? சேர்ந்து வாழ வழி கேட்டு அகத்தியரை நாடி வந்துள்ளேன் என்றார்.
ஜீவ நாடி ஓலையைப் பிரித்து படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி பலன் கூறத் தொடங்கினார்.
இந்த தாய், கணவன்- மனைவி பிரிவிற்கு, காரணம் அறிய சென்று பலன் பார்த்த ஜோதிடர்கள் கூறியது போன்று கிரகங்களோ, கால நேரமோ, பாவ- சாபங்களோ, காரணமில்லை.
இவள் மகளுக்கு இளம் வயதில் இருந்தே, புதுப்புது இடங்கள், ஊர்களைச் சென்று சுற்றிப் பார்க்கவேண்டும். தான் விரும்புவதை, விரும்பியபடி, அடைந்து அனுபவிக்கவேண்டும். எங்கும், எப்போதும், எதிலும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். தன்னை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது என இதுபோன்று தன் மனதில் நினைத் ததையெல்லாம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவள். ஆணவம், அகங்காரம், அடக்கி ஆளும் குணம், கர்வம், முன் கோப குணம் உள்ளவள்.
இவள் கணவன், இவள் குணத்திற்கு நேர்மாறான குணம் கொண்டவன். இவன் பெற்றோருக்கு இவன் ஒரே மகன். இவனின் சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டான். தாய் உழைத்து, பொறுப்பானவனாக இவனை வளர்த்தாள். இவனும் தன் நிலையை உணர்ந்து, அடக்கமான, அமைதியான குணத்து டன் வளர்ந்தான். படித்து முடித்து, ஒரு தனியார் நிறுவனத் தில் பணிபுரிந்து வருகின்றான். இவன் நன்னடத்தை, குணம், செயலை உணர்ந்த முதலாளி அலுவலக நிர்வாகப் பொறுப்பை தந்துவிட்டான். அதனால் காலைமுதல் மாலைவரை, பல நாட்களில் இரவில் கூட பணிபுரியும் சூழ்நிலையும், சில சமயங்களில் விடுமுறை நாட்களிலும் வேலை செய்யும் நிலை இருக்கும். இதனால் தன் மனைவி விரும்புவது போல், வெளியில் எங்கும் அழைத்து செல்லமுடியாத நிலை.
இல்லற வாழ்க்கையில், இவள் ஆசைப்படுவது, விரும்பியதை அனுபவிக்க முடியாத நிலை. அதனால், இவள் தன் விருப்பம்போல், ஊர் சுற்றி அலைவதற்காக, தன் கணவன் என்னைத் திட்டுகின்றான், அடிக்கின்றான் என்று கணவன்மீதும், கணவன் வீட்டார்மீதும் பொய்யான குற்றச் சாட்டுகளைக் கூறி தன் பிறந்த வீட்டிற்கு வந்து விடுகின்றாள்.
இந்த மகள் கூறுவதை நம்பி, இவள் தாயும், குடும்பத்தாரும் இவள் கணவனைக் குறை கூறி, அவன் கெட்டவன், மனைவியை வைத்து வாழத் தெரியாதவன், என இன்னும் பலவிதமாக உறவுகள், ஊராரிடம் குறை கூறி வருகின்றார்கள். இவள் பேச்சை நம்பி இவள் தாயும், இவள் ஆசைப்படும் இடத்திற்கெல்லாம் கூட்டிச்சென்று வருகின்றாள். இவள் ஊர் சுற்றும் ஆசையும், இவள் விரும்பியபடி எதையும் சுதந்திரமாக செய்யும் நிலையும் தாய் வீட்டில் கிடைப்பதால், தன் கணவன், குழந்தை, குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களை விட்டுவந்து விடுகின்றாள்.
இதுபோன்று, இதற்கு முன்பும் பல தடவை கணவனைப் பிரித்து வந்துள்ளாள். கணவனும் அந்த சமயங்களில் இவளைத் தேடி வந்து, சமாதானப்படுத்தி அழைத்துச் செல்வான். இது போன்ற நிகழ்வு முதல் முறையாக நடக்கவில்லை. இப்போது 6 மாதங்களாகியும் கணவன் வந்து கூப்பிடாத தால், இந்த தாய்க்கு தன் மகள் வாழ்க்கையைப் பற்றி, மனதில் பயம் வந்துவிட்டது.
அகத்தியன் கூறியது உண்மையா? என்று தாயிடம் கேள்.
அகத்தியர் கூறியது அனைத்தும் உண்மைதான். இவள் கணவன், குழந்தைகளை விட்டுப் பிரிந்து வந்து விடுவதும், அவர் வந்து இவளை அழைத்துச் செல்வதும் பல முறை நிகழ்ந்துள்ளது. இவள் வந்தால் இவள் கூறு இடங்களுக்கெல்லாம் அழைத்து செல்வேன். மேலும் ஜோதிடர்கள் கூறும் கோவில்களுக்கெல்லாம் அழைத்து சென்று வருவேன். இந்த நிலைமாறி, இவள் கணவனுடன் ஒழுங்காக வாழ அகத்தியர்தான் வழி கூறவேண்டும்.
இந்த தாய், தன் மகளை வளர்த்த விதம் சரியில்லை, இந்த நிலைக்கு இந்த தாய் தான் காரணம். மகள் திருமணத்திற்குப் பிறகு, கணவன், குழந்தை, குடும்ப பொறுப்பு, உயர்வு, மேன்மை அடையும் வழிமுறைகளை சொல்-த்தராமல் வளர்த்தாள். இனியாவது அவளுக்கு நல்ல புத்திமதிகளைக் கூறி, குடும்பப் பொறுப்பைப் பற்றிக் கூறச்சொல். இனி மகள் தாய்வீட்டிற்கு வந்தால், அவள் ஆசைப்பட்டு கூறுவதை செய்யக்கூடாது. வெளியில் சுற்றாமல் வீட்டிலேயே இருக்கச் சொல்லவேண்டும். தான் விரும்புவது எதுவும் தாயின் வீட்டிற்குச் சென்றாலும் கிடைக்காது என்பதை அவள் அனுபவத்தில் உணரச் செய்தால் அவள் போக்கு மாறும்.
கணவன் இப்போது இவளை வந்து கூப்பிடமாட்டான். இந்த தாய் தன் மகளை மருமகன் வீட்டிற்கு அழைத்துச் சென்று கணவனுடன் சேர்ந்து வாழச் சொல். அவன் இவளை மன்னித்து ஏற்றுக் கொள்வான் என்று கூறிவிட்டு அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியபடியே இனி செயல் பட்டு மகளுக்கு நிம்மதியான குடும்பத்தில் ஒற்றுமையான வாழ்வு அமையச் செய்கின்றேன் என்று கூறிவிட்டு என்னிடம் விடை பெற்றுச் சென்றார் அந்த தாய் பெண் குழந்தைகளை வளர்க்கும்போது பொத்தி, பொத்தி வளர்க்கக்கூடாது. குடும்ப பொறுப்பைக் கூறி நல்ல புத்திமதி கூறி வளர்த்தால், அந்தக் குழந்தைகளின் திருமணத்திற்குப் பிறகும் அமையும் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக அமையும் என்பதை நானும் தெரிந்துகொண்டேன்.
செல்: 99441 13267