சென்ற இதழ் தொடர்ச்சி...

சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தை கோட்சார ராகு கடக்கும் 13-6-2022 வரை அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். தனுசு ராசி வரையிலான பலன்களைக் கடந்த இதழ்களில் கண்டோம். மற்றவற்றைத் தொடர்ந்து காணலாம்.

மகரம்

சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் மகர ராசியினருக்கு அஷ்டமாதிபதி. ஜனனகால தசாபுக்தி சாதகமாக இருந்தாலும், ஜென்மச்சனியின் காலமென்பதால் சுபப் பலன் ஏற்படும் வாய்ப்பு குறைவு. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படியெல்லாம் வாழ்ந்தால் முன்ஜென்ம கர்மாவைக் கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை உணர்வீர் கள். மூத்த சகோதரர் உங்களுக்கு பக்கபலமாக இருந்து உதவுவார். இதுவரை இருந்தவந்த சகோதர- சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வெகுசிலருக்கு எட்டாம் பாவகப் பலன்களான அவமானம், கடனால் கவலை, கணவன்- மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும். உயிருக்கு ஆபத்தைத் தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும். சிறைதண்டனை அனுபவித்து வருபவர்களுக்கு நன்னடத்தையால் தண்டனைக் காலம் குறைக் கப்படும். ஆயுள்பலம் உண்டு. தீடீர் அதிர்ஷ்டம், உயில் சொத்து, எதிர்பாராத தனவரவு வரும் வாய்ப்புள்ளது.

Advertisment

ஜனனகாலரீதியாக மாரகதசை நடந்தாலும், தசாபுக்தி சாதகமற்றவர்களுக் கும் கடனால் கவலை, நோய்த் தாக்கம் மிகும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகாது என்பதால் வழக்குகளை ஒத்திப்போட வேண்டும். ஜென்மச்சனியின் காலமென்ப தால் பணமோசடி மிகுதியாக இருக்கும். கோட்சார குரு தன ஸ்தானத்தில் இருப்ப தால் பணவரவு பலவழிகளில் பன்மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் அதிக கவனமாக செயல்படவேண்டும். சாட்சிக் கையெழுத்து, ஜாமின் கையெழுத்து, கேரண்டி கையெழுத்து போடுவது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும். சிலர் இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து மானம் காக்க வீடு, வாகனம், நிலபுலன், நகை போன்ற அனைத் தையும் இழந்து ஜாமின் தொகையைக் கட்டநேரும் என்பதால், எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்கவேண்டும்.

அரசின் உதவித்தொகை வருவதில் தடை, தாமதம் ஏற்படும். முன்னோர்கள் கடைப்பிடித்துவந்த கொள்கைகளிலிருந்து மாறுபட்டு செயல்பட நேரும். உடல் உபாதைகள் அதிகமாக இருக்கும். உடலுறுப்பில் இடது காது, கணுக்கால், பின் முதுகில் அவ்வப்போது வலி தோன்றலாம். சர்க்கரை நோயாளிகள் பாதம், விரல்களை முறையாகப் பராமரிக்கவேண்டும். முறையான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகாவுடன் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையும் நோயிலிருந்து பாதுகாக்கும். பச்சிளம் குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் மிகுதியாக இருக்கும். குழந்தைகளுக்கு சூரியதசை அல்லது சந்திரதசை நடந்தால், குழந்தைகளைத் தத்துக் கொடுத்து வாங்க தாக்கம் குறையும். அல்லது தாத்தா, பாட்டி வீட்டில் ஆறு மாதம் வளர்ந்தாலும் பாதிப்பிருக்காது. பருவ வயது குழந்தைகள் பெற்றவர்களைப் பிரிந்து ஹாஸ்டலில் தங்கிப் படிக்கலாம்.

raghu

Advertisment

ராகு தசை நடக்கும் பிள்ளைகள் தவறான நட்பில் விழுந்து நிம்மதியிழக்கலாம். வெகுசில பிள்ளைகள் குலத்திற்கு மாறான காதல் திருமணம் செய்யலாம். இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்லக்கூடாது. நான்கு சக்கர வாகனங்களை இயக்குபவர்கள் சீட் பெல்ட் அணியவேண்டும். மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டவேண்டாம். பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் பயணச்சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படும்.

அரசு அதிகாரிகளால் சிறு பிரச்சினை ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவதுபோல் மனம் வேதனையடையும். வீண் அவமானம் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிர்ப்பு ஏற்படும். கட்சி தொடர்பான வழக்குகளில் சிக்கினால் எதிர்காலமே கேள்விக்குறியாகும். எனினும் அஷ்டமாதிபதியின் தசைதான் பலருக்கு வாழ்வில் எதிர்பாராத சம்பவங்களையும் திருப்பங்களையும் நடத்துவார் என்பதால், மிகப்பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு நன்மையைத் தரும். மிகப்பெரிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம். பெரிய பதவிகளும் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறும் உள்ளது. கலைத்துறையினர் மிகப்பெரிய முதலீட்டில் புதியபடம் எடுப்பது நல்லதல்ல.

எட்டாமிடம் என்பது பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் என்பதால், சுய ஜாதகத் தில் 7, 8-ஆம் பாவகங்களில் பிரச்சினை இருந்தால் அதற்குரிய பரிகார வழிபாட்டு முறையைச் செய்து பின் திருமணத்தை நடத்தவேண்டும். இயன்றவரை ஜூன் மாதத்திற்குப் பிறகு திருமணம் செய்வது நல்லது. இந்த காலத்தில் பெண்களுக்கு உடல் உபாதைகள் அதிகமாக இருக்கும். கட்டுக்கடங்காத செலவு செய்து அனைத் துப் பரிசோதனையும் செய்துமுடித்தபிறகு எந்த பிரச்சினையும் இல்லை; நார்மல் என்ற ரிப்போர்ட் வந்து தலைசுற்ற வைக்கும்.

அரசு அங்கீகாரமற்ற வங்கிகளில் போடும் முதலீடுகள் வீடு திரும்பாது. அவசரத் தேவைக்கு அருகிலுள்ள வட்டிக்கடையில் அடமானம் வைக்கா மல், வங்கியைப் பயன் படுத்த வேண்டும். அரசு அதிகாரிகள் மெமோ வாங்கக்கூடும் அல்லது இடமாற்றம் செய்யப்படுவார்கள். நெருங்கிய ரத்த சம்பந்த உறவில் ஒரு கர்மம் நடக்கும் வாய்ப்புண்டு. ஒரு காலகட்டம் பிரச்சினைக் குரியதாக இருந்தால், வெகு விரைவில் பொற்காலத்தைத் தர இறைவன் உங்களை சோதிக்கிறான் என்று பொருள். எனவே வருந்தவேண்டாம்.

பரிகாரம்

தினமும் பறவைகளுக்கு தானியம், தண்ணீர் வைத்துவந்தால் சுபப்பலன் ஏற்படும். ஆயுளுக்கு பங்கம் தரும் நோய்க்கு சிகிச்சை செய்பவர்கள் தினமும் மஹா மிருத்யுஞ்சய மந்திரப் பாராயணம் செய்து, துளசி தீர்த்தம் அருந்த நல்ல முன்னேற்றம் ஏற்படும். குளத்திலுள்ள மீன்களுக்குப் பொரிபோட வேண்டும். வெள்ளி, சனிக்கிழமைகளில் அசைவ உணவைத் தவிர்க்கவேண்டும்.

கும்பம்

கிருத்திகை நட்சத்திர அதிபதி சூரியன் கும்பத்திற்கு ஏழாமதிபதி. ராசிக்கு நான்கா மிடத்தில் பயணிக்கும் ராகு ஏழாமதிபதியின் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ஜனனகால ஜாதகத்தில் தசாபுக்தி சாதகமாக இருப்பவர்களுக்கும், ஜாதகத்தில் 4, 7-ஆம் பாவகம் பலம்பெற்றிருந்தாலும் புகழ் பரவும். பணிபுரியும் துறையில் சாதனைசெய்து புகழடைவீர்கள். தனம், தானியம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும். மனோபலம், தேக பலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும்.

புதிய நண்பர்கள், தொழில் ஒப்பந்தங் கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாய முண்டு. நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாவார்கள். தொழில் கூட்டாளி களிடையே நல்லிணக்கம் நீடிக்கும். தகுதியும் திறமையும் நிறைந்த புதிய தொழில் பங்குதாரர் கிடைப்பார்கள். நீண்டநாட்களாக தொடர்பில்லாத பள்ளி, கல்லுரி மற்றும் அக்கம்பக்க பால்ய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். கணவன்- மனைவி உறவு மகிழ்வைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். திருமணத்தடை அகலும். திருமணத்திற்கான முயற்சி பலிதமாகும். நீண்டநாட்களாக ஏதாவது காரணம் கூறி திருமணத்திற்கு கால தாமதம் செய்தவர்கள்கூட திருமணத்திற்கு சம்மதிப்பார்கள். பலருக்கு காதல் திருமணம் பலிதமாகும். காதல் திருமணம் செய்தோர் குடும்பத்தைவிட்டுப் பிரிய நேரும். மறுமணம் கைகூடும். வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலிருந்த குறைபாடுகள் அகலும். தம்பதிகளிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். சிலரின் வாழ்க்கைத் துணைக்கு அரசுவேலை கிடைக்கும். சம்பந்திகள் சண்டை முடிவுக்கு வரும். பெண்களுக்கு இது பொற்காலம். அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்டகாலமாக எதிர்பார்த்த தாய்வழி சீதனம் உங்களைத் தேடிவரும்.

புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கனவாக இருந்த சொந்தவீட்டு ஆசை நனவாகும். காற்றோட்டமில்லாத வசதி குறைவான வாடகை வீட்டில் அடைபட்டிருந்தவர்கள் நல்ல வசதியான வீட்டிற்குச் செல்வீர்கள். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற தாய்- தந்தை பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோர் களின் ஆரோக்கியம் சிறப்படையும். பள்ளி, கல்லூரிப் படிப்பை இடையில் நிறுத்திய மாணவ- மாணவிகள் மீண்டும் படிப்பைத் தொடர்வார்கள்.

சுய ஜாதகத்தில் 4, 7-ஆமிடம் பலவீனமாக இருந்தாலும், சாதகமற்ற தசாபுக்தி நடப்பில் இருந்தாலும் கணவன்- மனைவியிடம் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். பெற்றோர் கள் மற்றும் உற்றார்- உறவினர்களின் தலையீட் டால் கருத்து வேறுபாடு மிகுதியாகி நிம்மதி குறையும். ஒருசிலருக்கு கருத்து வேறுபாடு அதிகமாகி விவாகரத்து வழக்கு பதிவாகும். நன்றாக வாழ்ந்த பல தம்பதிகளின் தவறான நட்பால், ஒன்றாக இருந்த குடும்பம் இரண்டா கும். சில பெண்கள் கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தின்மேல் வரதட்சணை வழக்கு பதிவார்கள். சிலருக்கு எப்பொழுதோ பதிவான வழக்கிற்கு சாதகமற்ற தீர்ப்பும் தண்டனையும் உறுதியாகும்.

கோட்சாரம் சாதகமாக இல்லாத காரணத் தால் கோர்ட், கேஸ், போலீஸ்டேஷன் செல்லாமல் சமரசமாகப் பேசி பிரச்சினையை முடிப்பது புத்திசாலித்தனம். ஏழாமதி பதியின் சாரத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு மனதிற்கு விருப்பமில்லாத திருமணத்தை நடத்தித்தருவார் அல்லது குல வழக்கத் திற்கு மாறான காதல், கலப்புத் திருமணம் நடக்கும். வெகுசிலருக்கு குடும்ப உறுப்பினர் களின் விருப்பத்திற்கு ஒரு திருமணம், தன் சுய விருப்பத்திற்கு ஒரு திருமணமென இரண்டு திருமணத்தை ராகு நடத்துவார். திருமணமான தம்பதிகள் தங்களுடைய கருத்து வேறுபாட்டை மறந்து வாழ முயற்சித் தாலும், 7-ல் உள்ள ராகு மூன்றாம் நபர்மூலம் உங்களைப் பிரிக்க முயற்சிசெய்வார். ஒருசிலருக்கு கர்வத்தாலும் கருத்து வேறுபாடு வரும். குரு பார்வை இருப்பதால், மற்றவர்களின் குறுக்கீடில்லாமல் இருந்தால் ஊடல் கூடலாக மாறும். சிலருக்கு இரட்டை ஆண் குழந்தைள் பிறக்கும்.

நீண்டநாட்களாகத் தீர்க்க முடியாத- அலைக்கழித்த சட்டம் தொடர்பான பிரச் சினைகள் தொடர்கதையாக இருக்கும். சம்பந்திகள் சண்டை வீதிக்குவந்து பெரும் அவமானம் உண்டாகும். சில கணவர்கள் வேறு திருமணம் செய்யப் போகிறேன் என்று மனைவியை மிரட்டிப் பணம் பறிப்பார்கள். உங்களுக்குப் பலவழிகளில் லாபம் ஈட்டித் தந்த கூட்டாளியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டு பிரியும். நான்கு வார்த்தை வேற்றுமொழியில் பேசி, பன்னாட்டுத் தொழில் செய்வதாகக் கூறும் ஏமாற்றுக் கூட்டாளியை நம்பி ஏமாறும் காலம். உங்களின் நண்பர் யார்? நண்பராக நடித்து ஏமாற்றுபவர் யார் என இனம்கண்டு பழகி னால் மட்டுமே தப்பிக்கமுடியும். அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மாட்டி இடைக்காலப் பதவிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளது. பதவியைத் தக்க வைத்துக் கொள்ள சிவ வழிபாடு மிக அவசியம். வேலைப்பளு அதிகமாகும். உழைத்த கூலி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். அசையா சொத்தை வாடகைக்கு விட்டு வருமானம் சம்பாதிப்பவர்களுக்கு வருமானம் தடைப்படலாம்.

பரிகாரம்

வசதியற்றவர்களின் திருமணத்திற்கு இயன்ற உதவி செய்யவேண்டும். அடிமட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் உயர உதவவேண்டும். முன்னோர்- குலதெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்தினால் நற்பலன் மிகுதியாகும்.

மீனம்

கிருத்திகை நட்சத்திர அதிபதி சூரியன் மீனத்திற்கு ஆறாமதிபதி. ஜனனகால தசாபுக்தி சாதகமானவர்களுக்கும், ஐந்து ஒன்பதாமிடம் பலம்பெற்றவர்களுக்கும் தடை, தாமதமான முயற்சிகள் சிறு மனசஞ்சலத்திற்குப் பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தித் தரும். இதுவரை நடக்காமலிருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாகச் செய்யாமல் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படவேண்டும். அலைச்சல் மிகுதியாகும். அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்யநேரும்.

வேலைப்பளு அதிகமாகும். கடன் பிரச்சினையிலிருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப்பெறுவீர்கள். வட்டிக்கு வட்டி கட்டி மீளமுடியாமல் தவித்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் நேரம். இதுவரை இருந்துவந்த கடன் பிரச்சினை இனி இல்லை.

பணம் கொடுக்கல்- வாங்கல் சீராகும். உங்களை ஏமாற்றிப் பணம் பறித்தவர்கள்கூட பணத்தைக் கொடுக்க முன்வருவார்கள். வாராக்கடன்கள் வசூலாகும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தாய்மாமன் அனுசரணையால் பூர்வீகம் தொடர்பான பல பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாகும். அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் உங்களைத் தேடிவரும். உங்களின் நீண்டநாள் பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின்மூலம் தீர்வுகாண முயல்வீர்கள். நோய்க்கான காரணம் மற்றும் நோயின் தன்மை புரியும். மாற்றுமுறை சிகிச்சையால் நீண்டகாலமாக அவதிப்படுத்திய நோய்க்கு நிவாரணம் கிடைக்கும் காலம். நோய்த் தாக்கம் கட்டுக்குள் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலதிகாரிகளால், முதலாளிகளால், சக ஊழியர்களால் ஏற்பட்ட தொந்தரவு அகலும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.

செய்தி, தகவல் தொடர்பு, ஊடகங்களில் வேலை செய்பவர்களுக்கு ஏற்றமுண்டாகும். உயில் எழுத ஏற்ற காலம். கைமறதியாக வைத்த ஆவணங்கள் கிடைக்கும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அகலும். தந்தையின் அன்பும் அனுசரணையும் கிடைக்கும்.

நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக் குத் தேவையான கடன் அரசுடைமை வங்கிகள்மூலம் கிடைக்கும். புதிய கடன் வாங்கி பழைய கடன் அடைப்பீர்கள். வாழ்க்கைத் துணைக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். தந்தையின்மூலம் பெரும் பணம் கிடைக்கும். கடனுக்கு வட்டிகட்ட முடியாமல் திணறியவர்களுக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்கும். எதிரிகள் தொல்லை குறையும்.

சிறு பிரச்சினைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் பகைமறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். உங்களுடைய வீண் பிடிவாதம், முன்கோபம் குறையும். தர்மசிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுப்பீர்கள்.

ஜனன ஜாதகத்தில் 6-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றவர்களுக்கும், தசாபுக்தி சாதகமற்றவர்களுக்கும் கோட்சார ராகு 3-ஆமிடத்தில் 6-ஆமதிபதியின் நட்சத்திரத்தில் பயணிப்பதால், இனம்புரியாத மன சஞ்சலம் இருந்துகொண்டே இருக்கும். தைரியம், நம்பிக்கை, ஞாபகசக்தி குறையும். காது வலி, செவித்திறன் குறைபாடு வரும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரலாம். இதுநாள்வரை முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த கொள்கைகளிலிருந்து மாறுபட்டு செயல்பட நேரும். அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும். அலைச்சல் மிகுதியாகும். வேலைப்பளு அதிகமாகும். உழைத்த கூலி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். சிலருக்கு வேலையாட்களால் பொருள் திருடு போகும். தந்தையின் ஆரோக்கியக் குறைவு கவலையில் ஆழ்த்தும்.

ஜனனகால தசாபுக்தி சாதகமற்றவர்கள் பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தைக் குறைப்பது நல்லது. பங்குச்சந்தை முதலீடுகள் நிலைதடுமாற வைக்கும். வரவில்லாமல் இருந்தால்கூட பரவாயில்லை. முதலுக்கே மோசமாக முடியுமென்பதால் கவனம் தேவை. உற்றார்- உறவினர்கள் நண்பர்களுக்கு ஜாமின் போட்டால் கடன் தொகைக்கு நீங்களே பொறுப்பேற்க நேரும்.

உங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம். நெருக்கமானவர்களே எதிராகத் திரும்பும் வாய்ப்பிருப்பதால் கவனமாக இருக்கவேண்டும். பிறர் பிரச்சினைகளை உங்கள் தலையில் இழுத்துப்போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதால், ஒதுங்கிநிற்பது நல்லது. உறவினர்களிடம் கவனமாகப் பழகவேண்டும். தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம். வேலையாட்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள்.

பரிகாரம்

சஷ்டி திதியில் திருச்செந்தூர் முருகனை வழிபடவும். உத்தியோகரீதியான மறைமுக எதிர்ப்புகள் அகல தட்சிணா மூர்த்தியை வழிபடவும். கடன், நோய்த் தொல்லை தீர சனிக்கிழமை ஆஞ்சனேயரை வழிபடவும்.

செல்: 98652 20406