9 எண்களின் ஆளுமையும், அதிர்ஷ்டமும்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/9-number-personality-and-luck-melmaruvathur-s-kalaivani

ளுமை நிறைந்த இந்த வாழ்வில் பெரும் சூட்சமத்தை அளிக்கும் எண்ணியலை கொண்டு சுகங்களையும், அடைந்துவிட முடியும் என்பதே எண்ணியல் ஆராய்ச்சியாளர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். இதுவரை நாம் பார்த்துவந்த எங்களுக்கு அளிக்கப்பட்ட எழுத்துகளைப் போல் செவ்வாய் மற்றும் 9-ஆம் எண்ணிற்கு எந்தவிதமான ஆங்கில எழுத்தையும் ஆராய்ச்சியாளர்கள் வழங்கவில்லை. இந்த 9-ஆம் எண் ஆனது போர்க்களம், ஆளுமை, கலகம், நெருப்பு, இராணுவம், காவல் போன்ற அனைத் தையும் பறைசாற்றும் நோக்கில் அமையப் பெற்றுள்ளது. செவ்வாய் மனித உடலில் குருதியின் மொத்த ஆளுமையும் உள்ளடக்கி யுள்ளது.

மேலும் பூமி சம்பந்தப்பட்ட அனைத்தும் செவ்வாயின் காரகங்கள் ஆகும்.

9, 18, 27 ஆகிய தேதிகளில் எந்த ஒரு மாதத்தில் பிறந்திருந்தாலும் இவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

பிறப்பு எண் 9 விதி எண் 1-ல் பிறந்தவர்கள்

செவ்வாய் மற்றும் சூரியனின் ஆதிக்கத் தில் பிறந்த இவர்கள் தேசநலனில் அதிக அக்கறை கொண்டவர்கள். தைரியமாக எதையும் சாதிக்கும் குணமுடையவர்கள். நுண்ணறிவுமிக்கவர்கள். புது விஷயத்தில் அதிக நாட்டமுடையவர்கள் இருந்தாலும் மற்றவர்களை பாதிக்கும் அளவு நடந்து கொள்ள மாட்டார்கள். அரசியல் மற்றும் இலக்கிய ஈடுபாடுகள் இருக்கும். செலவு செய்யாம லேயே காரியத்தை சாதித்துக்கொள்வார் கள்.

உள் மனதில் ஒருவித போராட்டம் இருந்துகொண்டே இருக்கும். முகம் அமைதி யுடனும் மனம் அலை பாய்ந்துகொண்டும் இருக்கும். ராஜதந்திரம் மிக்கவர்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றதுபோல் தன்னையும் தனது செயல்பாடுகளையும் மாற்றி அமைத்துக்கொள்வார்கள்.

ss

பிறப்பு எண் 9 விதி எண் 2-ல் பிறந்தவர்கள்

செவ்வாய் மற்றும் சந்திரனின் ஆதிக்கத் தில் பிறந்த இவர்கள் பேச்சில் அழகும், கவர்ச்சியும், உடையவர்களாக இருப்பார்கள்.

சுதந்திர பிரியர்கள். தைரியமாக செயல்பட்டு

ளுமை நிறைந்த இந்த வாழ்வில் பெரும் சூட்சமத்தை அளிக்கும் எண்ணியலை கொண்டு சுகங்களையும், அடைந்துவிட முடியும் என்பதே எண்ணியல் ஆராய்ச்சியாளர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். இதுவரை நாம் பார்த்துவந்த எங்களுக்கு அளிக்கப்பட்ட எழுத்துகளைப் போல் செவ்வாய் மற்றும் 9-ஆம் எண்ணிற்கு எந்தவிதமான ஆங்கில எழுத்தையும் ஆராய்ச்சியாளர்கள் வழங்கவில்லை. இந்த 9-ஆம் எண் ஆனது போர்க்களம், ஆளுமை, கலகம், நெருப்பு, இராணுவம், காவல் போன்ற அனைத் தையும் பறைசாற்றும் நோக்கில் அமையப் பெற்றுள்ளது. செவ்வாய் மனித உடலில் குருதியின் மொத்த ஆளுமையும் உள்ளடக்கி யுள்ளது.

மேலும் பூமி சம்பந்தப்பட்ட அனைத்தும் செவ்வாயின் காரகங்கள் ஆகும்.

9, 18, 27 ஆகிய தேதிகளில் எந்த ஒரு மாதத்தில் பிறந்திருந்தாலும் இவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

பிறப்பு எண் 9 விதி எண் 1-ல் பிறந்தவர்கள்

செவ்வாய் மற்றும் சூரியனின் ஆதிக்கத் தில் பிறந்த இவர்கள் தேசநலனில் அதிக அக்கறை கொண்டவர்கள். தைரியமாக எதையும் சாதிக்கும் குணமுடையவர்கள். நுண்ணறிவுமிக்கவர்கள். புது விஷயத்தில் அதிக நாட்டமுடையவர்கள் இருந்தாலும் மற்றவர்களை பாதிக்கும் அளவு நடந்து கொள்ள மாட்டார்கள். அரசியல் மற்றும் இலக்கிய ஈடுபாடுகள் இருக்கும். செலவு செய்யாம லேயே காரியத்தை சாதித்துக்கொள்வார் கள்.

உள் மனதில் ஒருவித போராட்டம் இருந்துகொண்டே இருக்கும். முகம் அமைதி யுடனும் மனம் அலை பாய்ந்துகொண்டும் இருக்கும். ராஜதந்திரம் மிக்கவர்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றதுபோல் தன்னையும் தனது செயல்பாடுகளையும் மாற்றி அமைத்துக்கொள்வார்கள்.

ss

பிறப்பு எண் 9 விதி எண் 2-ல் பிறந்தவர்கள்

செவ்வாய் மற்றும் சந்திரனின் ஆதிக்கத் தில் பிறந்த இவர்கள் பேச்சில் அழகும், கவர்ச்சியும், உடையவர்களாக இருப்பார்கள்.

சுதந்திர பிரியர்கள். தைரியமாக செயல்பட்டு எதிலும் வெற்றியடைவார்கள். தனக்குத்தானே தீமையை ஏற்படுத்திக் கொள்ளும் குணம் இவர்களுக்கு அமையப் பெற்று இருக்கும். இவர்களின் பேச்சை தடுத்தாலோ கேள்வி கேட்டாலோ சண்டை உருவாகிவிடும். தன்னுடைய பேச்சை கேட்காதவர்களை சபித்து விடுவார்கள். சில நேரம் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் நயவஞ்சகர்களிடம் ஏமாந்து போவார்கள். அறிவு அருவிபோல கொட்டும். எதிரியின் பலத்தையும், பலவீனத் தையும், கணக்கிட்டுக்கொண்டே இருப்பார் கள். கதை, கவிதை, இலக்கியம், போன்றவற் றில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக்கொள் வார்கள். தேனீக்கள் போல சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய மனம் இவர்கள் பெற்றிருப் பார்கள். எதைக் கண்டும் திருப்தி அடையும் சூழலை இவர்கள் ஏற்றுக்கொள்வதே கிடை யாது. மிகக் கடினமாக உழைத்து முன்னேறக் கூடியவர்கள்.

பிறப்பு எண் 9 விதியின் 3-ல் பிறந்தவர்கள்

செவ்வாய் மற்றும் குருவின் ஆதிக்கத் தில் பிறந்த இவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். தன்னை நாடி வந்தவர்களுக்கு அரணாக அமையப் பெறுவார்கள். பெரியவர்களின்மீது அன்பும், மரியாதையும், வைத்திருப்பார்கள். மக்கள் மத்தியில் புதுமையை புகுத்தகூடியவர்கள். புதிய பொருட்களை ஆய்வு செய்வார்கள். யோகம், தியானம், மருத்துவம், மனோவசியம் போன்ற துறைகளில் சிறப்படைவார்கள். இயல், இசை, நாடகம் போன்றவற்றில் ஆர்வம் உடையவர்கள். அடிக்கடி தூர தேசப் பயணம் மேற்கொள்வார்கள். தியானமும், மந்திரமும், இவர்களுக்கு கைவல்யமாகும். முன்கோபம் காரணமாக மிகவும் கண்டிப்புடனும், கடுமையாகவும், நடந்து கொள்வார்கள். புத்தக பிரியர்கள்.

பிறப்பு எண் 9 விதி எண் 4-ல் பிறந்தவர்கள்

செவ்வாய் மற்றும் ராகுவின் ஆதிக்கத் தில் பிறந்தவர்கள். பேச்சில் இணையவற்றவர்கள். பேசியே காரியத்தை சாதிக்கும் சாமர்த்தியசாலிகள். ஜன வசியமுள்ளவர்கள். குரு பக்தியும் இறை பக்தியும் மிக்கவர்கள். லாபலி நஷ்டத்தைவிட தன் நினைத்தக் காரியத்தை முடிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். நிதானத்தைக் கடைப் பிடிக்கவில்லை என்றால் மறைமுக எதிரி களை தாக்குவார்கள். இளமைக்காலம் பலவித போராட்டத்துடன் காணப்படும். பேச்சு, எழுத்து ஆகியவை உலகையே உலுக்கக் கூடிய ஆயுதமாக இவர்கள் பெற்றிருப் பார்கள். நேர்மை, பாசமான மனமுடைய வர்கள். புன்னகையுடன்கூடிய முகம் இருக்கும். இவர்களின் வாழ்வில் ஒரு விபத்தை சந்தித்து வருவார்கள்.

பிறப்பு எண் 9 விதி எண் 5-ல் பிறந்தவர்கள்

செவ்வாய் மற்றும் புதனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் தொழிலில் மிகுந்த அக்கறை உடையவர்கள். மனோதிடமும் உடல்பலமும் வாய்ந்தவர்கள். தன்னை நம்பியவர் களுக்கு உண்மையாக நடந்து கொள்வார்கள். தீவிரமான உழைப்பாளிகள். மக்கள் கூட்டத்தின் மத்தியில் வாழ்பவர்கள்.

அரசியலில் முக்கிய பங்குவகிப்பவர்கள். பெரியோர்களிடம் நட்பும் ஆன்றோர் களிடம் ஆசியும் இவர்களுக்கு கிட்டும். மனதிற்கு பிடித்த நபர்களிடம் அதிக பாசம் வைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள். புதுமையை விரும்பக்கூடியவர்கள். பல நல்ல குணங்களை பெற்றிருப்பார்கள். மற்றவர்களை தன்னுடைய பேச்சாள் கவர்ந்துவிடுவார்கள். எளிமையை கடைப்பிடிப்பார்கள். கடவுள் பக்தி அதிகமிருக்கும். கம்பீரமான தோற்றத் துடன் இருப்பார்கள். குழந்தைகள்போல நடந்துகொள்வார்கள்.

பிறப்பு எண் 9 விதி எண் 6-ல் பிறந்தவர்கள்

செவ்வாய் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் மிடுகாகவும், கம்பீரமாகவும், தைரியத்துடனும், எதையும் சிறப்பாக செய்துமுடிப்பார்கள். பேச்சும், எழுத்தும், வசீகரம் உடையதாக இருக்கும். மெய்ப்பொருள் ஞானத்தைக் கண்டடைவார்கள். பயமின்றி சண்டை போடுவார்கள். தனது சுயமரியாதையை கொள்கையை ஒருபொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். வீண் பேச்சை விரும்பமாட்டார்கள். நல்ல பண்புகள் பொதுவாழ்வில் போராட்டம், தான தர்மங்கள் செய்தல் போன்றவற்றில் தன்னை அடிக்கடி ஈடுபடுத்திக்கொள்வார்கள். பிறருடைய சொல்லை கேட்டாலும் தன்னுடைய விருப்பப்படி காரியங்களை ஆற்றுவார்கள். அஞ்சு நடுங்கும் அளவிற்கு பிரபலமானவர்கள். கம்பீரமானவர்கள். நிறைய சொத்து சேர்க்கைகள் வைத்திருப்பார்கள். வசதியாக வாழ்வார்கள். புகழ்மிக்கவர்கள்.

பிறப்பு எண் 9 விதி எண் 7-ல் பிறந்தவர்கள்

செவ்வாய் மற்றும் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் எப்பொழுதும் அறவழி யிலேயே நடந்துகொள்வார்கள். அன்பானவர்கள். ஆடம்பரத்தை ஒருபொழுதும் விரும்பமாட்டார்கள். ஆன்மிக ஞானமுடையவர்கள். யாரையும் உடனே தூக்கி எறிந்து பேசி விடுவார்கள். அதனால் பெரிய இழப்புகள் வந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். நிதானத்தை இழந்து சில நேரங்களில் செயல்படுவார்கள். குடும்பப் பிரிவினை வாட்டும். முதுமை நெருங்க நெருங்க வாழ்க்கை சோம்பலாகி விட்டதோ என்று வருத்தப்படுவார்கள். சுதந்திரமான நடவடிக்கை உடையவர்கள். கடினமான உழைப்பிற்கும் தவறு செய்த மனிதர்களை மன்னிக்கும் குணம் இருக்கும். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவிசெய்வார்கள். தான் செல்லும் வழியில் மற்றவர்களை கூட்டி முன்நின்று வழிநடத்தும் ஆற்றல் பெற்றவர்கள். யாரையும் எளிதில் எடுத்து எறிந்து பேசி விடுவார்கள். சம்பாதிக்கும் எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். தியானத் தின்மூலம் அதீத காந்த சக்தியின்மூலம் அருள்வாக்கு சொல்லி மற்றவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் நபர்கள் இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அதிகமாகக் காணப்படுகின் றார்கள்.

பிறப்பு எண் 9 விதி எண் 8-ல் பிறந்தவர்கள்

செவ்வாய் மற்றும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் பார்ப்பதற்கு திடகாத்திர மாக இருப்பார்கள். மன பலம் உடையவர்கள். இவர்களைச் சார்ந்த நண்பர்கள் பலருக்கு உதவுவார்கள். வாக்கு பலமிக்கவர்கள். எதையும் சீர்தூக்கி பார்ப்பார்கள். எதிரியை வீழ்த்தும் வல்லமை உடையவர்கள். பண விஷயத்தில் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். தோல்வியைக் கண்டு துவளமாட்டார்கள். வீண் குழப்பத்தால் குடும்பத்தில் சந்தோஷத்தையும் பிரச்சினையும் வளர்த்து பின்னர் தெளிவடைவார்கள். தன் வீரத்தால் மற்றவர்களை மிரட்டி பணிய வைப்பதில் வல்லவர்கள். எளிதில் யாரையும் கவர்ந்து விடுவார்கள். போராடி வெற்றிபெறும் குணமுடையவர்கள். தலைமை பொறுப்புகள் தானாகவே தேடிவரும். அரசியல் சட்டம் அறிந்தவர்கள்.

பிறப்பு எண் 9 விதி எண் 9-ல் பிறந்தவர்கள்

முழுக்க முழுக்க செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் கம்பீரமான தோற்றமும் பார்ப்பவர்களை கவரும் காந்த சக்தியும் சுறுசுறுப்பும் மிக்கவர்களாக இருப்பார்கள். தனது முன்னேற்ற பாதையில் கவனமாக இருந்து விரைவாக முன்னேறக் கூடியவர்கள். அமைதியாக இருக்கும் இவர்கள் பல தகுதிகளை பெற்றிருப்பார்கள். மனதில் புதுப்புது கருத்துக்கள் உதித்த வண்ணம் இருக்கும் சில நேரம் குறுக்கு வழியில் சென்று துன்பமடைவார்கள். இணைபிரியாத நட்பு இவர்களுக்கு இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு உண்டான புதுப்புது திட்டங்களை போட்டவண்ணம் இருப்பார்கள். எழுத்தாலும் பேச்சாலும் பெரும் சாதனைகளை புரியும் ஆற்றல் பெற்றவர்கள்.

அதிஷ்ட தேதிகள்

6, 15, 24, 5, 14, 9, 18, 27.

துரதிஷ்ட தேதிகள்

8, 17, 26, 2, 11, 20, 29.

அதிர்ஷ்ட நிறங்கள்

வெளிர் நீலம், மஞ்சள், சிவப்பு, பொன்னிறம், துரதிஷ்ட நிறங்கள் கருப்பு, பச்சை, இருண்ட நிறங்கள்.

அதிர்ஷ்ட ரத்தினங்கள்

பவளம், கார்னெட், இந்த செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் 1 ஆம் எண்ணில் பெயர்களை அமைத்துக்கொள்வது பெரும் அதிர்ஷ்டத்தை தரும். அதோடு மட்டுமல்லாமல் தங்களின் கையெழுத்தை 19 டிகிரி சாய் கோணமாக உயர்த்தி போடும்பொழுது பெரும் சிறப்பினை அடையமுடியும். மேலும் வங்கி மற்றும் தொலைபேசி எண்களை செவ்வாயின் நட்பு என்னில் அமைத்துக்கொள்வது சிறப்பினை அளிக்கும்..

செல்: 80563 79988

bala240524
இதையும் படியுங்கள்
Subscribe