யாரையாவது நாம் எதிரில் பார்க்கநேர்ந்தால் முதலில் கேட்கும் கேள்வி "எப்படி இருக்கிறீர்கள்?' என்று தான். அந்த "எப்படி இருக் கிறீர்கள்' என்பதற்கு அர்த்தம் சொந்த வீடு இருக்கிறதா, கார் இருக்கிறதா, சொத்து சுகம் இருக்கிறதா என்பது பற்றியல்ல. உடல்நிலை நன்றாக இருக்கிறதா என்பதுதான்.

இன்று விஞ்ஞான முன்னேற்றம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குப் புதுப்புது நோய்களும் உருவாகிக் கொண்டி ருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. அவற்றுக்கு விஞ்ஞானிகள் புதுப்புது பெயர்களை சூட்டிக்கொண்டிருக்கிறார் கள். நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வதை விரும்பினாலும், இந்த அவசர யுகத்தில் அது இயலாத ஒன்றாகிவிடுகிறது.

எல்லாமே ரெடிமேடாக கிடைப்பது போல உணவு வகைகளும் ரெடிமேடாகவே கிடைப்பதால், மக்களுக்கு உணவுப் பழக்க வழக்கங்களும் சரியாக அமைய வாய்ப்பு கள் குறைந்துகொண்டே வருகிறது. பொது வாகவே உண்ணும் உணவு சரியாக இல்லை யென்றால் அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை உண்டாகும் என்றாலும், எல்லா வற்றிலும் பார்த்துப் பார்த்து உடல்நிலையைப் பேணிக்காப்பவர்களுக்குக்கூட வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகி அவதியுற வைக்கிறது. இதற்கு ஜோதிடரீதி யாக என்ன காரணம் என்று பார்த்தால் 5-ஆம் பாவம் சரியாக அமையாததுதான்.

Advertisment

ff

ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீட்டைக் கொண்டு வயிறு, குடல், சிறுகுடல், குடலின் கீழ்ப்பகுதி, உண்ணும் உணவு, ஜீரணிக்கும் உறுப்பு, அஜீரணக் கோளாறு, அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படுமா என்பதனைப் பற்றி தெளிவாக அறியலாம்.

5-ஆம் வீட்டில் சுப கிரகங்கள் அமையப் பெற்று 5-ஆமதிபதி வலுவாக இருந்தால் நல்ல ஜீரணசக்தி, உண்ணும் உணவு செரிக்கும் அமைப்பு உண்டாகும். 5-ஆம் வீட்டில் பாவகிரகங்கள் அமையப்பெற்றால் வயிற்றுக் கோளாறு, அஜீரண பாதிப்பு, உண்ணும் உணவு செரிக்காத நிலை உண்டாகும்.

5-ஆம் வீட்டில் சூரியன் அமையப்பெற் றால் நல்ல ஜீரண சக்தியும், அதிகமான உணவு உண்ணுவதில் மிகுந்த விருப்பமும் உண்டாகும். சூரியனுடன் பாவிகள் சேர்க்கைபெற்றாலும்- குறிப்பாக செவ்வாய் அமையப்பெற்றாலும் ஜீரணக் கோளாறு உண்டாகி குடலில் புண் ஏற்படும்.

5-ஆம் வீட்டில் சந்திரன் பலமாக அமையப் பெற்றால் விதவிதமான உணவுண்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார். அதுவும் வளர்பிறைச் சந்திரன் என்றால் கேட்கவே தேவையில்லை. பாவிகள் பார்வை, சேர்க்கை இல்லாமலிருந்தால் உண்ணும் உணவு உடனடியாக செரிக்கும். நல்ல ஆரோக்கியம் இருக்கும். அதுவே தேய்பிறைச் சந்திரனாகி பாவிகள் பார்வை, சேர்க்கை பெற்றிருந்தால் அஜீரணக் கோளாறு, தேவையற்ற மனக் கவலைகளால் அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக கேதுவின் சம்பந்தம் சந்திரனுக்கு இருந்தால் குடலில் பாதிப்புகள் ஏற்படும்.

5-ஆம் வீட்டில் செவ்வாய் பலமாக அமைந்து, சுபர் பார்வையோ, சுபர் சாரமோ பெற்றிருந்தால் சூடான உணவுண்பதில் அதிக விருப்பம், காரமான உணவுகளை விரும்பி உண்ணக்கூடிய அமைப்பு உண்டாகும். என்றா லும், செவ்வாய் உஷ்ண கிரகம் என்பதால் பாவிகள் தொடர்பிருந்தால் உண்ணும் உணவு செரிக்காத நிலை, குடல்புண், வாயுத் தொல்லை, அல்சர் போன்றவை உண்டாகும். குறிப்பாக நீசம்பெற்றிருந்தால் செவ்வாய் தசை, செவ்வாய் புக்திக் காலங் களில் இன்னும் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை அதிகமாக ஏற்படுத்தும். வயிற்றுப்போக்கு உண்டாகி பெரிய பாதிப்பு களை ஏற்படுத்திவிடும். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய சூழ்நிலைகூட உண்டாகும்.

அதுவும் பெண்கள் என்றால், செவ்வாய் ரத்தகாரகன் என்பதால், மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் கோளாறு, கருச் சிதைவு போன்றவை உண்டாகும். செவ்வாய், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று அமைந்துவிட்டாலும், வக்ரகதியில் இருந்தாலும் கர்ப்பப்பை பாதிக்கும்.

புதன் 5-ஆம் வீட்டில் பலமாக அமைந்து சுபர் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால் உணவை ரசித்து உண்பவராக இருப்பார். நல்ல ஜீரணசக்தி இருக்கும். உடல்நிலை ஆரோக்கியமாக அமையும். அதுவே புதன் பலவீனமாக அமைந்துவிட்டால் பசியின்மை, உணவு உட்கொள்ளாததால் மயக்கம், உடல்நிலையில் தளர்ச்சி உண்டாகும். வாயுத் தொல்லைகளால் கை, கால் மூட்டுகளில் வலி, வீக்கம் உண்டாகும். உண்ட உணவு சரியாக செரிக்காமல் வயிற்றுப் போக்கும் உண்டாகும்.

5-ல் குரு அமையப்பெற்றால் நன்றாகப் பசியெடுத்து உண்ணக்கூடிய அமைப்பு, நல்ல ஜீரணத்தன்மை இருக்கும். குரு பகவான்- செவ்வாய், ராகு, கேது சேர்க்கைபெற்றால் அல்லது பார்வைபெற்றால் அஜீரணக் கோளாறு, வயிற்றில் புண், வாயுத் தொல்லை உண்டாகும்.

5-ல் சுக்கிரன் அமைந்தால், இனிப்பான உணவு வகைகளை விரும்பி உண்பார்கள். சுக்கிரன், சூரியன் சேர்க்கைபெற்றிருந் தால், எண்ணெய்யில் செய்த உணவுப் பண்டங்களை அதிகம் உட்கொள்வார்கள். சுக்கிரன் செவ்வாய் வீட்டிலோ அல்லது செவ்வாயின் பார்வையோ பெற்றால் சூடான உணவு வகைகளை விரும்பி உண்பார்கள். சனி சேர்க்கைபெற்றிருந்தால் எல்லா உணவு வகைகளையும் விரும்பி உட்கொள்பவராக இருப்பார்கள்.

சனி 5-ல் அமைந்திருந்தால், அதிக அளவில் உணவு உட்கொள்பவராகவும், எந்த நேரமும் அசைபோட்டுக்கொண்டே இருப்பவராகவும் இருப்பார். இதனால் அஜீரணக் கோளாறு, குடலில் புண் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

ராகு- கேது 5-ல் அமைந்தால் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளமுடியாத காரணத்தால் குடலில் புண், வயிற்று வலி போன்றவை ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். குறிப்பாக ராகு புக்திக் காலங்களில் வயிறு பிரச்சினைகள் அதிகரிக் கும்.

5-ஆம் வீட்டிற்கு குரு பார்வை அல்லது சுபகிரகப் பார்வை இருந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் நல்ல ஆரோக்கியம் அமையும். அதுவே சுபர் பார்வையின்றி 5-ல் பாவிகள் அமையப் பெற்றால், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்.