எண்களின் ஆதிக்கம்

கிரகத்தோடு தொடர்பு கொண்டு, ஒவ்வொருவர் வாழ்விலும் அற்புதத்தையும், அதிசயத்தையும், நிகழ்த்தும் சூழலை நியூமராலஜி என்று வடிவமைத்துள்ளனர். ஊ, ஐ, ச, ல ஆகிய ஆங்கில எழுத்துகள் ஐந்தாம் எண்ணின் ஆதிக்கம் கொண்டவைகள் ஆகும். இது எண்ணியலில் புதனின் தன்மையில் பிரபஞ்சத்தில் சஞ்சரித்து சில சாகசங்களை புரிந்து கொண்டிருக்கின்றது.

புதன் மனித உடலில் முழுவதுமாக போர்த்தப் பட்டுள்ள தோல், புதனின் காரகம்தான். அதோடு நரம்பு கள், மூளையில் அமையப் பெற்ற நினைவுகளின் கொள்ளளவு ஆகிய வற்றைக் குறிக்கும் கிரகம் புதன் ஆகும். சிந்தனை, அறிவுத்தன்மை, நுணுக்கமான அறிவுப்பூர்வமான அணுகுமுறை, ஆராய்ச்சி, செய்வது தாய்மாமன் ஆகிய அனைத்தும் புதனில் அடக்கமாகும். 5, 14, 23 ஆகிய தேதிகளில் எந்த மாதத்தில் பிறந்திருந்தாலும் இவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்த நபர்களாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

பிறப்பு எண் 5 விதி எண் 1-ல் பிறந்தவர்கள்

Advertisment

புதன் மற்றும் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் மிகுந்த சுறுசுறுப்புடன் இயங்குவார்கள். தான் செய்யும் காரியம் அனைத்தையும் விரைவில் செய்யவேண்டும் என்று எண்ணுவார்கள். அயராத உழைப்பாளி கள் சிறந்த சக்திவாய்ந்த நிர்வாகிகளாகும். எதையும் புதிய கோணத்தில் அணுகும் சூழல் உள்ளவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

பிறரை வேலை வாங்குவதில் சாமர்த்தியசாலிகள். பல தொழில் செய்யும் பண்பாளர்கள். மூளையானது மின்னல் வேகத்தில் இவர்களுக்கு செயல்படும். எல்லா விஷயத்துலயும் ஆதி முதல் அந்தம்வரை தெரிந்துகொள்ளும் ஆர்வமிக்கவர்கள்.

புகழ்பெற்ற மனிதர்கள், ஜனபலம், பணபலம், படைபலம், மனோ பலம் என்று அனைத் தையும் தன்னுள் இருப்பு வைத்துக்கொள்வார்கள். வசீகரத்தால் மக்களை தன் பக்கம் எளிதில் ஈர்த்துக் கொள்வார்கள். பிறருக்கு அறிவுரை கூறும் ஆசான்கள் பிறர் பல மணி நேரம் செய்யும் காரியத்தை சில மணி நேரங்களில் செய்துமுடித்து விடுவார்கள். தங்களது திறமைகளை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவார்கள். எப்பொழுதுமே தூய்மையாக இருக்க விரும்புவார்கள். பழமை மற்றும் புதுமையை இணைக்கும் பாலமாக இருப்பார்கள். மனம் சதா தொழில் பற்றிய சிந்தனை யிலேயே இவர்களுக்கு மூழ்கி இருக்கும். பணவிரயம் பற்றிய திட்டங்கள் தீட்டுவார்கள்.

Advertisment

நிலையில்லா மனம்கொண்ட இவர்கள் கடவுளை தாங்கள் வெற்றிபெற்றால் மட்டுமே வணங்குவார்கள். இவர்களின் வழிபாடு வித்தியாசமாகவும், வேடிக்கையாகவும், கலந்தே காணப்படும். எளியவர்கள் என்றால் முன்சென்று உதவும் மனம் படைத்த நபர்கள். கலைகளை மிகவும் ரசிப்பார்கள்.

பிறப்பு எண் 5 விதி எண் 2-ல் பிறந்தவர்கள்

புதன் மற்றும் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் அதீத கற்பனை வளம் மிக்கவர்கள். இவர்கள் எப்பொழுதுமே ஏதோ ஒரு சிந்தனையிலேயே மூழ்கி இருப்பார்கள். பற்கள் வரிசையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படும் இவர்கள் திடீரென்று சோம்பலாகி விடுவார்கள்.

தானே எந்த ஒரு காரியத்தையும் முன்நின்று நடத்துவார்கள் பிடிவாத குணம் இவர்களுக்கு சற்று அதிகமாக இருக்கும். எதிலும் வேகம் வேகம் என்று போராடுவார்கள். கற்பனை வளம்மிக்கவர்கள். எழுத்து மற்றும் பேச்சினால் பெரும் பணத்தை ஈர்ப்பார்கள். பல சமயத்தில் இவர்களின் செயல்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். எளிதில் யாரிடமும் பழகிவிடு வார்கள். பிறருடைய அந்தரங்க விஷயத்தைகூட அறிந்து வைத்திருப்பார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் கொடுப்பதில் அதீத ஆர்வம் இருக்கும்.

சூதுவாது அறியாதவர்கள். மனதில் எதையும் மறைத்து வைத்து பேசத் தெரியாது. புதுமையும் புரட்சியும் செய்துகொண்டே இருப்பார்கள். உலக அனுபவம்மிக்கவர்கள். வைத்திய பலிதம் உடையவர்கள். பிறருடைய சொல்லைக் கேட்கமாட்டார்கள் மக்கள் கவர்ச்சி உடையவர்கள். இரட்டை மனதுடன் எல்லா முடிவையும் எடுப்பார்கள். மாந்திரீக வித்தைகள் இவர்களுக்கு கைவசம் ஆகும். இவர்களை சுற்றி எப்பொழுதுமே ஒரு ஜனக் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

பிறப்பு எண் 5 விதி எண் 3-ல் பிறந்தவர்கள்

புதன் மற்றும் குருவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் கட்டுப்பாட்டுடன் கூடிய வாழ்க்கையை வாழ்வார்கள். இறைபக்தி மிக்கவர்கள். எதிலும் அவசரப்பட மாட்டார்கள். நிதானமாக யோசித்து ஒரு நல்ல முடிவுக்கு வருவார்கள். எந்த நேரமும் ஆழ்ந்த சிந்தனையிலேயே மூழ்கி இருப்பார்கள். பற்கள் முத்துபோலவும் முன்பற்கல் இரண்டு மட்டும் மற்றதுடன் ஒப்பிடும்பொழுது மாறுபட்டு காணப்படும்.

கட்டுப்பாட்டுடன் கூடிய வாழ்க்கையை வாழ்வார்கள். இறைபக்தி மிக்கவர்கள். எதிலும் அவசரப்பட மாட்டார்கள் நிதானமாக யோசித்து ஒரு நல்ல முடிவுக்கு வருவார்கள். குறுக்குவழியில் முன்னேற வேண்டும் என்று மனதிற்குள் திட்டம் தீட்டிக்கொண்டே இருப்பார்கள். இப்படி செய்யாவிட்டால் முன்னேறி இருக்க மாட்டோம் என்று எண்ணுவார்கள். முரண் பட்ட கருத்துக்களை பேசி பலரிடம் பகையை வளர்த்துக்கொள்வார்கள். அதிகம் பேசமாட்டார்கள். உடல் பலத்தைவிட இவர்களுக்கு மனோபலம் அதிகமாக இருக்கும்.

அறிவினால் வரும் பெரிய ஆபத்திலிருந்து தன்னை மட்டுமல்லாமல் பிறரை யும் காப்பாற்றுவார்கள். தனது சொந்த விருப்பப்படிதான் காரியங்களை மேற் கொள்வார்கள். பொதுவாழ்க்கை அரசியல், கலைத் துறைகளில் அனுபவமும், ஆராய்ச்சி யும், இவர்களுக்கு மேலோங்கி இருக்கும். முன்னோர்கள் வழியினை பின்பற்றி நடப்பார்கள். கடினமான உழைப்பாளிகள். மிகவும் நாணயமிக்கவர்கள். படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.கூர்மையான அறிவும் உழைப்பும் சிறந்த பண்பும் இயற்கையாகவே இவர்களுக்குள் அமைந்திருக்கும்.

பிறப்பு எண் 5 விதி எண் 4-ல் பிறந்தவர்கள்

புதன் மற்றும் ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் மிகவும் திடகாத்திர மாணவர்கள். ஆரோக்கியமான மனிதர்கள். புதிய சாதனை செய்வார்கள். நல்ல குணம், பொது அறிவு உடையவர்கள். சுறுசுறுப்பாக எப்பொழுதும் எதையாவது செய்துகொண்டே இருப்பார்கள். இவர்களின் என்ன ஆற்றல் மிகவும் பிரம்மாண்டமாக சிந்திக்கும் ஒரு சூழலை உருவாக்கித் தரும்.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசத் தெரியாதவர்கள். மனதின் கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்துவார்கள். பிறருடைய துன்பத்தை துடைக்க இரவும் பகலும் பாடுபடுவார்கள். சாதுக்கள் போன்று காட்சியளிப்பார்கள். எதிலும் புதுமையைக் கடைப்பிடிப்பார்கள் கலை, காவியம், புலமை போன்ற திறமைகள் பெற்றிருப்பார்கள். சுதந்திர மனதுடன் சுற்றித்திரிபவர்கள். சமுதாய மாற்றத்திற்காக குரல் கொடுப்பார்கள். மனம் எதையாவது திட்டம் தீட்டிக்கொண்டே இருக்கும்.

பிறப்பு எண் 5 விதி எண் 5-ல் பிறந்தவர்கள்

ss

முழுக்க முழுக்க புதனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் கண்ணியமானவர்கள். கடமை தவறாதவர்கள். இறையருள் மிக்கவர்கள். எதிலும் துரிதமாக செயல்படக்கூடியவர்கள். பொதுவாழ்வில் நாட்ட முடையவர்கள். குழந்தை கள் போல நடந்துகொள் வார்கள். குதூகலம் மிக்கவர்கள். புதுமையை அதிகம் விரும்பு வார்கள். நல்ல மனிதர்களின் தொடர்பு இவர்களுக்கு அதிகமாக இருக்கும். தீய பழக்க வழக்கங்களை எளிதில் கற்றுக் கொள்வார்கள். அடிக்கடி மாறுதல்களை விரும்பும் இவர்கள் குழந்தை பருவத்தில் இருந்தே ஒரு பொருளின்மீது அதீத பற்றில் இருக்க மாட்டார்கள். மற்றவர்களின் தாமதம் இவர்களுக்கு கோபத்தை வரவழைக்கும். அழகின்மீதும் பொருள்களின்மீதும் பற்று இல்லாமல் இருப்பார்கள்.

கடவுள் பக்தி அதிகம் உண்டு. சட்டம், அரசியல், வழிமுறைகள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். தர்மவான்கள். நகைச்சுவை கலந்த பேச்சினை உடையவர்கள். குழந்தை போன்ற அனைவரிடமும் பழகுவார்கள். வயது செல்லச் செல்ல அறிவினால் பிரகாசிப்பார்கள். பிறரை வஞ்சித்தும் ஏமாற்றும் பிழைக்க வழிதேடுவார்கள். எதையும் விரும்பி வாங்கியது மட்டுமல்லாமல் விரைவில் ஒதுக்கும் குணமும் இவர்களுக்கு இருக்கும்.

பிறப்பு எண் 5 விதி எண் 6-ல் பிறந்தவர்கள்

புதன் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். கலைகளின் பிறப்பிடமாக திகழ்வார்கள். கவர்ச்சியான தோற்றம் உடையவர்கள். நடை உடை பாவனை அனைவரையும் மயக்கும் விதத்தில் அமைந்திருக்கும். தெய்வ பக்தி இவர்களைவிட்டு பிரியவே பிரியாது. வீணான வம்பு பேச்சு, விரையம், செலவு, செய்துகொண்டுதான் இருப்பார்கள். சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள்.

ஒரு வேளை ஆரம்பித்தால் அசுர வேகத்தில் செய்துமுடிப்பார்கள். பல்வேறு தொழில் செய்யும் மனிதர்களின் ஆதரவு இவர்களுக்கு கிடைத்திருக்கும். குறுகிய நேரத்தில் நன்றாக பழகிவிடுவார்கள். கடினமாக உழைத்து பொருள் சேர்ப்பார்கள். சுகமாக வாழவேண்டும் என்று எண்ணுவார்கள். பாதிப்பு வந்தவுடன் எதிரியின் காலில் விழுந்து மன்னிப்புகேட்கும் இளகிய மனம் படைத்தவர்கள்.

பிறப்பு எண் 5 விதி எண் 7-ல் பிறந்தவர்கள்

புதன் மற்றும் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். ஞானமார்க்கம் அறிந்தவர்கள். சுறுபுறுப்புடன் செயலாற்றி இன்முகத்துடன் காட்சியளிப்பார்கள். புராதான காலத்து பொருள்களைப் பற்றி நன்கு ஆய்வு செய்வார்கள் சிறந்த அறிவாளிகள். மனதில் பட்டதை செய்வார்கள். கண்ணியமிக்கவர்கள். எளிமையான ஆடையில் மிகவும் தூய்மை யாகவே காட்சியளிப்பார்கள்.

சமூகம் வளம்பெற பாடுபடுவார்கள். மனம் எப்பொழுதும் நேர்மையே விரும்பும். கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். இவர்கள் புனித யாத்திரை அதிகமாக செய்வார்கள். தன்னை சார்ந்தவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டுவர பாடுபடுவார்கள். ஆடம்பரத்தை வெறுப்பார்கள். சிக்கனத்தை கடைபிடிப்பார்கள். ரகசியம் காக்கும் நல் மனம் இவர்களுக்கு இருக்கும். சிறிது மனம் வருந்தினாலும் உடனே மாறிவிடுவார்கள். அளவு கடந்த இயற்கையை நம்பிக்கை உடையவர்கள். மனதில் குழப்பம் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

பிறப்பு எண் 5 விதி எண் 8-ல் பிறந்தவர்கள்

புதன் மற்றும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் வலுவான உடலும் கம்பீரமான தோற்றமும் உடையவர்கள். கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். நயமாக பேசத் தெரிந்தவர்கள். நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடக்கூடியவர்கள். சுறுசுறுப்பாக காட்சியளிப்பார்கள். இயற்கையிலேயே மனோதிடம் வாய்ந்த இவர்கள் எடுத்தக் காரியத்தை முடிக்கும் வரையில் அயராது உழைக்கக் கூடியவர்கள். சிலர் இளமையிலிருந்து போராடி தனிமையில் உழைத்து முன்னுக்கு வருவார்கள். நல்லது முதல் கெட்டதுவரை அனைத்து பழக்கத்தையும் கற்று வைத்திருப்பார்கள்.

இவர்கள் யாராலும் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இருப்பார்கள். தனக் கென்று செய்யும் காரியத்தில் சிறிது குழம்புவார்கள். போலி சாமியார்களையும், பரிகாரங்களையும், நம்பி ஏமாறுவார்கள். தகுதியில்லாத நபர்களுக்கு தலையில் கிரீடம் சூட்டுவார்கள், தன்னுடைய சிக்கனத்தால் மற்றவர்களிடம் கஞ்சத்தனம் மிகுந்தவர்கள் என்று பெயர் எடுப்பார்கள். மூதாதையர்கள் சொத்துகளை பாது காப்பார்கள்.

பிறப்பு எண் 5 விதி எண் 9-ல் பிறந்தவர்கள்

புதன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் பல மக்களிடம் தலைவன்போலவும் காணப்படுவார்கள். இவர்களை கண்டாலே பலர் அஞ்சி நடுங்குவார்கள். மனோதிடமும் உடல் பலமும் மிக்கவர்கள். கம்பீரமானவர்கள். மதிநுட்பமானவர்கள். எதிரியை சமயம் பார்த்து வீழ்த்துவார்கள்.

ராஜதந்திரம் மிக்கவர்கள். நல்ல மற்றும் கெட்ட குணம் இரண்டுமே இவர்களிடம் இருக்கும். நடை உடை பாவனைகளில் தனி கவர்ச்சி இருக்கும். புது மாறுதல்கள் எப்போதும் அனைத்து விஷயத்திலும் இருக்கும். காதல், வீடு, வாகனம் என்று அனைத்து விஷயத்திலும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். மன நிம்மதி இவர்களிடம் நிலைபெற்று இருக்கும். அறிவியல்ரீதியான காரணங்களை சொல்லி மற்றவர்களின் மனதை மயக்கி விடுவார்கள். ஆன்மிக உச்சாடனம் மந்திர சிந்தனை நன்கு அறிவார்கள். வேகமாக சிந்தித்தாலும் இறுதியில் நல்ல முடிவையே எடுப்பார்கள்.

ஆழ்ந்த உறக்கமும் சோம்பேறித்தனமும் இருக்கும். ஆன்மிக வழிகளை பயபக்தியுடன் கடைபிடிப்பார்கள். பேச்சாலும் எழுத்தாலும் ஐஸ்வர்யம் அடைவார்கள். யோகம் மற்றும் மந்திரங்கள் நன்கு அறிவார்கள். பிறருக்கு கட்டளையிட்ட வண்ணம் இருப்பார்கள்.

அதிஷ்ட தேதிகள்

1, 10, 19, 28, 6, 15, 24, 5, 14, 23.

அதிர்ஷ்ட நிறங்கள்

வெளிர் நீலம் மஞ்சள், பொன்னிறம் சிவப்பு, சாம்பல் நிறம்.

அதிர்ஷ்ட ரத்தினங்கள்

வைரம், பவளம், கார்னட், ஓபல். புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். தங்களின் கையெழுத்தை பாம்புபோல வளைவு களைக் குறிப்பிட்டு பெரிதாக எழுதிவர அதிர்ஷ்டம் உண்டாகும். கிட்டத்தட்ட நான்கு சென்டிமீட்டருக்கு அதிகமான கையெழுத்து இருக்கவேண்டும். அடிக்காமல் அடிக்கோடிடாமல் மேல்நோக்கி சாய்வாக அமைத்திடவேண்டும். இவர்களின் வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை. புதனின் நட்பு எண்ணில் அமைத்துக்கொள்வது சிறப்பினை தரும்.

செல்: 80563 79988