ஆற்றலின் அளப்பெரிய, சக்தியினை தன்னகப்படுத்தி உலகை ஆண்டுகொண்டிருக்கும் ஜோதிடவியலில், பஞ்சபூத கோட்பாட்டால் நிலம் தழுவிய தன்மை அதிக ஆற்றல் உடையதாகும்.
ரிஷபம், கன்னி, மகரம், ஆகிய மூன்றும். திடமான ராசிகளாக நிலத்தின் ஆளுமையில் அமைந்துள்ளது.
இதில் சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்கள் நிலத்தை பண்படுத்தும் ஆற்றலை பெற்று ஆண்டு கொண்டுள்ளது.
இம்மூன்று ராசிகளில் ஜனனமான வர்கள் எப்பொழுதும் திடமான, பொறுமை யான, ஆழ்ந்த சிந்தனையுடன், பிறருடன் இணைப்பில் பயணிப்பார்கள்.
இம்மூன்று ராசிகளுக்கும் உண்டான ஒற்றுமை இம்முன்றுமே பெண் ராசியாகும்.
நில தத்துவத்தில் ரிஷபம் ஸ்திர ராசி யாகும், அதாவது நிலைத்து நிற்கக்கூடியது கன்னி நில தத்துவத்தில் உபய ராசி ஆகும். இது சலனப்பட்டு கொண்டே இருக்கும்.
மகரம் நில தத்துவத்தில் சர ராசி ஆகும். செயல்திறன் அதிகம் கொண்ட ராசியாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்.
நில தத்துவம் என்றால் பொறுமை, காத்திருப்பு, விட்டுக் கொடுப்பது, தியாகம், தன்னை சார்ந்தவர்களுக்காக எந்த அளவுக்கு துணிந்து செயல்படுதல், உள்ளிட்ட குணங்களை தன்னகத்தை கொண்டிருக்கும்.
குறிப்பாக ரிஷப ராசிகாரர்களுக்கு பொறுமை மிகுந்து காணப்படும். பெரும்பாலும் வீட்டின் மூத்த வாரிசாக இவர்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படும். இந்த ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு ஒன்பதாம் பாவகமே பாதக ஸ்தானமாக அமைவதனால் பெரும்பாலும் தந்தையின் நிலை அவ்வளவு சிறப்பாக காணப்படுவது கிடையாது. அந்த வீட்டிற்கு தந்தையாகவும், மூத்த மகனாகவும், இருந்து பல தியாகங்களை செய்து தன்னை அர்ப்பணிக்கும் சூழலை இவர்களுக்கு அமைத்துக்கொடுத்து விடுகின்றது.
ரிஷபம் குடும்பத்தினாலும், குடும்ப உறுப் பினர்களாலும், பலவகையான ஏமாற்றங் களை சந்திக்கும் சூழல் அமைந்து விடும்.
கன்னியில் பிறந்த ஒருவரை வேலைக்கு அமர்த்தும்பொழுது அந்தத் தொழிலும் அந்தத் தொழில் நடத்தும் நபரும் மிக உயர்ந்த கட்டத்திற்கு வருவதைக் கண்கூடாக காணமுடியும்.
இவர்கள் உழைப்பாளர்கள் ஆகவும், பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுப்பது, எதற்கும் தனக்காக போராடாமல் இருந்து ஸ்தாபனத்தின் உயர்விற்காக தன்னை கரைத்துக்கொள்ளும் ஆற்றல் உடையவர்கள். இவர்கள் உழைப்பி னால் ஏமாற்றத்தை சந்திக்கும் ராசியின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கின்றார் கள். மேலும் கன்னி காலபுருஷனுக்கு ரூன, ரோன, சத்ரு, ஸ்தானமாக அமைவதனால் உடல்நல குறைபாடுகளையும், சிறுசிறு நோய்களையும், அனுபவிக்கும் சூழலை இயல்பாகவே அமைத்துக்கொள்வார்கள்.
மகர ராசி கர்மகாரகன் சனி பகவானின் வீடு. இவர்கள் கர்ம மேன்மையினால் ஏமாற் றத்தை சந்திப்பார்கள். தனது கடமையை முடித்துவிட வேண்டும் என்கின்ற எண்ணம் இவர்களை தியாகத்திற்கு உட்படுத்திவிடும். பெரும்பாலும் இளமையில் பல துன்பங் களை அனுபவிக்க நேரிடும். மத்திம வயதிற்கு மேலே அதாவது திருமணத்திற்கு பிறகுதான் போராடி தன்னுடைய லட்சியத்தை அடையும் வலிமையை இவர்கள் பெறுகின்றார்கள். இவர்கள் பூமிபோலவே பொறுமையாக இருப்பார்கள். பொறுமையாக இருந்து அவர்களின் காரியத்தை சாதித்துக்கொள்வார்கள்.
இந்த மண் தத்துவ ராசிகளில் பிறந்த வர்கள் தங்களின் வாழ்வில் முன்னேற் றத்தை சந்திக்க, மண் சார்ந்த வழிபாடுகளை மேற்கொள்வது மிக சிறப்பாகும்.
குலதெய்வத்திற்காக வீட்டில் பிடி மண் வைத்து வழிபடுவது பொதுவாக மூன்று ராசிகளுக்கும் தலைசிறந்தது ஒரு பரிகாரமாக அமையும்.
அதேபோன்று தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பழைய அடியில் உருண்டையாக இருக்கும் பொம்மையை வீட்டில் பிரம்ம ஸ்தானத்தில் வைக்கும்பொழுது இவர்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள பல இன்னல்கள் தீருவதை கண்கூடாக காணமுடியும்.
அதேபோல் இம்மூன்று ராசிகளில் ஜனனமானவர்கள் இந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அன்பளிப்பாக பிறருக்கு வழங்கும்பொழுதும் இதன் ஆற்றலை அடையமுடியும்.
பூமியின் அடித்தளத்தில் அமைந்துள்ள கோவில்கள், அதாவது குடைவரை கோவில்கள், பூமியின் மட்டத்திலிருந்து உள்நோக்கி அமைந்துள்ள ஆலயங்கள் ஆகியவற்றிற்கு ஊதுவத்தி, தூபம் போடும் பொருட்கள், மண்பாண்டங்கள் போன்றவற்றை தானமாக வழங்க பெரும் சிறப்பினை இவர்களால் அடையமுடியும்.
இவர்கள் செவ்வாய்க்கிழமைகளில், பூவராகப் பெருமாள், பூமாதேவி, மண்ணில் அமைந்துள்ள முருகன் கோவில் போன்றவற்றை வெள்ளி, புதன், சனிக்கிழமைகளில் சென்று வணங்கிவர எல்லா சுபிக்சங்களையும் அடையமுடியும்.
செல்: 80563 79988