27 வகை பெண்கள்! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/27-types-women-s-vijayanarasimhan

மது பண்டைய கால விஞ்ஞானம், ஜோதிடம் ஒரு நபரைப் பற்றியும், தேசத்தைப் பற்றியும், சீதோஷ்ண நிலை, பருவநிலை மாற்றங்கள் மற்றும் அண்டவெளி ஆகியவற்றைப் பற்றியும் விவரிக்கிறது. பெண்களின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளும் போது, அவர்களின் பிறந்த நட்சத்திரம், நித்திய நாம யோகம், கரணம் ஆகியவற்றைக்கொண்டு, நமது ஜோதிட சாஸ்திரம் அவர்களின் குணநலன், கல்பனா சாஸ்திரம் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை அறியலாம். இந்த கட்டுரையில் பல்வேறு நித்திய நாம யோகத்தில் பிறந்த பெண்களின் தன்மைகளைப் பற்றி எடுத்துரைக்க முயல்வோம்.

ஜோதிடத்தில் யோகம் என்பது பல்வேறுவிதமாக விளக்கப்பட்ட போதும், இங்கு ஒளி கிரகங்களான சூரிய, சந்திரர்களின் கூட்டு, பாகை நித்ய நாம யோகமாகும். மொத்தம் 27 நித்திய நாம யோகங்கள், விஷ்கம்பம் நாம யோகத்தில் தொடங்குகிறது. (விஷ பானை). இந்த நித்திய நாம யோகங்கள் பெண்களின் குணங்களை ஓரளவு முழுமையாக விளக்கினா லும், இந்த விளக்கங்களை தனித்துவமாக கருதவேண்டியதில்லை. ஏனெனில், அவளது பிறப்பு ஜாதகம், நட்சத்திரம், ராசி, அவள் பூப்படையும்போது எழும் நட்சத்திரம், மற்றும் பல ஜோதிட நுணுக்கங்களை ஆழமாக ஆராய்ந்து அவர்களுக்கு ஜாதக பலன் உரைக்க வேண்டும்.

22

விஷ்கம்ப யோகத்தில் பிறந்த பெண் கணவனால் மிகவும் விரும்பப் படுபவளாகவும், மகிழ்ச்சி மிக்கவளாகவும் வாழ்வாள். எந்த ஒரு வேலையையும் சீராக, சிறப்பாக செய்வாள். வீட்டையும் அழகாகப் பராமரிப்பாள். பணிவுள்ளவளாகவும், இரக்க குணம் உள்ளவளாகவும் இருப்பாள். ஆனால், அவள் தடித்த வார்த்தைகளை உபயோகப்படுத்துவாள். பொறாமை பிடித்தவளாகவும், விஷமம் நிறைந்தவராகவும் விளங்குவாள்.

ப்ரீதி யோகத்தில் பிறந்த பெண் சமுதாய தீய பழக்கங்களை விலக்கி, தார்மீக கோட்பாடுகளுடன் வாழ்வாள். சொத்து சுகங்களை உடைய பணக்காரியாக விளங்குவாள். அழகும், நற்குணங்களும், ஆரோக்கியமும் நிறைந்தவளாக இருப்பாள். அதி புத்திசாலியாகவும், எளிமை நிறைந்த வளாகவும் விளங்குவாள். மற்றவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் வல்லவளாகவும், தர்ம குணம் கொண்ட வளாகவும் இருப்பாள்.

ஆயுஷ்மான் யோகத்தில் அவதரித்த பெண், பூர்ண ஆயுள் உடையவள். ஒளிமயமானவள், நவீனமானவள், வசீகர ஆடை அணிபவள் மற்றும் ஒழுக்கம் மிக்கவள். இயற்கை அழகை மிகவும் ரசிப்பவள் மற்றும் காடு, மலை, நதி, கோட்டைகள் போன்ற இடங்களில் மிகவும் சந்தோஷமாக வாழ நினைப் பவளாகவும் இருப்பாள். மிக உயர்ந்த மாடர்ன் ஸ்டைலில் வாழ்வாள்.

சௌபாக்கிய யோகத்தில் பிறந்தவள் புத்திசாலி, நேர்த்தி யானவள், வாழைத்தண்டு போன்ற அழகிய கால்களை உடையவள். உண்மை மற்றும் சமத்துவக் கொள்கைகளை உடையவள். இனிய பேச்சு உடையவள். தனது திறமை கள் மற்றும் சாதனைகளைப் பற்றிய பெருமைகள் உடையவள். செல்வம் மிக்கவளாக விளங்குவாள்.

ஷோபன யோகத்தில் பிறந்த பெண் எளி

மது பண்டைய கால விஞ்ஞானம், ஜோதிடம் ஒரு நபரைப் பற்றியும், தேசத்தைப் பற்றியும், சீதோஷ்ண நிலை, பருவநிலை மாற்றங்கள் மற்றும் அண்டவெளி ஆகியவற்றைப் பற்றியும் விவரிக்கிறது. பெண்களின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளும் போது, அவர்களின் பிறந்த நட்சத்திரம், நித்திய நாம யோகம், கரணம் ஆகியவற்றைக்கொண்டு, நமது ஜோதிட சாஸ்திரம் அவர்களின் குணநலன், கல்பனா சாஸ்திரம் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை அறியலாம். இந்த கட்டுரையில் பல்வேறு நித்திய நாம யோகத்தில் பிறந்த பெண்களின் தன்மைகளைப் பற்றி எடுத்துரைக்க முயல்வோம்.

ஜோதிடத்தில் யோகம் என்பது பல்வேறுவிதமாக விளக்கப்பட்ட போதும், இங்கு ஒளி கிரகங்களான சூரிய, சந்திரர்களின் கூட்டு, பாகை நித்ய நாம யோகமாகும். மொத்தம் 27 நித்திய நாம யோகங்கள், விஷ்கம்பம் நாம யோகத்தில் தொடங்குகிறது. (விஷ பானை). இந்த நித்திய நாம யோகங்கள் பெண்களின் குணங்களை ஓரளவு முழுமையாக விளக்கினா லும், இந்த விளக்கங்களை தனித்துவமாக கருதவேண்டியதில்லை. ஏனெனில், அவளது பிறப்பு ஜாதகம், நட்சத்திரம், ராசி, அவள் பூப்படையும்போது எழும் நட்சத்திரம், மற்றும் பல ஜோதிட நுணுக்கங்களை ஆழமாக ஆராய்ந்து அவர்களுக்கு ஜாதக பலன் உரைக்க வேண்டும்.

22

விஷ்கம்ப யோகத்தில் பிறந்த பெண் கணவனால் மிகவும் விரும்பப் படுபவளாகவும், மகிழ்ச்சி மிக்கவளாகவும் வாழ்வாள். எந்த ஒரு வேலையையும் சீராக, சிறப்பாக செய்வாள். வீட்டையும் அழகாகப் பராமரிப்பாள். பணிவுள்ளவளாகவும், இரக்க குணம் உள்ளவளாகவும் இருப்பாள். ஆனால், அவள் தடித்த வார்த்தைகளை உபயோகப்படுத்துவாள். பொறாமை பிடித்தவளாகவும், விஷமம் நிறைந்தவராகவும் விளங்குவாள்.

ப்ரீதி யோகத்தில் பிறந்த பெண் சமுதாய தீய பழக்கங்களை விலக்கி, தார்மீக கோட்பாடுகளுடன் வாழ்வாள். சொத்து சுகங்களை உடைய பணக்காரியாக விளங்குவாள். அழகும், நற்குணங்களும், ஆரோக்கியமும் நிறைந்தவளாக இருப்பாள். அதி புத்திசாலியாகவும், எளிமை நிறைந்த வளாகவும் விளங்குவாள். மற்றவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் வல்லவளாகவும், தர்ம குணம் கொண்ட வளாகவும் இருப்பாள்.

ஆயுஷ்மான் யோகத்தில் அவதரித்த பெண், பூர்ண ஆயுள் உடையவள். ஒளிமயமானவள், நவீனமானவள், வசீகர ஆடை அணிபவள் மற்றும் ஒழுக்கம் மிக்கவள். இயற்கை அழகை மிகவும் ரசிப்பவள் மற்றும் காடு, மலை, நதி, கோட்டைகள் போன்ற இடங்களில் மிகவும் சந்தோஷமாக வாழ நினைப் பவளாகவும் இருப்பாள். மிக உயர்ந்த மாடர்ன் ஸ்டைலில் வாழ்வாள்.

சௌபாக்கிய யோகத்தில் பிறந்தவள் புத்திசாலி, நேர்த்தி யானவள், வாழைத்தண்டு போன்ற அழகிய கால்களை உடையவள். உண்மை மற்றும் சமத்துவக் கொள்கைகளை உடையவள். இனிய பேச்சு உடையவள். தனது திறமை கள் மற்றும் சாதனைகளைப் பற்றிய பெருமைகள் உடையவள். செல்வம் மிக்கவளாக விளங்குவாள்.

ஷோபன யோகத்தில் பிறந்த பெண் எளிமையானவளாக இருப்பாள். தன் பெருமைகளைத் தம்பட்டம் அடிப்பதில் ஆர்வமில்லாதவளாகவும், பொறுமை மிக்கவளாகவும், செல்வம் மிக்கவளாகவும், இயற்கையின் அழகை ரசிப்பதில் ஆர்வம் உள்ளவளாகவும் இருப்பாள். இல்லத்தையோ அல்லது வியாபாரத்தையோ சிறப்பாக நிர்வகிப்பதில் வல்லவளாக இருப்பாள். தன் வார்த்தைகளாலோ அல்லது செயல்களாலோ மற்றவர்களைப் புண்படுத்தமாட்டாள். தன்னால் நிறைவேற்ற முடியாத காரியங்களைச் செய்வதாக ஒருபோதும் வாக்கு கொடுக்க மாட்டாள். அனைவராலும் அறியப்பட்டவர்களாகவும், புகழ் மிக்கவராகவும் விளங்கும் தன் குழந்தை களை எண்ணி மகிழ்ச்சி அடைவாள்.

அதிகண்ட யோகத்தில் பிறந்த பெண் ஏழையாகவும், பிடிவாதக்காரியாகவும், முன்கோபம் உடையவளாகவும், சுமார் முகமாக இருந்தாலும் கட்டுடல் உடையவளாக இருப்பாள். அற்ப விஷயமாக இருப்பினும் எப்போதும் கவலை மிக்கவளாக இருப்பாள். எனினும், மற்றவர்களின் உதவியின்றி எவ்வித எதிர்பாராத நிலைகளிலும் தானே தன் கஷ்டங்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வாள். தன் முகத்தில் அம்மைத் தழும்பு, பரு, பிற தழும்புகள் உடையவளாக இருப்பாள்.

சுகர்ம யோகத்தில் பிறந்த பெண் கற்றறிந்தவளாகவும், தைரியம் மிக்கவளாகவும், உணர்ச்சி மிக்கவளாகவும், உண்மையான, நேர்மை மிக்க, மற்றும் உதவிகரமானவராகவும் இருப்பாள். மேதையாக இருப்பாள். வீட்டைப் பராமரிப்பதில் அனுபவம் மிக்கவளாகவும், கணவனின் கணக்கு வழக்குகளை கவனிப்பதில் திறமை மிக்கவளாகவும் இருப்பாள். எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கும் எண்ணம் உடையவர்கள்.

திருதி யோகத்தில் பிறந்த பெண் சட்டப்படி நடக்கும் மனமும், முட்டாள் தனங் களைப் பொறுத்துக்கொள்ள முடியாதவளாகவும், கொடுமை செய்பவர்களைக் குற்றம் செய்பவர்களைக் கண்டு பொங்குபவளாகவும் இருப்பாள். அமைதியான, அடக்கமான மற்றும் இரக்க குணம் உடையவராகவும் இருப்பாள். மகிழ்ச்சி மிக்க, திருப்திகரமான வாழ்க்கை வாழ்வாள். நல்ல குழந்தைகள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேத்தி, பேரன்கள் என அனைத்து பாக்கியம் பெற்று மகிழ்வாள்.

சூல யோகத்தில் பிறந்த பெண்கள் சமுதாய தீய பழக்கங்களை விலக்கி, தார்மீக கோட்பாடுகளுடன், மதக்கோட்பாடுகளின்படி வாழ மாட்டார்கள். எதற்கும் அலட்டிக் கொள்பவர்கள். அவளது தோற்றம் சுமாராகவே இருக்கும். அழகுக்கும் அவர்களுக்கும் வெகு தூரமாகும்.

அடுத்தவர்கள் கூறுவதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். "டோண்ட் கேர்' டைப்பாக இருப்பார்கள். அவர்கள் சொல்வது மட்டும் சரி, மற்றவர்கள் சொல்வது தவறென்ற எண்ணம் உடையவர்கள். நன்னடத்தை அற்றவர்கள்.

கண்ட யோகத்தில் பிறந்த கன்னி கொடுமை மிக்கவள். இவளுக்கு நெருங்கிய நண்பர்கள் எவரும், எப்போதும் இருக்கமாட்டார்கள். சொந்த பந்தங்களும் இருக்காது. அவளது உடலைவிட்டு தலை தூக்கலாக இருக்கும். ஆண்தன்மை மிக்கவளாக இருப்பாள். அவளது கோபத்தையும், முரட்டுத்தனத்தையும் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களிடம்கூட காட்டுவார்கள். உற்சாகம், சந்தோஷம் என்பது இவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும்.

விருத்தி நாம யோகத்தில் பிறந்த பெண் செல்வம் மிக்கவளாக, எளிமையானவளாக, சேமிப்பு எண்ணங்கொண்டவளாக, எதையும் சாதிக்கக் கூடியவளாக, அனைவராலும் மதிக்கப்படக் கூடியவளாக, பக்தி மார்க்கத்தில் ஆர்வமுள்ளவளாக, மற்றும் மேன்மையான பல குணங்களை உடையவளாகவும் இருப்பாள்.

துருவ நாம யோகத்தில் பிறந்த பெண் அனைவராலும் மிகவும் விரும்பப்படுவாள். எளிமையானவள் இருந்தபோதும் மற்றவர்களை கவரும் வண்ணம் தோற்றமுடையவள். மிக அதிக அளவு சகிப்புத் தன்மையும், விடா முயற்சியும் உடையவள், விஷயங்கள் முன்னரே தெரிவிக்கப்பட்டாலும், எதையும் யோசித்து நிதானமாக முடிவெடுப்பாள். இப்படி முடிவெடுத்த பின்பு எவ்வித தங்கு தடையின்றி நிறைவேற்றப் படும். அவசரமான, அசட்டை யான, வேகமான முடிவுகள் எப்போதும் எடுக்க மாட்டாள்.

ஆய்வுக்கு அப்பாற்பட்ட, மறைபொருளான, அதி ரகசியமான விஞ்ஞானத்தை கற்றறிந்தவள் ஆவாள்.

வியாகத யோகத்தில் பிறந்த பெண்ணுக்கு தர்ம காரிய ஈடுபாடுகள் இருந்தாலும் கொடூர குணம் உடையவளாக இருப்பாள். சகட்டு மேனிக்கு பொய் கூறுவாள். தனது காரியங்களை நிறைவேற்ற எவ்வளவு கொடூரமான செயல்களையும் செய்யத் தயங்கமாட்டாள். தனது பெற்றோர்களுக்கோ அல்லது தன கணவனுக்குக்கூட உண்மையானவளாக இருக்கமாட்டாள். பகட்டுக்காரி. துக்கம் நிறைந்த, இருள் நிறைந்த தோற்றத்தை உடையவள். இயற்கையாகவே சண்டையிடும் குணம் உடையவள். ஒற்றுமை, சமாதானம் என்ற வார்த்தைகளுக்கு எப்போதும் அர்த்தம் அறியாதவள்.

ஹர்ஷண யோகத்தில் பிறந்த பெண் வேதங்களை, சாஸ்திரங்களை மற்றும் புராதன விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் உடையவள். நற்பண்புகளை உடையவள். திறமைசாலி, தனது உணர்வுகளையும், உணர்ச்சி வேகத்தையும், ஆசைகளையும், தூண்டுதல்களையும் முழுவதுமாக அடக்கி ஆளக்கூடியவள். உயர்வான, சீரிய, பின்பற்றத் தக்க நற்குணங் களை உடையவள். சிவபெருமானின் அருளால் அவள் வேண்டுவதை எல்லாம் அடைவாள். அவளது மனதில் உள்ளது என்னவென்று முகத்தில் தெரியாது.

வஜ்ர யோகத்தில் வந்து பிறந்த பெண் மிகவும் பொறுமையானவளாகவும், குடும்பத்தினரோடு மிகவும் பாசத்தோடு பழகுபவளாகவும் இருப்பாள். நல்ல சரீரத்தை உடையவளாக இருப்பாள். நவநாகரீக ஆடைகள் மற்றும் ஆபரணங்களை விரும்புபவளாக இருப்பாள். மிகவும் திறமையானவள் மற்றும் கடினமாக உழைப்பவளாகவும் இருப்பாள்.

அனுசரித்துச் செல்பவளாகவும், உபசரணை செய்பவளாகவும் திகழ்வாள்.

சித்தி நாம யோகத்தில் பிறந்த பெண்ணுக்கு இறை பயம் இருக்கும். எப்போதும் தீவிரமான நோய்களால் கஷ்டப்பட மாட்டார்கள். விரதங்களை கடைப்பிடிப்பர். குரு. ஆசிரியர், வழிகாட்டுபவர் மற்றும் பிராமணர்களை மதித்து நடப்பர். தர்ம செயல்களுக்கு மாறாக எவ்வித செயல்களிலும் ஈடுபட மாட்டாள். ஆயுள் பலம் மிக்கவள். நல்ல புகழ் மிக்க, மதிப்பு மிக்க பிள்ளைகள் பெற ஆசிர்வதிக்கப்பட்டவளராய் இருப்பாள்.

வியாதீபாத நாம யோகத்தில் பிறந்த ஜாதகி நோயாளியாகவும், பிரச்சினைகளை உண்டுபண்ணுபவளாகவும் இருப்பாள். கொடூரமான தோற்றமும், தீங்கு செய்பவளாகவும் இருப்பாள். பொறாமை பிடித்தவளாகவும், உறவுகளோ, நண்பர்களோ அமைதியாக, சிறப்பாக வாழ்வதை ஒருபோதும் விரும்பமாட்டாள். அருவருப்பூட்டுகிற முக அமைப்பைக் கொண்டவளாக இருப்பாள். பார்வை அபாயகரமானதாக இருக்கும்.

அவளுடைய எண்ணங்களை ஈடேற்ற எவ்வித அபிசாரங்களையும் செய்ய தயங்க மாட்டாள்.

வரியான் நாம யோகத்தில் பிறந்த ஜாதகி உயர்வான மதிப்பைப் பெறுவாள். நாடு முழுவதும் புகழோடும் பெயரோடும் வாழ்வாள்.

புது நிறமாக இருப்பினும், அனைவரையும் கவரக் கூடிய கவர்ச்சியான தோற்றத்தை உடையவளாக இருப்பாள். வசீகரமான, நேர்த்தியான, புத்திசாலித்தனமான பெண் ணாக விளங்குவாள். அவளது எளிமையையும், நேர்மையையும் கண்டு மக்கள் வியப்பர். நேர்மையான வழியிலிருந்து அவள் எப்போதும் விலகமாட்டாள். அவளிடம் தர்மகாரியம் ஈடுபாடு அதிகமாக இருக்கும். அன்பளிப்பு களை அள்ளி வழங்கும் உதார குணமுள்ள வளாக இருப்பாள்.

பரிக நாம யோகத்தில் பிறந்த ஜாதகி பொய்களை அள்ளிவிடத் தயங்க மாட்டாள். குறைவாகப் பேசுபவளாக இருந்தாலும் ரகசியமாக திட்டங்களைத் தீட்டுவதில் வல்லவள். சூடான செய்தியாக இருந்தாலும் அதை மிகவும் லேசாக எடுத்துக்கொள்ளும் மனநிலை உடையவள். பணத்தை தேவையற்ற வழிகளில் செலவு செய்வாள். ஆயுள் குறைவு. எப்போதும் நோய்களால் அவதிப்படுவாள். எப்போதும் பிறரை வெறுக்கக்கூடிய மனநிலையில் இருப்பாள்.

சிவ நாம யோகத்தில் ஜனித்த பெண்மணி பக்திமயமானவள். மதவுணர்வுள்ளவள்.

அவள் சுலபமாக பிறரின் நட்பைப் பெறுவாள்.

ஆனால், எதிலும் மிகவும் எச்சரிக்கையுடன், எல்லை மீறாமல் செயல்படுவாள். தகுதிக்கு மீறிய செயல்களை ஒருபோதும் செய்ய முற்பட மாட்டாள். சரித்திர, புராண, இதிகாச, சாஸ்திரங்களில் மிகவும் ஆர்வமுடையவளாக இருப்பாள். அனைத்தையும் அறிந்தவளாகவும் இருப்பாள். கூடிய மட்டும் மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்த முயற்சிக்கமாட் டாள். சிவப்பு நிறத்தை மிகவும் விரும்புவாள்.

சித்த நாம யோகத்தில் பிறந்த பெண் புது நிறமாகவும், விவேகம் உள்ளவளாகவும், புத்திசாலியாகவும், நன்கு படித்தவளாகவும், பேராவல் உள்ளவளாகவும், தத்துவார்த்தமானவளாகவும் இருப்பாள். தனது பிரார்த்தனைகளை நிறைவேற்ற பல புனிதத் தலங்களுக்குப் பயணிப்பாள்.

ஸாத்ய நாம யோகத்தில் பிறந்த பெண் சாந்தமான, சுலபமாக பழகக் கூடிய, பணிவுள்ள, வசதியான, அடக்கமான, கூச்ச சுபாவம் உள்ளவராக இருப்பாள். எளிதில் புரியாத, மறைபொருளான, ஆழ்ந்த ரகசியமான, மாய மந்திர சம்பந்தமான சாஸ்திரங்களில் ஆர்வமுள்ளவள். மதிநுட்பம் மிக்கவள். எந்தத் துறையிலும் உள்ள விஷயங்களை ஆழ்ந்து படித்து புதியனவற்றை கற்றுக் கொள்வதில் ஆர்வமுள்ளவள். அவளுக்கு ஒதுக்கப்பட்ட, தரப்பட்ட பணியை நுண்ணிய ஆர்வத்தோடு செய்து முடிப்பதில் வல்லவள்.

சுப நாம யோகத்தில் பிறந்த ஜாதகி அகன்ற நெற்றியும். பெரிய கண்களையும் உடையவளாக இருப்பாள். கவர்ச்சிகரமான தோற்றமுடையவள். எப்போதும் தரமான, தன்னம்பிக்கை மிக்க நல் ஆலோசனைகளை வழங்குவாளேயன்றி, தவறான வழியை எவருக்கும் காட்டமாட்டாள். அவளது புகழ் அவன் முகத்தில் ஒளிரும் மற்றும் அவள் மற்றவர்களை மலிவாக ஒருபோதும் நினைக்க மாட்டாள். கடுந்துன்பம், வேதனை, இக்கட்டு, இன்னல் அல்லது அடக்கப்படும்போது மன அழுத்தமோ, உடலில் எதிர்மறைத் தாக்கமோ அடையமாட்டாள்.

சுக்கில மற்றும் சுப்ர நாம யோகத்தில் பிறந்த பெண் கட்டுமஸ்தான உடல் உடையவள். காம உணர்வு மிக்கவள். தன் எல்லைகளைத் தானே உணர்ந்தவள். வரம்பு மீறாதவள். எதிரிகளுக்கு மரண அடி வழங்குபவள். மிகவும் உண்மையானவள். நேர்மையானவள். ஒரு சிறு உதவி செய்தவர்களைக்கூட மறக்கமாட்டாள். வெண்ணிற ஆடைகள் உடுத்துவதை மிகவும் விரும்புவாள். எல்லாரிடமும் மிகவும் சுதந்திரமான மனநிலையில் பழகினா லும், ஆண்களிடமிருந்து சற்று தள்ளியே இருப்பாள்.

பிரம்ம நாம யோகத்தில் பிறந்த பெண் அரண்மனை போன்ற இல்லத்தில் வசிப்பாள். அவளது கணவன் மந்திரியாகவோ அல்லது அவருக்கு சமமானவராகவோ விளங்குவார். நன்கு படித்தவளாகவும் எல்லாராலும் மிகவும் மதிக்கப்படக் கூடியவளாகவும் விளங்குவாள். வாதாடுவதில் வல்லமை மிக்கவளாக இருப்பாள். நுண் கலைகளில் ஆர்வம் மிக்கவளாகவும், இசை விமர்சகராகவும் விளங்குவாள். தர்மவான், தனிமையை விரும்புவாள். தத்துவஞானிபோல் இருப்பாள். ஒருபோதும் வேடிக்கையாகக்கூட பொய் சொல்லமாட்டாள்.

ஐந்திர நாம யோகத்தில் பிறந்த பெண் அசாத்தியமான தைரியசாலி. அவள் எப்போதும் வேதங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் மாறான விஷயங்கள் செய்யமாட்டாள். உறவுகளுக்கும், நட்புகளுக்கும் உதவி என்றால் ஓடோடி வருவாள். மிகவும் இரக்க குணமுடையவள். புதிய சமூக நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு பவள். கற்றுத் தெளிந்தவள். திறமைசாலி. சாதனைகள் புரிபவள். எப்போதும் உடல் உழைப்புக்கு அஞ்சமாட்டாள்.

வைதிருதி நாம யோகத்தில் பிறந்த பெண் இரக்கமற்றவள், தடித்த வார்த்தைகளை பேசுபவள், மடமை வாய்ந்தவள், போக்கிரி மற்றும் தீயவர்களின் தொடர்பில் இருப்பவள் ஆவாள். கருணையற்றவள். எந்த காரியத்தையும் ஒரு சீரான முறையில் செய்யமாட்டாள். எவரையும் லேசில் விடமாட்டாள். பிரச்சினைகளை வரவேற்கும் சண்டைக்காரி.

முன்னரே சொன்னதுபோல் மற்ற பலன்கள் போன்று யோகப்பலனும் ஒன்று. இதையே எடுத்துக் கொள்ளாமல் மற்ற காரணிகளையும் வைத்துப் பலன் சொல்ல முற்படவேண்டும்.

செல்: 97891 01742

bala061023
இதையும் படியுங்கள்
Subscribe