விசாகம்
கோவில்: பண்பொழி திருமலை குமாரசுவாமி.
தல வரலாறு: பூவன்பட்டர் என்ற அர்ச்ச கரின் கனவில் முருகன் தோன்றி, புதையுண்டு கிடக்கும் சிலையைத் திருமலையில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பந்தளமன்னர் கோவில் கட்டினார். மண்டபம் எழுப்புவதற்கான கற்களை, சிவகாமி பரதேசி என்ற முருக பக்தை, மலையடிவாரத்திலிருந்து வாழைமட்டைமூலம் இழுத்துச்சென்ற பெருமையுடையது.
சிறப்பு: விசாகம் என்றால் "மேலான ஜோதி'. இந்த நட்சத்திரத்தின் ஒளிக்கிரணங்கள் இம்மலையில் படுவதால் விசாக நட்சத்திரத் தினர் வழிபட்டால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும்.
இருப்பிடம்: மதுரையிலிருந்து செங் கோட்டை 155 கிலோமீட்டர். அங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் கோவில். திறக்கும் நேரம்: காலை 6.00- பகல் 1.00, மாலை 5.00- இரவு 8.30. போன்: 04633- 237 131, 237343.
அனுஷம்
கோவில்: திருநின்றியூர் மகாலட்சுமி புரீஸ்வரர்.
அம்மன்: உலகநாயகி.
தல வரலாறு: ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா, கந்தர்வன் ஒருவனின் அழகை ரசித்தாள். இதையறிந்த முனிவர் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமனிடம் கூறினார். பரசுராமனும் அவ்வாறே செய்து, தந்தையின் உதவியோடு மீண்டும் தாயை உயிர்பெறச் செய்தார். இந்த பாவம் நீங்க தந்தையும் மகனுமாக திருநின்றியூர் சிவனை வழிபட்டனர்.
சிறப்பு: பூமியில் புதைந்து போன சிவலிங்கம், சோழ மன்னனால் கண்டறியப்பட்டு ஒரு அனுஷ நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே இக்கோவில் அனுஷத்திற்கு உரியதானது. அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி பூஜையன்றும் சிறப்பு வழிபாடு செய்தால் செல்வவளம் உண்டாகும்.
இருப்பிடம்: மயிலாடுதுறை- சீர்காழி வழியில் ஏழு கிலோமீட்டர்.
திறக்கும் நேரம்: காலை 6.00-11.00, மாலை 4.00- இரவு 8.00.
போன்: 04364- 320520
கேட்டை
கோவில்: பசுபதிகோவில் வரதராஜப் பெருமாள்.
தாயார்: பெருந்தேவி.
தல வரலாறு: இராமானுஜரின் குருவான பெரியநம்பி, மார்கழி கேட்டையில் அவதரித்தவர். இவரது 105-ஆவது வயதில் சோழமன்னன் ஒருவன் இராமானுஜர் மீதிருந்த கோபத்தால் பெரியநம்பியின் கண்களைப் பறித்தான். அவர் பசுபதி கோவில் வரதராஜப் பெருமாளிடம் அடைக்க லம
விசாகம்
கோவில்: பண்பொழி திருமலை குமாரசுவாமி.
தல வரலாறு: பூவன்பட்டர் என்ற அர்ச்ச கரின் கனவில் முருகன் தோன்றி, புதையுண்டு கிடக்கும் சிலையைத் திருமலையில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பந்தளமன்னர் கோவில் கட்டினார். மண்டபம் எழுப்புவதற்கான கற்களை, சிவகாமி பரதேசி என்ற முருக பக்தை, மலையடிவாரத்திலிருந்து வாழைமட்டைமூலம் இழுத்துச்சென்ற பெருமையுடையது.
சிறப்பு: விசாகம் என்றால் "மேலான ஜோதி'. இந்த நட்சத்திரத்தின் ஒளிக்கிரணங்கள் இம்மலையில் படுவதால் விசாக நட்சத்திரத் தினர் வழிபட்டால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும்.
இருப்பிடம்: மதுரையிலிருந்து செங் கோட்டை 155 கிலோமீட்டர். அங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் கோவில். திறக்கும் நேரம்: காலை 6.00- பகல் 1.00, மாலை 5.00- இரவு 8.30. போன்: 04633- 237 131, 237343.
அனுஷம்
கோவில்: திருநின்றியூர் மகாலட்சுமி புரீஸ்வரர்.
அம்மன்: உலகநாயகி.
தல வரலாறு: ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா, கந்தர்வன் ஒருவனின் அழகை ரசித்தாள். இதையறிந்த முனிவர் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமனிடம் கூறினார். பரசுராமனும் அவ்வாறே செய்து, தந்தையின் உதவியோடு மீண்டும் தாயை உயிர்பெறச் செய்தார். இந்த பாவம் நீங்க தந்தையும் மகனுமாக திருநின்றியூர் சிவனை வழிபட்டனர்.
சிறப்பு: பூமியில் புதைந்து போன சிவலிங்கம், சோழ மன்னனால் கண்டறியப்பட்டு ஒரு அனுஷ நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே இக்கோவில் அனுஷத்திற்கு உரியதானது. அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி பூஜையன்றும் சிறப்பு வழிபாடு செய்தால் செல்வவளம் உண்டாகும்.
இருப்பிடம்: மயிலாடுதுறை- சீர்காழி வழியில் ஏழு கிலோமீட்டர்.
திறக்கும் நேரம்: காலை 6.00-11.00, மாலை 4.00- இரவு 8.00.
போன்: 04364- 320520
கேட்டை
கோவில்: பசுபதிகோவில் வரதராஜப் பெருமாள்.
தாயார்: பெருந்தேவி.
தல வரலாறு: இராமானுஜரின் குருவான பெரியநம்பி, மார்கழி கேட்டையில் அவதரித்தவர். இவரது 105-ஆவது வயதில் சோழமன்னன் ஒருவன் இராமானுஜர் மீதிருந்த கோபத்தால் பெரியநம்பியின் கண்களைப் பறித்தான். அவர் பசுபதி கோவில் வரதராஜப் பெருமாளிடம் அடைக்க லம் புகுந்தார். அவரின் துன்பம் போக்கும் விதத்தில், பெருமாள் இங்கு மோட்சமளித்தார்.
சிறப்பு: பெரியநம்பியின் திருநட்சத்திர வைபவம் சிறப்பாக நடக்கும். கேட்டை நட்சத்திரத்தினர் வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர் கள் செவ்வாயன்று வரும் கேட்டையில் வழிபடுவது சிறப்பு.
இருப்பிடம்: தஞ்சாவூர்- கும்பகோணம் வழியில் 13 கிலோமீட்டர்.
திறக்கும் நேரம்: காலை 7.00-9.00, மாலை 5.30- இரவு 7.30.
போன்: 97903 42581, 94436 50920
மூலம்
கோவில்: மப்பேடு சிங்கீஸ்வரர்.
அம்மன்: புஷ்பகுஜாம்பாள்.
தல வரலாறு: சிவன் ஆனந்தத்தாண்டவம் ஆடியபோது மிருதங்கம் வாசித்தவர் சிங்கி என்ற நந்திதேவர். இசையில் ஆழ்ந்து கண்ணை மூடியபடி தாளம் போட்டதால், நடனத்தைப் பார்க்க முடியவில்லை. அதனால், மப்பேடு வந்து சிவபூஜை செய்து இறைவ னின் நடனத்தைக் கண்டு களித்தார். மெய்ப்பேடு என்பதே மப்பேடு ஆகிவிட்டது. சிங்கி வழிபட்ட சிவன் என்பதால் சிங்கீஸ்வரர் எனப்பட்டார்.
சிறப்பு: மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரதோஷத்தன்று இங்கு வழிபடுவது சிறப்பு. இங்குள்ள நவவியாகரண கல்மீது ஏறி, நந்தியையும், மூலவரையும் ஒரே சமயத்தில் தரிசித்தால் ஆரோக்கியம் மேம்படும்.
இருப்பிடம்: சென்னை கோயம்பேடு- தக்கோலம் வழியில் 45 கிலோமீட்டர்.
திறக்கும் நேரம்: காலை 6.00-10.00, மாலை 5.30- இரவு 7.30.
போன்: 94447 70579, 94432 25093
பூராடம்
கோவில்: கடுவெளி ஆகாசபுரீஸ்வரர்.
அம்மன்: மங்களாம்பிகை.
தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய கடுவெளிச்சித்தர் அருள்பெற்ற தலம் கடுவெளி. "கடுவெளி' என்றால் "ஆகாச வெளி'. சோழமன்னன் ஒருவன் இங்கு கோவில் கட்டினான். ஆகாயத்திற்கு அதிபதியாக ஆகாசபுரீஸ்வரர் இங்கு வீற்றிருக்கிறார்.
சிறப்பு: இத்தலம் பூராட நட்சத்திரத் திற்குரியது. ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும் பூராடத்தன்று இங்கு வழிபடுவதாக ஐதீகம்.
அன்று சிவனுக்குப் புனுகு சாற்றி வழிபட திருமண, தொழில்தடை நீங்கும்.
இருப்பிடம்: தஞ்சா வூரிலிருந்து திருவையாறு 13 கிலோமீட்டர். அங்கிருந்து கல்லணை வழியில் நான்கு கிலோமீட்டர்.
திறக்கும் நேரம்: காலை 9.00-10.00, மாலை 5.00-6.00. பூராடத்தன்று: காலை 8.00- மதியம் 1.00.
போன்: 94434 47826, 96267 65472.
உத்திராடம்
கோவில்: கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர்.
அம்மன்: மீனாட்சியம்மன்.
தல வரலாறு: படைப்புத் தொழிலைச் செய்ததால், சிவனைவிட தானே உயர்ந்தவன் என்று பிரம்மா கருதினார். இந்த மமதையை அடக்க, பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒரு தலையைக் கொய்தார் சிவன். தனது பாவம் தீர பிரம்மா பூலோகத்தில் சிவனை வழிபட்ட தலம் கீழப்பூங்குடி. பழைய கோவில் அழிந்து போனதால் புதிய கோவில் கட்டப்பட்டது.
சிறப்பு: இங்குள்ள மீனாட்சி அம்மனின் நட்சத்திரம் உத்திராடம். இதில் பிறந்தவர்கள் பிரம்மபுரீஸ்வரரையும், மீனாட்சியையும் உத்திராடத்தன்று வழிபட வாழ்வில் முன்னேற் றம் உண்டாகும். பௌர்ணமியன்று சிவனுக்கு விசேஷ பூஜை நடக்கும்.
இருப்பிடம்: மதுரையிலிருந்து 45 கிலோ மீட்டர். சிவகங்கையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் ஒக்கூர் 12 கிலோமீட்டர். அங்கிருந்து கீழப்பூங்குடி மூன்று கிலோமீட்டர்.
திறக்கும் நேரம்: காலை 7.00-11.00, மாலை 5.00- இரவு 8.00.
போன்: 99436 59071, 99466 59072.
திருவோணம்
கோவில்: திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள்.
தாயார்: அலர்மேலுமங்கைத் தாயார்.
தல வரலாறு: புண்டரீக மகரிஷியின் பக்திக்கு இணங்கி பெருமாள் பிரசன்னமான தலம் திருப்பாற்கடல். சந்திரன் ஒரு சாபத்தால் இருளடைந்தான். அவன் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி வருந்தினாள். இங்கு வந்து வழிபட்டு கணவரின் சாபம் நீங்கப் பெற்றாள்.
சிறப்பு: திருவோண நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் திருவோணம், மூன்றாம்பிறை ஆகிய நாட்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட நினைத்தது நிறைவேறும்.
இருப்பிடம்: வேலூர்- சென்னை வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் காவேரிப்பாக்கம். இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கோவில்.
திறக்கும்நேரம்: காலை 7.30- பகல் 12.00, மாலை 4.30-இரவு 7.30.
போன்: 94868 77896,04177 254 929
அவிட்டம்
கோவில்: கீழ்க்கொருக்கை பிரம்மஞான புரீஸ்வரர்.
அம்மன்: புஷ்பவல்லி.
தல வரலாறு: கோரக்க சித்தர் ஒரு மடத்தில் தங்கியிருந்தார். இரவில் விழித்த போது, அவரருகில் ஒருத்தி படுத்திருந்தாள். முந்தானை சித்தர்மீது கிடந்தது. இதற்குப் பரிகாரமாகத் தன் கைகளை வெட்டிக் கொண்டார். சிவனருளால் கைகள் வளர்ந்தன. கையை வெட்டியதால் "கோரக்கை' என்றும், குறுகிய கைகளால் வழிபட்டதால் "குறுக்கை' என்றும் ஊருக்குப் பெயர் வந்தது. தற்போது "கொருக்கை' எனப்படுகிறது.
சிறப்பு: அவிட்ட நட்சத்திரத்தன்று பிரம்மஞானபுரீஸ்வரர், பிரம்மாவுக்கு ஞானம் தந்ததால் இத்தலம் அவிட்டத்திற்கு உரியதானது. இந்த நட்சத்திரத்தினர் ஆவணி அவிட்டத்தன்று அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட்டால் யோகவாழ்வு அமையும்.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து நான்கு கிலோமீட்டர்.
திறக்கும்நேரம்: காலை 11.00- பகல் 1.00, மாலை 5.00- மாலை 6.00.
போன்: 98658 04862, 94436 78579
சதயம்
கோவில்: திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர்.
அம்மன்: கருந்தார் குழலி.
தல வரலாறு: தவமிருந்த அக்னிதேவனுக்கு சந்திரசேகரராக சிவன் காட்சியளித்து அருள் புரிந்த தலம் திருப்புகலூர். "புகல்' என்றால் அடைக்கலம். அடைக்கலம் புகுந்தவர்களை ஆட்கொள்பவராக சுவாமி இங்கு வீற்றிருக் கிறார். வர்த்தமானேஸ்வரர், மனோன்மணி அம்பாளும் இங்கு வீற்றிருக்கின்றனர்.
சிறப்பு: திருநாவுக்கரசர் தன் 81-ஆம் வயதில் சித்திரை சதய நாளில் இங்கு சிவனோடு இரண்டறக் கலந்தார். இதையொட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கும். சதய நட்சத்திரத் தினர் இங்கு வழிபட்டால் ஆயுள், ஆரோக்கி யம், செல்வவளம் உண்டாகும்.
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம்- நாகப்பட்டினம் வழியில் பத்து கிலோமீட்டர்.
திறக்கும் நேரம்: காலை 6.00- பகல் 12.00, மாலை 4.00- இரவு 9.00.
போன்: 04366 236 970.
பூரட்டாதி
கோவில்: ரங்கநாதபுரம் திருவானேஸ்வரர்.
அம்மன்: காமாட்சி.
தல வரலாறு: இந்திரனும், அவனது ஐராவத யானையும் பூரட்டாதிநாளில் திருவானேஸ்வரரை பூஜித்து நற்பலன் பெற்றனர். கோச்செங்கட்சோழன் கட்டிய முதல் மாடக்கோவில். இறைவன் இங்கி ருந்தே காலச்சக்கரத்தைப் படைத்தார். கஜ கடாட்ச சக்தி விமானத்தின்கீழ் சுவாமி எழுந்தருளியிருக்கிறார்.
சிறப்பு: பூரட்டாதியன்று திருவானேஸ்வரரை வழிபட்டு ஏழு வண்ண ஆடைகளை ஏழைகளுக்கு தானமளித்தால் புத்திக்கூர்மை உண்டாகும். திருமணம், வேலைவாய்ப்பு தடையின்றி நடந்தேறும்.
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து திருவையாறு 20 கிலோமீட்டர். இங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி 17 கிலோமீட்டர். அங்கிருந்து அகரப்பேட்டை வழியில் இரண்டு கிலோமீட்டர்.
திறக்கும்நேரம்: காலை 7.00-9.00, மாலை 5.30- இரவு 7.00.
போன்: 94439 70397, 97150 37810.
உத்திரட்டாதி
கோவில்: தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ்வரர்.
அம்மன்: பெரியநாயகி.
தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய லட்சுமி, அகத்தியரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் வழிபட்ட தலம் தீயத்தூர். அவள், தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை வழிபட்டதால் "சகஸ்ர லட்சுமீஸ்வரர்' என்று பெயர் வந்தது. "சகஸ்ர' என்றால் ஆயிரம்.
சிறப்பு: உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அவதரித்த தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸர், அக்னி, புராந்தக மகரிஷி ஆகியோர் அரூபவடிவில் சகஸ்ர லட்சுமீஸ் வரரை தரிசிக்க உத்திரட்டாதி நாளில் வருவதாக ஐதீகம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் பொங்கல் நைவேத்யம் செய்ய பணக்கஷ்டம் தீரும். செயல்பாடுகளில் தடை நீங்கும்.
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து ஆவுடையார்கோவில் 40 கிலோமீட்டர். அங்கிருந்து திருப்புனவாசல் செல்லும் வழியில் 21 கிலோமீட்டர்.
திறக்கும் நேரம்: காலை 6.00- பகல் 12.00.
போன்: 99652 11768, 04371-239 212.
ரேவதி
கோவில்: காருகுடி கைலாசநாதர்.
அம்மன்: பெரியநாயகி.
தல வரலாறு: சந்திரன் தன் மனைவியான ரேவதியுடன் சிவனருள் பெற்ற தலம் காருகுடி. "கார்' எனப்படும் ஏழுவகை மேகங் களும் சிவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு "காருகுடி' என்ற பெயர் உண்டானது. 1,800 ஆண்டுகளுக்குமுன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி கோவிலைக் கட்டினான்.
சிறப்பு: ரேவதி நட்சத்திர தேவதை அரூப வடிவத்தில் (உருவமின்றி) தினமும் சிவனை வழிபடுவதாக ஐதீகம். ரேவதி நட்சத்திரத்தினர் இங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட நினைத்தது விரைவில் நிறைவேறும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும்.
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி 40 கிலோமீட்டர். இங்கிருந்து தாத்தய்யங்கார் பேட்டை 21 கிலோமீட்டர். அங்கிருந்து காருகுடி ஐந்து கிலோமீட்டர்.
திறக்கும் நேரம்: காலை 6.00-11.00, மாலை 5.00- இரவு 8.00.
போன்: 97518 94339, 94423 58146.
செல்: 89035 51587