ங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோவில் எது? எப்படி செல்லவேண்டும்?

அஸ்வினி

கோவில்: திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர்.

அம்மன்: பெரியநாயகி.

Advertisment

தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லிகை பிறவிமருந்தீஸ்வரரை வணங்கி கணவன், சிறுவனை உயிர்ப்பித்தாள்.

சிறப்பு: நோய்களுக்கு நிவாரணம் தரும் அஸ்வினி நட்சத்திர தேவதையும், மருத்துவ தேவதைகளும் இங்கு வழிபடுவதாக ஐதீகம். அஸ்வினி நட்சத்திர நாளில் இங்கு தன்வந்திரி ஹோமம் செய்தால் ஆரோக்கியம் நிலைக்கும்.

இருப்பிடம்: திருவாரூரிலிருந்து 30 கிலோமீட்டர்.

Advertisment

திறக்கும் நேரம்: காலை 6.00- 11.00, மாலை- 4.00 இரவு 8.00.

போன்: 94438 85316, 04369 222 392

பரணி

கோவில்: நல்லாடை அக்னீஸ்வரர்.

அம்மன்: சுந்தரநாயகி.

தல வரலாறு: இத்தலத்தில் மிருகண்ட மகரிஷி ஒரு யாகம் நடத்தினார். யாகத்தீயில் போட்ட பட்டு, சிவனைச் சென்று சேர்வது குறித்து சிலருக்கு சந்தேகம் எழுந்தது. கருவறைக்குச் சென்று காணும்படி மகரிஷி கூற, சிவன்மீது பட்டாடையைக் கண்டனர். பரணி என்ற அக்னி இருப்பதாகவும், அதுவே யாகப் பொருட்களை சிவனிடம் சேர்ப்பதாகவும் மகரிஷி விளக்கினார். இதனால் இது பரணித் தலமானது.

சிறப்பு: பரணி நட்சத்திரத்தினர் ஹோமம் நடத்தலாம். கார்த்திகை மாத பரணி மிகவும் சிறப்பு. மேற்குநோக்கி சுவாமி இருப்பதால் சக்தி அதிகம்.

இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து, நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தூரத்தில் நல்லாடை.

திறக்கும் நேரம்: காலை 8.00- மதியம் 12.00, மாலை 5.00- இரவு 8.30.

போன்: 94866 31196, 04364 285 341.

24

கார்த்திகை

கோவில்: கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர்

அம்மன்: துங்கபால ஸ்தனாம்பிகை

தல வரலாறு: தேவர் கள், பத்மாசுரனிடம் இருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அப்போது, சிவன் இங்கு நெருப்பு வடிவில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். தவம் கலைந்த அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் பறந்தன. அதிலிருந்து கார்த்திகேயன் (முருகன்) அவதரித்தார். தீப்பொறி பொன்னிறமாக எழுந்ததால் "காஞ்சன நகரம்' எனப்பட்டது. அதுவே "கஞ்சாநகரம்' (பொன்நகரம்) என்றாகிவிட்டது.

சிறப்பு: கார்த்திகையில் பிறந்தவர்கள் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாளில் தீபமேற்றி வழிபட வாழ்வு வளம்பெறும். கார்த்திகையில் பிறந்த கன்னிப்பெண்கள் அம்மனை வழிபட விரைவில் திருமணயோகம் கைகூடும்.

இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் எட்டு கிலோமீட்டர்.

திறக்கும் நேரம்: காலை 10.00- 11.00, மாலை 4.00-5.00.

போன்: 94874 43351, 04364 282 853.

ரோகிணி

கோவில்: காஞ்சிபுரம் பாண்டவதூதப் பெருமாள்.

தல வரலாறு: வைசம்பாயனர் ரிஷியிடம், ஜனமேஜய மகாராஜா, மகாபாரதக் கதை கேட்டார். கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் பற்றிக் கேட்டபோது, மன்னருக்கும் அந்த தரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் உண்டானது. ரிஷியின் வழி காட்டுதல்படி காஞ்சிபுரத்தில் தவம்செய்து தரிசனம் பெற்றார். அவரே பாண்டவதூதப் பெருமாளாகக் கோவில் கொண்டிருக்கிறார்.

சிறப்பு: ரோகிணிதேவி, இத்தல பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறுபெற்றாள். ரோகிணி நட்சத்திரத்தினர் புதன், சனிக்கிழமை, அஷ்டமி திதி, 8-ஆம் தேதிகளில் வழிபடுவது சிறப்பு.

இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கிலோமீட்டர். ஏகாம்பரேஸ்வரர் கோவில் எதிரிலுள்ள சாலை.

திறக்கும் நேரம்: காலை 7.00- 11.00, மாலை 4.00, இரவு 7.30.

போன்: 044- 2723 1899.

மிருகசீரிடம்

கோவில்: எண்கண் ஆதிநாராயணப் பெருமாள்.

தல வரலாறு: பெருமாளை நோக்கித் தவமிருந்த பிருகுமுனிவர், சிங்க வேட்டைக்கு வந்த சோழனின் ஆரவாரத்தால் தவம் கலைந்து எழுந்தார். கோபத்தில் அவனை சிங்கமுகத்தோடு பிறக்க சாபமிட்டார். விருத்தகாவிரி என்னும் வெற்றாற்றில் நீராடி, எண்கண் பெருமாளை வணங்கி மீண்டும் மனிதமுகத்தைப் பெற்றான்.

சிறப்பு: மிருகசீரிட நட்சத்திரத்தினர், மிருகசீரிட நாளில் இங்கு வந்து வழிபட்டால் வாழ்வில் பிரச்சினை நீங்கி சந்தோஷம் கூடும்.

இருப்பிடம்: தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்தில் முகூந்தனூர். அங்கிருந்து 1 கிலோமீட்டர். தூரத்தில் எண்கண்.

திறக்கும் நேரம்: மாலை 5.00- இரவு 7.00.

போன்: 94433 51528, 04366- 269 965.

திருவாதிரை

கோவில்: அதிராபட்டினம் அபயவரதீஸ்வரர்.

அம்மன்: சுந்தரநாயகி அம்மன்.

தலவரலாறு: அசுரர்களுக்கு அஞ்சிய தேவர்கள், திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சமடைந்து சிவனருள் பெற்றனர். அபயம் அளித்தவர் என்பதால், சிவனுக்கு "அபயவரதீஸ்வரர்' என பெயர் வந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ரைவத மகரிஷி, பைரவ மகரிஷி ஆகியோர் அருவநிலையில் இக்கோவில் சிவனை வழிபடுவதாக ஐதீகம்.

சிறப்பு: திருவாதிரை நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் தீர்க்காயுள், தைரியம் கிடைக்கும். அதீவீரராம பாண்டியர் திருப் பணி செய்ததால், இத்தலம் "அதிவீரராமன் பட்டினம்' என வழங்கியது. தற்போது அதிராபட்டினமாகி விட்டது.

இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து பட்டுக் கோட்டை 70 கிலோமீட்டர். அங்கிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் அதிராபட்டினம்.

திறக்கும் நேரம்: காலை 6.30- 12.00, மாலை 4.00- இரவு 8.30.

போன்: 99440 82313, 94435 86451.

புனர்பூசம்

கோவில்: வாணியம்பாடி அதிதீஸ்வரர்.

அம்மன்: பெரியநாயகி

தலவரலாறு: பிரம்மா

வைப் பிரிந்த சரஸ்வதி பூலோகம் வந்தாள். அவளை சிருங்கேரியில் கண்டு சமாதா னப்படுத்தினார். இருவரும் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். அதி தீஸ்வரர் கோவிலில் தங்கிய கலைவாணியைப் பாடும்படி சிவ-பார்வதி கேட்க, அவளும் இனிமையாகப் பாடினாள்.

அதனால் இத்தலம் வாணியம்பாடி என்றானது.

சிறப்பு: கஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, வாணியம்பாடியில் புனர்பூச நட்சத்திர நாளில் விரதமிருந்து தேவர்களுக்குத் தாயாகும் பாக்கியம் பெற்றாள். மேற்கு நோக்கிய இத்தலத்தில் புனர்பூச நட்சத்திரத்தினர் வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும்.

இருப்பிடம்: வேலூர்- கிருஷ்ணகிரி சாலையில் 67 கிலோமீட்டர் தூரத்தில் வாணியம்பாடி. அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் கோவில்.

திறக்கும் நேரம்: காலை 6.30- 10.30, மாலை 5.00- இரவு 7.00.

போன்: 99941 07395, 04174 226 652

பூசம்

கோவில்: விளங்குளம் அட்சயபுரீஸ்வரர்.

அம்மன்: அபிவிருத்தி நாயகி.

தல வரலாறு: காலில் ஏற்பட்ட வாத நோயைப் போக்கும் விதத்தில் சனி, திருத்தல யாத்திரை புறப்பட்டார். விளங்குளத்தில் இருக்கும் அட்சயபுரீஸ்வரரை வழிபட்ட போது நோய் குணமானது. அன்று, பூசம் நட்சத்திரமாக இருந்தது. பித்ருக்களின் அம்சமான காகங்களின் குருவான "பித்ரசாய்' சித்தர் இங்கு தினமும் வழிபடு கிறார்.

சிறப்பு: இங்கு மந்தா, ஜேஷ்டா ஆகிய தேவி யருடன் சனீஸ்வரர் மணக் கோலத்தில் வீற்றிருக்கிறார். பூச நட்சத்திரத்தினர் பூசம் மற்றும் திரிதியை நாளில் இவருக்கு அபிஷேகம் செய்து எட்டுமுறை சுற்றி வர நோய் நீங்கும். திருமண யோகம் கைகூடும்.

இருப்பிடம்: பட்டுக் கோட்டையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலை யில் 30 கிலோமீட்டர் தூரத்தில் விளநகர் விலக்கு. அங்கிருந்து தெற்கே இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கோவில்.

திறக்கும் நேரம்: மாலை 4.00- இரவு 7.00.

போன்: 97507 84944, 96266 85051.

ஆயில்யம்

கோவில்: திருந்துதேவன்குடி கற்கடேஸ் வரர்.

அம்மன்: அருமருந்துநாயகி, அபூர்வ நாயகி

தல வரலாறு: துர்வாசரின் சாபத்தால் நண்டு பிறப்பெடுத்த கந்தர்வன், சிவனை வழி பட்டு சாப விமோசனம் பெற்றான். கற்கடகத்திற்கு (நண்டுக்கு) அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி "கற்கடேஸ்வரர்' என பெயர் பெற்றார். பிரகஸ்பதியின் வழிகாட்டு தலின்படி, இந்திரன் இங்குள்ள சிவனை 1,008 மலர்களால் வழிபட்டு ஆணவம் நீங்கப் பெற்றான். இந்திரன் திருந்திய தலம் என்பதால் "திருந்துதேவன்குடி' என்ற பெயர் வந்தது. "நண்டுக்கோவில்' என்றால் தான் தெரியும்.

சிறப்பு: ஆயில்யம், தேய்பிறை அஷ்டமி நாளில் கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் சாற்றி வழிபட நன்மை பெருகும்.

இருப்பிடம்: கும்பகோணம்- சூரியனார்கோயில் சாலையில் 11 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர். அங்கிருந்து திருந்துதேவன்குடி 2 கிலோமீட்டர்.

திறக்கும் நேரம்: காலை 9.00- மதியம் 1.30, மாலை 4.00- இரவு 7.00.

போன்: 99940 15871, 0435- 200 0240

மகம்

கோவில்: ஒடுக்கம் தவசிமேடை மகாலிங் கேஸ்வரர்.

அம்மன்: மாணிக்கவல்லி, மரகதவல்லி தல வரலாறு: மக நட்சத்திரத்தில் அவ தரித்த பரத்வாஜர் தவமேடை அமைத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்ட தலம் ஒடுக்கம் தவசிமேடை. கோவிலுக்கு வரும் அடியவர் களின் பாதம் தன்மீது படவேண்டும் என்பதற் காக பரத்வாஜரே இங்கு பீடமாக இருக்கிறார்.

சிறப்பு: மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி நாளில் மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட வாழ்வு வளம் பெறும். இங்கு மாணிக்கவல்லி, மரகதவல்லி அம்மன் சந்நிதிகள் உள்ளன. சிவராத்திரியை ஒட்டி 30 நாட்கள் காலை நேரத்தில் மூலவர்மீது சூரியஒளி விழுவது சிறப்பு.

இருப்பிடம்: திண்டுக்கல்- நத்தம் சாலையில் 12 கிலோமீட்டர் தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு. அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கோவில்.

திறக்கும்நேரம்: காலை 6.00- மாலை 6.00.

போன்: 95782 11659, 93624 05382.

பூரம்

கோவில்: திருவரங்குளம் ஹரிதீர்த்தேஸ் வரர்.

அம்மன்: பெரியநாயகி.

தல வரலாறு: புத்திரப் பேறு வாய்க்காத சோழ மன்னன் கல்மாஷ பாதன் அகத்தியரின் உதவியை நாடினான். அவரின் வழிகாட்டுத லால், திருவரங்குளம் சிவனை வணங்கப் புறப் பட்டான். அந்தக் கோவில் புதைந்து போனதை அறிந்து பூமியைத் தோண்டினான்.

லிங்கத்தில் கடப்பாறை பட்டு ரத்தம் பீறிட் டது. தோஷம் நேருமென வருந்தி உயிர்விடத் துணிந்தான். சிவன் அவனுக்கு காட்சிதந்து குறை தீர்த்தார். இந்த நிகழ்வு பூர நட்சத்திரத் தில் நடந்தது.

சிறப்பு: பூர நட்சத்திர லோகத்தில் சிவ, நாக, ஞானபிரம்ம, இந்திர, ஸ்ரீ, ஸ்கந்த, குரு தீர்த்தங்கள் உள்ளன. திருவரங்குளத்திலும் இவை ஏழும் உள்ளன. பூர நட்சத்திரத்தினர் தங்கள் பிறந்தநாளில் இங்கு வழிபட்டால் வாழ்வில் மேன்மை பெறுவர்.

இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் ஏழு கிலோ மீட்டர்.

திறக்கும்நேரம்: காலை 7.00-மதியம் 12.00, மாலை 5.00 இரவு 7.30

போன்: 98651 56430, 99652 11768.

உத்திரம்

கோவில்: இடையாற்றுமங்கலம் மாங்கல்யேஸ்வரர்.

அம்மன்: மங்களாம்பிகை

தல வரலாறு: உத்திர நட்சத்திரத்தில் பிறந்த வர் மாங்கல்ய மகரிஷி. இவர் அகத்தியர், வசிஷ்டர் ஆகியவர்களின் திருமணத்தில் மாங்கல்ய தாரண பூஜை நடத்தியவர். யாரும் அறியாமல் சூட்சும வடிவில் பூலோகத்தில் சிவனை வணங்கி தன் சக்தியை அதிகரித்துக் கொண்டார். சிவன் இவருக்கு அருள்புரிந்த தலமே இடையாற்று மங்கலம்.

சிறப்பு: மணவாழ்வுக்காகக் காத்திருப்ப வர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு. திருமணம் நிச்சயித்தபின், மாங்கல்ய மகரிஷிக்கு வெற்றிலை பாக்குடன் கல்யாண பத்திரிகை வைத்து வேண்டிக் கொள்கின்றனர். உத்திர நட்சத்திரத்தினர் வழிபட்டால் தீர்க்கசுமங்கலி பாக்கியம் பெறுவர்.

இருப்பிடம்: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் லால்குடி. அங்கிருந்து இடையாற்று மங்கலம் ஐந்து கிலோமீட்டர்.

திறக்கும்நேரம்: காலை 8.00- மதியம் 12.00, மாலை 6.00- இரவு 8.00.

போன்: 98439 51363, 0431- 254 4070.

அஸ்தம்

கோவில்: கோமல் கிருபா கூபாரேஸ்வரர்.

அம்மன்: அன்னபூரணி.

தல வரலாறு: சிவனின் கண்களைப் பார்வதி கைகளால் பொத்தினாள். உலகமே இருளில் மூழ்கியது. அப்போது, சிவனும் தன் கையிலிருந்த ஹஸ்தாவர்ண ஜோதியில் மறைந்தார். சிவனைத் தேடி, அம்பாள் பசு வடிவில் பூலோகம் புறப்பட்டாள். அஸ்த நட்சத்திரத்தன்று சிவனை ஜோதிவடிவில் தரிசித்து ஐக்கியமானாள். பக்தர்கள் மீது கருணை (கிருபை) கொண்டவர் என்பதால் "கிருபா கூபாரேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

சிறப்பு: அஸ்த நட்சத்திரத்தினர் திங்கள், புதன்கிழமையில் வழிபடுவது நல்லது. அன்னபூரணி அம்பிகை பசுவாக இங்கு வந்த தால் பசு, கன்று தானம் அளிப்பது சிறப்பு.

இருப்பிடம்: கும்பகோணம்- மயிலாடு துறை சாலையில் குத்தாலத்திற்குப் பிரியும் இடத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் கோமல்.

திறக்கும் நேரம்: காலை 7.00- மதியம் 12.00, மாலை 5.30- இரவு 7.30.

போன்: 95002 84866

சித்திரை

கோவில்: குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள்.

தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி.

தல வரலாறு: தேவகுரு பிரகஸ்பதியின் மகன் கசனை, அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி திருமணம் செய்ய விரும்பினாள். கசனை அசுரலோகத்திலேயே கட்டாயப்படுத்தி இருக்கச் செய்தாள்.

மகனைக் காணாத பிரகஸ்பதி விஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார். விஷ்ணு சக்கரத்தாழ் வார்மூலம் கசனை மீட்டார். இதையடுத்து சக்கரத்தாழ்வாரும், தேவ குருவும் ஒரே இடத் தில் அமர்ந்தனர். அதுவே குருவித்துறை தலம்.

சிறப்பு: பிரகஸ்பதிக்கு அருள்புரிய விஷ்ணு சித்திர ரதத்தில், சித்திரை நட்சத் திரத்தன்று எழுந்தருளினார். எனவே, இக்கோவில் சித்திரைக்குரியதானது. வியாழன், பௌர்ணமி, சித்திரை நட்சத்திர நாட்களில் தரிசிப்பது சிறப்பு.

இருப்பிடம்: மதுரையிலிருந்து 23 கிலோமீட்டர்.

திறக்கும் நேரம்: காலை 7.30- மதியம் 12.00, மாலை 3.00- 6.00.

போன்: 94439 61948, 97902 95795.

சுவாதி

கோவில்: சித்துக்காடு தாத்திரீஸ்வரர்.

அம்மன்: பூங்குழலி

தலவரலாறு: படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா ஆகியோர் நெல்லிவனத்தில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். சித்தர் தவமிருந்த பகுதியானதால் இப்பகுதி சித்தர்காடு, சித்துக்காடு என அழைக்கப் பட்டது. நெல்லி மரத்தடியில் இருப்பதால் சிவனுக்கு "தாத்திரீஸ்வரர்' என்று பெயர். "தாத்திரீ' என்றால் நெல்லி. சிறப்பு: சுவாதி நட்சத்திரத்தினர் இங்கு சிவனை வழிபட்டால் செல்வ வளமிக்க வாழ்வு உண்டாகும். திருமணயோகம் விரைவில் கைகூடும். இங்கு குபேரருக்கு நெல்லிக்காய் ஊறுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து வழிபட்டால் யோகவாழ்வு அமையும்.

இருப்பிடம்: சென்னை பூந்தமல்லி- தண்டுரை வழியில் 8 கி.மீ.,

திறக்கும் நேரம்: காலை 8.00- 10.00, மாலை 5.00-7.00.

போன்: 93643 48700, 9382684485.

(தொடர்ச்சி அடுத்த இதழில்...)

செல்: 89035 51587