ஜோதிடம் 9 கிரகங்களையும், 12 ராசிக் கட்டங்களையும் கொண்டது என உங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த ஒன்பது கிரகங்களும், 12 ராசிக் கட்டங்களில் ஏதோ ஒரு கட்டத்தில் அமர்ந்திருக்கும். இதில், ஒரு கட்டத்தில் 27/4 நட்சத்திரங்கள் அமைந்திருக்கும். இந்த நட்சத்திரத்தில், ஏதோ ஒரு நட்சத்திரத்தில்தான், இந்த கிரகங்கள் அமைந்திருப்பர். சிலசமயம் இரண்டு கிரகங்கள், ஒரே நட்சத்திரத்தில் அமரும் வாய்ப்பும் உண்டு. அதனை கிரக யுத்தம் என்பர். இந்த கிரகங்கள் எந்த நட்சத் திரத்தில் அமர்கின்றனரோ, அதன் மூல மாகத்தான், அதன் வழியாகத்தான் தனது நல்ல- கெட்ட பலன்களை கிரகங்களால் தர இயலும். இது அக்கிரங்களுக்கு உண்டாக்கப் பட்ட செயல்முறை கணக்கீடு ஆகும்.
இப்போது, ராகுபகவான், 27 நட்சத்திரங் களில், அமரும்போது, எந்த நட்சத்திரத்திற்கு எவ்வித பலன் வழங்குவார் எனும் கணக் கீட்டை கணக்கிடலாம். கிரகங்களில் அதி முக்கியமானவர் ராகுபகவான். அவரே ஜாத கரை வாழவைக்கவும் வீழ்ச்சியடைய வைக்க வும் வல்லவராவர்.
1. அஸ்வினி
அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசியில் 0 டிகிரிமுதல் 13.20 டிகிரிவரை உள்ளது. இதன் சாரநாதர் கேது ஆவார். ராகுபகவான் உங்கள் பிறந்த ஜாதகத்தில், அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் உண்டாகும் பலன். நீங்கள் எந்த ராசி, எந்த லக்னமாக இருப்பி னும், ராகு அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால், அங்கு ராகு+கேது எனும் கணக்கீடு வரும்.
மச்சம்: உங்களுக்கு தலையில் மச்சம் இருக்கும்.
குணம்: பொதுவாக அஸ்வினி நட்சத் திரம் தொடர்பு இருப்பின், அவர்கள் மருத்துவ புரிதல் கொண்டிருப்பர். இதன்மூலம் இவர்கள் அடுத்தவர் கஷ்டத்தை பார்க்க சகிக்க மாட்டார்கள் எனத் தெரியும். மேலும் இந்த ராகுபகவான் கேது சாரம் எடுக்கும் போது இரு பாம்புகள் சம்பந்தம் உண்டாகிறது அல்லவா! எனவே எப்போதும் சற்று சீறிக் கொண்டே இருப்பார். பொறுமையே கிடையாது. எப்போதும் எரிச்சல்படுவார். சற்று சண்டையை பெரிதாக்கும் குணம் இருக்கும். யாராவது நமக்கு செய்வினை செய்துவிடுவார்களோ என அஞ்சிக் கொண்டேயிருப்பர். சில சமயங்களில் சற்று கொடூரமாகவும் நடந்துகொள்வர்.
நல்ல பலன்+தொழில்: இவர்களுக்கு மருந்து, ம
ஜோதிடம் 9 கிரகங்களையும், 12 ராசிக் கட்டங்களையும் கொண்டது என உங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த ஒன்பது கிரகங்களும், 12 ராசிக் கட்டங்களில் ஏதோ ஒரு கட்டத்தில் அமர்ந்திருக்கும். இதில், ஒரு கட்டத்தில் 27/4 நட்சத்திரங்கள் அமைந்திருக்கும். இந்த நட்சத்திரத்தில், ஏதோ ஒரு நட்சத்திரத்தில்தான், இந்த கிரகங்கள் அமைந்திருப்பர். சிலசமயம் இரண்டு கிரகங்கள், ஒரே நட்சத்திரத்தில் அமரும் வாய்ப்பும் உண்டு. அதனை கிரக யுத்தம் என்பர். இந்த கிரகங்கள் எந்த நட்சத் திரத்தில் அமர்கின்றனரோ, அதன் மூல மாகத்தான், அதன் வழியாகத்தான் தனது நல்ல- கெட்ட பலன்களை கிரகங்களால் தர இயலும். இது அக்கிரங்களுக்கு உண்டாக்கப் பட்ட செயல்முறை கணக்கீடு ஆகும்.
இப்போது, ராகுபகவான், 27 நட்சத்திரங் களில், அமரும்போது, எந்த நட்சத்திரத்திற்கு எவ்வித பலன் வழங்குவார் எனும் கணக் கீட்டை கணக்கிடலாம். கிரகங்களில் அதி முக்கியமானவர் ராகுபகவான். அவரே ஜாத கரை வாழவைக்கவும் வீழ்ச்சியடைய வைக்க வும் வல்லவராவர்.
1. அஸ்வினி
அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசியில் 0 டிகிரிமுதல் 13.20 டிகிரிவரை உள்ளது. இதன் சாரநாதர் கேது ஆவார். ராகுபகவான் உங்கள் பிறந்த ஜாதகத்தில், அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் உண்டாகும் பலன். நீங்கள் எந்த ராசி, எந்த லக்னமாக இருப்பி னும், ராகு அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால், அங்கு ராகு+கேது எனும் கணக்கீடு வரும்.
மச்சம்: உங்களுக்கு தலையில் மச்சம் இருக்கும்.
குணம்: பொதுவாக அஸ்வினி நட்சத் திரம் தொடர்பு இருப்பின், அவர்கள் மருத்துவ புரிதல் கொண்டிருப்பர். இதன்மூலம் இவர்கள் அடுத்தவர் கஷ்டத்தை பார்க்க சகிக்க மாட்டார்கள் எனத் தெரியும். மேலும் இந்த ராகுபகவான் கேது சாரம் எடுக்கும் போது இரு பாம்புகள் சம்பந்தம் உண்டாகிறது அல்லவா! எனவே எப்போதும் சற்று சீறிக் கொண்டே இருப்பார். பொறுமையே கிடையாது. எப்போதும் எரிச்சல்படுவார். சற்று சண்டையை பெரிதாக்கும் குணம் இருக்கும். யாராவது நமக்கு செய்வினை செய்துவிடுவார்களோ என அஞ்சிக் கொண்டேயிருப்பர். சில சமயங்களில் சற்று கொடூரமாகவும் நடந்துகொள்வர்.
நல்ல பலன்+தொழில்: இவர்களுக்கு மருந்து, மருத்துவ சார்ந்த பொது அறிவு இருக்கும். இதனால் சிலர் ஆர்வமாக மருத்துவர் ஆகிவிடுவர். சிலர் விலங்குகள் மருத்துவர் ஆவார். இராணுவத்தில் பணிபுரிவர். சிலர் காவல்துறையிலும், சிலர் சிறைச் சாலையிலும் வேலை செய்வர். சிலர் மருத்துவமனை மருந்தாளுனராக இருப்பர். சித்த, ஆயுர் வேத வைத்திய சாலையில் பணியாற்றுவர். சிறை டாக்டராக ஆகக்கூடும். விவசாயத்தில் விதைப் பண்ணை வைத்திருப்பார். சிலர் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் நல்ல புகழ்பெறுவர். சட்டத்துறை நிபுணராக இருப்பார். நல்ல ஆன்மிக மடம் சார்ந்தவராக அமைவார். இவர்களில் சிலர், வெளிநாட்டில் மருத்துவம், அறுவை சிகிச்சை சார்ந்த படிப்பு மற்றும் பணிபுரிவர். மேற்கண்ட நன்மைகள் நடக்க, அஸ்வினி நட்சத்திர சாரநாதர், கேது, சுபர் பார்வை, சுபர் சேர்க்கை பெறுவது கண்டிப்பான விதியாகும்.
கெட்ட பலன்கள்: ராகு அமர்ந்த அஸ்வினி நட்சத்திர சாரநாதர், வேறு பாபரின் சம்பந்தம் பெற்றால், இவர்கள் போதை, மது பயன்படுத்துவது, சட்டப்புறம்பான பொருட்கள் கடத்தல், பாம்பு கடத்தல், ஏவல், பில்லி, சூன்யம் வைத்தல், தாயத்து தருகிறேன் என ஏமாற்றுதல், போலி சாமியார், போலி மடம், பிறமத சேர்க்கை, தீவிரவாதி ஆகிவிடுதல், போலி ஜோதிடர், காவி உடை உடுத்தி சில்மிஷம் செய்தல், கஞ்சா வளர்த்தல் என சட்டப்புறம்பான அத்தணை வேலைகளையும் பார்த்து, சதா போலீஸ் தேடும் ஆளாக அலைவர்.
நோய்: இவர்களை அடிக்கடி நாய் கடித்து விடும். எப்போதும் சண்டை போடும் மன நிலையில் இருப்பர். இதனால் இவர்களுக்கு யாரோ செய்வினை வைத்துவிட்டதாக மறுகுவர். மேலும் சிலருக்கு காக்காய் வலிப்பு, அவ்வப்போது மயங்கி விழுதல், கடுமையான தலைவலி என மிக அவஸ்தைப்படுபவர்.
நாடி ஜோதிட கணக்கு: நாடி ஜோதிட கணக்குப்படி, செவ்வாய் என்பது சகோதர கிரகம். அதிலுள்ள அஸ்வினி நட்சத்திரத் திலுள்ள அமர்வது, சகோதரர்களுக்குள் இணக்கம் இல்லாமல், சதா சண்டை இடும் குணம் தருவார். செவ்வாய் மாங்கல்ய காரகன் என்பதால், திருமண வாழ்க்கை சற்று சோபிக்காது.
பரிகாரங்கள்: திருவண்ணாமலை போவது சிறப்பு. செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கையை வழிபடுவது நன்று. மேஷ ராசியான செவ்வாய் வீட்டில் ராகு அமர்ந்தால், அந்த ஜாதகர்கள், சேலம் சுகவனேஸ்வரர் கோவில்சென்று வழிபடவேண்டும். இவர்கள் வைடூர்யத்தை அணியலாம். எலுமிச்சை சாதம் தானம் செய்யவும். கோவிலுக்கு வாசனை பவுடர், அபிஷேகத்திற்கு கொடுக்க வும். சரஸ்வதியை வணங்குவது சாலச் சிறந் தது. முடிந்தால் பொன் தானம் அல்லது முழுத் மட்டை தேங்காய் தானம் செய்யவும்.
2. பரணி
இது மேஷ ராசியில் 13.20 டிகிரிமுதல் 26.40 டிகிரிவரை உள்ளது. மேஷ ராசி அதிபர் செவ்வாய். பரணி நட்சத்திரம், சுக்கிரனின் சாரம் பெற்றது.
நீங்கள் எந்த லக்னம், ராசியாக இருப்பினும், ராகுபகவான், பரணி நட்சத்திரத்தில் நின்றால், அங்கு ராகு+சுக்கிரன் எனும் கணக்கீடு வரும்.
மச்சம்: தலையில் மச்சம் இருக்கும். ஒருசிலருக்கு கீழ் பாதத்தில் மச்சம் இருக்கும்.
குணம்: இவர்கள் புதுமையாக அலங்காரம் செய்துகொள்வதில் பெரு விருப்பம் கொண்ட வர்கள். தாங்கள் விரும்பியதை செய்துமுடிப்ப தில் பிடிவாதம் கொண்டவர்கள். சில ஆண்களுக்கு எப்போதும் அடுத்த பெண்கள் மீது அதீத அக்கறை இருக்கும். சில தீய பழக் கங்கள் சிலருக்கு வந்துவிடும். சிலர் பேராசை வயப்படுவர். வெளிநாடு சென்று மேக்கப் செய்வது எப்படி என கற்றுணர்வர். திருமண விஷயங்களில், மிக எதிர்மறை தன்மையுடன் நடந்துகொள்வர். இவர்களின் இந்த லட்சணம் கெட்ட திருமணம் பார்த்து சுற்றியுள்ளவர்கள் பேச்சு மூச்சற்று போய்விடுவர். இவர்கள் சில விஷயங்களில் எதிர்மறை பிடிவாதத்தோடு விளங்குவர்.
நல்ல பலன்+தொழில்: இவர்கள் மிக கற்பனை வளம்மிக்கவர்கள். எனவே மாறு பாடான வடிவமைப்பில் நகைகள், ஆடைகள், உணவுகள், சினிமா, கதை, கவிதை, நடிப்பு, கட்டடமைப்பு, சிற்பம், மலரமைப்பு, வெள்ளி, நகை டிசைன், இசை, ரியல் எஸ்டேட், வாகனம், ஓட்டல், விடுதி, வெளிநாட்டு சுற்றுப் பயணம் என இவையனைத்திலும் மிக வேறுபாடான தனித்திறமையை வெளிப்படுத்துவர். இவர்களின் எந்த செயலும், பிறரை "வாவ்' சொல்லவைக்கும். வெளிநாட்டு அலங்காரப் பொருள் ஏற்றுமதி- இறக்குமதியிலும் ஈடுபாடு கொள்வர். சாரநாதர் சுக்கிரன் சுபத் தன்மையுடன் இருப்பின் மேற்கண்ட தொழில் மிக மேன்மை பெறும்.
கெட்ட பலன்: சாரநாதர் சுக்கிரன் அசுபத் தன்மை பெற்றால் ஒழுக்கக் கேடாக, கீழ்மைத் தன்மையுடன் நடந்துகொள்வர். இவர்களைப் பார்த்து, பிறர் சற்றே விலகி நிற்கும் அளவில், இவர்களின் வாழ்வியல் அமையும். அதிக மதுபழக்கம் உண்டாகும். வாழ்க்கையில் நிறைய பொய் பேசி, தடம் மாறும். திருமணம் மட்டும் அதிக அளவில் கணக்கில்லாமல் செய்துகொள்வர்.
நோய்: உடலில் தேமல்போல் புள்ளிகள், நீரழிவு நோய் பாதிப்பு ஏற்படும்.
நாடி ஜோதிடம்: மேஷ ராசி அதிபர் செவ்வாய் சகோதரனைக் குறிப்பார். சாரநாதர் சுக்கிரன் மனைவியைக் குறிப்பார் இதற்குள் நின்ற ராகு, இருவருக்கும் பிரச்சினை இழுத்து விடுவார். அல்லது இவரது சகோதரர், பிறமத பெண்ணை திருமணம் செய்து கொள்வார்.
பரிகாரங்கள்: திருவாலங்காடு காளியை வணங்குவது சிறப்பு. அருகிலுள்ள துர்க் கையை குங்குமம், சர்க்கரை அல்லது நிறைய பழங்கள்கொண்டு வணங்கவும்.
இவ்வித அமைப்பில், அசுபத்தன்மையுடன் சுக்கிரன் இருக்கும் குழந்தைகளை நல்ல கல்வி, நிறைய விளையாட்டு, அதிகமான கைதொழில் என ஏதோ ஒன்றில் கவனத்தை திசை திருப்பிவிடுங்கள்.
3. கார்த்திகை
இந்த நட்சத்திரம் மேஷ ராசியில் 26.40- 30.00 டிகிரிவரையும் ரிஷபத்தில் 0.00 டிகிரிமுதல் 10.00 டிகிரிவரையும் உள்ளது. இது ஒரு சூரிய சார நட்சத்திரம் ஆகும். இந்த கிருத்திகையில், ராகு நின்றால், அங்கு ராகு+ சூரியன் என்ற கணக்கு வரும்.
நீங்கள் எந்த லக்னம், எந்த ராசியாக இருப் பினும், கிருத்திகை நட்சத்திரத்தில் ராகு நின்ற பலன்.
மச்சம்: முகம், கழுத்து, கண், தலை என மச்சம் இருக்கும்.
குணம்: ராகு+சூரிய கிரக இணைவு ஒரு கிரகண நிலையை கொடுக்கும். எனவே இவர்களின் எந்த திறமையும் வெளியே தெரிய வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இதனால், நமக்கு யோகமே கிடையாது என மனம் புழுங்கு வர். இதனால் கொஞ்சம் சிடுசிடுவென்று இருப்பர். ஒருசிலர் தங்கள் புகழ் வெளியே தெரிய குறுக்குவழிகளை கையாள்வர். காசு கொடுத்து கூட்டம் சேர்ப்பது, பட்டம் வாங்கு வது, தன் செலவில் போஸ்டர் அடித்து, வாழ்க என தனக்குத்தானே வாழ்த்திக்கொள்வர்.
நல்ல பலன்கள்+தொழில்: உங்கள் சாரநாதர் சூரியன் உச்சம் அல்லது சுபத் தன்மை பெற்றால், அரசு துறை சார்ந்து, வெளி நாட்டு பணி பெறுவீர்கள். உள்நாட்டில், நிறைய லஞ்சம் கொடுத்து பெரிய அரசு பதவிகளை வாங்குவீர்கள். கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ் போன்ற துறைகளில் மேன்மை பெறுவர். சிலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். என பெரும் கல்வியும், பதவியும் பெறுவர். உங்களில் சிலர் பூர்வீக தொழிலை, மிகப் புதுமையான முறையில் பின்பற்றுவீர் கள். கம்ப்யூட்டர், கைபேசியில் யாகம் செய்வது, நம் நாட்டு பழைய சமையலை வெளி நாட்டுக்கும் கொண்டுசேர்ப்பது, மெஷின் வைத்து பால் கறந்து, அதனை மதிப்பூட்டி வெளிநாட்டிற்கு விற்பனை செய்வது, பதநீர் போன்ற பழங்கால பானங்களை பக்குவம் செய்து, பொதுவெளியில் வெளியிடுவது என பூர்வீகத்தை, செம்மைபடுத்தி புதுவழியில் வெளிநாடுவரை வணிகம் செய்து நல்ல பொருள் ஈட்டுவர். பொதுவாக இந்த அமைப் பினர் பிறந்தவர் இடம்விட்டு நகர்ந்தால், வாழ்வு மேன்மையடைக் காணலாம்.
கெட்ட பலன்கள்: கார்த்திகை நட்சத்திரத் தில் ராகுபகவான் நின்று, அதன் சார அதிபர் சூரியன் அசுபத்தன்மை அடைந்தால் இவர் களின் வாழ்வு பிரகாசமாக அமையாது. இவர் களுக்கு எதையும் ஒளிக்காமல், வெளிப்படை யாக செய்ய தெரியாது. எனவே இந்த மறைவுத் தன்மை, இவர்மேல் சந்தேகம் ஏற்படுத்தும். நாளடைவில், பிறர் இவரை வாழ்க்கை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாமல் விலக்கி வைத்துவிடுவர். எனவே எப்போதும் இருண்ட முகமாக இருப்பர். விரக்தி நிலை, விலக்க முடியாததாக அமையும்.
நோய்: முகப்பருக்கள், கண்வலி, தொண்டை தொந்தரவு, மூக்கில் கட்டி, காய்ச்சல், இதய துடிப்பு அதிகரிப்பது என இதில் சில நோய் வரக்கூடும்.
நாடி ஜோதிட கணக்கு: இடம் கொடுத்த செவ்வாய் சகோதரனையும், சூரியன் தந்தையும் குறிப்பார். இதில் நிற்கும் ராகு. இருவரையும் ஆகவிடாமல் செய்துவிடுவார். கார்த்திகை நட்சத்திரம் ரிஷபத்தில் நிற்பின், இடங் கொடுத்த சுக்கிரன் மனைவியையும், சூரியன் தந்தையையும் குறிப்பார். எனவே மனைவிக்கும் உங்கள் தகப்பனாருக்கும் சண்டை வந்து விடும். மறுபுறமாக சிலரின் தந்தை, ரொம்ப குடிகாராக இருக்கக்கூடும்.
பரிகாரம்: மலைமீதுள்ள சிவனை வணங்க வும். ராகுபகவான், சூரிய சாரத்தில் நிற்பதால், இராமேஸ்வரம் சென்று வழிபடுவது நல்லது.
மேலும் சிவன் அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கிக்கொடுங்கள்.