ரோகிணி

27 நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ரோகிணி. இதன் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரம் சுக்கிரனின் வீடான ரிஷப ராசியில் உள்ளது. இந்த நட்சத்திரத்தில் உச்சமாகும் கிரகம் சந்திரன். நீசமாகும் கிரகம் கேதுவாகும். இதன் உருவம் தேர், வண்டி. இதன் அதிதேவதை கிருஷ்ணர். இந்த நட்சத்திர அதிபதி சந்திரன்.

Advertisment

இடப்பெயர்ச்சிக்கு காரக கிரகம் என்பதால் இந்த நட்சத்திரநாளில் இடப்பெயர்ச்சி, வீடு மாற்றம் செய்யலாம். இது காலபுருஷ லக்னத்திற்கு இரண்டாம் வீடு என்பதால் உடல் உறுப்பில் வாயைக் குறிக்கும். சந்திரன் உணவை குறிக்கும் கிரகம் என்பதால் இந்த நட்சத்திரநாளில் குழந்தைகளுக்கு முதன்முதலாக உணவு ஊட்டலாம். ரோகிணி நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்தால் பல மடங்கு புண்ணிய பலன்கள் பெருகும். அதேபோல் முதன்முறை ஒருவரை வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கவும், விருத்திற்கு முதன்முதலாக செல்லவும் உகந்த நட்சத்திரம்.

Advertisment

காலபுருஷப்படி வலது கண்ணைக் குறிக்கும் ராசி ரிஷபம். இடது கண்ணைக் குறிக்கும் நட்சத்திரம் ரோகிணி என்பதால் இந்த நட்சத்திரநாளில் கண் சிகிச்சை செய்யலாம்.வளர்பிறையும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்தநாளில் சந்திர தரிசனம் செய்தால் கண்பார்வை குறைபாடுகள் அகலும். முகம் பொலிவாகவும், வசீகரமாகவும் இருக்கும். கலை நிகழச்சிகள் நடத்த, கலைகள் கற்க, சாந்தி முகூர்த்த நடத்த, பெண்களிடம் காதலை வெளிப்படுத்த, உணவு விடுதி, தங்கும் விடுதிகள் துவங்க, ருது சாந்தி செய்ய, கிணறு வெட்ட, வாகனம் வாங்க ஏற்ற நட்சத்திரம் ரோகிணி.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திரநாளில் விரதமிருந்து மகாவிஷ்ணுவை, கிருஷ்ணரை வழிபட வறுமை, தரித்திரம், பசிப்பிணி அகன்று செல்வச் செழிப்பு உண்டாகும்.

ஜென்ம நட்சத்திரநாளில் அஷ்டலட்சுமியை வழிபட, வாழ்நாள் முழுவதும் வெற்றிமேல் வெற்றி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

மிருகசீரிஷம்

27 நட்சத்திரங்களில் ஐந்தாவது நட்சத்திரம் மிருகசீரிஷம். இது செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரம். இது உடைபட்ட நட்சத்திரம். இதன் முதல் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியிலும் மூன்று, நான்காம் பாதங்கள் மிதுன ராசியிலும் உள்ளது. மிருகம் என்றால் விலங்கு. சிரிஷம் என்றால்தலை என்றும் பொருள்படும். இந்த நட்சத்திரத்தின் உருவம் மானின் தலையைப் போல் தோற்றமளிப்பதால் மிருகசீரிஷம் என்றழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் திருமணம், காது குத்துதல், சீமந்தம் செய்தல் ஆபரணங்கள் செய்தல், தானியம் வாங்குதல், விதை விதைத்தல், கிணறு வெட்டுதல், யாத்திரை செல்லுதல், கல்வி கற்க தொடங்குதல் கால்நடைகள் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம்.

இந்த நட்சத்திரத்தில் முருகனை வணங்கி சிகிச்சை துவங்கினால் வியாதிகள் தீரும். குறிப்பாக காது சிகிச்சை செய்பவர்கள் காது கேளாதவர்கள் இந்த நாளில் சிகிச்சை துவங்கலாம்.

இந்த நட்சத்திரத்தில் செய்யும்செயல்கள் மேன்மேலும் விருத்தி யடையும். குறிப்பாக வாகனம் மற்றும் தங்கம் வாங்கினால் மீண்டும் மீண்டும் உயரக வாகனம் பிராப்தம் கிட்டும். இந்தநாளில் தங்கம் வாங்கினால்அடுத்தடுத்து ஆபரணங்கள் சேரும். தங்கம் அடமானத்திற்குச் செல்லாது.

சுக்கிரன் வீட்டையும் புதன் வீட்டையும் இணைக்கும் நட்சத்திரம் என்பதால் காதல் முயற்சியில் ஈடுபடலாம். அதேபோல் ஒருவரிடம் விரும்பிய உதவிகளை பெற இந்த நட்சத்திரத்தில் உதவிக்கேட்கலாம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்ஜென்ம நட்சத்திரநாளில் குரு ராக வேந்திர சுவாமிகள் மற்றும் நரசிம்மரை வழிபட மேன்மை உண்டாகும். மேலும் சொத்து சுகம், வண்டி வாகனம் வாங்குவதில் தடை இருப்பவர்கள் தொடர்ந்து மூன்னு மாதம் இந்த நட்சத்திரநாளில் விரதமிருந்து சுவாமிமலை, விராலிமலை முருகனை வழிபட்டால் காரிய சித்தி கிடைக்கும்.

திருவாதிரை

27 நட்சத்திரங்களில் 6-ஆவது நட்சத்திரம் திருவாதிரை. காலபுருஷ மூன்றாம் ராசியான மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ளது. இதன் அதிபதி ராகு. இதன் அதி தேவதை சிவன். இதன் உருவம் ரசமணி, பவளமணி என்று கூறப்

படுகிறது. திருவாதிரை நட்சத்திரம் வானமண்டலத்தில் வைரம் போலவும், மண்டை ஓடுபோலவும், திரிசூலம் போன்ற தோற்றத்திலும் காணப்படும்.

திருவாதிரையின் வேறு தமிழ் பெயர்கள் செங்கை, சடை, (வடமொழியில் ஆரூத்ரா), மூதிரை ஆகியன.

வானில் நீர்த்துளிபோல காணப்படும். ஆகாய கங்கை இந்த நட்சத்திரத்தில் இருந்தே வானில் இருந்து பூமிக்கு வந்தாள் என்கிறது பகீரத புராணம். பகீரதன் தனது மூதாதையர் ஆன்மாக்கள் முக்தி வேண்டி பிரம்மாவை நோக்கி கடும் தவம் இருந்தான். இதற்கு பகீரத தவம் என்றே பெயர் உண்டு. இந்த தவத்தின் பயனாக பிரம்ம தேவன் பிரசன்னமாகி ஆகாய கங்கையானவள், ஆன்மாக்களுக்கு முக்தி தரவல்லவள் என்று கூறி ஆகாய கங்கையை பூமிக்குக் கொண்டுவர சம்மதித்தார். இருப்பினும்அவள் பாய்ந்து வரும் வேகத்தால் பூமியில் கடும் பிரளயம் உண்டாகும் என்று கூறினார்.

கங்கையின் வேகத்தைத் தாங்கும் சக்தி, சிவபெருமானுக்கே உண்டு என்றுஅவரை நோக்கி தவம் இருக்கவும் அறிவுறுத்தினார்.

சிவபெருமானை நோக்கி தவமிருக்கும் பகீரதன் உறுதியைக்கண்டு அவனுக்கு உதவ திருவுளம் கொண்டார் சிவனார். இங்கே நீர்த்துளி வடிவான கங்கை திருவாதிரை எனில், அதன் அதிதேவதை சிவபெருமான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவபெருமான் தனது திரிசடை விரித்து பாய்ந்துவரும் தன் தலைமீது கங்கையைத் தாங்க தயாரானார். பிரம்மனின் உத்தரவுப்படி ஆகாய கங்கை வானில் இருந்து வந்தாள். தனது சிகைக்குள் கங்கையைப் பிடித்து, அதன் வேகத்தைக் குறைத்து பின் தனது சிகையை அவிழ்த்தார் சிவபெருமான். சிகைக்குள் இருந்து நீர்த் துளியாக வரும் கங்கை அவரது மேனிமீது பரவி பூமிக்கு வந்தடைகிறார். இவ்வாறாக கங்கை திருவாதிரை நீர்த்துளி வடிவத்தில் பூமிக்கு வந்து மக்களின் பாவத்தை போக்கும் புனித நதியாகிறாள் எள், கடுகு, கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை விதைக்கலாம்.

நடனம் என்றாலே தில்லை கூத்தன் நடராஜன். முதன் முதலாக நடன அரங் கேற்றம் செய்பவர்கள் திருவாதிரையில் செய்தால் மேன்மேலும் வளர்ச்சிஅடையலாம்.

இசை கருவிகள் கற்க துவங்க, மந்திரப் பிரயோகம் செய்ய, ஆயுதப் பயிற்சி, வில்வித்தை, குதிரை ஏற்றம், மல்யுத்தம் முதலியவற்றை கற்கலாம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஒரு மர்ம கிரகம் என்பதால் சாஸ்திரம் சம்பந்தமான ஆராய்ச்சிகள் தொடங்கலாம்.

சிதம்பர ரகசியத்திற்கும் திருவாதிரை நட்சத்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபூஜை செய்தால் சிதம்பர ரகசியத்தை அறியமுடியும் சிதம்பர ரகசியம் பற்றி தனியாக தெளிவாக பின்னாளில் பார்க்கலாம்.

இதன் அதிபதி சிவன் என்பதால் சிவபூஜை செய்ய மிக உகந்த நட்சத்திரமாகும். பைரவர் வழிபாட்டை திருவாதிரை நட்சத்திரத்தில் துவங்கினால் காரிய சித்தி உண்டாகி பிரார்த்தனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

திருவாதிரையில் நோய்வாய்ப்பட்டால் எளிதில் குணமாகாது. காரணம் கண்டுபிடிக்க முடியாத எந்த நோயானாலும், குணப்படுத்த முடியாத எந்த நோயாக இருந்தாலும் திருவாதிரையில் சிவனை வழிபட்ட பிறகு சிகிச்சை துவங்கவேண்டும்.

அன்று ருத்ர சாந்தி செய்ய படிப்படியாக நோய் தாக்கம் குறையும்.

பேய், பிசாசு ஆவிகள் தொல்லைஇருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர் கள் இந்த நட்சத்திரநாளில் திருநாகேஸ்வரம், சிதம்பரம், திருவாலங்காடு போன்ற சிவ ஸ்தலங்களுக்கு சென்று சிவனை வழிபட வேண்டும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்ஜென்ம நட்சத்திரநாளில் சிதம்பர நடராஜரைவழிபட்டால் வாழ்வில் அடைய முடியாத வெற்றிகளே கிடையாது.

புனர்பூசம்

புனர்பூசம் 7-ஆவது நட்சத்திரம். இதன் அதிபதி குருவாகும். இது உடைபட்ட நட்சத்திரம். இதன் முதல் 3 பாதங்கள் மிதுன ராசியிலும் 4-ஆம் பாதம் கடக ராசியிலும் உள்ளது. இந்த நட்சத்திரம் வானில் பிரகாசமாக நீண்ட வளைந்த வில்போல் காட்சியளிக்கும். அதனால் தமிழில் இதற்கு கழை என்று பெயர்.

பொதுவாக உடைபட்ட நட்சத்திரங்கள் எந்தவித சுபகாரியமும் செய்யக்கூடாது என்பார்கள். ஆனால் பரிகாரங்கள் செய்வதற்கு உடைந்த நட்சத்திரங்களே உகந்தவை.

ராசி சக்கரத்தில் புதனின் வீடான மிதுனத்தையும் சந்திரனுடைய வீடான கடகத்தையும் இணைக்கும் நட்சத்திரம் புனர் பூசம். சந்திரன், புதன் சேர்க்கை நல்ல ஞாபக சக்தியையும், கற்பனை வளத்தையும், கவிதை எழுதும் திறனையும் கொடுக்கும். ஞாபக சக்தி குறைவாக உள்ள மாணவாகள் புனர்பூசம் நட்சத்திரம் நாட்களில் பெருமாள் வழிபாடு செய்துவந்தால் ஞாபக சக்தி கூடும். படிப்பில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களை திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டைக்கு அருகிலுள்ள சிவலப்பேரி எனும் சிற்றூரில் அமைந்துள்ள விஷ்ணு துர்க்கையை வழிபட்டால் நிச்சயம் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். புதனின் அதிதேவதை மகாவிஷ்ணு. சந்திரனின் அதி தேவதை துர்க்கை. புனர்பூசம் புதன், சந்திரனின் வீட்டை இணைப்பதால் விஷ்ணு துர்க்கை வழிபாடு சிறப்பானதாகும். அதேபோல் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த மருத்துவர்கள் ஜென்ம நட்சத்திரநாளில் கும்பகோணம் கும்பேஸ்வரர் அல்லது ஸ்ரீ ரங்கநாதரை வழிபட, கை ராசி மருத்துவ ராவார்கள்.

புனர்பூசம் உடல் உறுப்பில் கைப் பகுதியை குறிக்கும் மிதுன ராசியில் அமைந் துள்ளது. புனர்பூச நட்சத்திரத்தின் அதிபதி குரு என்பதாலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திரநாளில் மகான்களிடம் ஆசி பெற்றால் வாழ்க்கை வளமாகும்.

தொடரும்....

பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

செல்: 98652 20406