ஒவ்வொருவரும் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு வருடமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஒரு வருடம்போல மறு வருடம் இல்லை, இன்றுபோல் நாளை இல்லை என்பதை உணர்ந்தும், தெரிந்தும், அறிந்தும் வாழ்நாள் முழுவதும் ஒப்பீடு செய்தும், சொர்க்கம் என்ற இந்த பூவுலகில், ஓசியில் வாழவந்த நாம் ஓப்பீடு குணத்தால் நரகமாக்கிக் கொண்டு வாழ்ந்துவருகிறோம்.
ஏன் தினமும் நெற்றியில் திருநீறு வைக்கிறோம் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த பூமி நமக்கு மூச்சுமுதல் அனைத்தையும் இலவசமாக கொடுத்து ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துதான், நமது முன்னோர்கள், இந்த பூமியில் நாம் சாம்பலாக போகிறவர்கள்தான் என்ற உணர்வு தினமும் ஒருவருக்கு வரவேண்டும். இந்த பூமியில் வந்துபோகிற மிருகங்கள், பறவைகள், மரம், செடி, புழு, பூச்சி போலத்தான் நாமும் என்று உணர்ந்து, தினமும் இது அத்தனை யை யும், இலவசமாக வழங்கிவரும், இயற்கை என்ற இறைவனுக்கு நன்றி! நன்றி! என்பதற் காகத்தான் பல ஆயிரம் கோவில்களை நமது முன்னோர் கள் உருவாக்கினார்கள். இயற்கையையே இறைவனாக வணங்கி எப்போதாவது கோவிலுக்குப் போய், ஒப்பீடு செய்து, அறியாமையால் வாழ்ந்துவருகிறோம்.
இதுதான் வின் ஞானம்
இந்த மண் உலகத்தை அந்த விண் உலகத்தில் இருந்துவரும் கிரகங்களின் சக்திகள்தான் என்பதனை உணர்ந்த முன்னோர் பல லட்சம் வருடங்களாக வாய்வழிச் சொல்லாக ஆராய்ந்து, ஆராய்ந்து விண்ணி லுள்ள அறிவை, அதாவது விஞ்ஞானம் விண்ஞானம் என்ற மாபெரும் வெளிப்படைப் படிப்பை நமக்கு வழங்கி உள்ளார்கள். அதுதான் வான இயல், ஜோதிடம்.
2025 வான இயல் என்னதான் சொல்கிறது!
காஞ்சி மாமுனிவர், பெரியவர் அவர்கள் உருவாக்கி தனது 100 வயதுவரை விரும்பிப் பின்பற்றிய திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 2025 புத்தாண்டில் பல வருடங்களுக்குப் பிறகு மூன்று பெரும் முக்கிய கிரகப்பெயர்ச்சிகள் நடக்க இருக்கிறது.
வரும் 29-3-2025-ல் சனிப்பெயர்ச்சி 14-5-2025-ல் குருப்பெயர்ச்சி, அடுத்த நான்கு நாட்களில் அதாவது, 18-5-2025-ல் ராகு- கேது, பெயர்ச்சிகள் நடக்க இருக்கிறது.
12 ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றும் 2025
12 ராசிக்காரர்களின் வாழ்க்கை முறையில், பணவரவில், குடும்ப உறவில், செய்துவரும், தொழிலில், வியாபாரம், வேலை என்ற அனைத் திலும், அடிப்படையிலிருந்தே மாற்றங்களை செய்யப்போகும் அதிரடி வருடமாக 2025-ஆம் ஆண்டு அமைய இருக்கிறது.
வரும் 2-3-2025 முதல் 18-5-2025 வரையுள்ள 78 நாட்கள் மாபெரும் சக்தி கிரகங்களான ராகுவும் சனீஸ்வரரும், கடல்நீர் ராசியான மீனத்தில் குரு பகவானின் ராசியில், குருபகவானின் நட்சத்திர மான பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், அறுபது வருடங்களுக்குபிறகு, ஆழ் கடலில் பூகம்பம், புயல், நிலஅதிர்வு, கடல் கொந்தளிப்பு போன்றவை பெருமளவில் ஏற்படும்படியான கிரகநிலை.
இதனால், கடலோர நாடுகளிலுள்ள ஒருசில நகரங்களில், கடலின் பெரும் கொந்தளிப்பால், பெரும் சேதம் ஏற்படும் கிரகநிலை.
ஒருசில தீவுகளில், ஒன்றிரண்டு கடலில் மூழ்கி மறைந்ததாக 2025-ல் செய்திகள் படிப்போம் என்ற கிரகநிலை.
ஒன்றிரண்டு, ஊர்களிலுள்ள ஒருசில பகுதியில் கடல் வந்து வாழ்க்கை நடத்தும்.
ஒன்றிரண்டு, காணாமல் போனபெரும் நகரங்களின், ஒருசில பகுதிகள் கடல் ஆளுமையிலிருந்து பல ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு, மீண்டு வெளியே வரும். இதன் தொடர் 2032 வரைகூட சிறிது, சிறிதாக நடக்க இருக்கும் கிரகநிலைகள்.
நிலப் பகுதிகள் மறையும்;
கடல்பகுதிகள் வெளியே தெரியும்;
பாலைவனத்தில் பசுமை!
இந்தோனேசியா, ஜப்பான், அட்லாண்டா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் நாடுகüல் மழையின், தாக்கமும், புயல் காற்றின் வேகமும், கொடிய மிருகத்தனமாக அமையும் கிரகநிலை.
சனியும், ராகுவும், மீன ராசியில் கடலுக்குள் போர் புரியும் காலம். அதனால் இயற்கையின் கொடூரம் அதிகமாகும்.
பாலைவனத்தில் மழையால் பசுமைப் புரட்சி ஏற்படும்.
பூமியில் ஓரிரு இடங்களில் பூமி வெடிப்பு, பள்ளம் பிளவு ஏற்படும். பெட்ரோல் கிடைப்பதில் தடை ஏற்பட்டு, தட்டுப்பாடு ஏற்படும் கிரகநிலையால், வாகனங்கள் ஓடுவது குறையும் கிரகநிலை.
மக்களின் வாழ்க்கை மேலும், மேலும் வளம் பெரும்!
கடலுக்குள் கிரகப் போரினால் கடலோர நாடுகளிலுள்ள அரசாங்கங்கள், முன் பாதுகாப்பில் ஏற்கெனவே, விஞ்ஞான கருவிகளின் இயக்கத்தில் இருந்துவருவதால் கடலின் புயலால், ஏற்படும் பயங்கர சேதங்களும் மே மாதத்திற்குள் சரி செய்யப்பட்டு இயற்கையுடன் இயல்பான சூழ்நிலையில் மக்கள் நிம்மதியுடன் வாழும் கிரகநிலை, 2025-ஆம் ஆண்டில் தெளிவாக உள்ளது.
நாட்டுக்கு நாடு அரசாங்கங்கள் இயற்கை சீற்றத் தின் நிலை அறிந்து, ஒற்றுமை உணர்வுடன், மே, ஜூன், ஜூலைக்குப் பிறகு நடந்துவரும் மனிதப் போர்கள் 2025-ல் சமாதான முடிவுக்கு வரும்.
மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும், ஆன்மிகத் தேடுதல் கூடும். புதிய, புதிய நகரங்கள், விமானப் பயணத்தால் குறைந்த கட்டணத்தில் மிக அருகில் வந்துசேரும்.
தாமதமாகிக்கொண்டே வந்த திருமணம் மே மாதம் முதல் அக்டோபருக்குள் மங்கள மேளத்துடன் முடிவுக்கு வரும்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
வரும் 1-1-2025-ல் புதிதாக பிறக்கும் "புத்தாண்டு' மேஷ ராசிக்காரர்களுக்கு பெரும் அதிசய மாற்றங் களைக் கொடுக்கும் யோகமான புத்தாண்டாக அமைய விருக்கிறது. பலவருடங்களுக்கு பிறகு, ஒரே வருடத்தில், சனீஸ்வரன் பெயர்ச்சி, குருபகவான் பெயர்ச்சி, ராகுபகவான்- கேது பகவான் பெயர்ச்சி என்ற மூன்று பெயர்ச்சிகளை நடத்தும் புத்தாண்டாக 2025-ஆம் ஆண்டு பிறக்கிறது. 2+0+2+5=9. ஒன்பது என்ற எண், செவ்வாய் கிரகத்திற்கான எண் ஆகும். செவ்வாய் கிரகத்தின் அதிபதி முருகன் ஆவார். மேஷ ராசிக்காரர்களுக்கு 2018 முதல் கடந்த ஆறு வருடங்களாக நடந்துவரும், அத்தனை, பணம் இழப்புகளையும், ஏமாற்றங்களையும், கடன் அவமானங் களையும், நஷ்டங்களையும், பதவி பறிப்புகள், வீடு, மனை, தொழில், வியாபாரம், உறவுகள் இழப்புகளை, பொறுத்துக்கொண்டு, சகித்துக்கொண்டு கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வரும் மேஷ ராசிக்காரர்களுக்கு உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் படிப்படியாக குறைத்து தீர்த்து, பணவரவுகளை பெரும் பண மழையாக பொழிய வைக்கும் படியாக, நல்ல மாற்றங்களை கொடுத்து, மீண்டும், நீங்கள் உயர்ந்து, எழுந்து நிற்கும்படியான அதிர்ஷ்ட மாற்றங்களைக் கொடுத்தும் 1-1-2025-ல் பிறக்கும் புத்தாண்டு உங்களை ஏற்றமுடன் உயர்த்த போகிறது.
பாதகச் சனியின் பிடி விலகுகிறது!
கடந்த இரண்டரை வருடங்களாக மேஷ ராசிக்கு பாதகத்தை செய்யவேண்டிய சனீஸ்வரர் பாதக ஸ்தானத்திலேயே சுய ஆட்சி நடத்தியதால், கடந்த இரண்டரை வருடங்களாக, எதுவுமே நடக்கவில்லை. கைக்கு வந்த பணம் எதுவுமே பைக்கும் வரவில்லை. இருந்துவந்த கடன்கள்தான், கணக்கு இல்லாத அளவுக்கு பெருகிவிட்டது. இந்த நிலை, வரும் 2-9-2025 முதல் 15-9-2025 ஆறு மாதங்களில் நீங்கள் செய்துவரும் தொழில், வியாபாரம், வேலை முயற்சியில் முதல்கட்ட பெரும் நிம்மதியை பெறுவீர்கள். வரும் 14-5-2025 முதல் 4-9-2025-க்குள், வீடு, மனை, தொழில், வியாபாரத்தில் இருந்தவரும் கடன்களை மூன்றாம் இடத்திற்கு வரும் குருபகவான் இடமாற்றம், வீடு மாற்றம், வேலை மாற்றதைக் கொடுத்து உயர்த்தியே தீருவார்; வேலை வேண்டாம். 18-5-2025 முதல் 18-11-2025-க்குள் ராகு பகவானும், கேதுபகவானும் லாப ஸ்தானத் தில் பெருத்த மாற்றங்களை கொடுத்தே தீருவார். புத்தாண்டு 2025 மேஷ ராசிக்காரர்களும், சிறந்த அதிர்ஷ்ட ஆண்டு.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
புதிதாக பிறக்கும் புதிய ஆண்டு 2025 ரிஷப ராசிக்காரர்களுக்கு, பெரும் பணவரவுகளை கொடுக்க போகும் அமைபில் புத்தாண்டு பிறக்கிறது. பல வருடங்களுக்குபிறகு மூன்று பெரும் கிரகங்களின் பெயர்ச்சிகளும் நடக்க இருக்கும் ஆண்டு 2025 ஆண்டு ஆகும். மூன்று பெரும் கிரகங்களின் பெயர்ச்சிகளும் ரிஷப ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்ட பணவரவை கொடுக்கும் சாதகமான ஆண்டாக வரும் 2025 அமையகிறது.
சனிப்பெயர்ச்சி
வரும் 2-3-2025 முதல் 15-9-2025 வரை, செய்துவரும் தொழில், வியாபாரம் வேலை, சம்பந்தப்பட்ட வகையில் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுங்கள். 15-9-2025 முதல் 31-12-2025 வரையுள்ள 105 நாட்களில் செய்துவரும் வேலை, வியாபாரம், தொழில், குடும்பம், வீடு, மனை, புதிதாக வாங்குவது போன்ற புதிய புதிய முயற்சிகளை அள்ளிப்போட்டு செய்யுங்கள். எல்லாவகையிலும் ரிஷப ராசிக்காரர் களுக்கு சாதகமாக அமையும் கிரகநிலை உள்ளது. ரிஷப ராசிக்காரர்களுக்கு சனீஸ்வரர் நண்பர் யோகங்கள் ஆவார். இதனால் சனீஸ்வரர் லாபஸ்தானத் திற்கு வரும் சாதகமாகும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
வரும் 14-5-2025 அன்று குருபகவான் பெயர்ச்சி யாகிறார். தாமதமாகிக்கொண்டே வரும் திருமணம், வரும் 14-5-2025 முதல் 4-9-2025-க்குள் சுப முடிவுக்கு வந்தே தீரும். வீட்டு பெரியவர்கள் இதற்கான முயற்சிளை முழுமையாக விரும்பி செய்து சிறப் பைத் தரும். ரிஷப ராசிக்கு தனம் வாக்கு குடும்பம் ஸ்தானமான இரண்டரை இடத்திற்கு வரும் குருபகவான் பணத்தையும் பதவி உயர்வு கொடுத்தே தீருவார்.
ராகு- கேது பெயர்ச்சி பலன்
வரும் 18-5-2025-ல் பெயர்ச்சி ஆகும். ராகு- பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். பத்தாம் இடத்தில் ஒரு பாவியாவது இருந்தால் பெரும் தொழில், பெரும் பதவி மாற்றம், மாற்று மொழி, வெளியூர், வெளிநாடுகளுக்கு மனிதர்கள்மூலம், தொழில், பணவரவு அமையும் என்று சாஸ்திரம் கூறுகிறது. வேலை செய்துகொண்டே இருப்பவர்களுக்கும் சுயமாக ஓர் தொழில் செய்யும் வாய்ப்புகள் ராகு பகவான் கொடுத்தே தீருவார். கடனுக்காக வீடு, மனை விற்பனை கேது பகவான், சுகஸ்தானமான நான்காம் இடத்திற்கு மாறுவீர்கள். கடந்த நான்கு வருடங்களாக அகலகால் வைத்ததால் ஏற்பட்ட பெருத்த கடனை அடைப்பதற்காக வீடு, மனை, தொழில், பூர்வீக சொத்துகளை விற்று தயாராகியும் 18-11-2025-க்குள் நல்ல விலைக்கு விற்று முழுமையான கடன் தொல்லையிலிருந்து முழுவதும் விலகி விடுவீர்கள்; கவலை வேண்டாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
பல வருடங்களுக்குபிறகு ஒரே வருடத்தில் மூன்று பெரும் கிரகங்கள் பெயர்ச்சியாகும் வருடம் 2025 ஆகும். 2+0+2+5= 9. ஒன்பது செவ்வாய் கிரகத்தின் எண் ஆகும். செவ்வாய் கிரகத்தின் அதிபதி முருகப்பெருமான் ஆகும். இதனால் 2025-ஆம் ஆண்டு கெட்டவர்களை ஒழிக்கும் முருகப்பெருமான், இந்த 2025-ஆண்டை நடந்த இருக்கிறார். கடந்த ஆறு மாதங்களாக பணமும் வருகிறது. அதற்குமேல் செலவும் வந்துவிடுகிறது என்ற அளவில், சுப விரயம் செய்து வருகிறீர்கள். செய்தே தீரவேண்டிய குடும்ப செலவுகள், தொழில், வியாபாரம் விரிவாகத்திற்கான புதிய புதிய செலவுகள் செய்து கொண்டும் இருக்கிறது. மிதுன ராசிக்கு சனீஸ்வரர் நண்பர் யோகக்காரர் ஆகும். பூர்வீக சொத்துக்களில் கோர்ட், வழக்கு என்று இருந்துவருபவர்களுக்கு வரும் 2-3-2025 முதல் சாதகமான முடிவுகள் வந்துசேரும். வரும் 2-3-2025 முதல் 15-9-2025 வரை புதிய, வீடு, மனை வாங்குதல், புதிய, புதிய தொழில், வியாபாரம், வேலைமூலம் புதிய, புதிய பண வருமானத்தை உருவாக்கும் அடிப்படை வேலைகளில் ஈடுபட்டுவருவீர்கள். வரும் 15-9-2025 முதல் 31-12-2025-க்குள், புதிய புதிய சொந்த தொழில், சொந்த வியாபாரம், பெரிய பெரிய நிறுவனங்களுடன் இணைந்து பொருள்களைத் தயாரித்து கொடுக்கும் கம்பேனி, கட்டட வேலைகள், ஐடி வேலைகள் போன்றவற்றில் புதிய, புதிய அன்னிய நாட்டு நபர்களுடன் ஒப்பந்தம் செய்யும், கிரகநிலையில் இதற்கான மழை பெய்ய இருக்கிறது; பயன்படுத்திகொள்ளுங்கள். தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் வரும் தொழில் காரகாதிபதி சனீஸ்வரர் மிதுன ராசிக்காரர்களை சொந்தத் தொழில் சொந்த வியாபாரம்மூலம் பெரும் பண வரவை கொடுப்பார்.
குருப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி வரும் 14-5-2025 அன்று குருப்பெயர்ச்சியும், இதற்கு நான்கு நாட்கள் கழித்து ராகு- கேது பெயர்ச்சியும் நடக்க இருக்கிறது. ஜென்ம ராசியான மிதுன ராசிக்கு வரும் குருபகவான் உங்களிடம் இதுவரை இருந்துவராத குண மாற்றத்தை கொடுப்பார். உங்களை சுற்றி கடந்த ஒரு வருடமாக இருந்து வருபவர்கள் யார்? யார்? என்பதனை உங்களுக்கு புரியவைப்பார். தாமதமாகி வரும் திருமணமும் வரும் 14-5-2025 முதல் 4-9-2025-க்குள் சுபமுயற்சிக்கு வந்தே தீரும். தைரிய ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகும். கேது பகவான், எதிலும் முடிவுக்கு வர இயலாத குழப்பத்தை கொடுப்பார். பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் ராகு பகவான் தொழில், வியாபாரம் வேலையில் இடமாற்றம், பதவி மாற்றத்தை கொடுப்பார்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
புதிதாக 1-1-2025 அன்று பிறக்கும் புத்தாண்டில் மூன்று கிரகங்கள் பெயர்ச்சியாகிறது. கடந்த இரண்டரை வருடங்களாக கடக ராசிக்காரர் களில் பெரும்பாலோர் அஷ்டமச் சனியின் வெளியில் அவதியால் சக்கரவர்த்திபோல, தங்களை காட்டிக் கொண்டு உள்ளுக்குள் மெழுகுவர்த்திபோல குடும்பத் திற்காக எரிந்துகொண்டு தியாக வாழ்வு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருசிலருக்கு நிம்மதியாக செய்துவந்த, வேலை, வியாபாரம், தொழிலில் பணவரவில் பிரச்சினை.குருப்பெயர்ச்சி, ராகு- கேது, சனிப்பெயர்ச்சி வரும் 14-5-2025 வரை லாப குரு பகவானால் பணமும், மனசும் நிம்மதியைக் கொடுக்கும். வரும் 14-5-2025 முதல் 4-9-2025 வரையுள்ள காலங்களில் புதிய, புதிய வாய்ப்புகள், வந்துசேரும். ஒருசிலருக்கு புதிய வீடு, புதிய மனை, புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். தாமதமாகிக்கொண்டே வரும் திருமணம் 14-5-2025 முதல் 14-9-2025-க்குள் மங்கள மேளம் ஒலிக்கும். சுப திருமணம் முடிவுக்கு வந்துசேரும். இதுவரை பணம் குறைவு பிரச்சினைகளில், தள்ளி, தள்ளிப் போட்டு கொண்டே வந்தவைகள் எல்லாம், வரும் குருப்பெயர்ச்சி 14-5-2025-க்குள் பிறகு அள்ளி, போட்டு மொத்தமாக முடிக்கும் அளவுக்கு, புதிய, புதிய வாய்ப்புகளும் பண வசதிகளும் வந்துசேரும். செய்தே தீரவேண்டிய சுபச் செலவுகள் அத்தனை யையும் 31-12-2025-க்குள் செய்து முடித்து நிம்மதி காணுவீர்கள். ஒருசிலருக்கு கடல் கடந்த பயணத்தை சனீஸ்வரர் கொடுப்பார் அஷ்டம் சனியாக இருந்து பல வகைகளில் முயற்சி களில் சரியான நேரத்தில் வந்து கொடுத்துகொண்டே இருக்கும் சனீஸ்வரர் 2-3-2025 பிறகு, அந்த மோசமான எட்டாம் இடத்தில் இருந்து மாற்றமாகி ஒன்பதாம் இடத்திற்கு போவதே, கடக ராசிக்காரர்களுக்கு 2025 யோகமாகும். இதனால் செய்துவரும் வியாபாரம், வேலை, தொழிலில் புதிய, புதிய நல்ல வாய்ப்புகள்மூலம், பணவரவுக்கும் பதவி உயர்வுகளும், இடமாறுதல், வீடு மாறுதல், வெளிநாடு மாறுதல் நடக்கும்படியான கிரகநிலைகள் உள்ளது. பயன்படுத்திகொள்ளுங்கள். வரும் 8-5-2025 முதல் கடக ராசிக்கு தனம், வாக்கு, குடும்பம் ஸ்தானத்திற்கு கேதுபகவான் வருவதால், ஒருசிலருக்கு, அரசாங்கம், சம்பந்தமான வேலைகள் பதவிகள், ஒப்பந்தங்கள்மூலம் பெருத்த பணவரவுகள் வரும் 18-5-2025முதல் 15-11-2025-க்குள் அமையும் கிரகநிலை உள்ளது. ராகு பகவான், எட்டாம் இடத்திற்கு வருவது, கடக ராசிக்கு "கெட்டவன் கெட்டிடில், கிட்டிடும் ராஜயோகம்' பலன்கள் கிடைக்க பெறுவீர்கள்.
சிம்மம்!
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
பல வருடங்களுக்குபிறகு ஒரே வருடத்தில், மூன்று கிரகங்களின் பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு, இதுவரை இருந்துவரும், பரபரப்பு, பதட்டம், எதிர்பாராத திருப்பம், பணப் பிரச்சினை என்று அத்தனையும் 2025-ஆம் புத்தாண்டில், மொத்தமாக மாற்றமாக போகிறது. இதுவரை கடந்த இரண்டரை வருடங்களாக கண்டகச் சனியின் பிடியில் இருந்துவருவதால்தான், நித்திய கண்டம். பூரண ஆயுசு என்றபடி தினமும் கடன், பிரச்சினை குடும்பத்து பிரச்சினையால், செத்து, செத்து பிழைக்கும்படியான நிலையில் சிம்ம ராசிக்காரர்களில் பெரும்பாலோர் இருந்துவருகிறீர்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு கஷ்டம் பிரச்சினை என்றாலும் யாரும் நம்பவும் மாட்டீர்கள். ஏனென்றால் வீழ்ச்சி அதையும் வெளியே காட்டாமலேயே வாழ்ந்துவருபவர்கள். வரும் 2-3-2025 முதல் மீன ராசிக்கு சனீஸ்வரர் சிம்ம ராசிக்கு நட்பு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
குருபகவான் மாற்றம் இனி ஏற்றம்தான்!
கடந்த ஏழு மாதங்களாக பத்தாம் இடத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் இருந்து வருகிறார். உங்களின் சிம்ம ராசி அதிபதி சூரிய பகவானுக்கு பகை கிரகமான சுக்கிரன் ராசியில் சஞ்சரித்து வருவதால் செய்துவந்த தொழிலில், வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்தலாமா! மாற்றிவிடலாமா! இதோடு முடித்துவிடலாமா! என்ற நிலையில்தான் சிம்ம ராசிக்காரர்கள் பெரும்பாலோர் இருந்துவருகிறீர்கள். செய்து வந்த வேலை, உத்தியோகம், வெளியூர், வெளிநாட்டில் கூட, பெரும் ஏமாற்றத்தையும் எதிர்கால திட்டத்தையே ஒரு சிலருக்கு முழுமையாக முடித்து வைத்திருக்கும். இந்த நிலை வரும் 14-5-2025-க்குபிறகு, அடியோடு மாறப்போகிறது. லாப ஸ்தானத்திற்கு வரும் குருபகவான் பெருத்த லாபத்தையும் பெரும் பணவரவையும், மீண்டும் வேலை வாய்ப்பையும், வெளியூர், வெளிநாடு பதவி உயர்வையும் கொடுக்கபோகும் அதிர்ஷ்ட வருடம் 2025 ஆகும். ராகு பகவான் குருபகவானால் பார்க்கப்படுகிறார் கவலை வேண்டாம் கடந்த ஒரு வருடமாக, எட்டாம் இடத்தில் இருந்து வரும் ராகுபகவான் ஒருசிலருக்கு ஆபத்து, கண்டம் பெரும் மருத்துவ செலவுகளையும் கொடுத்து இருந்து வந்த அத்தனை உயர்வுகளையும் பணவரவையும், நிம்மதியாக அனுபவிக்க முடியாமல், பெருத்த அல்லல்பட வைத்துவருகிறார். இந்த நிலை வரும் 18-5-2025 முதல் மாறப் போகிறது. ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு ராகுபகவான் வந்தாலும், குருபகவான் பார்வை பார்த்துவிடுவதால், கோடி நன்மையாக பெருகி, உங்களை நிம்மதியாக பெருமூச்சு வரும்படி செய்ய போகிறார்கள். குருபகவானும் ராகு பகவானும். மனம், தைரியம், வெற்றி ஸ்தானத்தில் இருந்து வரும் கேதுபகவான் 18-5-2025-க்கு பிறகு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு, சிம்ம ராசிக்கு வருவது சிறப்பு ஆகும். ஆன்மிக தெளிவு அடைவீர்கள்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
பல வருடங்களுக்குபிறகு ஒரே வருடத்தில் மூன்று கிரகங்களின் பெயர்ச்சி நடக்க இருக்கிறது. உங்களின் யோகாதிபதியும் நட்பு கிரகமான சனீஸ்வரர், கடந்த 2022 ஆண்டுமுதல் கடன், பகை, நோய் ஸ்தானத்திற்கு வந்து அதற்கு முன் இருந்துவந்த கடன் பிரச்சினை, தொழிலில் பிரச்சினை, வேலை பிரச்சினை, வியாபாரத்தில் பிரச்சினை, குடும்பத்திலும் பிரச்சினை, பெற்ற மகன் அல்லது மகளாலும் பிரச்சினை என்று இருந்துவந்த நிலை அடியோடு மாற்றம் கண்டு மனதில் சிறிது நிம்மதியைப் பெற்றுவருகிறீர்கள். இந்த நிலையில் வரும் 2-3-2025 முதல் சனீஸ்வரர், யோகாதிபதியாக ஏழாம் இடத்திலிருந்து உங்களை நேரடியாக பார்க்கபோவது பெரும் பாக்கியம் ஆகும். மேலும் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகும் சனீஸ்வரர் தன சுய நட்சத்திரத்திலேயே 2025-ஆம் ஆண்டு முழுவதும் சஞ்சரிப்பது கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கபோகும் பெரும் அதிர்ஷ்ட காலம் ஆகும். செய்துவரும் வேலையில் இடமாற்றம், உயர் பதவி, வெளியூர், வெளிநாடு மாற்றம் கண்டே தீருவீர்கள். இதற்கான முயற்சிகளை நீங்கள் செய்யும் அளவுக்கு யோகபலன்கள் கிடைக்க பெருவீர்கள்.
குருபகவானின் பத்தாமிடம்
கடந்த ஏழு மாதங்களாக ஒன்பதாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் உங்களின் கன்னி ராசியில் இருந்துவந்த கேது பகவானை பார்த்தால், கன்னி ராசிக்காரர்களுக்கு பல கோவில் தரிசனமும், குருமார்கள், சந்திப்பும் கிடைக்கப்பெற்று இருந்து வீர்கள். செய்துவந்த வேலையில், வியாபாரத்தில் தொழிலில் மாற்றம் வந்தே இருக்கும். வரும் 14-5-2025 முதல், மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகும் குருபகவான் தனது 5, 7, 9-ஆம் பார்வையால், 2, 4, 6-ஆம் இடங்களைப் பார்க்க போவதால் பணம் பெருகும். பதவி உயரும் திருமணம் முடிவுக்கு வரும். கன்னி ராசிக்காரர்களில் பெரும்பாலோர் புதிய வீடு, புதிய மனை, புதிய கார், பை வாங்கியே தீருவீர்கள்.
ராகு- கேது பெயர்ச்சி
கடந்த ஒரு வருடமாக கன்னி ராசியில் கேது பகவான் இருந்து வருவதால், எதிலும் குழப்பம், எங்கும், குழப்பம் என்ற அளவில் பெரும்பாலோர் இருந்துவருகிறீர்கள். குருபகவானின் பார்வையால் நல்ல முடிவுகளை எடுத்து, அடுத்தடுத்த பண உயர்வை நீங்களே செய்து வருகிறீர்கள். இந்த நிலையில் வரும் 18-5-2025 அன்று கேது பகவானின் விரயஸ்தானமான 12-ஆம் இடப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு, இடமாற்றம், வெளியூர், வெளிநாடு மாற்றம் அமையும். கடந்த ஒரு வருடமாக களத்திரம் ஸ்தானமான ஏழாம் இடத்தில் ராகு பகவான் வந்தது முதல் கன்னி ராசிக்காரர்களின் கணவன்- மனைவிக்குள், பல குடும்பங்களில், உள்நாட்டு போர்போல நடந்துவருகிறது. ஒரு சிலருக்கு கோர்ட், வழக்கு என்ற அளவிலும் போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக, களத்திர நாகதோஷத்தில் இருந்து வருகிறீர்கள். இதனால்தான் இப்படி எல்லாம் பல குடும்பங்களுக்குள் எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாத நிலை இருந்துவருகிறது. இந்த நிலையை 18-5-2025-ல் பெயர்ச்சியாகும். ராகுபகவான் நிவர்த்திசெய்து குடும்பங்களை இணைந்துவைப்பார்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
பல வருடங்களுக்குப்பிறகு 2025-ஆம் வருடத்தில் மூன்று முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க இருக்கிறது. இதனால் துலா ராசிக்காரர்களுக்கு, பெரும் அதிர்ஷ்டமான, பணவரவை கொடுக்கும் ஆண்டாக 2025 நடக்க இருக்கிறது. சென்ற 2023-2024 ஆண்டுகளில் புத்தி ஸ்தானம் புத்திர ஸ்தானத்தில் சனீஸ்வரர், சஞ்சரித்து வருவதால். மகன் அல்லது மகளால் மனவேதனை, சொந்த பந்தத்தாரிடையே பகை, அவமானம். கணவர்- மனைவியிடையே பேச்சுவார்த்தை குறைந்த நிலை, செய்துவந்த வேலையில், வியாபாரத்தில் தொழிலில் பிரச்சினை, கடன் தொல்லை, தொடர்ந்து செய்யலாமா? அனைத்தையும் நிறுத்திவிட்டு அடுத்த தொழிலுக்கு, வேலைக்கு, வியாபாரத்திற்கு போய்விடலாமா என்ற நிலை வரும் 2-3-2025 முதலே முழுவதும் மாறப்போகுது. துலா ராசிக்கு ருண, ரோக, சத்ரூ, ஸ்தானத்திற்கு 29-3-2025-ல் பெயர்ச்சியாகும் சனீஸ்வரர் மாற்றப் போகிறார். இருந்துவரும் மொத்த கடன்களையும் படிப்படியாக, விரட்டி அடிக்கப் போகிறார். கடன் பிரச்சினையால் வந்த பகை, சொந்தங்களில் ஏற்பட்டு விட்ட அவமானம் அத்தனையையும் அடித்து நொறுக்கி, குடும்பத்தினர் அனைவரும், குலதெய்வம் திருவிழாவில் முழுமையாக, சந்தோஷமாகக் கொண்டாடி மகிழும் நிகழ்வை கொடுத்தே தீரபோகிறார். கடந்த பலவருடங்களாக அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட குடும்ப பாசத்தால், வெளியூர், வெளிநாட்டில், வேலை செய்துகொண்டிருக்கும் துலா ராசிக்காரர்களுக்கு மனதில் மாற்றத்தை கொடுத்து, கடல் கடந்து பறந்த, தாய் மண்ணை, தாய்- தகப்பனார், சகோதர- சகோதரிகளை பார்த்து பாசத்துடன் ஒற்றுமையாக சாப்பிட வைத்து மகிழ்ச்சி அடையபோகிறார்.
ஒன்பதில் குருபகவான்
அஷ்டம குருவால் அநியாயமாக இழந்த சொத்துகள், சொந்தங்கள், வேலைகள், வியாபாரம், தொழில்கள், குடும்பத்தில் குழப்பம் என்று கடந்த ஏழு மாதங்களாக மன வேதனையுடன்தான் துலா ராசிக்காரர்கள் வாழ்ந்தும், வாழாமல் நடமாடிக் கொண்டிருந்து வருகிறீர்கள். இந்தநிலை வரும் 14-5-2025-க்குபிறகு, முழுமையாக மாற்றம் நடக்க போகிறது. அதிசய மாற்றம் நடக்க இருக்கிறது. இன்று முதல் கவலை வேண்டாம், இந்த நிலையும் மாறும்! இந்த 2025-ஆம் வருடம் முருகப் பெருமாள் நடத்துவதால் உங்க நிலை மாறும். ஆனால் வாரத்தில் ஒருநாள், இரண்டு மணிநேரம், ஏதாவது ஒரு கோவிலுக்குள், அமைதியாக இருந்து சாமி கும்பிட்டு வரவேண்டும். பணம், வருமானம் அளவில் கரணம் தப்பினால் மரணம் என்ற அளவில்தான், துலா ராசிக்காரர்கள் தற்போது இருந்து வருகிறார்கள். குருவின் சஞ்சாரம் 2026-க்குபிறகு மிகவும் சிறப்பாக மாற இருக்கிறது. ஒன்பதுக்கு வரும் குருபகவானின் பார்வை, 1, 3, 5-ஆம் இடங்களில் பதிவதால், புத்திசரியாகும், புத்திரன்- புத்திரிகள் சரியாவார்கள்.
மகள் அல்லது மகன் வருமானம்
ஒருசிலருக்கு சிறப்பாக படித்து உயர் சம்பளம் பெறும் மகன் அல்லது மகள் வருமானத்தில், பாசத்தால் ஏற்கெனவே இருந்துவரும் பிரச்சினைகள் வரும் 14-5-2025 முதல் 4-9-2025-க்குள் படிப்படியாக குûந்தே தீரும். அதனை அடுத்து, வீடு மாற்றம், பதவி மாற்றம், இடமாற்றம், வெளியூர், வெளிநாடு மாற்றம் வரும் 4-9-2025 முதல் 14-2-2026-க்குள் நடக்கும் கிரகநிலைகள் தெளிவாக உள்ளது. அதனை அடுத்து, உண்மையிலேயே அத்தனை பிரச்சினைகளிலிருந்தும் வரும் 14-2-2026-க்குள் முழுமையாக விடுதலை பெற்றே தீருவீர்கள். அடுத்தடுத்து பிரச்சினைகளை நீங்களே நடத்தி பணவரவை பெறுவீர்கள்.
புத்தி, புத்திர, புத்திரிகள் ஸ்தானத்தில் ராகு பகவான்
கடந்த ஒரு வருடமாக ராகு பகவான், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில், இருந்து சிறப்பாக நடத்துவதாலேதான், துலா ராசிக்காரர்கள் அஷ்டம குருவின் அவஸ்தையிலிருந்தே தப்பித்து, தப்பித்து வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே துலா ராசிக்காரர்களுக்கு தெரியவே தெரியாது! இதனை தாங்கள் உணர்ந்து பார்த்து நாக பாம்புகளுக்கு நன்றி சொல்ல வேண்டுமானால் இன்றே இப்போதே சிந்தித்து பாருங்கள். துலா ராசிக்காரர்களில் பத்தில் ஆறுபேருக்கு கடந்த ஒரு வருடத்தில், நாக ராஜாவும், நாக ராணியும், ஒரு நாளாவது உங்களது கனவில் வந்து காட்சிகொடுத்து இருப்பார்கள். வரும் 18-5-2025-ல் நடைபெற இருக்கும் பெயர்ச்சியால், ஐந்தாம் இடத்திற்கும் ராகுபகவான் லாப ஸ்தானமாக 11-ஆமிடத்திற்கு கேது பகவானும் வருகிறார்கள். இதனால் பல கோவில் தரிசனம் துலா ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். 2025-ஆம் ஆண்டில் இருந்து வரும் பிரச்சினை குறையும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
பல வருடங்களுக்குபிறகு 2025-ஆம் ஆண்டில் மூன்று முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க இருக்கிறது. வானத்தில் ஒன்பது கிரகங்களும், பல லட்சம் வருடங்களாக மாற்றம் கண்டு சுற்றிக்கொண்டே இருப்பதுபோலதான், நமது வாழ்க்கையும், மாற்றம் கண்டு கொண்டேதான் இருக்கிறது. நல்லதும் கெட்டதும், ஒருவரின் பிறந்த ஜாதகத்தின் கிரகங்களின் சக்திமூலமே, குணங்களாக அமைகிறது. குணங்களே செயல்களாக அமைகிறது. சுகஸ்தானத்தில் கடந்த 2023-2024-ஆம் ஆண்டுகளில் சஞ்சரித்து வரும் விருச்சிக ராசியின் பகை கிரகமான சனீஸ்வரர் சுகங்களை, சொந்தங்களை, சொத்துகளை குறைத்துகொண்டே கொடுத்து வருகிறார். ஒருசிலருக்கு, மருத்துவச் செலவுகளாகவும், ஒருசிலருக்கு, எதிர் பார்த்தது எல்லாம் முடிவில், வெற்றியாக அமையாமலும் மன வேதனையை கொடுத்து வருகிறார்! இந்த மோசமான நிலை வரும் 29-3-2025 முதல் முழுவதுமாக மாற இருக்கிறது. ஒருசிலரது மகன் அல்லது மகளின் படிப்பு, தொழில், வேலை மற்றும் திருமணத்தால் இடமாற்றம் வெளியூர், வெளிநாடு மாற்றம் வரும் 2-3-2025 முதல் 15-9-2025-க்குள் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள்மூலம் நடக்க இருக்கிறது. மனதில் சிறிது நிம்மதி பெறுவீர்கள். வீடு, மனை, தொழில் சம்பந்தப்பட்ட கோர்ட், வழக்குகள், 15-9-2025-க்குபிறகு அதிரடியான விபரீத ராஜ யோகமாக அமைய இருக்கிறது.
குருபகவானின் பார்வை பலன்கள்
வரும் 14-5-2025 முதல் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகும் குருபகவானின் 5, 7, 9-ஆம் பார்வைதான், உங்களின் விருச்சிக ராசிக்கு 12, 2, 4-ஆம் இடங் களைப் பார்வை செய்யப்போவதால் பகை கிரகம் சனீஸ்வரர் குறைய வைத்த அத்தனை சுகம், சொத்து, சொந்தங்கள் அத்தனையையும், குருபகவான் நிறைய வைக்க போகிறார். எப்படித்தான் இத்தனை கடன் ஆனோம் என்னும் சிந்தனை செய்யாமல், பட்ட கடனுக்காக. வீடு, மனை, வாகனம், தொழில், வியாபாரத்தையும் விற்க நினைத்தும், விற்காமல் இருந்து மனவேதனை, மனகவலை கொடுத்து வருபவைகள். வரும் 14-5-2025 முதல் 14-9-2025-க்குள் நல்ல விலைக்கு விற்று, கடன்களை முழுமையாக அடைத்தும், தங்களுக்கு என்று, வீடு, நிலம், தொழில், வியாபாரம், வேலை என்று வரும் 14-9-2025-க்கு பிறகு நிறைவாக எல்லாரும் மதிக்க மீண்டும் உயர்ந்து, எழுந்தே, தீருவீர்கள். கவலைவேண்டாம். நல்லதே நடக்கும்.
ராகு- கேதுப் பெயர்ச்சி
வரும் 18-5-2025 அன்று பெயர்ச்சியாகும். ராகு- கேதுவின் மாற்றங்களால். விருச்சிக ராசிக் காரர்களுக்கு சகட யோகமும், விபரீத ராஜயோகவும், சற்று தாமதமாகப் யோகமானப் பலன்களைக் கொடுக்கும்!
"ராகுபோல கொடுப்பவனும் இல்லை!
கேதுபோல கெடுப்பவனும் இல்லை!'
என்பது பொதுவான ஜோதிடமொழி ஆகும்.
ராகு- கேதுக்கள் சஞ்சரிக்கும் நட்சத்திரம், ராசி ஸ்தானங்களை கொண்டே பலன்கள் அமையும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு வரும் 18-5-2025 முதல் 18-11-2025-க்குள் சுய வருமானம், சொந்தத் தொழில் அமையும் பாக்கியம் உண்டு.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
பல வருடங்களுக்குபிறகு 2025-ஆம் ஆண்டில் மூன்று முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடக்க இருக்கிறது! மூன்று கிரகங்களின் பெயர்ச்சிகளும், தனுசு ராசிக்காரர்களுக்கு பெருத்த மாற்றமாக, யோகமான காலமாக மாற்றமாக போகிறது. தனுசு ராசிக்காரர்களில் பெரும்பாலும், இன்னும், ஏழரை வருடம் நடந்த சொந்த கதை, சோக கதைகளை மறக்கவே முடியவில்லை. எப்படி எல்லாம் இருந்த எங்கள் குடும்பம், இப்படி ஆகிவிட்டதே என்ற ஒரே மனநிலையில்தான் இருந்துவருகிறார்கள். ஒருசில தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை போலவேதான் இப்போதும் இருந்துவருகிறது என்ற நிலைதான் இருந்து இருந்து வருகிறீர்கள். இதனால் ஒருசிலருக்கு கடவுள் பக்தியில்கூட குழப்பம் வந்துவிட்டது. யாருக்கும் கெடுதல் செய்யாத எனக்கு ஏன் இந்த நிலை இந்த கேள்விதான், தனுசு ராசிக்காரர்களுக்குள் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கும்.
எழில் குரு சிறப்பு தருவாரா!
கடந்த ஏழு மாதங்களாக ருண, ரோக, சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தில் சஞ்சரித்துவரும் குருபகவான், இருக்கும் இடத்தை பெருகி கொடுத்துவருகிறார்கள். அதாவது கடனை பெருக வைத்திருக்கிறார், பகையை பெருக வைத்திருக்கிறார், நோயால் மருத்துவச் செலவுகளை பெருக வைத்து வருகிறார். ஒரு சில தனுசு ராசிக்காரர்களுக்கு, கடன் கொடுக்காதவர்கள்கூட, கூப்பிட்டு பணம் கொடுத்து இருப்பார்கள். ஏனென்றால் 6-ஆம் இடத்து குரு பகவான் தனுசு ராசிக்காரர்களை அதிக கடனாகி வருகிறார்.
இந்த நிலையும் மாறும்!
வரும் 14-5-2025 அன்று குருபகவான் மிதுன ராசிக்கு ஏழாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். குருபார்க்க கோடி நன்மை. நேரடியாக உங்களின் தனுசு ராசியை பார்க்கிறார். மிகவும் சிறப்பாகும். அவரின் பார்வை லாப ஸ்தானத்திலும் மனம் சம்பந்த மூன்றாம் இடத்திலும் பதிவதால், வரும் 14-5-2025 முதல் 14-9-2025-க்குள் இருந்துவரும் அத்தனை பிரச்சினைகளி-ருந்தும் படிப்படியாக முழு விடுதலை பெறுவீர்கள்.
ராகு- கேதுப் பெயர்ச்சி
வரும் 18-5-2025 அன்று ராகு- கேது பெயர்ச்சி நடக்க இருக்கிறது. தனுசு ராசிக்கு ராகுபகவான் தைரியம், மனம், வெற்றி ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு வருவது சிறப்பாகும். கேது பகவான், பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால், பல கோடி தரிசனங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
சனீஸ்வரர் பெயர்ச்சி
கடந்த 2023-2024-ஆம் வருடத்தில், மனம், தைரியம் ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் சனீஸ்வரர், நாம் கீழே விழுந்துவிட்டாலும், மற்றவர்களிடம் கெத்தாக மதிப்பாக நடிக்கவைத்து நம்மை ஏமாற்றி கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலை வரும் 29-3-2025 சனிப்பெயர்ச்சியால் தீரப்போகிறது. தனஸ்தானாதிபதி, சுகஸ்தானத் திற்கு வருவதும், அவரின், 3, 9, 10-ஆமிடங்களில் பதிகிறது. சனீஸ்வரர் தொழில் காரகாதிபதி ஆவார். அவர் 10-ஆம் இடத்தில் பார்வை பார்ப்பதால் செய்துவரும், தொழில், வியாபாரம், வேலையில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
பல வருடங்களுக்குபிறகு 2025-ஆம் ஆண்டில் மூன்று முக்கிய கிரகங்களில் பெயர்ச்சிகள் நடக்க இருக்கிறது. வரும் 29-3-2025 அன்று சனீஸ்வரர் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் மகர ராசிக்காரர்கள் அனைவரும் இதுவரை உங்களை பிடித்துவைத்து, சோதனைகளையும், வேதனைகளையும், இழப்புகளையும், அவமானங்களையும் வைத்து செய்துவந்த ஏழரைச் சனியின் பிடியி-ருந்து, முழுவதுமாக முழு விடுதலை பெற்று விடுவீர்கள். இனி இதுபோன்ற ஏமாற்றங்கள், கேவலங்கள், அடுத்த முப்பது வருடங்களுக்கு வரவே வராது. இனி தான் நீங்கள் மீண்டும் பழைய சுதந்திரமாக மகர ராசிக்காரர்களாக பிறந்ததுபோல வாழலாம். இனி உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.
கடல் கடக்கும் மரகம்
மகரம் ராசிக்காரர்கள், உயர்படிப்பு படித்து தகுதியான திறமை சர்டிபிகேட்கள் வைத்திருந்தும், வெளியூர்- வெளிநாடு, வேலைவாய்ப்பு தள்ளிக் கொண்டே இருந்தவர்கள் வரும் 2-3-2025 முதல் 15-9-2025-க்குள் முயற்சிகள் செய்யுங்கள், வெளிநாட்டில் படிப்பு, வேலை, தொழில், வியாபாரம் கிடைக்கும் கிரகநிலை உள்ளது.
குருபகவானின் பெயர்ச்சி
கடந்த ஏழு மாதங்களாக மகர ராசிகாரர்களின் மகள் அல்லது மகன், படிப்பு, தொழில், திருமணம் போன்ற சுபகாரியங்களை ஐந்தில் குருபகவான் ரிஷப, ராசிக்கு வந்ததி-ருந்து சிறப்பாக நடத்திவருகிறார். ஒருசிலரின் மகன் அல்லது மகளுக்கு புதிய வீடு, புதிய மனை, புதிய வாகனம் வாங்கும் பாக்கியம் தற்போது நடந்துவருகிறது. மகர ராசிக்காரர்களின் மனம் கடந்த ஏழு மாதங்களாக சற்று, நிம்மதியான, திருப்தியாகவும் இருந்துவருகிறது. வரும் 14-5-2025 அன்று குருபகவான் ருண, ரோண சத்ரூ ஸ்தானமான கடன், பகை, நோய் ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால் இதுவரை நீங்கள் கடன் கேட்டும் கொடுக்காதவர்களும் வங்கிகளும் உங்களை தேடிவந்து லோன் பணம், கடனுக்கு பணம் கொடுக்க இருக்கிறார்கள். கொடுக்கிறார்கள் என்று இந்த அவசரமான நேரத்திற்கு அதிகமான பணத்தை பெற்றுகொண்டால், அதனை எப்போதும் கட்டவே முடியாது. கடன் காரராகவே கடனுடனேயே வாழ்ந்து, வாழ்ந்து, வாழ்க்கையைத் தொலைக்க வேண்டும் நிலை ஏற்படும். கடனே ஆகாது என்று வாழ்பவர்களையும் கடன்காரராகி சோதிப்பதற்காகவே ஆறாம் இடத்து குருபகவான் வருகிறார் என்று இந்த என்பதனை கவனத்தில்கொள்ளுங்கள். தாமதமாகிகொண்டே வந்த திருமணம் சட்டென்று சுபமங்கள முடிவுக்கு வரும் 14-5-2025-க்கு முதல் 15-9-2025-க்குள் வந்துவிடும்.
ராகு- கேதுப்பெயர்ச்சி
மகரம் ராசிக்காரர்களுக்கு மனம் என்ற மூன்றாம் இடத்தில் ராகு என்ற வைராக்கிய பாம்பு கடந்த ஒரு வருடமாக நடத்திவருகிறது! இதனால் கடந்த ஒரு வருடமாக சூடு, சுரணை அதிகமுள்ளவர்கள் போலவே, உங்களைக் காட்டி வருகிறார்கள். இதனால் கணவன்- மனைவியிடையே பிரச்சினை, சொந்தங்களிடையே வாக்குவாதம், வேலை, வியாபாரம், தொழில், வெறுப்பு, கோபம், விரக்தி என்ற நிலையில், நீங்களே நீங்களாக இல்லையென்ற அளவில்தான் இருந்துவருகிறீர்கள்! இதற்கான முழுமையான காரணம், ஏழரைச் சனியின் பிடியில் மகர ராசிக்காரர்கள் என்பதனை நீங்களே உணரும் காலம்தான் வரும் 18-5-2025. அன்றுதான், ராகு- கேது பெயர்ச்சி. அன்றுமுதல் உங்களின் பொறுமை, நிம்மதி, நிறைவு குணம், உங்களிடம் மீண்டும் வந்துவிடும். வரும் 2025-ஆம் ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கு வெறுப்பை, வேதனையை சாதனையாக மாற்றும் சிறப்பான வருடம் ஆகும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
பல வருடங்களுக்குப்பிறகு வரும் 2025-ஆம் ஆண்டில் மூன்று கிரகங்கள் பெயர்ச்சி ஆகிறார்கள். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு 2025-ஆம் ஆண்டு மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் கிரக நிலை தெளிவாக உள்ளது. ஏழரைச்சனியின், ஜென்மச்சனியில் பிடியில் கடந்த இரண்டு வருடங்களாக இருந்துவருகிறீர்கள். இந்த இரண்டு வருடங்களில் கும்ப ராசிக்காரர்களில் பெரும்பாலோர் அதிரடியான முடிவுகளை எடுத்து இருப்பீர்கள். உங்களுக்குள் ஓர் மாயசக்தி வந்து அமர்ந்து, அந்த முடிவுகள் துணிச்சலாக எடுக்க தூண்டியிருக்கும். அதுதான் சனீஸ்வரர் ராகு பகவானின் நட்சத்திரத்தில் சஞ்சரித்த காலம் ஆகும். நீங்கள் எடுத்த முடிவுகள், வழக்கமாக செய்துவந்த வேலை, வியாபாரம், தொழி-ல் இருந்து புதிய வழி முறையை துணிச்சலாக தேர்ந்து எடுத்திருப்பீர்கள்.
சனீஸ்வரர் பெயர்ச்சி
வரும் 29-3-2025 அன்று சனீஸ்வரர், மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். நீங்கள் கடந்த இரண்டு வருடங்களில் எடுத்து வந்த புதிய புதிய அதிரடியான முடிவுகளில், இதுவரை வராத, புதிய புதிய வாய்ப்புகள், வருமானங்கள், பதவிகள், புதிய அறிமுகங்கள் வரும் 2-3-2025-க்குள் எடுத்த முடிவுகளுக்கு சாதகமான பலன்களை கிடைக்கபெறுவீர்கள். ஒருசிலருக்கு, இந்த காலங்களில் பெருத்த வாய்ப்புகளும், வேலையில் உயர்வுகளும், தொழி-ல், வியாபாரத்தில் இடமாற்றங்களும் வந்துசேரும். 15-9-2025 முதல் 31-12-2025 வரை, நீங்கள் நினைத் ததை எல்லாம் பொறுமையாக சாதித்து காட்டுவீர்கள். உடலால் ஒழுக்கமும், உள்ளத்தால் நாணயமும் உள்ள கும்ப ராசிக்காரர்களுக்கு இது ஓர் பொன்னான காலமாகும். பயன்படுத்தி கொள்ளுங்கள். ஒருசில கும்ப ராசிக்காரர்களுக்கு கடல்கடந்த நாட்டி-ருந்து பண வருமானம் வரும்படியான வாய்ப்புகள், வேலை, வியாபாரம், தொழில் வந்து சேரும்.
குருபகவான் பெயர்ச்சி
கடந்த ஏழாம் மாதங்களாக கும்ப ராசிக்கு சுகஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரித்துவருகிறார். இதனால் கும்ப ராசிக்காரர்கள் ஒருசிலருக்கு புதிய வீடு, மனை, வாகனம், வாங்கும் யோகம் அமைந்தி ருக்கும். தாமதாமாகிக்கொண்டே இருந்த திருமணம் திடீரென்று சிறப்பாக நடந்து முடிந்திருக்கும். வெளியூர், வெளிநாட்டில் வாழ்ந்து வந்தவர்கூட பூர்வீக ஊரில், பூர்வீக சொத்தில் வீடு கட்டி பெருமை சேர்த்திருப்பீர்கள். பல வருடங்களாக, பெற்ற தாய், தகப்பனாரை, கணவரை, பிள்ளைகள், சொந்தங்களை பிரிந்து வாழ்ந்தவர்களும், வீடு வந்து சேர்ந்திருப்பீர்கள். வரும் 15-5-2025 அன்று நடைபெறும் ஐந்தாமிட குருப்பெயர்ச்சியால் இதுவரை இல்லாத நல்ல முடிவு களை வேலையிலும், தொழிலும், வியாபாரத்திலும் எடுத்தே தீருவீர்கள். பூர்வீக சொந்தகளுடன் இணைந்து தீருவீர்கள். நடந்துமுடிந்த கெட்டவைகள் அனைத்தையும் உஊகஊபஊ செய்து புதிய மனிதனாக பாசமுள்ள மகனாக, மகளாக வாழவந்து விடுவீர்கள்.
ராகு- கேது பெயர்ச்சி
கடந்த ஒரு வருடமாக தனம், வாக்கு, குடும்பம் ஸ்தானத்தில் ராகுபகவான் சஞ்சரித்துவருகிறார். இதனால் கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலோரின், கணவன்- மனைவி உறவில், பிரச்சினை, பிரிவு என்று தான் வாழ்ந்து வருகிறீர்கள். காரணம் கோட்சாரத்தில் குடும்பத்தில் நாகதோஷம். கும்ப ராசிக்காரர்கள் ஏழரைச்சனியின் பிடியில் குடும்ப தோஷம் கிரகங்களாக வந்ததால்தான் உங்களின் குணங்கள் மாறிவிட்டது. இது உங்களின் குணமில்லை. வரும் 18-5-2025 அன்று நடைபெறும் ராகு- கேது பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு பதவி வாய்ப்பில், பண வரவில் பெரும் நல்ல மாற்றங்களைக் கொடுக்கும் சிறப்பான ஆண்டாக 2025-ஆம் ஆண்டு அமையப்போகிறது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பல வருடங்களுக்குபிறகு வரும் 2025-ஆம் ஆண்டில் மட்டும் மூன்று பெரும் கிரகங்களின் பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இந்த மூன்றுவிதமான கிரக பெயர்ச்சிகளும், மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையைக் கொடுக்க இருக்கிறது. ஏற்கெனவே கடந்த இரண்டு வருடங்களாக ஏழரைச்சனியின் பிடியில் இருந்துவருவதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். மீன ராசிக்காரர்களுக்கு சனீஸ்வரர் நெறுங்கிய நல்ல நண்பர் ஆவார். இதனால், ஏழரை வருடத்தில் பாத சனியின் நீச காலத்தில் மட்டுமே மீன ராசிக் காரர்களை சற்று பிடிப்பதுபோல பிடிப்பார். ஆனால், பெரிய சிரமங்களை எல்லாம் மீன ராசிக்காரர்களுக்கு கொடுக்கவே மாட்டார். மீன ராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனியின் பிடியில் இருக்கிறோம் என்ற மனபயம் பிடித்துகொண்டு, பலரது மனதில், வெறுப்பையும் விரக்தியை ஏற்படுத்தி வருகிறது.
சனீஸ்வரர் பெயர்ச்சி
வரும் 29-3-2025 அன்று சனீஸ்வரர் உங்களின் மீன ராசிக்கே பெயர்ச்சி ஆகிறார். ஜென்ம ராசி சனியாக உங்களை நடத்த இருக்கிறார். இயல்பில் ஏழரையில் நீங்கள் பிடிக்கப்படவில்லை என்பதை உணருங்கள். உங்களின் மீன ராசிக்கு சனீஸ்வரர் கெட்டவர் இல்லை நல்லவர், நண்பர் என்பதனை திடமாக மனதில் நினைவில் வையுங்கள். உங்களின் மீன ராசிக்கு லாபத்தை கொடுக்க வேண்டியவர், உங்களுக்கு சாதகமான லாபத்தை கொடுக்க உரிமையுள்ளவர். அதே நேரத்தில் விரயத் தையும், இடமாற்றத்தையும் கொடுக்கவேண்டியவர். வரும் 29-3-2025 முதல் உங்கள் ராசியாதிபதி குருபகவானின், பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும் 15-9-2025 வரை சஞ்சாரம் செய்கின்ற இந்த ஆறு மாதங்கள் 165 நாட்கள் உங்களுக்கு நல்லதே செய்யும் அங்கீகாரம் பெற்றவர். இதனால் இந்த 165 நாட்கள் நல்லவைகளாகவே நடக்கும் கிரகநிலை உள்ளது. எவ்வளவு, எதில் விதைக்கிறோமோ அதன் அடிப்படை யிலேயே பணவரவுகள் அமையும். ஒருசிலருக்கு, புதிய புதிய வீடு, மனை, வாகனம் அமையும். புதிய வேலை மாற்றம், தொழில் மாற்றம், வியாபாரம் மாற்றம் ஏற்படும்.
குருபகவானின் பெயர்ச்சி
கடந்த ஏழு மாதங்களாக மீன ராசிக்காரர்களுக்கு, செய்துவந்த வேலையில், தொழி-ல், வியாபாரத்தில், இடமாற்றம், வீடு மாற்றம், வெளியூர், வெளிநாடு மாற்ற நடந்துவருகிறது. கடந்த ஒரு வருடமாக கோட்சாரத்தில், நாக தோஷம் இருந்து வருவதால், எதில் எடுத்தாலும் தடை, தாமதம், இழப்பு, ஏமாற்றம் என்று பிரச்சினைகளைக் கொடுத்துதான் முடிவில் சாதகமான பலன்களை கொடுத்துவருகிறது. இதுவும் ஒருவகை ஏழரைச்சனி போலத்தான். வரும் 14-5-2025 முதல் 4-9-2025 வரை குரு பகவான், வீடு, மனை, பூமி சம்பந்தப்பட்ட செவ்வாய் கிரகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த நான்கு மாதங்களில் மீன ராசிக்காரர்களில் ஒருசிலருக்கு புதிய பூமி, புதிய மனை, புதிய வீடு அமையும் கிரகநிலை உள்ளது. கடந்த மூன்று வருடங்களாக பூர்வீக வீடு, சொத்து சம்பந்தப்பட்ட கோர்ட், வழக்கில் இருந்து வருபவர் களுக்கு வரும் 18-5-2025 முதல் 4-9-2025-க்குள் நல்ல செய்திகள் வந்துசேரும். குடும்பத்தில் ஏற்பட்ட சின்ன, சின்ன, வார்த்தை பிரச்சினைகளுக்காக பிரிந்துவாழும் கணவன்- மனைவியினரை இந்த காலத்தில் குடும்பத்து பெரியவர்கள், முழுமையாக முயற்சி செய்தால், மீண்டும் குடும்பத்தில் நிரந்தர நிம்மதி வந்தே தீரும்.
ராகு- கேது பெயர்ச்சி
கடந்த ஒரு வருடமாக மீன ராசியிலேயே ராகு பகவான் இருந்து வருவதால், பெரும்பாலோருக்கு, இதுவரை இல்லாத மதிப்பு, மரியாதை, சூடு, சுரணை அதிகமாக, ச-ப்பு, வெறுப்பு, கோபமும், விரக்தி யுடனேயே வாழ்ந்துவருகிறீர்கள். வரும் 18-5-2025-ல் நடைபெற இருக்கும். ராகு- கேது பெயர்ச்சிக்கு பிறகு இந்த நிலை முழுவதும் மாறப் போகிறது. மறுபடியும் பொறுமை, அமைதி, அடக்கம், ஒழுக்கமுள்ள நல்ல மனம்கொண்ட மீன ராசிக்காரர் களாக 2025 புத்தாண்டு வருடம் உங்களை நிம்மதி யாக்க போகிறது.