எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026.

தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

இந்த வார ராசிபலன் பகுதி 2022 ஆண்டுபலனாக இடம்பெற்றுள்ளது.

Advertisment

-ஆசிரியர்

ன்புள்ள வாசகப் பெருமக்களே! இந்த ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குரு, 13-4-2022 முதல் மீன ராசிக்கு மாறுதலாகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருக்கணிதப்படி மகரத்தில் சஞ்சரிக்கும் சனி, அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரை கும்ப ராசியில் சஞ்சரித்து, மீண்டும் மகர ராசிக்கு மாறுதலாகி ஆண்டு இறுதிவரை மகர ராசியில் சஞ்சரிக்கிறார். (இந்த ஆண்டு முழுவதும் வாக்கியப்படி சனி மகரத்தில் சஞ்சரிக்கிறார்). இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சரிக்கின்றனர். அதன்பின்பு திருக்கணிதப்படி 12-4-2022 (வாக்கியப்படி 21-3-2022) முதல் ராகு மேஷ ராசியிலும், கேது துலா ராசியிலும் சஞ்சரிக்கவுள்ளனர். இனி 12 ராசிகளுக்கான 2022-ஆம் ஆண்டு பலன்களைக் காணலாம்.

மேஷம்

Advertisment

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

மேஷ ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த ஆண்டு குரு 13-4-2022 வரை உங்கள் ராசிக்கு 11-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் வளமான பலன்களை ஆண்டின் தொடக்கத் தில் பெறுவீர்கள். முயற்சிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் தேடிவரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் குடும்பத்தின் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் 2, 8-ல் சஞ்சரிக்கும் ராகு- கேது 12-4-2022 முதல் ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பென்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம். எனவே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு 13-4-2022 முதல் 12-ல் சஞ்சரிக்கவிருப்பதால் பணவரவுகளில் சற்றே நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறா மைகள் அதிகரித்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். கூட்டாளிகளையும் தொழிலாளர் களையும் அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ் தர்களுக்கு பணியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்குமென்றா லும், எந்தவொரு விஷயத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது உத்தமம். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோகரீதியாக கவனமாக செயல்பட்டால்தான் இலக்கை அடைய முடியும். சனி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரை 11-ல் சஞ்சரிக்கவிருப்பது அற்புதமான அமைப் பென்பதால் இக்காலங்களில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். சிவ வழிபாடு செய்வது, துர்க்கைக்கு ராகு காலத்தில் விளக்கேற்றுவது நல்லது.

dd

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு 9, 10-க்கு அதிபதியும் தர்மகர்மாதிபதியுமான சனி பகவான் இவ்வருடத்தில் 9-ல் ஆட்சிபெற்று சஞ்சரிக்கவிருப்பது அற்புதமான அமைப்பென்பதால், எதிலும் எதிர்நீச்சல் போட்டு ஏற்றங்களைப் பெறுவீர்கள். ஆண்டில் தொடக்கத்தில் குரு பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பென்பதால், முதல் மூன்று மாதங்கள் மட்டும் பண விஷயத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. குரு 13-4-2022 முதல் 11-ல் சஞ்சரிப்பதும், 12-4-2022 முதல் கேது 6-லும், ராகு 12-லும் சஞ்சாரம் செய்யவிருப்பதும் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைப் பெறமுடியும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் ஒன்றுசேரும். நவீன பொருட்களையும், அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமும், புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகளும் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் இருந்த நெருக்கடிகள் விலகுவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். கடன் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறுவதுடன் லாபம் பெருகும். கூட்டாளிகள், தொழிலாளர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைப்பதுடன் உயர்பதவிகளும் கிட்டும். உடன் பணிபுரிவர்களை அனுசரித்துச் சென்றால் வேலைச்சுமையைக் குறைத்துக்கொள்ளமுடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு அமையும். விஷ்ணு தலங்களுக்குச் செல்வது, முருக வழிபாடு செய்வதால் மேன்மைகள் உண்டாகும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

மிதுன ராசியில் பிறந்த உங்களுக்கு 2022-ஆம் ஆண்டில் சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடப்பதால், எந்தவொரு விஷயத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பணவரவுகளில் நெருக்கடி கள் ஏற்படுமென்பதால் ஆடம்பர செலவு களைக் குறைத்துக்கொள்வது உத்தமம். 12-4-2022 வரை கேது 6-ல் சஞ்சரிப்ப தாலும், அதன்பின்பு ஏற்படும் சர்ப்பகிரக மாற்றத்தின்மூலம் ராகு 11-ல் சஞ்சாரம் செய்யவுள்ளதாலும் எதையும் ஓரளவுக்கு சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து குடும் பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு உங்கள் ராசிக்கு 9-ல் 13-4-2022 வரை சஞ்சரிப்பதால் முதல் மூன்று மாதங்கள் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக் கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சி களை ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொண் டால் அனுகூலப்பலனைப் பெறமுடியும். தொழில், வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரிக்கும் குரு 13-4-2022 முதல் 10-ல் சஞ்சரிக்கவிருப்பது சாதக மான அமைப்பென்று கூறமுடியாது. கொடுக்கல்- வாங்கலில் சிக்கனமாக இருக்க வும். எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதங் களுக்குப்பின் வெற்றிகிட்டும். தொழில், வியாபாரத்தில் சற்றே மந்தநிலையை சந்தித்தா லும், ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர் பார்த்த லாபத்தினைப் பெறமுடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் கவனமாக செயல்பட்டால் இலக்கை அடையமுடியும். உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் சனி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரை 9-ல் சஞ்சரிக்கவிருப்பது சிறப்பென்பதால், இக்காலங்களில் நெருக்கடிகள் குறைந்து பல்வேறு நற்பலன்கள் கிடைக்கும் யோக முண்டு. அஷ்ட லட்சுமிகளை தரிசிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

கடக ராசியில் பிறந்த உங்களுக்கு 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் குரு 8-ல் சஞ்சரிப்பதால், சற்று பொறுமையுடன் செயல் பட்டால் வாழ்வில் முன்னேற்றங்களை அடையமுடியும். முதல் மூன்று மாதங்கள் பொருளாதாரரீதியாக சிறிது நெருக்கடி, தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த நற்பலனை அடைய தடைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் குரு 13-4-2022 முதல் 9-ல் சஞ்சாரம் செய்யவிருப்ப தால் உங்களின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு மேலோங்கும். பொருளாதார ரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி தாராள தனவரவு ஏற்பட்டு கடன்கள் தீரும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிக்கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும். சொந்த பூமி, மனை வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபம் காண்பீர்கள். தொழிலில் நல்ல லாபங்கள் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு பாராட்டு தல்களையும், உயர் பதவிகளையும் பெறுவார் கள். ராகு 11-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பென் றாலும், 12-4-2022 முதல் ராகு 10-ல், கேது 4-ல் சஞ்சரிக்கவுள்ளதால் தேவையற்ற அலைச் சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம். என்றாலும் குரு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வளமான பலனை அடைவீர்கள். ஒரு ராசியில் நீண்டநாட்கள் தங்கும் கிரக மான சனி இவ்வாண்டு உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித் துச் செல்வது நல்லது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது, கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் சற்று கவனத் துடன் செயல்படுவதன்மூலம் நற்பலனை அடையமுடியும். உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் சனி 29-4-2022 முதல் 12-7-2022 வரை அஷ்டம ஸ்தானமான 8-ல் அதிசார மாக சஞ்சரிப்பதால், இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தென்முகக் கடவுளாம் தட்சிணாமூர்த்தியையும் முருகனையும் வழிபடுவதால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

சிம்ம ராசியில் பிறந்த உங்க ளுக்கு 2022-ல் சனி 6-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதாலும், 12-4-2022 முதல் 3-ல் கேது சஞசரிக்கவிருப்பதாலும் சகலவிதத்திலும் ஏற்றம்மிகுந்த பலன்களைப் பெறமுடியும். எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு பல்வேறு முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் பலம் ஏற்படும். பொருளாதாரரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் சிறப்பாகக் கையாண்டு முன்னேற் றங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் நல்ல வாய்ப்புகளைப் பெறமுடியும். உங்களின் முயற்சிகள் நற்பலனைத் தரும். கூட்டாளி களிடமிருந்த பிரச்சினைகள் மறைந்து அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் உங்களுடன் பணிபுரிபவர்களால் சிறுசிறு இடையூறுகளை சந்தித்தாலும், எதிர்பார்த்த உயர்வுகளைத் தடையின்றி அடையமுடியும். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. 13-4-2022 வரை ஜென்ம ராசிக்கு 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால், இவ்வாண்டில் முதல் மூன்று மாதங்கள் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். சிறப்பான பண வரவால் அசையும்- அசையா சொத்துள் வாங்கும் வாய்ப்பும், குடும்பத்தில் மகிழ்ச்சி யும் ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் குரு 13-4-2022 முதல் அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிக்கவிருப்பதால் எதிலும் கவனமாக செயல்பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்க முடியும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப் பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு வீண் செலவுகள் ஏற்படும். அதேசமயம் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் 4, 10-ல் சஞ்சரிக்கும் கேது, ராகு 12-4-2022 முதல் ராகு 9-லும், கேது 3-லும் சஞ்சாரம் செய்யவிருப்ப தால் உங்களுக்குள்ள அலைச்சல்கள் சற்று குறையும். வெளியூர், வெளிநாடுமூலம் எதிர்பார்க்கும் நல்லசெய்தி கிடைக்கும். ஆறுபடைத் தலங்களுக்குச் செல்வது, முருக வழிபாடு செய்வது நற்பலனை அளிக்கும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

கன்னி ராசியில் பிறந்த உங்களுக்கு 2022-ல் சனி 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். எதிலும் சிறப்பாக செயல் பட்டு படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத் தில் பல புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்பதவிகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். 13-4-2022 வரை குரு 6-ல் சஞ்சரிப்ப தால், முதல் மூன்று மாதங்கள் மட்டும் நீங்கள் சற்று பொறுமையுடன் இருங்கள். பணவரவு களில் ஏற்ற- இறக்கம் இருக்குமென்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. 13-4-2022 முதல் 7-ல் குரு சஞ்சரிப்பதால், உங்கள் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரநிலை மிகவும் சிறப் பாக இருப்பது மட்டுமின்றி, நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும் காலமாக இருக்கும். சொந்த வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடையமுடியும். உங்கள் ராசிக்கு 3, 9-ல் சஞ்சரிக்கும் கேது, ராகு 12-4-2022-ல் ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத்தின்மூலம், கேது ஜென்ம ராசிக்கு 2-லும், ராகு 8-லும் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பென்ப தால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது, நேரத்திற்கு உணவுண்பது, தேவையற்ற அலைச்சல்களைக் குறைத் துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவி யிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பது உத்தமம். குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும். உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் சனி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரை 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதால், இக்காலங்களில் மிகவும் அனுகூலமான பலனையடையும் யோகம் உண்டாகும். சிவத் தலங்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசித்தால் நன்மைகள் பல உண்டாகும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

துலா ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த வருடத்தில் 13-4-2022 வரை குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள், முன்னேற்றங்கள் உண்டாவதுடன், எதையும் எதிர்கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். தொழில், வியாபாரத்தில் ஆண்டின் தொடக் கத்தில் வளமான பலன்கள் கிடைக்கும். இவ்வாண்டில் சனி 4-ல் சஞ்சரிப்பதால், அர்தாஷ்டமச்சனி நடைபெறுவதால் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். வேலைப் பளு காரணமாக உடல் அசதி ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சற்று பாதிக்கும். 13-4-2022 முதல் குரு 6-ல் சஞ்சரிப்ப தால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப் பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்காது. எதிலும் நீங்கள் முன்னின்று செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். முடிந்தவரை கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்வதன்மூலம் பொருட்தேக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனத்துடன் செயல்படுவது, முடிந்தவரை வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 2, 8-ல் சஞ்சரிக்கும் கேது, ராகு, 12-4-2022 முதல் கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடிப்பது, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ளவும். உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக் கும் சனி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரை 5-ல் சஞ்சரிக்கவிருப்பதால், உங்களுக்குள்ள நெருக்கடிகள் இக்காலத்தில் சற்று குறைந்து நற்பலன்கள் ஏற்படும் வாய்ப்புண்டு. திருநள்ளாறு சென்று சனீஸ்வர பகவானை வழிபட்டால் கெடுதிகள் குறையும். துர்க்கையை வழிபடவும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டில் சனி வலுவாக சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், எதிலும் துணிந்து செயல் படக்கூடிய ஆற்றலும் உண்டாகும். எல்லாவகையிலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். 2022 ஆண்டுத் தொடக்கத்தில் குரு பகவான் 4-ல் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதும் சற்று சுமாரான அமைப்பென்பதால் சிறுசிறு தடைகளை எதிர்கொள்ள நேரிட்டாலும், 13-4-2022 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும், 12-4-2022 முதல் ராகு 6-ஆம் வீட்டிலும், கேது 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சிறப் பான அமைப்பென்பதால் ஏப்ரலுக்குப் பிறகு நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் காலமாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைக்கூடும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாடுமூலம் அனுகூலம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழிலை விரிவுசெய்யும் நோக்கம் நிறை வேறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க் கும் உயர்வுகள் அனைத்தும் கிடைக்கப்பெற்று முன்னேற்றம் அடைவீர்கள். உயரதிகாரி களின் பாராட்டுதல்களும், உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். அசையும்- அசையா சொத்துளை வாங்கிச் சேர்ப்பீர்கள். உற்றார்- உறவினர் களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். புரிந்து கொள்ளாமல் பிரிந்துசென்றவர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி நல்லபெயர் எடுப்பீர்கள். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். முருகக் கடவுளையும் சிவபெருமானையும் வழிபட்டால் முன்னேற்ற மான பலன்களை அடையலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு 2022-ஆம் ஆண்டு உங்கள் ராசியாதிபதி குரு 13-4-2022 வரை 3-ல் சஞ்சரிப்பதாலும், அதன்பின்பு 4-ல் சஞ்சரிக்கவிருப்பதாலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே நற்பலன்களை அடைய முடியும். உங்கள் ராசிக்கு ராகு 6-ல் 12-4-2022 வரையும், அதன் பின்பு கேது 11-ல் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப் பென்பதால் எதையும் எதிர்கொள்ளும் திறன், எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன் மூலம் ஏற்றங்களை அடையும் வாய்ப்பு உண்டாகும். பணவரவுகள் சற்று சாதகமாக இருக்குமென்றாலும் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது, அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்ப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் மந்தநிலை நிலவினா லும், ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு சிறப் பான முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு இருந்தாலும், அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் மன நிம்மதியுடன் பணியாற்ற முடியும். சனி இவ்வாண்டு உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் ஏழரைச் சனியில் பாதச்சனி நடைபெறுவதால் எந்த வொரு விஷயத்திலும் ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டியிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், உணவு விஷயத்தில் கட்டுப் பாடுடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் சனி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரை முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால், இக்காலத்தில் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். முருக வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வதன்மூலம் சுபச்செய்திகள் தேடிவரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

மகர ராசியில் பிறந்த உங்களுக்கு 2022-ஆம் ஆண்டில் உங்கள் ராசியாதிபதி சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்ப தால், ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுகிறது. எதிலும் நிதானமாக செயல்பட்டால் உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்து வாழ்வில் ஏற்றங்களை அடையமுடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும். உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் அதிக கெடுதியை ஏற்படுத்தமாட்டார். எனவே எதையும் எதிர்கொண்டு அடையவேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள். 13-4-2022 வரை குரு உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் ஏப்ரல் வரை பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். ஆண்டின் தொடக்கத்தில் 2-ல் சஞ்சரிக்கும் குரு 13-4-2022 முதல் உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கவிருப்பது சாதகமான அமைப்பென்று கூறமுடியாது. எனவே பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது, அதிகப்படியாக கடன்கள் வாங்குவதைத் தவிர்ப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் முடிந்தவரை பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் சமாளித்து போட்ட முதலீட்டை எடுத்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கேது உங்கள் ராசிக்கு ஆண்டு தொடக்கத்தில் 11-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பென்றாலும், 12-4-2022 முதல் ராகு ஜென்ம ராசிக்கு 4-ல், கேது 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற அலைச்சலையும், இருப்பதை அனுபவிக்க இடையூறுகளையும் ஏற்படுத்தலாம் என்பதால் முடிந்தவரை வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்வது நல்லது. துர்க்கையம்மனுக்கு விளக்கேற்று வதும், நவகிரகப் பாரிகாரங்கள் செய்வதும் மிகவும் நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிக்கனமாக இருப்பது, எந்த செயலைச் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. முதல் மூன்று மாதங்கள் சற்று சோதனைகள் நிறைந்த நாட்களாக இருந்தாலும், 13-4-2022 முதல் குரு உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும், 12-4-2022 முதல் ராகு 3-ஆம் வீட்டிலும், கேது 9-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் உங்களுக்குள்ள கஷ்டங்கள் படிப்படியாக விலகி முன்னேற்ற மான பலன்களை அடையமுடியும். உங்களுக்கு நிலவிய பொருளாதார நெருக்கடிகள் விலகி பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடையலாம். ஆடம்பர செலவுகளைக் குறைத்தால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யமுடியும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வம்பு, வழக்குகள் யாவும் விலகும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் சற்றே குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தி யைப் பெருக்கிக்கொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உங்கள் ராசியாதிபதி சனி இவ்வாண்டு ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரித்து ஏழரைச்சனியில் விரயச்சனி நடைபெறுவ தால், தேவையற்ற வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படுமென்பதால் உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. சனி உங்கள் ராசியாதிபதி என்பதால், பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார் என்றாலும், எந்தவொரு விஷயங்களிலும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதையும் எதிர்கொண்டு வெற்றி பெறக் கூடிய வலிமையைப் பெறுவீர்கள். சனிக்கு எள்தீபம் ஏற்றுவதாலும், விநாயகர் வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு செய்வதாலும் கஷ்டங்கள் குறையும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மீன ராசியில் பிறந்த உங்களுக்கு 2022-ஆம் ஆண்டில் சனி உங்கள் ராசிக்கு 11-ல் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் லாபங்கள் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத் திலும் வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. சிலருக்கு சொந்த வீடு, மனை, வாகனங்கள் வாங்கும் யோகமுண்டு. தொழில், வியாபாரத்திலுள்ள எதிர்ப்புகள் விலகிவிடும். புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று லாபத்தை அள்ளித்தரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சாதகப்பலன் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை நிலவும். உயரதிகாரிகளின் ஆதரவும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். எதிர்பார்க்கும் உயர்பதவிகள் கிடைக்கும். உங்கள் ராசியாதிபதி குரு இவ்வாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதும், 13-4-2022 முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவிருப்பதும் அவ்வளவு சிறப்பான அமைப்பென கூறமுடியாது என்பதால், பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்துடன் செயல்படு வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடைய முடியும். ஏப்ரலுக்குப் பிறகு குரு பார்வை 5, 7-ஆம் வீடுகளுக்கு ஏற்படும் என்பதால், திருமணம், சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்கள் ராசிக்கு 3, 9-ல் சஞ்சரிக்கும் ராகு- கேது 12-4-2022-ல் ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சிமூலம், ராகு ஜென்ம ராசிக்கு 2-லும், கேது 8-லும் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதக மற்ற அமைப்பென்பதால், உடல்நலத்தில் கவனம் எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு உணவுண்பது, தேவையற்ற அலைச்சல்களைக் குறைப்பது நல்லது. கணவன்- மனைவி யிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிக்கவும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவதா லும் முருக வழிபாடு செய்வதாலும் பொருளா தார மேன்மைகள் ஏற்படும்.