ஏடற்ற நன்மைகள் அருளும் 20 பிரதோஷ மகிமைகள்! -ப் பண்டிட் எம்.ஜி.பி

/idhalgal/balajothidam/20-pradhosha-glories-are-blessed-countless-benefits-p-pandit-mgp

1. தினசரி பிரதோஷம்: தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணிமுதல் 6.30 மணிவரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனை தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப் பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி' நிச்சயம் கிட்டும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம்: அமாவாசைக் குப் பிறகான சுக்லபட்சம் என்ற வளர்பிறை காலத்தில் 13-ஆவது திதியாக வரும் "திரயோதசி' திதியே பட்சப் பிரதோஷமாகும். இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம். குறிப்பாக அன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் கபாலீஸ்வரரை வழிபடுவது சிறப்பாகும்.

22

3. மாதப் பிரதோஷம்: பௌர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறைக் காலத்தில், 13-ஆவது திதியாக வரும் திரயோதசி திதியே மாதப் பிரதோஷமாகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு செய்வது உத்தமப் பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம்: பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்குரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷமாகும். தோஷங்கள் பலவும் விலகும்.

5. பூரணப் பிரதோஷம்: திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத, திரயோதசி திதி மட்ட

1. தினசரி பிரதோஷம்: தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணிமுதல் 6.30 மணிவரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனை தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப் பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி' நிச்சயம் கிட்டும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம்: அமாவாசைக் குப் பிறகான சுக்லபட்சம் என்ற வளர்பிறை காலத்தில் 13-ஆவது திதியாக வரும் "திரயோதசி' திதியே பட்சப் பிரதோஷமாகும். இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம். குறிப்பாக அன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் கபாலீஸ்வரரை வழிபடுவது சிறப்பாகும்.

22

3. மாதப் பிரதோஷம்: பௌர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறைக் காலத்தில், 13-ஆவது திதியாக வரும் திரயோதசி திதியே மாதப் பிரதோஷமாகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு செய்வது உத்தமப் பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம்: பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்குரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷமாகும். தோஷங்கள் பலவும் விலகும்.

5. பூரணப் பிரதோஷம்: திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத, திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரணப் பிரதோஷமாகும். இந்தப் பிரதோஷத்தின்போது சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்வது உத்தமப் பலனைத் தரும். பூரணப் பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம்: பிரதோஷ தினத்தன்று துவாதசியும் திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும் சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது திவ்யப் பிரதோஷமாகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7. தீபப் பிரதோஷம்: பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களை தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும். 8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்: வானத்தில் "வ' வடிவில் தெரியும் நடத்திரக் கூட்டங் களே சப்தரிஷி மண்டல மாகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தை தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷமாகும். இந்த வழிபாட்டைச் செய்பவர்களுக்கு ஈசன் தரம் பார்க்காது அருள்புரிவான்.

9. மகாப் பிரதோஷம்: ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதியாகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் மகாப் பிரதோஷமாகும். இந்த மகாப் பிரதோஷத்தன்று எமன் வழிபட்ட சுயம்புலிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம்.

10. உத்தம மகாப் பிரதோஷம்: சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில், வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகாப் பிரதோஷமாகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சரப் பிரதோஷம்: வருடத்தில் ஒருமுறை மட்டுமே வரும் மகாப் பிரதோஷத்தை ஏகாட்சரப் பிரதோஷம் என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓதமுடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பலவிதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரிப் பிரதோஷம்: வருடத்தில் இரண்டு முறை மகாப் பிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரிப் பிரதோஷம் என்று பெயர். அந்தநாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்றுசேர்வார்கள்.

13. திரிகரணப் பிரதோஷம்: வருடத்துக்கு மூன்றுமுறை மகாப் பிரதோஷம் வந்தால் அது திரிகரணப் பிரதோஷம். இதை முறையாகக் கடைப் பிடித்தால் அஷ்டலட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்டலட்சுமிகளுக்கும் பூஜை, வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம்: ஒரு வருடத்தில் நான்கு மகாப் பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்கு வதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்குமுறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும்போது முறையாகப் பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன் ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம்: வருடத்துக்கு ஐந்து முறை மகாப் பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள் "நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம்: சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திர மும் சேர்ந்துவரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூர சம்ஹாரத்துக்குமுன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதமிருந்தால் முருகன் அருள்கிட்டும்.

17. சட்ஜப்பிரபா பிரதோஷம்: ஒரு வருடத் தில் ஏழு மகாப் பிரதோஷம் வந்தால் அது சட்ஜப்பிரபா பிரதோஷம். தேவகியும் வசுதே வரும் கம்சனால் சிறையிலிடப்பட்டனர்.

ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு, ஒரு வருடத்தில் வரும் ஏழு மகாப் பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால் கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்டதிக் பிரதோஷம்: ஒரு வருடத்தில் எட்டு மகாப் பிரதோஷ வழிபாட்டை முறை யாகக் கடைப்பிடித் தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற் றைத் தருவார்கள்.

19. நவகிரகப் பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஒன்பது மகாப் பிரதோஷம் வந்தால் அது நவகிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதமிருந்தால் சிவனின் அருளோடு நவகிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம்: அரிதிலும் அரிது பத்து மகாப் பிரதோஷம் ஒரு வருடத் தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பார்வையற்றவரும் கண்பார்வை பெறுவார்கள். கால் ஊனமுற்றவரும் நடப்பார்.

குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்.

செல்: 89035 51587

bala181024
இதையும் படியுங்கள்
Subscribe