முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

ன்புள்ள வாசகப் பெருமக்களே!

குரு திருக்கணிதப்படி 22-4-2023 காலை 5.14 மணிக்கு மீன ராசியி-ருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகி 1-5-2024 மதியம் 1.00 மணிவரை சஞ்சாரம் செய்யவுள்ளார்.

(வாக்கியப்படி 22-4-2023 இரவு 11.26 மணிக்கு மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகி 1-5-2024 மாலை 5.19 மணிவரை சஞ்சாரம் செய்யவுள்ளார்).

Advertisment

குரு மேஷ ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் 12 ராசிகளுக்கும் உண்டாகக்கூடிய பலன்களைத் தெளிவாக எழுதியுள்ளேன்.

gg

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரித்த குருபகவான் 22-4-2023 முதல் 1-5-2024 வரை ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய வுள்ளார். இந்த தருணத்தில் உங்கள் ராசிக்கு 11-ல் சனி ஆட்சிபெற்று சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். கடந்தகால வீண் செலவுகள் குறைந்து சேமிக்கக்கூடிய அளவுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். கடந்தகால கடன்கள் படிப்படியாகக் குறையும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய குரு தனது சிறப்புப் பார்வையாக 5, 7, 9 ஆகிய வீடுகளைப் பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பூர்வீகச் சொத்துவகையில் முடியாத பிரச்சினைகள் எல்லாம் தற்போது ஒரு முடிவுக்கு வரும். பல்வேறு பொது காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புண்டாகும். அசையும்- அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்தோடு செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் படிப்படியான வளர்ச்சியையும் அடைவீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பமும், எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் கிடைக்கும். விரும்பிய இடமாற்றங்களை விரைவில் பெற்று குடும்பத்துடன் இணையக்கூடிய ஒரு உன்னதமான நிலையுண்டாகும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் குறையும். ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் அக்டோபர் 2023 முடிய சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபடலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 8, 11-க்கு அதிபதியான குரு 22-4-2023 முதல் 1-5-2024 வரை விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். சனிபகவான் தற்போது 10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டிய நேரமாகும். பணபரிமாற்ற விஷயங்களில் ஏற்ற- இறக்கமான நிலை காணப்படும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. பிறருக்கு வாக்குறுதி கொடுக்கும் விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இந்த தருணத்தில் கேது 6-ல் 30-10-2023 முடிய சஞ்சரிப்பதும், அதன் பின் ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செய-லும் சிந்தித்து செயல்படுவது, தொழில் விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. வேலை யாட்களை எல்லா விஷயத் திலும் நம்பாமல் சில நேரங்களில் நீங்கள் நேரடி யாக செயல்படுகின்றபொழுது வீண் இழப்பு களைத் தவிர்க்கமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரண மாக ஓய்வுநேரம் குறையும். என்றாலும் கிடைக்க வேண்டிய சன்மானங்கள் கிடைக்கும். சக ஊழியரு டைய பணியையும் நீங்கள் சேர்த்துச் செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை யிருக்கும். குரு பார்வை 4, 6, 8 ஆகிய ஸ்தானங் களுக்கு இருப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப் பாக இருக்கக்கூடிய அமைப் புகள், எந்த பிரச்சினையையும் தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய ஒரு பலம், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வண்டி, வாகனங் கள்மூலமாக சுபச்செலவு கள் உண்டாகும். தட்சிணா மூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. சனிபகவானை வழிபடுவது உத்தமம்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

குரு 22-4-2023 முதல் 1-5-2024 வரை லாப 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் இதுநாள்வரை இருந்த பல்வேறு விதமான நெருக்கடிகள் எல்லாம் குறைந்து பணவரவுகள் மிகமிக சிறப்பாக இருக்கக் கூடிய நிலை ஏற்படும். தற்போது சனி 9-ல் சஞ்சரிப்பதால் உங்களது உடல் ஆரோக்கிய மானது சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட வர்களுக்கு தற்போது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நல்ல லாபங்கள் கிடைக்கும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். நீங்கள் வாங்கிய கடன்களை வருகின்ற நாட்களில் எளிதில் பைசை செய்யமுடியும். லாப ஸ்தானத்தில் சந்திக்கும் குரு தனது சிறப்புப் பார்வையாக 3, 5, 7-ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அனுகூலங்கள் கிடைக்கும். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அழகிய குழந்தைகளைப் பெற்றெடுக்கக்கூடிய யோகம் உண்டாகும். திருமண வயது அடைந்த வர்களுக்கு நல்ல வரன் அமைந்து மன மகிழ்ச்சி ஏற்படும். பங்காளியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முழுமையாக மறையும். தொழில், வியா பாரத்தில் நவீன யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல வளர்ச்சியினை அடைவீர்கள். தொழில் அபிவிருத்திக்காக அரசுமூலம் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளைத் தற்போது பெறமுடியும். தொழிலுக்காக நவீன இயந்திரங்களை வாங்கக் கூடிய வாய்ப்புண்டாகும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டு மல்லாமல் உங்களுக்கு இருந்த வேலைப்பளுவானது குறையும். சக ஊழியர்கள் ஆதரவு மிகச் சிறப் பாக இருக்கும். மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் 30-10-2023 முடிய சஞ்சாரம் செய்ய இருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கக்கூடிய அமைப்பாகும். விநாயகரை வழிபடுவது நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான குரு வரும் 22-4-2023 முதல் 1-5-2024 வரை 10-ல் சஞ்சாரம் செய்யவுள்ளார். இந்த தருணத்தில் சனிபகவான் 8-ல் சஞ்சரிப்ப தால் உங்களுக்கு அஷ்டமச் சனி நடக்கிறது. இதன்காரணமாக உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்ற- இறக்கமான நிலையிருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு மிகவும் சிக்கனமாக இருப்பதுதான் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது, மருத்துவக் காப்பீட்டுகள் எடுத்துக் கொள்வதும் நல்லது. தொழில், வியாபாரத் தில் நீங்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியும் என்றாலும், அதிக அலைச்சல், டென்ஷன், எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய சூழல் ஏற்படும். கூட்டாளிகளை கலந்தாலோசித்து சில விஷயங்களில் செயல்படுவதன்மூலம் ஒருசில அனுகூலங்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாகப் பணிபுரிந்தாலும் உங்களது ஆரோக்கியமே உங்களுடைய வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். சில நேரங்களில் சக ஊழியர்கள் செய்யக்கூடிய தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்கவேண்டிய சூழல் உண்டாகும். முக்கிய விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. குரு 2, 4, 6-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஒருசில ஆதாயங்களை அடைவீர் கள். நெருங்கிய உறவினர்கள் நெருக்கடி யான நிலையில் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். மறைமுக எதிர்ப்புகள் சில தோன்றினாலும் அதனை உங்கள் தனித்திறமையால் எளிதில் சமாளித்து விடுவீர்கள். சர்ப்ப கிரகமான ராகு 10-லும் கேது 4-லும் வரும் 30-10-2023 முடிய சஞ்சாரம் செய்வது உங்களுக்கு தேவையற்ற நெருக்கடி களை ஏற்படுத்தும் அமைப்பாகும். 30-10-2023-ல் ஏற்படக்கூடிய ராகு- கேது பெயர்ச்சிமூலமாக கேது 3-லும் ராகு 9-லும் சஞ்சரிக்க விருப்பதால் நல்ல வாய்ப்புகளும், பொருளாதார மேன்மைகளும் ஏற்படும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடு வது, சனிக்கிழமைதோறும் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசிக்கு 5, 8-க்கு அதிபதியான குரு 22-4-2023 முதல் 1-5-2024 வரை 9-ல் சஞ்சாரம் செய்யவுள்ளது அற்புத மான அமைப்பாகும். உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மனைவி, பிள்ளைகள்வழியில் அனுகூலங்கள் உண்டா கும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருந்து பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். உங்களுக்கிருந்த கடன்கள் குறைந்து சேமிக்குமளவிற்கு பண வரவுகள் சிறப்பாக இருக்கும். வீடு, மனை போன்றவற்றினை வாங்கவேண்டும் என்று எண்ணிய உங்களுடைய எண்ணங்கள் வருகின்ற நாட்களில் நிறைவேறும். இந்த தருணத்தில் சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சற்று விட்டுக்கொடுத்துச் செல்வது, நெருங்கிய உறவினர்கள் மற்றும் கூட்டாளியிடம் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. குரு ஜென்ம ராசி, 3, 5-ஆகிய வீடுகளைப் பார்வை செய்வதால் பெரியோர்கள் ஆசி கிடைக்கக்கூடிய அமைப்பு, எடுக்கும் முயற்சியில் வெற்றி, உங்கள் கனவுகள் நிறைவேறக்கூடிய ஒரு அற்புத நிலை, பூர்வீக சொத்துவகையில் ஒருசில அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியமில்லை என கவலைப்பட்டவர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் தகுதியையும் தனித்திறனையும் உயர்த்திக்கொள்வதற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகளும், பொருளாதார அனுகூலங் களும் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறுவதால் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். தகுதிவாய்ந்த வேலை யாட்கள் உங்கள் தொழி-ல் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக் கூட நீங்கள் தலையிட்டு எளிதில் செய்து முடிப்பீர்கள். சனிக்கிழமைதோறும் சனி பகவானை வழிபடுவது உத்தமம்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசிக்கு 4, 7-க்கு அதிபதியான குரு வரும் 22-4-2023 முதல் 1-5-2024 வரை உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சாரம் செய்யவிருக்கி றார். சர்ப்ப கிரகமான கேது 2-லும் ராகு 8-லும் 30-10-2023 முடியவும், அதன்பின் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு எனவும் சஞ்சாரம் செய்ய உள்ளனர். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது, உணர்ச்சிவசப்படாமல் எதிலும் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுப் பாடோடு இருப்பதும் நல்லது. குரு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை இருக்குமென்றா லும் உங்கள் ராசிக்கு 6-ல் சனி வலுவாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத் துக்கொண்டு சிக்கனத்தோடு இருந்தால் எதையும் எதிர்கொண்டு அனுகூலமான பலன்களை அடையமுடியும். அசையும்- அசையா சொத்துவகையில் எதிர்பாராத சுபச்செலவுகளை எதிர்கொள்வீர்கள். குரு தனது சிறப்புப் பார்வையாக 2, 4, 12 ஆகிய ஸ்தானங்களைப் பார்வை செய்யவிருப்ப தால் எந்த பிரச்சினையையும் உங்கள் தனித் திறமையால் எளிதில் கையாண்டு அனு கூலங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் திறமையோடு செயல்பட்டு நல்ல லாபங்களை அடையக்கூடிய வாய்ப் புண்டாகும். சில நேரங்களில் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அதன்மூலம் பொருளாதார அனுகூலத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக உங்களது ஓய்வுநேரம் குறையுமென்றாலும் உங்கள் உழைப்புக்கான ஊதியங்களைப் பெறமுடியும். வெளியூர், வெளிமாநிலங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு ஒருசிலருக்கு குடும்பத்தைவிட்டு வெளியில் சென்று சிறிதுகாலம் தங்கவேண்டிய சூழல் உண்டாகும். உயரதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் எந்தவித நெருக்கடி யும் சமாளிக்கமுடியும். குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசிக்கு 3, 6-க்கு அதிபதியான குரு 22-4-2023 முதல் 1-5-2024 வரை 7-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களின் பொருளாதாரநிலை உயர்வது மட்டுமல்லாமல் நீங்கள் நினைத்ததெல் லாம் நடக்கும். குடும்பத்தில் சுபிட்சமும், சந்தோஷமும் அதிகரிக்கும். நீண்டநாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் முழுமையாக முடிவுக்கு வந்து மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். உடல் பாதிப்பு கள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசி, 3, 11-ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் மனதைரியம், எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிர்பாராத லாபங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பங்காளிகள் மற்றும் உடன் பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். பூர்வீக சொத்துரீதியாக நீண்ட நாட்களாக இருந்த வம்பு, வழக்குகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். இந்த தருணத்தில் சனி 5-ல் சஞ்சாரம் செய்வது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கக்கூடிய அமைப்பாகும். தொழில், வியாபாரத்தில் கடந்தகால பொருட் தேக்கங்கள் எல்லாம் விலகி உங்கள் பொருட் களுக்கு நல்லவிலை கிடைத்து சிறப்பான லாபங்களை அடையமுடியும். தொழில் நிமித்தமாக நீங்கள் வாங்கிய கடன்களை அடைப்பது மட்டுமல்லாமல் கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமல்லாமல் உங்களுக்கு நிலுவையில் இருந்துவந்த சம்பளத் தொகை எல்லாம் தற்போது கிடைத்து உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் வரும் 30-10-2023 முடிய சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. துர்க்கையை வழிபடுவது, சதுர்த்தி விரதமிருப்பது நல்லது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ஜென்ம ராசிக்கு 2, 5-க்கு அதிபதியான குரு 22-4-2023 முதல் 1-5-2024 வரை 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணப் பரிமாற்ற விஷயங்களில் நீங்கள் சிக்கனத் தோடு செயல்படுவது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற- இறக்கமாக இருக்குமென்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு மிகவும் கவனமாக செயல்பட்டால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். இந்த தருணத்தில் உங்கள் ராசிக்கு 4-ல் சனி சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனி நடப்பதால் உங்களுக்கு அலைச்சல், டென்ஷன், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய ஒரு சூழல் ஏற்படும். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிப்பதில் இடையூறுகள் உண்டாகும். உங்களது தேக ஆரோக்கியத்தி லும், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கி யத்திற்கும் முக்கியத்துவம் தருவது, தகுந்த இடைவேளையில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 12-ல் கேது என 30-10-2023 முடியவும், அதன்பின் 5-ல் ராகு, 11-ல் கேது என சஞ்சாரம் செய்யவிருப்பது சற்று சாதகமான அமைப்பென்பதால் எதிர்பாராத சில உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். குரு பார்வை உங்கள் ராசிக்கு 2, 10, 12-ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் நெருங்கியவர்கள் உதவியானது நெருக்கடியான நேரத்தில் கிடைத்து உங்களின் மனக்கவலைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். கூட்டாளிகளை அனுசரித் துச் சென்றால் அனுகூலங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமல்லாமல் பணியில் சிறப்பாக செயல்பட தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். உங்கள்மீது வீண் பழிச்சொற்களை உடனிருப்பவர்கள் கூறுவார்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் நிலைமையை சமாளித்து அனுகூலங்களை அடையமுடியும். குரு, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி குரு 22-4-2023 முதல் 1-5-2024 வரை 5-ல் சஞ்சாரம் செய்யவிருப்பது மிகவும் உன்னதமான அமைப்பாகும். 3-ல் சனி ஆட்சிபெற்று சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப் பாக இருக்கும். உங்களுக்கு இருக்கக்கூடிய கடன்கள் எல்லாம் இருந்த இடம் தெரியா மல் மறையும். கடந்தகால சோதனைகள் எல்லாம் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக் கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு ஜென்ம ராசி, 9, 11-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப் பது மட்டுமல்லாமல் தந்தைவழி யில் அனுகூலங்கள், பெரிய மனிதர்களின் ஆதரவு, அதிகப்படி யான பணவரவுகள் கிடைக்கும் வாய்ப்புகள் வருகின்ற நாட்க ளில் உண்டு. கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை அதிகரிக் கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் மிகமிக நன்றாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். உங்களுக்கு இருந்த வம்பு, வழக்குகளில் எல்லாம் ஒரு முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடப்பது மட்டுமில்லாமல் நல்ல லாபத்தையும் தரும். உங்களின் நீண்டநாளைய கனவுகள் எல்லாம் வருகின்ற நாட்களில் நிறைவேறி தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமல்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் வருகின்ற நாட்களில் விடிவுகாலம் பிறந்து உங்களின் பொருளாதாரநிலை மேம்படும். நீண்டநாட்களாக உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் எல்லாம் தற்போது கிடைத்து அனைத்து பிரச்சினைகளும் குறையும். வீடு, மனை வாங்கவேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். வெளியூர், வெளிநாடு தொடர்புகளால் கூட அனுகூலமான பலன்கள் கிடைக்கும். துர்க்கை, பைரவரை வழிபடுவது நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

குரு பகவான் 22-4-2023 முதல் 1-5-2024 வரை சுகஸ்தானமான 4-ல் சஞ்சாரம் செய்யவுள்ளார். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த தடங்கல்கள் எல்லாம் விலகி எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் குறைந்து பணப் புழக்கம் சற்று சிறப்பாக இருக்கும். உங்களுக்கு 2-ல் சனி சஞ்சரித்து ஏழரைச்சனியில் பாதச்சனி நடப்பதால் ஆடம்பர செலவு களை சற்று குறைத்துக்கொள்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. குருபகவான் தனது சிறப்பு பார்வையாக 8, 10, 12-ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கிருந்த உடம்பு பாதிப்புகள் எல்லாம் ஓரளவுக்குக் குறைந்து தேக ஆரோக்கிய நிலையில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் இருக்கும். மனைவி, பிள்ளைகள்வகையில் இருந்துவந்த கவலைகள் எல்லாம்கூட ஓரளவுக்குக் குறைந்து மன நிம்மதி ஏற்படும். உங்கள் உழைப்புக்கான பலனை வருகின்ற நாட்களில் அடையமுடியும். பேச்சில் சற்று பொறுமையோடு இருந்தால் வீண் சிக்கல்களைத் தவிர்க்கமுடியும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக ஒவ்வொரு செய-லும் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடையலாம். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயங்களை அடையமுடியும். அரசுவழியில் சில சட்ட சிக்கல்கள் இருக்குமென்றாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் உங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு அதற்கான ஆதாயங் களை அடைவீர்கள். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன நிம்மதியுடன் பணிபுரியமுடியும். சக ஊழியரிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு பேசுவது நல்லது. தேவையற்ற நெருக்கடிகள் சில ஏற்பட்டாலும் உங்கள் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்படுவதால் நல்ல பெயர் எடுப்பீர்கள். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, ஆஞ்சனேயரை வழிபடுவது உத்தமம்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2, 11-க்கு அதிபதியான குரு வரும் 22-4-2023 முதல் 1-5-2024 வரை 3-ல் சஞ்சாரம் செய்யவுள்ளார். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி தற்போது நடைபெறுவதால் எடுக்கும் முயற்சி யில் தேவையற்ற நெருக்கடிகள், எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை ஏற்படும். அலைச்சல், டென்ஷன், எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய நிலை உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். உங்களது ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் மிகவும் நம்பியவர்களே உங்களுக்கு துரோகம் செய்வார்கள் என்பதால், பிறரை நம்பி பெரிய தொகையை கடனாகக் கொடுப்ப தைத் தவிர்க்கவும். 3-ல் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்புப் பார்வையாக 7, 9, 11-ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் திருமண வயது அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய அமைப்பு, ஒரு பெரிய மனிதரின் ஆதரவால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளை எதிர்க்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் எதிர்பாராத மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள மருத்துவக் காப்பீட்டுகள் எடுத்துக்கொள்வது மிகமிக உத்தமம். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். போட்டிகள் காரணமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். பணப்பரிமாற்ற விஷயங்களில் போட்ட முதலீட்டை எடுத்தால் போதுமென்ற அளவுக்கு கடுமையான சிக்கல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பது மட்டுமல்லாமல் தேவையில்லாத வீண் பழிச்சொற்களை எதிர்கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். உங்கள் பணியில் நீங்கள் கவனத்தோடு இருப்பது, அதிகாரிகள் சொல்வதைக்கேட்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்வது மிகவும் நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு, வேங்கடாசலபதி வழிபாடு நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ராசியாதிபதி குரு 22-4-2023 முதல் 1-5-2024 வரை 2-ல் சஞ்சாரம் செய்வதால் உங்களின் பொருளாதார நிலையானது மிகச் சிறப்பாக இருக்கும். திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். அனைத்து குடும்பத் தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமல்லாமல் பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நல்ல லாபம் உண்டாகும். 2-ல் சஞ்சரிக்கக் கூடிய குருபகவான் 6, 8, 10 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் நீங்கள் வாங்கிய கடன்களைப் பைசல் செய்யமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளக்கூடிய அளவிற்கு நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவானது சிறப்பாக இருக்கும். உங்களுக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதால் சில விஷயங்களில் சற்று பொறுமை யோடு செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடையமுடியும். குறிப்பாக ஆடம்பரத்தைக் குறைத்துக்கொள்வது, வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்கின்றபொழுது நிதானத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் விலகி படிப்படியான வளர்ச்சியை அடைவீர்கள். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான நெருக்கடிகளைக்கூட எளிதில் சமாளித்து அடையவேண்டிய லாபத்தை அடைய முடியும். சில நேரங்களில் வேலை யாட்கள் சிறுசிறு நெருக்கடிகளைக் கொடுத்தாலும் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் அனைத்தையும் சமாளித்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். சர்ப்ப கிரகமான ராகு- கேது சாதகமற்று சஞ்சாரம் செய்வதால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்படுவது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அனுமனை யும் விநாயகரையும் வழிபடுவது, துர்க்கை யம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.