ளவியலை அளக்கும் ஜோதிடவியலில், காலபுருஷனுக்கு ஏழாம் பாவகத்திற்கு பொறுப் பேற்றுள்ளது துலாம் ராசி. இது அனைத்து சுகங்களையும் சுகித்தே தீரவேண்டும் என்று எண்ணக் கூடிய சுக்கிரனின் இரண்டாவது ராசியாகும்.

இந்த ராசிக்கு நீதி தேவதையின் சின்னமான தராசு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காற்று ராசியில் தென்றலாகவும், ஆண் ராசியாகவும், 360 டிகிரி வானியல் சுற்றுவட்டப் பாதையில், 180 டிகிரியில் இருந்து 210ளி வரை தன்னை விஸ்தரித்தும், விஸ்வரூபம் எடுத்துள்ளது இந்த துலாம் ராசி. இது காமத் திரிகோணங்களில் ஒன்றாக அமையப் பெற்றுள்ளது.

எதையும் சாமர்த்தியமாகவும், நேர்த்தியாகவும், அணுகும் ஆற்றல் உடையவர்கள் இவர்கள். மேலும் அழகியலும், ஆளுமையும், ஒருங்கே பிணையப் பட்டவர்கள்.

thulam

Advertisment

சுகங்களை வழங்கும் சுக்கிரனின் வீட்டில் வீரியத்தையும், வீரத்தையும், பறைசாற்றும் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை யும், போகங்களையும், யோகங்களையும், வாரி வழங்கும் சூட்சமக்காரகன் ராகுவின் சுவாதி நட்சத்திரமும், மனித மூளையின் முழு கட்டமைப்பையும் உணர்த்தக்கூடிய, முதல் சுப கிரகமான குருவின் நட்சத்திரமான விசாகமும், இந்த துலாம் ராசியின் வடிவமைப்பை பலம் உள்ளதாக மாற்றி மிளிர வைக்கின்றது.

இவர்கள் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், எல்லாவற்றையும் சந்தேகப் பார்வையுடனே அணுகு வார்கள். அதேசமயம் இவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியான மனோ நிலையுடனே பயணிப்பார்கள். சற்றென்று கவரக்கூடிய முக பாவனையுடன் திகழ்வார்கள். இவர்கள் கதை, கவிதை, கலைகள் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாகவும், அதோடு ஏதேனும் ஒரு இசை கருவியின்மீது அதீத பற்றும், வல்லமை வாய்ந்தவர்களாகவும் இருப்பார் கள். இவர்கள் இயற்கை விரும்பிகளாக வும், ஈர்ப்புமிக்கவர்களாகவும் இருப் பார்கள்.

இவர்களிடம் எப்பொழுதுமே ஒரு ரகசியம் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் இப்படித்தான் என்று யாராலையுமே கணிக்க முடியாதவர்கள்.

இவர்களின் லக்னபடி லக்னாதிபதி சுக்கிரன் 12-ல் நீசமாகி ஆறில் உச்சம் அடையும் சூழல் உருவாகும். இந்த சூழலானது தன்னாலேயே தனக்கு விரயங்களையும், ஒரு மருத்துவ செலவையும், பத்திரம், ஒப்பந்தம், சார்ந்த ஒரு விரயத்தை யும், உண்டாக்கிக் கொள்வதோடு, ஆறில் உச்சம்பெற்று உழைப்பிற்கு முதலிடமும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியும், வீண் சண்டை, சச்சரவுகளில் ஈடுபாடும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மேலும் பாதம் மற்றும் செரிமான கோளாறு சார்ந்த நோய்களை இவர்கள் சந்திப்பார்கள்.

துலா லக்னத்திற்கு இரண்டாம் அதிபதி மற்றும் ஏழாம் அதிபதியாகிய செவ்வாய், நான்கில் உச்சமாகி, பத்தில் நீசமாகும் சூழ்நிலை உருவாகும். இந்த நிலையானது இரண்டு மற்றும் ஏழு என்று கூறக்கூடிய மாரக ஸ்தானமாகவும், வருவதனால் தாயாருக்கு சிறுசிறு உடல் உபாதைகளும், நோய் சார்ந்த தாக்கங்களும், இருப்பதனை உறுதிப்படுத்துகின்றது. மேலும் இரண்டாம் அதிபதி நாளில் உச்சம்பெறுவது வருமானத்தில் ஒரு பெரும் பகுதியினை தன் சுகத்திற்கான இல்லம் அமைத்துக்கொள்வது, வாகனங்கள் அமைத்துக் கொள்வதுபோன்ற சூழ்நிலைகளுக்கு இவர்கள் நல்ல விதத்தில் செலவிடும் சூழ்நிலையை எடுத்துரைக்கின்றது.

மேலும் இரண்டாம் அதிபதி பத்தில் நீசமாவது தொழிலுக்காக வருமானத் தில் ஒரு பகுதியினை ஒதுக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பதை உணர்த்துகின்றது.

துலா லக்னத்திற்கு மூன்று மற்றும் ஆறுக்கான அதிபதி குருபகவான், நாளில் நீசமாகி பத்தில் உச்சமாவது, தொழிலில் கடன் வாங்கி முதலீடு செய்வது சிறப்பினை தராது என்பதனை உணர்த்துகின்றது. மேலும் சொத்துகளின்மீதான கடனின் வசம் சற்று கவனத்துடன் இருக்கவேண்டும் என்பதனை உணர்த்துகின்றது. அதோடு மட்டுமல்லாமல் இளைய சகோதரன் சார்ந்தவர்களை தொழிலில் ஈடுபடுத்துவது சிறப்பினை தராது என்ற சூழ்நிலை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக் கின்றது.

நான்கு மற்றும் ஐந்தாம் அதிபதி சனிபகவான் லக்னத்தில் உச்சமாகி ஏழில் நீசமாகும் சூழல் உருவாகும். இந்த நிலையானது பூர்வீகம் சார்ந்தும், தாயாதிவழி சார்ந்தும், பெரும் சிறப்பு இவர்களுக்கு இருக்கும். மேலும் பூர்வீகத்தின் கௌரவத்தை கட்டி காப்பாற்றும் எண்ணம் உடையவர்களாக இவர்கள் இருப்பார்கள். தாயாதிவழி உறவுகளுடனும் மிகுந்த பாசத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொள்வார்கள்.

நான்காம் அதிபதி ஏழில் நீசமாவது பெரும் சிறப்பு அல்ல என்ற பொழுதிலும், களத்திரம் சார்ந்து மற்ற கிரகங்களின் பார்வையும், இணைவும் சில மாறுதலை ஏற்படுத்தும்.

ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் அதிபதி புதன் 12-ல் உச்சமாகி, ஆறில் நீசமாகும் சூழல் உருவாகும். இந்த சூழல் தந்தை சார்ந்த விஷயங்களில் உடல் நிலையிலும், மருத்துவம் சார்ந்த நிலையிலும் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதனை உணர்த்துகின்றது.

மேலும் 12-ஆம் அதிபதி 12-லேயே உச்சம்பெறுவது, வெளிநாடு தொடர்புகள் மற்றும் தீர்த்த யாத்திரைகள் சம்பந்தப்பட்ட மன மகிழ்வான தருணங்களை சந்திக்கும் சூழல் போன்றவற்றை உருவாக்கும்.

பத்தாம் அதிபதி சந்திரன் இரண்டில் நீசமாகி எட்டில் உச்சம்பெறும் சூழல் உருவாகும். இந்த சூழல் தொழிலில் இவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதனை மேலும் மேலும் ஆணித்தரமாக உணர்த்துகின்றது.

பத்தாம் அதிபதி எட்டில் உச்சம்பெறும் சூழலானது சில மறைமுக மற்றும் ஏற்பதற்கு மறுக்கும் தொழில் சார்ந்த பயணங்களும் இவர்களுக்கு அமையும் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.

பதினோராம் அதிபதி சூரியன் லக்னத் திலேயே நீசமாகி ஏழில் உச்சம் ஆகும் சூழல் உருவாகும். சர லக்னங்களுக்கு 11-ஆம் அதிபதி பாதகாதிபதி என்கின்ற ஜோதிடக் கூற்றின்படி பாதகாதிபதி லக்னத்தில் நீசமடைவது சிறப்பு. ஏழில் உச்சம்பெறுவதும் பாதகங்கள் களத்திரத்தின்மூலம் களையப்படும் என்பதனை உணர்த்துகின்றது. இவர்கள் அரசு, அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று கவனத்துடன் இருப்பது சிறப்பினை அளிக்கும்.

துலா ராசி லக்னக்காரர்கள் ராசியின் சின்னமான தராசினை தொழில் மற்றும் பணியிடை சூழலில் லோகோவாக அமைத்துக்கொள்வது சிறப்பினை அளிக்கும்.

பொருளாதாரத்தில் உயர்வினை அடைய சித்திரை நட்சத்திரம் என்றால் மருத மரமும், சுவாதி விள மரமும், விசாகம் மகிழ மரத்தினையும் வழிபடுவதனால் பொருளாதாரத்தை கைக்கொள்ள முடியும்.

துலா ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1. கோவில் மற்றும் அன்னதானங்களுக்கு, வெண்ணெய், தயிர், உருளைக்கிழங்கு போன்றவற்றினை தானமாக அளிக்கவும்.

2. வெள்ளிக்கிழமைதோறும் வீட்டில் கோமியம் தெளித்துவர செல்வம் பெருகும்.

3. மாமியாரின் கைகளால் வெள்ளி நாணயம் அல்லது ஏதாவது ஒரு வெள்ளி பாத்திரம் வாங்கி வைத்திருப்பது வளமான வாழ்வை தரும்.

4. வெள்ளித்தட்டில் கொஞ்சம் தேன்விட்டு வீட்டின் தலைவாசலில் எரிக்கவும்.

5. தானமாக எதையும் பெறாமல் இருப்பது சிறப்பினை தரும். அப்படி பெற்றால் அது வறுமையை ஏற்படுத்தும்.

செல்: 80563 79988