பொதுவாக வீடு கட்டும் முன்பே வாஸ்து பார்த்து அதற்கு ஏற்றவாறு கட்டுவது அவசியம். கட்டிய வீட்டில் வாஸ்துக் குறைபாடு இருந்தால் அதற்கு சில பரிகாரங்களும் உள்ளன. அதேபோல ஒரு வீட்டில் எந்தப் பொருளை எங்கு வைத்தால் நமக்கு நன்மைகள் பெருகும் என்ற குறிப்புகளையும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீட்டைவிட்டுக் கிளம்பும்போதும் சில பரிகாரங்களைச் செய்தால் நாம் நினைத்த காரியம் வெற்றியடையும்.
வீடுகளில் உள்ள வாஸ்துக் குறைபாடுகளைப் போக்க உதவுகிறது சங்கு. வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன்மூலம் வாஸ்து தோஷம் நீங்கும். மேலும் பிரதி வெள்ளிக்கிழமைகளில் துளசி தீர்த்தத்தை சங்கிலிட்டு வீடு முழுக்கத் தெளித்தால் அந்த வீட்டிலுள்ள சகல தோஷங்களும் விலகும். சங்கு இல்லாதவர்கள், சங்கை கையில் ஏந்தியவாறுள்ள மகாலட்சுமியின் படத்தையோ அல்லது சிலையையோ வீட்டில் வைப்பதன் பலனாக வாஸ்து தோஷம் நீங்கும்.
அதேபோல புல்லாங்குழலை வீட்டில் வைப்பதன்மூலம் அதிர்ஷ்டம் பெருகும், பணக் கஷ்டங்கள் நீங்கும். மேலும் வீட்டிலிருக்கும் சில வாஸ்துக் குறைபாடுகள் நீங்கி இதமான மனநிலை உருவாகும். ஒரு துணி யில் மஞ்சள் தடவி வீட்டின் முன்புறம் ஒற்றைக் கண்கொண்ட தேங்காயைக் கட்டி தினமும் அதைப் பூஜித்து வருவதன்மூலம் வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் குறைந்து நேர்மறையாற்றல் அதிகரிக்கும். அதனால் நிம்மதி அதிகரிக்கும்; பண வரவும் அதிகரிக்கும்.
இன்றைய காலகட்டத்தில் பணத்தை சம்பாதிப் பதற்கு மக்கள் கடினமாக உழைக்கின்றனர். ஆனால் என்னதான் கடினமாக உழைத்துச் சம்பாதித்தாலும், சிலருக்கு ஒரு வழியில் வரும் பணம் வேறொரு வழியில் விரயச் செலவாகிறது. சம்பாதிக்கும் பணம் வீண் விரயமாகாமல் இருக்கவும் பணம் வீட்டில் சேரவும் 12 ராசியினருக்கும் சில பரிகார முறைகள் இங்கு கூறப்பட்டுள்ளன.
1. மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் உங்கள் வேலை அல்லது தொழிலுக்காக வீட்டைவிட்டுக் கிளம்பும்போது ஒரு துளியளவு வெல்லத்தை எடுத்து, உங்கள் வீட்டின் தென்பகுதியில் வைத்துவிட்டுச் செல்லுங்கள். அன்றைய தினம் உங்கள் தொழிலும், வியாபாரமும் நல்ல முறையில் நடந்து நல்ல பொருட்சேர்க்கை உண்டாகும். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சிவபெருமானுக்கு கடலைப்பருப்பை நிவேதனமாக வைத்து, அவரை வழிபடவேண்டும்.
2. ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தினமும் காலையில் ஒரு பசுமாட்டிற்கு அகத்திக்கீரையையோ அல்லது வாழைப்பழங்களையோ கொடுக்க வேண்டும். அந்த பசுவின் உடலில் தங்கியிருக் கும் தேவர்களின் ஆசிகளைப் பெற்று வாழ்வில் நீங்கள் விரும்பிய அனைத்து வளங்களையும் பெறுவீர்கள். உங்கள் வாழ்நாள் முழுதும் அதைத் தொடர்ந்து செய்தீர்கள் என்றால் வெற்றிகள் உங்களைத் தேடிவரும்.
3. மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் புதிதாக திருமண மான ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு வளையல்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, புது சேலை போன்ற சீர்வரிசைப் பொருட் களை தானமாகக் கொடுக்க, உங்கள் வாழ்நாளில் எப்போதும் பொருளாதாரக் கஷ்டங்கள் ஏற்படாது. உங்கள் வாழ்வில் நல்ல செல்வ நிலையைப் பெற ஒவ்வொரு புதன் கிழமையன்றும் புதன் பகவானுக்கு பச்சைப் பயிறை நிவேதனமாக வைத்து வழிபடவேண்டும்.
4. கடகம்
கடக ராசியினர் தங்கள் பொருளாதார நிலை மேம்பட புறாக்கள், குருவிகள் மற்றும் ஏனைய பறவைகள் உண்ண உணவும், குடிக்க குடிநீர் வசதியும் ஏற்படுத்தித் தரவும். உங்களின் வாழ்வில் இருக்கும். வறுமை அந்த பறவைகளின் ரூபத்திலிருக்கும் இறைவனின் ஆசியால் நீங்கும். ஒவ்வொரு திங்களன்றும் கோவிலில் சிவலிங்க அபிஷேகத்திற்கு சுத்தமான பசும்பாலை தானமாக அளிக்க வேண்டும்.
5. சிம்மம்
பொருளாதாரத் தடைகள் நீங்க, உங்களின் வாழ்வில் செல்வச் செழிப்பு ஏற்பட தினமும் நீங்கள் தூங்கச் செல்லும்முன்பு ஒரு செம்புப் பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி வையுங்கள். மறுநாள் காலை எழுந்து, அந்த தண்ணீரை உங்கள் வீட்டின் கிழக்குப் பகுதியில் தெளித்துவிடுங்கள். இதைச் செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் செல்வம் நுழைவதற்கு இருந்த சூட்சமத் தடைகள் நீங்கும். இதைத் தொடர்ந்து செய்து வர, உங்கள் பொருளாதார நிலை உயரும்.
6. கன்னி
கன்னி ராசியினர் தங்கள் வாழ்வில் செல்வச் செழிப்பு உண்டாக புதன் கிழமைகளில் பச்சைநிற ஆடைகளை அணிய வேண்டும். எப்போதும் ஒரு பச்சைநிற கைக்குட்டையாவது வைத்திருக்க வேண்டும். மேலும் மாதத்திற்கு ஒரு முறை புதன் கிழமைகளில் நெல், கோதுமை போன்ற தானியங்கள், வெல்லம் ஆகியவற்றை ஒரு திருநங்கைக்கோ அல்லது ஒரு பிச்சைக்காரருக்கோ தானமளிக்க வேண்டும்.
7. துலாம்
துலா ராசியினர் ஏழைக் குழந்தைகள் அருந்துவதற்கு பாலை தானமளிக்க, அந்த சிவ பெருமானின் அருளால் உங்கள் வாழ்வில் எவ்வித கஷ்டங் களும் ஏற்படாது. பொருளாதாரத் தில் உச்சநிலையை அடைய வெள்ளிக் கிழமைகளில் சிவ ஆலயங்களில் அபிஷேகத்திற்கு தூய்மையான பசும்பாலும், ஒரு படி அரிசியும் தானமாக வழங்கவேண்டும்.
8. விருச்சிகம்
விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமைகளில் முருகன் கோவில் சென்று, கடலைப்பருப்பு நிவேதனமாக வைத்து வழிபட வேண்டும். தங்கள் வாழ்வில் செல்வச் செழிப்பு உண்டாக ஒரு சிவப்புத் துணியில் சிறிது பார்லி அரிசியை வைத்து முடிந்து, உங்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் யாரும் பார்க்காதபடி வைத்துவிட வேண்டும். இது உங்கள் வீட்டிலிருக்கும் தீய அதிர்வுகளை நீக்கும்.
9. தனுசு
வாழ்வில் நிறைய பொருட்செல்வம் பெறுவதற்கு உங்கள் வீட்டின் பூஜையறையில் வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்து வர, வீட்டிலிருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நீங்கி, உங்களிடமும் வீட்டிலும் ஒரு நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். மேலும் எப்போதும் ஒரு மஞ்சள்நிற கர்ச்சீப் உங்களிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
10. மகரம்
மகர ராசியினர் வாழ்வின் பொருளா தார நிலை மேம்பட சனிக்கிழமை யன்று உங்களிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு கருப்பு அல்லது கருநீலநிற ஆடைகளை தானமாக அளிக்கவேண்டும். வெள்ளிக் கிழமைகளில் வீட்டிலிருக்கும் துளசி மாடத்திலுள்ள துளசிச் செடிக்கு தூபங்கள் காட்டி நல்லெண்ணெய் தீபமேற்றி பூஜைகள் செய்யவேண்டும்.
11. கும்பம்
உங்கள் வாழ்வில் நீங்கள் பலவித மான செல்வ வளங்களைப் பெற சனிக்கிழமைகளில் கருப்பு எள் கலந்த நல்லெண்ணெய் விளக்கேற்றி, எண்ணெயினால் செய்யப்பட்ட ஏதேனுமொரு பலகாரத்தைப் படையலிட்டு சனி பகவானை வழிபடவேண்டும். உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
12. மீனம்
மீன ராசியினர் வாழ்வில் செல்வச் செழிப்பு ஏற்பட, உங்கள் ராசியாதிபதி குரு பகவானின் அருளைப் பெற, அன்றைய தினம் மஞ்சளையும், இனிப்பான லட்டுகளையும் அவருக்கு நிவேதனமாக அளிக்க வேண்டும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபடவேண்டும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணியவேண்டும்.
செல்: 98425 50844