Advertisment

12 ராசியினருக்கும் மகரச் சனியின் வக்ர நிவர்த்திப் பலன்கள்! -திருக்கோவிலூர் பரணிதரன் சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/12-zodiac-sign-benefits-capricorn-saturn-deviance

10-10-2022 முதல் 29-3-2023 வரை வாக்கியப் பஞ்சாங்கப்படி

சென்ற இதழ் தொடர்ச்சி...

துலாம்

உங்கள் ராசிக்கு நான்காம் வீடான மாதுர் மற்றும் சுக ஸ்தானத்தில் 26-12-2020 முதல் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்துவரும் சனிபகவான், அவர் சஞ்சரிக்கும் ஸ்தானத்திற் குரிய பலன்களையும், பார்வைக்குரிய பலன் களையும் வழங்கியதால், உங்கள் நிலையில் எதிர்பாராத சங்கடங்களையும், இடையூறு களையும், அலைக்கழிப்புகளையும், மனநிலை யில் பாதிப்புகளையும் கண்டிருப்பீர்கள். இந்த நிலையில் 25-5-2022 முதல் வக்ரகதிக்கு ஆளானார் சனிபகவான்.

Advertisment

நான்காமிடத்தில் சனிபகவான் வக்ரமான பிறகு உங்கள் நிலையில் மாற்றம் தோன்றியிருக் கும். பிரச்சினைகள் விலகியிருக்கும். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் நன்மைகளை அடைந் திருப்பீர்கள். நெருக்கடிகளிலிருந்து மீண்டு வந்திருப்பீர்கள். தாயார் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகியிருக்கும். இந்த நிலையில் 10-10-2022 அன்று சனி வக்ரநிவர்த்தியாகி 29-3-2023 வரை அதே வீட்டில் சஞ்சரித்து பலன்களை வழங்கிட வுள்ளார்.

உங்கள் ராசிக்கு நான்காம் வீடான மகர ராசியில் வக்ரநிவர்த்தியாகும் சனி பகவானால் இக்காலத்தில் இடையூறுகள், அலைக் கழிப்பு, குடும்பத்தில் வீண் விரோதம், ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை, தாயின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு தாயுடனும் தாய் வழி உறவுகளுடனும் விரோதம் ஏற்பட்டு அவர்களைவிட்டு விலகவும் நேரலாம். வீடு, சொத்து, வாகனத்தால் தொல்லைகளும், உற்றார்- உறவினர்களின் பகையும் ஏற்படுவது டன், தொழிலிலும், உத்தியோகத்திலும் சங்கடங்கள், நஷ்டம், பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புண்டு. ஒருசிலருக்கு நோயின் தாக்கம் ஏற்பட்டு சுகத்திற்கு பாதிப் பும் உண்டாகும். அடிக்கடி மருத்துவரை நாடவேண்டிய நிலையும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டமில்லாமல் போகும். வேறு சிந்தனைகளுக்கு ஆட்பட்டு கல்வியை இழக்கவேண்டி வரும்.

நான்கில் சனி சஞ்சரிக்கும் இக்காலத்தில் இத்தகைய பலன்கள் விளையுமென்பது பொதுவிதி. சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் உங்கள் சத்ரு ஸ்தானத்தைப் பார்ப்பதால், மறைமுக விரோதிகளின் தொல்லைகளை இல்லாமல் செய்வீர்கள். அவர்களை வெல்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றிகாண்பீர்கள். கடன் தொல்லையை இல்லாமல் செய்வீர்கள். தொழிலை விருத்திசெய்ய திட்டமிட்டு செயல் படுவீர்கள். வேலையில்லாமல் இருப்பவர் கள் வேலை வாய்ப்பை அடைவீர்கள். வேலை யில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், எதிர் பார்த்த சலுகைகளும் கிடைக்கலாம். எதிர் பாராத பணவரவு எங்கிருந்தாவது வரும். நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வீர்கள். என்றாலும் எதிலும் நிதானத் துடன் செயல்படவேண்டும்.

Advertisment

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் ஜீவன ஸ்தானத்தில் பதிவதால், செய்துவரும் தொழி லில் கூடுதல் கவனம் வேண்டும். கவனக் குறைவாலும் அசட்டைத் தனத்தாலும் முக்கியமான காரியங் களில் தோல்வி உண்டாகலாம். பதவி உயர்வை எதிர்பார்க்க முடியாமல் போகும். மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் சோதனை உண்டாகலாம். ஜீவனத் திற்கும் இக்காலத்தில் சிரமம் உண்டாகலாம். மற்றவர்களின் தயவை எதிர்பார்க்கவேண்டிய நிலையும் ஏற்படலாம். அதனால் மனச்சோர்வு, உடல் சோர்வு, டென்ஷன் என்ற நிலை உருவாக லாம்.

சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் ஜென்ம ராசியில் பதிவதால் அலைச்சல் அதிகரிக்கும். வேலைப்பளு கூடும். உறவினர்களிடம் பகை உண்டாகும். வேலை யின் காரணமாக வெளியூரில் வசிக்க வேண்டிய நிலை ஏற்படும். குடும்பத்தை விட்டுப் பிரியவேண்டிய சூழலும் உருவாகும்.

உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு உங்களை அச்சுறுத்தக்கூடும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். எதையோ இழந்துவிட்டது போல் மனம் வேதனைப்படும். தொழிலில் கவனம் செலுத்தமுடியாமல் போவதால் எடுத்துக்கொண்ட வேலைகளை நிறைவேற்றமுடியாமல் போகும். எனவே செய்யும் தொழிலில், வேலைகளில் மிகமிக கவனம் தேவை.

சனிபகவான் உங்களுக்கு வழங்கும் சங்கடங்கள் குறைய சனிக்கிழமைதோறும் நவகிரகங்களில் அமர்ந்துள்ள சனி பகவானை நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கிவாருங்கள். விருச்சிகம்

உங்கள் ராசிக்கு மூன்றாமிடமான தைரிய- வீரிய- சகோதர ஸ்தானத்தில் 26-12-2020 முதல் சஞ்சரித்துவரும் சனிபகவான் உங்களுக்கு ஆதாயமான பலன்களையே வழங்கிவந்தார்.

உங்கள் வாழ்க்கையில் பல்வேறு நன்மை களையும், எதிர்பாராதவற்றிலும் ஆதாய நிலையையும் வழங்கிவந்ததுடன், துணிச்சலு டன் செயல்படும் மனநிலையையும், நினைத் ததை சாதித்துக்கொள்ளும் நிலையையும் வழங்கியிருப்பார். இந்த நிலையில் 25-5-2022 முதல் வக்ரகதிக்கு ஆளானார் சனிபகவான்.

மூன்றாமிடத்தில் சனி வக்ரமானபிறகு உங்கள் நிலையில் நிறையவே மாற்றங்கள் உண்டாகியிருக்கும். நீங்கள் சந்தித்துவந்த நன்மைகள் எதிர்மறையாக மாறியிருக்கும். திடீரென்று சில சோதனைகளை சந்தித்திருப் பீர்கள். பணம் பலவகையிலும் பறந்திருக்கும்.

கடன் வாங்கியவர்கள் அதைத் திருப்பித் தராமல் இழுத்தடித்திருப்பார்கள். பல வகை யிலும் நெருக்கடிகள் உண்டாகியிருக்கும். துணிச்சலுடன் செயல்பட்ட நிலை விலகி மற்றவர்களுக்கு அஞ்சியும் பதுங்கியும் வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில் 10-10-2022 அன்று மூன்றா மிடத்தில் சனி வக்ரநிவர்த்தியாகி 29-3-2023 வரை அதே வீட்டில் சஞ்சரித்து உங்களுக்குப் பலன்களை வழங்கிடவுள்ளார்.

மூன்றாமிட சனிபகவான் எத்தகைய பலன்களை வழங்குவார் என்பதை கடந்த இரண்டு வருடங்களாக அனுபவித்துத் தெரிந்திருப்பீர்கள்.

உங்கள் பொருளாதாரநிலை உயர்ந்திருக்கும். எடுத்த காரியங்கள் யாவற்றில

10-10-2022 முதல் 29-3-2023 வரை வாக்கியப் பஞ்சாங்கப்படி

சென்ற இதழ் தொடர்ச்சி...

துலாம்

உங்கள் ராசிக்கு நான்காம் வீடான மாதுர் மற்றும் சுக ஸ்தானத்தில் 26-12-2020 முதல் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்துவரும் சனிபகவான், அவர் சஞ்சரிக்கும் ஸ்தானத்திற் குரிய பலன்களையும், பார்வைக்குரிய பலன் களையும் வழங்கியதால், உங்கள் நிலையில் எதிர்பாராத சங்கடங்களையும், இடையூறு களையும், அலைக்கழிப்புகளையும், மனநிலை யில் பாதிப்புகளையும் கண்டிருப்பீர்கள். இந்த நிலையில் 25-5-2022 முதல் வக்ரகதிக்கு ஆளானார் சனிபகவான்.

Advertisment

நான்காமிடத்தில் சனிபகவான் வக்ரமான பிறகு உங்கள் நிலையில் மாற்றம் தோன்றியிருக் கும். பிரச்சினைகள் விலகியிருக்கும். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் நன்மைகளை அடைந் திருப்பீர்கள். நெருக்கடிகளிலிருந்து மீண்டு வந்திருப்பீர்கள். தாயார் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகியிருக்கும். இந்த நிலையில் 10-10-2022 அன்று சனி வக்ரநிவர்த்தியாகி 29-3-2023 வரை அதே வீட்டில் சஞ்சரித்து பலன்களை வழங்கிட வுள்ளார்.

உங்கள் ராசிக்கு நான்காம் வீடான மகர ராசியில் வக்ரநிவர்த்தியாகும் சனி பகவானால் இக்காலத்தில் இடையூறுகள், அலைக் கழிப்பு, குடும்பத்தில் வீண் விரோதம், ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை, தாயின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு தாயுடனும் தாய் வழி உறவுகளுடனும் விரோதம் ஏற்பட்டு அவர்களைவிட்டு விலகவும் நேரலாம். வீடு, சொத்து, வாகனத்தால் தொல்லைகளும், உற்றார்- உறவினர்களின் பகையும் ஏற்படுவது டன், தொழிலிலும், உத்தியோகத்திலும் சங்கடங்கள், நஷ்டம், பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புண்டு. ஒருசிலருக்கு நோயின் தாக்கம் ஏற்பட்டு சுகத்திற்கு பாதிப் பும் உண்டாகும். அடிக்கடி மருத்துவரை நாடவேண்டிய நிலையும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டமில்லாமல் போகும். வேறு சிந்தனைகளுக்கு ஆட்பட்டு கல்வியை இழக்கவேண்டி வரும்.

நான்கில் சனி சஞ்சரிக்கும் இக்காலத்தில் இத்தகைய பலன்கள் விளையுமென்பது பொதுவிதி. சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் உங்கள் சத்ரு ஸ்தானத்தைப் பார்ப்பதால், மறைமுக விரோதிகளின் தொல்லைகளை இல்லாமல் செய்வீர்கள். அவர்களை வெல்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றிகாண்பீர்கள். கடன் தொல்லையை இல்லாமல் செய்வீர்கள். தொழிலை விருத்திசெய்ய திட்டமிட்டு செயல் படுவீர்கள். வேலையில்லாமல் இருப்பவர் கள் வேலை வாய்ப்பை அடைவீர்கள். வேலை யில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், எதிர் பார்த்த சலுகைகளும் கிடைக்கலாம். எதிர் பாராத பணவரவு எங்கிருந்தாவது வரும். நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வீர்கள். என்றாலும் எதிலும் நிதானத் துடன் செயல்படவேண்டும்.

Advertisment

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் ஜீவன ஸ்தானத்தில் பதிவதால், செய்துவரும் தொழி லில் கூடுதல் கவனம் வேண்டும். கவனக் குறைவாலும் அசட்டைத் தனத்தாலும் முக்கியமான காரியங் களில் தோல்வி உண்டாகலாம். பதவி உயர்வை எதிர்பார்க்க முடியாமல் போகும். மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் சோதனை உண்டாகலாம். ஜீவனத் திற்கும் இக்காலத்தில் சிரமம் உண்டாகலாம். மற்றவர்களின் தயவை எதிர்பார்க்கவேண்டிய நிலையும் ஏற்படலாம். அதனால் மனச்சோர்வு, உடல் சோர்வு, டென்ஷன் என்ற நிலை உருவாக லாம்.

சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் ஜென்ம ராசியில் பதிவதால் அலைச்சல் அதிகரிக்கும். வேலைப்பளு கூடும். உறவினர்களிடம் பகை உண்டாகும். வேலை யின் காரணமாக வெளியூரில் வசிக்க வேண்டிய நிலை ஏற்படும். குடும்பத்தை விட்டுப் பிரியவேண்டிய சூழலும் உருவாகும்.

உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு உங்களை அச்சுறுத்தக்கூடும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். எதையோ இழந்துவிட்டது போல் மனம் வேதனைப்படும். தொழிலில் கவனம் செலுத்தமுடியாமல் போவதால் எடுத்துக்கொண்ட வேலைகளை நிறைவேற்றமுடியாமல் போகும். எனவே செய்யும் தொழிலில், வேலைகளில் மிகமிக கவனம் தேவை.

சனிபகவான் உங்களுக்கு வழங்கும் சங்கடங்கள் குறைய சனிக்கிழமைதோறும் நவகிரகங்களில் அமர்ந்துள்ள சனி பகவானை நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கிவாருங்கள். விருச்சிகம்

உங்கள் ராசிக்கு மூன்றாமிடமான தைரிய- வீரிய- சகோதர ஸ்தானத்தில் 26-12-2020 முதல் சஞ்சரித்துவரும் சனிபகவான் உங்களுக்கு ஆதாயமான பலன்களையே வழங்கிவந்தார்.

உங்கள் வாழ்க்கையில் பல்வேறு நன்மை களையும், எதிர்பாராதவற்றிலும் ஆதாய நிலையையும் வழங்கிவந்ததுடன், துணிச்சலு டன் செயல்படும் மனநிலையையும், நினைத் ததை சாதித்துக்கொள்ளும் நிலையையும் வழங்கியிருப்பார். இந்த நிலையில் 25-5-2022 முதல் வக்ரகதிக்கு ஆளானார் சனிபகவான்.

மூன்றாமிடத்தில் சனி வக்ரமானபிறகு உங்கள் நிலையில் நிறையவே மாற்றங்கள் உண்டாகியிருக்கும். நீங்கள் சந்தித்துவந்த நன்மைகள் எதிர்மறையாக மாறியிருக்கும். திடீரென்று சில சோதனைகளை சந்தித்திருப் பீர்கள். பணம் பலவகையிலும் பறந்திருக்கும்.

கடன் வாங்கியவர்கள் அதைத் திருப்பித் தராமல் இழுத்தடித்திருப்பார்கள். பல வகை யிலும் நெருக்கடிகள் உண்டாகியிருக்கும். துணிச்சலுடன் செயல்பட்ட நிலை விலகி மற்றவர்களுக்கு அஞ்சியும் பதுங்கியும் வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில் 10-10-2022 அன்று மூன்றா மிடத்தில் சனி வக்ரநிவர்த்தியாகி 29-3-2023 வரை அதே வீட்டில் சஞ்சரித்து உங்களுக்குப் பலன்களை வழங்கிடவுள்ளார்.

மூன்றாமிட சனிபகவான் எத்தகைய பலன்களை வழங்குவார் என்பதை கடந்த இரண்டு வருடங்களாக அனுபவித்துத் தெரிந்திருப்பீர்கள்.

உங்கள் பொருளாதாரநிலை உயர்ந்திருக்கும். எடுத்த காரியங்கள் யாவற்றிலும் முன்னேற்றமும் வெற்றியும் ஏற்பட்டிருக்கும். தொழிலும் சிறப்படைந்திருக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவுகள் விலகியிருக்கும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். வேலையில் இருந்தவர் களுக்கு பதவி உயர்வும், குடும்பத்தில் சந்தோஷமும் செழிப்பும் உண்டாகியிருக்கும். உங்களுக்குத் தொல்லைகொடுத்த எதிரிகளை அடக்கி வெற்றிகொள்ளும் ஆற்றல் உண்டாகியிருக்கும். சமூகத்தில் மதிப்பும் கௌரவமும் அதிகரித்திருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடந்து அதற்காக செலவழித்திருப்பீர்கள். ஒருசிலருக்கு பூர்வீக சொத்து களில் இருந்த வில்லங்கம் நீங்கி அவை உங்கள் கைக்கு வந்துசேர்ந்திருக்கும். பிள்ளை களின் முன்னேற்றம் சந்தோஷத்தை உண்டாக்கியிருக்கும். இதே நன்மை களை இக்காலத்திலும் நீங்கள் அடை வீர்கள்.

சனிபகவான் இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 5, 9, 12-ஆம் இடங்களின்மீது பார்வையை செலுத்துவார். இதனால், பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமும், பித்ரு சகாய ஸ்தானமும், விரய ஸ்தானமும் சனிபகவானின் பார்வையில் சிக்கப்போகிறது.

சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் பதிவ தால் புத்திர- புத்திரிகளால் சங்கடங்களை அனுபவிக்கவேண்டிய நிலை உருவாகும். அவர் களின் செயல் உங்கள் மனதை பாதிக்கும். அவர்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் உருவாகக்கூடும். கணவன்- மனைவிக்குள் சச்சரவுகள் ஏற்படலாம். குழப்பமான நிலை உண்டாகி மனம் பெரிதும் அவதியுறும் என்பதால் இக்காலத்தில் நிதானம் மிகமிக அவசியம்.

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் பித்ரு, காரிய, சகாய ஸ்தானத்தில் பதிவதால் கணவன்- மனைவியிடையே மோதல், கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஒருசிலர் குடும்பத்தைவிட்டுப் பிரியநேர்வதுடன் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகக்கூடும். வருமானம் குறையக்கூடும். அதனால் கஷ்டம், தீய பழக்க வழக்கங்கள் உண்டாவதுடன் வெளியூர் வாசமும் ஒருசிலருக்கு உண்டாகும். ஒருசிலர் அவப் பெயருக்கும் ஆளாக நேரலாம் என்பதால், பின்விளைவுகளை எண்ணிப் பார்த்து சிந்தித்து செயல்படுவது நன்மையாகும்.

சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் விரய ஸ்தானத்தில் பதிவதால் பலவழிகளிலும் பணம் விரயமாகும். கையிருப்புகள் கரையும். வீண் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகளில் தோல்வி உண்டாகும். செயல்களில் இழுபறி ஏற்படும். மன உளைச்சல், எதிரி களால் இடையூறு, கௌரவத் திற்கு பங்கம் என்ற நிலை ஏற்படலாம் என்பதால் இக்காலத்தில் அனைத்து செயல்களிலும் சிந்தித்து செயல்படவேண்டும்.

சனிபகவானின் மூன்றாமிட சஞ்சாரப் பலன் சாதகமான நிலை யிலிருந்தாலும், அவருடைய பார்வைகள் சாதகமாக இல்லையென்பதால் இக்காலத் தில் அனைத்து வகையிலும் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும்.

சனிபகவானின் பரிபூரண அருளைப்பெற சனிக்கிழமைதோறும் வயதானவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் அன்னதானம் செய்வதும், உதவிகள் புரிவதும் நன்மையை உண்டாக்கும்.

தனுசு

உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் 26-12-2020 முதல் சஞ்சரித்துவரும் சனிபகவான் ஏழரைச் சனியின் பாதச் சனிக்குரிய பலன்களை வழங்கிவருகிறார்.

இரண்டாமிடத்தில் சஞ்சரித்து பல்வேறு குழப்பங்களையும் சங்கடங்களையும் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையினையும் வழங்கிவந்தார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாத நிலையினையும், பொருளாதாரத்தில் நெருக்கடிகளையும், எதிலும் நாட்டமற்ற நிலையையும் வழங்கிவந்த நிலையில் 25-5-2022 முதல் வக்ரகதிக்கு ஆளானார் சனிபகவான்.

சனிபகவான் வக்ரமானபிறகு உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகியிருக்கும். பொருளாதார நிலையில் இருந்த சங்கடங்கள் விலகியிருக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் நிலை உண்டாகியிருக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகி ஒற்றுமை ஏற்பட்டிருக்கும். பணவரவிலிருந்த தடைகள் விலகியிருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறி மகிழ்ச்சியை அடைந்திருப்பீர்கள். இந்த நிலையில் 10-10-2022 அன்று உங்கள் குடும்ப ஸ்தானத்தில் சனி வக்ர நிவர்த்தியாகி 29-3-2023 வரை அதேவீட்டில் பாதச்சனியாக சஞ்சரித்து பலன்களை வழங்கிடவுள்ளார்.

பொதுவாக சுய அறிவாலும் முயற்சியாலுமே எல்லாவற்றையும் அடைந்துவரும் உங்களுக்கு, பாதச்சனி எத்தகைய பலன்களை வழங்கும் என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் தெரிந்திருப்பீர்கள். இக்காலத்தில், பலவகையிலும் நெருக்கடிகள் அதிகரிக்கும். உங்களின் முயற்சிகளில் சங்கடங்கள் தோன்றும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தலைதூக்கும். ஒருசிலர் குடும்பத்தைவிட்டுப் பிரிந்துசெல்லவும் நேரும். பொருட்கள் களவு போகலாம். பொருளாதாரத்தில் இழப்பு உண்டாகலாம். பேச்சில் நிலையான தன்மை இல்லாமல் போகலாம். கொடுத்த வாக்கைத் தவறநேரலாம். வருமானம் தடைப்படும். இவையெல்லாம் தனுசு ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவானால் உண்டாகக்கூடிய பொதுப் பலன்களாகும்.

இப்பலன், உங்கள் தசாபுக்திக் கேற்ப, மற்ற கிரகங்களின் நிலைக் கேற்ப மாறக்கூடும்.

பாதச் சனிக்குரிய பலன்களை வழங்கிவரும் சனிபகவான் அவருடைய 3, 7, 10-ஆம் பார்வை களின் வழியாகவும் இக்காலத்தில் பலன்களை வழங்கிடுவார்.

சனிபகவான் அவர் சஞ்சரிக்கும் ஸ்தானத்திற்கு நன்மைகளையும், பார்க்கும் இடங்களுக்கு பாதகத்தையும் உண்டாக்குவார் என்பது பொதுவான விதியாகும். என்றா லும் ஜாதகருக்கு 3, 6, 11-ஆமிடங்களில் அவருடைய பார்வை உண்டாகும்போது அந்த இடங்களுக்கு நன்மையை வழங்குவார்.

இக்காலத்தில் சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் சுகம் மற்றும் மாதுர் ஸ்தானத் தில் பதிவதால் பெற்ற தாய் இருப்பின், அவருடைய ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். அல்லது தாயுடன் பகைமை உண்டாகும். தாய்வழி உறவினர்களின் பிரிவு ஏற்படும். வீடு, சொத்து, வாகனத்தால் தொல்லை கள் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். வேலைகள் காரணமாக அலைச்சல் திரிச்சல், நேரத்திற்கு உணவுண்ணமுடியாத- உறங்க முடியாத நிலை உண்டாகும். மொத்தத்தில் உங்கள் நிம்மதி இக்காலத்தில் பாதிக்கப்படும். சுகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல லாம்.

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் ஆயுள் ஸ்தானத்தில் பதிவதால் உடல்நிலையில் இடர்ப்பாடுகள், குடும்பத்தில் கஷ்டம், தம்பதியரிடையே கருத்து வேறுபாடு, உறவினர்களிடம் மனக்கசப்பு, முயற்சிகளில் தடை, ஊர்விட்டு ஊர்செல்லும் நிலை, பெண்களின் மாங்கல்ய காரகனுக்கு பாதிப்பு, ஆரோக்கியத்திற்குக் கேடு, சிலருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு, நெருங்கிய உறவினர் களின் பிரிவு என்ற நிலைகள் உருவாகும். சமூகத்தினரின் அவமதிப்பிற்கு உள்ளாக நேரும். தொழிலில் சிரமம் உண்டாகும்.

சனிபகவனின் பத்தாம் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தில் பதிவதால் பண பலம் உண்டாகும். சங்கடங்களிலிருந்து விடுபடக்கூடிய வழிகள் ஏற்படும். பல்வேறு நன்மைகள் உருவாகும். அதிர்ஷ்டம் கைகொடுக் கும். வருமானம் பலவழியிலும் வரக்கூடும். எதிர்பாலினரால் வசதி அதிகரிக்கும்.

அரசுத் துறையில் நன்மையுண்டாகும். வீட்டில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் இருக்கும். தொழிலில் மாற்றம், இடமாற்றம் போன்றவை நிகழக்கூடும் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

பொதுவாக லாப ஸ்தானத் தில் சனியின் பார்வை பதிவதால் இந்த நெருக்கடியான காலத்திலும் உங்களுக்குத் தேவையான வருவாய் வந்துகொண்டிருக்கும்.

29லி3-2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகின்றபோது ஏழரைச் சனி முழுமையாக முடிகிறது. அதன்காரண மாக ஏழரையாண்டுகளாக அவர் வழங்கி வந்த சங்கடங்களிலிருந்து உங்களை முழுமை யாக விடுவிப்பார் என்பதுடன், அதிகபட்ச மான நன்மைகளையும் வழங்கி, உங்கள் அந்தஸ்தையும் கௌரவத்தையும் செல்வாக்கை யும் உயர்த்துவார் என்பதால், 10-10-2022-ல் இருந்து 29-3-2023 வரை சனிபகவானை சனிக்கிழமைதோறும் வழிபட்டு வாருங்கள்; சங்கடங்கள் விலகும்; நன்மைகள் அதிகரிக்கும்.

மகரம்

உங்கள் ஜென்ம ராசியில் ஜென்மச்சனியாக 26-12-2020 முதல் சஞ்சரித்துவரும் சனிபகவான் தொடர்ந்து சங்கடமான பலன்களையே வழங்கிவந்தார்.

உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு, பொருளாதாரத்தில் தடை, தொழிலில் முன்னேற்றமில்லாத நிலை, முன்னேற் றமிருந்தாலும் அலைச்சல், பணியாளர்களால் சங்கடம், குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை, நினைத்தவற்றை நடத்தமுடியாத நிலை, எதிர்பாராத சிக்கலுக்கு ஆட்படவேண்டிய சூழல் என்பதை யெல்லாம் வழங்கிவந்தார் சனி பகவான். இந்த நிலையில்தான் 25-5-2022 முதல் வக்ரகதிக்கு ஆளானார்.

ஜென்ம ராசியில் சனிபகவான் வக்ரமான பிறகு உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகி யிருக்கும். அதுவரையில் உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்களிலிருந்து விடுபட்டிருப்பீர்கள். உடல்நிலையில் ஓரளவிற்கு மாற்றம் ஏற்பட்டி ருக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகி யிருக்கும். எதிர்பார்த்த அளவுக்குப் பணவரவு வந்து சேர்ந்திருக்கும். குடும்பத்தினரின் எதிர்காலத்திற்காக ஒருசில பணிகளை மேற்கொண்டிருப்பீர்கள். புதிய சொத்துகள் வாங்குவது, இருக்குமிடத்தைப் புதுப்பிப்பது என்று உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகி யிருக்கும்.

இந்த நிலையில்தான் 10-10-2022 அன்று சனிபகவான் வக்ரநிவர்த்தியாகி 29-3-2023 வரை ஜென்மச்சனியாக மீண்டும் பலன்களை வழங்கிடவுள்ளார்.

பொதுவாக ஜென்மச்சனியின் காலத்தில், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புண்டாகும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் சங்கடம் ஏற்படும். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். செயல்படமுடியாத அளவுக்கு உடலில் சங்கடங்கள் தோன்றும். நல்லமுறையில் பழகிவந்தவர்களும் விலகிச் செல்லக்கூடிய சூழல் உருவாகும். செய்கின்ற தொழிலில் பாதிப்பும், அதனால் வருமானத்தில் குறைவும் ஏற்படும். கூட்டாளிகள் பிரிந்துசென்று தனித்து செயல்படுவார்கள். அதனால் மனதில் இனம்புரியாத பயம் ஏற்படும். அளவுக்குமீறிய சங்கடங்களை அனுபவிக்கவேண்டி வரும். நண்பர்கள், உறவினர்கள் பகையாளிகளாக மாறுவார்கள்.

ss

இதனை நாம் கோட்சாரப் பலனின் பொதுவிதியாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு ஜாதகருக்கும் இது முழுமையான பலன்களாகிவிடாது. காரணம், அவரவர்களின் தசாபுக்திக்கேற்ப தசாநாதனும் புக்திநாதனும் பலன்களை வழங்குவதுடன், மற்ற கிரகங்களின் சஞ்சார நிலையாலும் பலன்கள் மாறுபடும்.

ஒரு ஜாதகருக்கு ஏழரைச்சனி வந்தாலும் அதிலும் மாற்றங் கள் உண்டென்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

"பண்ணறியே ஏழரைநாட்டுச் சனி வருங்காலத்தில் பகருவேன் ஜாதகருக்குப் பலனைத் தானே! முன்தடவை ஜாதகருக்குக் கஷ்டமாகும்! முயற்சி செய்தாலுந் துன்பம் மாறாதப்பா! தன்பிதா சுகப்பலனை யனுபவிப்பான்! ரெண்டாம் தடவையில் ஜாதகன் சுகமாயிருப்பான்! வன்மையாய் மூன்றாம் தடவை மரணமென்று வழுத்துவீர் ஜாதகருக்கு ஜோதிட வல்லோரே!' என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

முதல்முதலாக ஒருவருக்கு ஏழரைச்சனி வரும்போது ஜாதகருக்கு கஷ்டப்பலன்களும், ஜாதகருடைய தந்தைக்கு சுபப் பலன் களும் நடைபெறும். இரண்டாவது சுற்றில் அந்த ஜாதகருக்கு சுபப் பலன்களும்,

அவருடைய தந்தைக்கு கஷ்டப் பலன்களும் நடைபெறும். மூன்றாவது சுற்று வரும்போது ஜாதகருக்கு மரணத்தையோ மரணத்திற்கு ஒப்பான கஷ்டங்களையோ சனி பகவான் வழங்குவாராம்.

ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் அங்கிருந்து உங்கள் தைரிய- சகோதர- வீரிய ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும், ஜீவன ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

சனிபகவானின் ஸ்தானப் பலன்போலவே அவருடைய பார்வைகளுக்கும் பலனுண்டு. ஒரு ஜாதகருக்கு 3, 6, 11-ஆமிடங்களில் சனி பகவான் நன்மைகளை வழங்குவதுபோல், ஜாதகரின் 3, 6, 11-ஆமிடங்களைப் பார்க்கும்போதும் நன்மைகளை வழங்குவார்.

ஜென்மச் சனியாக சஞ்சரித்து அங்கிருந்து மூன்றாம் பார்வையாக உங்கள் சகோதர- தைரிய- வீரிய ஸ்தானத்தை பார்க்கும் சனிபகவான், உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிப்பார். மனதில் உற்சாகத்தை உண்டாக்குவார். பலவித சாதனைகளை நிகழ்த்த வைப்பார். சமூகப் பணிகளில் ஆர்வத்தை அதிகப்படுத்துவார். பொறுப்புள்ள பதவிகளில் அமர வைப்பார். அரசியலில் ஈடுபாடுடையவர்களுக்கு நல்ல பதவிகளையும் பொறுப்புகளையும் அடையவைப்பார். வாகனம் வாங்கும் யோகத்தை வழங்குவார். கட்டடப் பணியில் இருந்துவந்த குறைபாட்டை அகற்றுவார். சகோதரவழியில் பல்வேறு நன்மைகளை வழங்குவார். எடுத்த காரியத்தில் வெற்றியையும், தொழிலில் முன்னேற்றத்தையும் அளிப்பார். உங்கள் அறிவும் வீரமும் இக்காலத்தில் பளிச்சிடும். எழுத்தாற்றல் மிக்கவர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறப்பும் புகழும் உண்டாகும். செழிப்பும் சந்தோஷமும் தோன்றும்.

ஏழாம் வீடான களத்திர மற்றும் நட்பு ஸ்தானத்தைப் பார்க்கும் சனி பகவான் தீயோர் சேர்க்கைக்கு ஆளாக்குவார். கெட்ட நடத்தையுடையவருடன் தொடர்புகொள்ள நேரும். கெட்ட நடத்தையுடைய பெண்களின் சேர்க்கையும், அதனால் தொல்லை, நோய், அவமானம், பொருள்சேதம், வீண்கவலை என்ற நிலையையும் ஏற்படுத்துவார். குடும்பத்தில் கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினைகளையும் பிரிவையும் உண்டாக்குவார். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நிலையில் கவலையை அளிப்பார். ஒருசிலர் குடும்பத்தைவிட்டு விலகவேண்டிய நிலையையும் உண்டாக்குவார். அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படும். வயிறு, மார்பு சம்பந்தமான நோய்கள் உண்டாகும்.

தொழில் மற்றும் ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தைப் பார்க்கும் சனி பகவான் தொழிலில் மந்தநிலையை ஏற்படுத்துவார். செல்வாக்கு, கௌரவம் போன்றவற்றுக்கு பங்கத்தை உண்டாக்குவார். உடலில் உபாதையை ஏற்படுத்துவார். பிரச்சினைகளை அதிகரிக்கச் செய்வார். ஜீவன வகையில் சிரமத்தை உண்டாக்குவார். இட மாற்றத்தை ஏற்படுத்துவார். பொதுவில் இக்காலத்தில் மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்த பலன்களையே அளிப்பார்.

இவையெல்லாம் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவானால் உண்டாகக்கூடிய பொதுப் பலன்களாகும்.

சனிபகவானின் பாதிப்புகளிலிருந்து விடுபட சனிக்கிழமைதோறும் பசுமாட்டிற்கு அகத்திக்கீரையுடன் வாழைப்பழம், வெல்லம் வழங்கிவாருங்கள். உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் செய்துவாருங்கள். சங்கடங்கள் குறையும்.

கும்பம்

உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடமான விரய மற்றும் அயன சயன ஸ்தானத் தில் 26-12-2020 முதல் சஞ்சரித்துவரும் சனிபகவானால் பல்வேறு சங்கடங்களையும், நெருக்கடிகளையும், அந்நியர்களால் இடையூறுகளையும், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையையும், வரவுக்குமீறிய செலவுகளையும், உறவினர்களால் நிம்மதியற்ற நிலையையும், ஈடுபடும் செயல்களில் சங்கடங்களையும் தொடர்ந்து அனுபவித்து வந்திருப்பீர்கள்.

இந்த நிலையில் 25-5-2022 முதல் சனிபகவான் வக்ரமானபிறகு உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகியிருக்கும். அதுவரை யில் நீங்கள் அனுபவித்துவந்த சங்கடங்களிலிருந்து விடுபட்டிருப்பீர் கள். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரித்திருக்கும். உங்களை அவ மரியாதை செய்த நிலைமை மாறி உங்கள் வார்த்தைக்கு மற்றவர்கள் கட்டுப்படுகின்ற நிலை உருவாகியிருக்கும். நீங்கள் எதிர்பார்த்தவை நடந்திருக்கும். வருமானத்திலிருந்த தடைகள் விலகியிருக்கும். விரும்பியதை அடைந் திருப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயர்ந்திருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நிலை உருவாகியிருக் கும். மதிப்பும் மரியாதையும் அதிகரித்திருக்கும்.

இந்த நிலையில் 10-10-2022 அன்று உங்கள் அயன சயன விரய ஸ்தானத்தில் சனி பகவான் வக்ரநிவர்த்தியாகி 29-3-2023 வரை விரயச்சனியாகப் பலன்களை வழங்கிட வுள்ளார்.

மகரத்தில் சனிபகவான் சஞ்சரிக்க ஆரம்பித் ததிலிருந்து உங்களுக்கு ஏற்பட்ட பாதகமான பலன்களில் இடையில் மாற்றம் உண்டானா லும், சனி பகவானின் வக்ரநிவர்த்தியால் மீண்டும் அதே பலன்கள் தொடரக்கூடும். நீங்கள் ஈடுபடும் காரியத்தில் தேக்கமும் வருமானக் குறைவும் உண்டாகும். பொருள்

விரயமாகும். வீண் அலைச்சல், மன உளைச்சல் ஏற்படும். மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் பங்கம் உண்டாகும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், பிரிவு என்ற நிலை ஏற்படும். எதிரிகளால் இடையூறு, தீயவழி செல்வதற்கு சந்தர்ப்பம் உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகள், வேலைப்பளு அதிகரிப்பு, மனைவி, மக்களால் கவலை, பண விரயம், காரியங் கள் கைகூடாமை என்று பலன்கள் உண்டாகும்.

சனிபகவானின் பன்னிரண்டா மிட சஞ்சார நிலையால் இத்தகைய பலன்கள் உண்டாக, அவருடைய 3, 7, 10-ஆம் இடங்களின்மீதான பார்வைகளால் உண்டாகப்போகும் பலன்களைப் பார்ப்போம்.

சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கும். ஒருசிலருக்கு குடும்பத்தைவிட்டுப் பிரிந்து செல்லும் நிலையும் உருவாகும். பேச்சில் நிலையற்ற தன்மை உண்டாகும். வாக்கு தவற நேரும். வார்த்தைகளால் சங்கடங்கள் தோன்றும். சந்தோஷமும் நிம்மதியும் இல்லா மல் போகும். பொருட்கள் களவுபோகும். பொருளாதார இழப்புண்டாகும். வருமானம் தடைப்படும். செலவுகள் அதிகமாகும். குடும்பத்தினரின் நடவடிக்கையால் மனம் சங்கடப்படும்.

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்களுடைய சத்ரு ஸ்தானத்தைப் பார்ப்ப தால் உங்கள் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். மனநிலையில் ஏற்பட்ட குழப்பம் விலகி தைரியமுடன் செயல்படுவீர் கள். எதையோ இழந்ததுபோல் இருந்த நிலை யில் மாற்றம் பெற்று துணிவுடன் நடமாட ஆரம்பிப்பீர்கள். எதிரிகள் யாராக இருந்தா லும் அவர்களை இருக்குமிடம் தெரியாமல் செய்யும் நிலையை அடைவீர்கள். உங்களுக் குள் இக்காலத்தில் அபார ஆற்றல் ஏற்படும். மனதில் வைராக்கியம் உண்டாகுமென்பதால் இக்காலத்தில் எல்லா சங்கடங்களையும் சமாளித்து வாழக்கூடிய நிலை உருவாகும்.

சனிபகவானின் பத்தாம் பார்வை உங்களுடைய பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் தந்தையின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும். ஒருசிலர் தந்தையை இழக்கவேண்டிய நிலைக்கும் ஆளாவார்கள். உங்களைவிட மூத்த வர்கள் மற்றும் நெருங்கியவர் களின் வெறுப்புக்கும் பகைக் கும் ஆளாக நேரும். தொழி-ல் தடையும் வருமானத்தில் முடக்கமும் ஏற்படும். உறவினர் களின் வெறுப்பிற்கும் ஆளாவீர் கள். எதிர்பார்ப்புகள் இழுபறி யாகும்.

விரயச்சனியால் உங்களுக்கு உண்டாகும் பாதிப்பிலிருந்து விடுபட சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு கறுப்புநிற வஸ்திரம் சாற்றி நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு கறுப்பு உளுந்து தானமளிப்பதுடன் வயதானவர்களுக்கு உணவு வழங்கிவர சங்கடங்கள் குறையும். நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம்

உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் 26-12-2020 முதல் சஞ்சரித்துவரும் சனிபகவான் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு நன்மைகளை வழங்கிவந்துள்ளார்.

சனிபகவான் மூன்று, ஆறு, பதினொன்றாம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த வீட்டிற்குரிய பலன்களை யோகப் பலன்களாக வழங்கி வாழ்வின் மேல்மட்டத்திற்கு ஜாதக ரைக் கொண்டுசெல்வார்.

பதினொன்றாம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் செயல்களில் லாபத்தையும், முயற்சி களில் வெற்றிகளையும், குடும்பத்தில் நிம்மதி யையும், நட்புகளால் சந்தோஷத்தையும், எதிர் பார்த்தவற்றில் ஆதாயத்தையும் வழங்கி வந்தார் சனிபகவான்.

இந்த நிலையில் 25-5-2022 முதல் அவர் வக்ரமானபிறகு உங்கள் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். அதுவரை நடந்து பலன்கள் எதிர்மறையாக மாறியிருக்கும். உங்கள் எதிர் பார்ப்புகள் நிறைவேறாமல் போயிருக்கும். உடல் நிலையும், மன நிலையும் பாதிக்கப்பட் டிருக்கும். எதையோ இழந்ததுபோல் உங்கள் மனம் அவதிக்குள்ளாகி இருக்கும்.

இந்த நிலையில் 10-10-2022 அன்று உங்கள் லாப ஸ்தானத்தில் சனிபகவான் வக்ரநிவர்த்தியாகி 29-3-2023 வரை அதே வீட்டில் சஞ்சரித்து லாப ஸ்தானத்திற்குரிய பலன்களை வழங்கிடவுள்ளார்.

இக்காலத்தில் பல்வேறு நன்மைகளை அடையப்போகிறீர்கள். தொழில்மூலம் சிறப் பான வருமானம் உண்டாகும். வீட்டில், மகிழ்ச்சி, ஆனந்தம் என்ற நிலை ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். எதிர்பாலினரால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கூடிவரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு புதிய துணை அமையும். ஒருசிலருக்கு தொழில் மாற்றம், இடமாற்றம், வீடுமாற்றம், ஊர்மாற்றம் என்று மாற்றங்கள் உண்டாகும். அதனால் நன்மைகள் ஏற்படும். லாபமும் யோகமும் கூடி பணம், பதவியென்று உங்கள் வாழ்க்கை செழிப்பாகும்.

பதினொன்றாம் வீட்டில் சஞ்சரித்து அந்து வீட்டிற்குரிய பலன்களை யோகப் பலன்களாக வழங்கப்போகும் சனிபகவான் இதே காலத்தில் உங்கள் ஜென்ம ராசியையும், பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தையும், ஆயுள் ஸ்தானத்தையும் தனது 3, 7, 10-ஆம் பார்வைகளால் பார்த்திடவுள்ளார். சனி பகவானின் பார்வை சங்கடத்தை உண்டாக்கும் என்பது பொதுவிதி.

தன்னுடைய மூன்றாம் பார்வையாக உங்களின் ஜென்ம ராசியைப் பார்க்கும் சனிபகவானால் வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். அதன்காரணமாக உடல்நலனில் உபாதை உண்டாகும். ஒருசிலர் பணி நிமித்தமாக குடும்பத்தைவிட்டு வெளியூர் செல்லும் நிலையும் உண்டாகலாம். மனதும் உடலும் அதன் தேவைகளுக்காக கிடைக்காத ஒன்றைத் தேடலாம். வாகனங் களில் செல்லும்போது எதிர்பாராத சங்கடங்களை அனுபவிக்க நேரிடலாம். பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகலாம்.

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்களின் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் புத்திரர்- புத்திரிகளால் சங்கடங் கள் உண்டாகலாம். வேதனையை அனுபவிக்க நேரிடலாம். குடும்பத்தில் கலகமும் சண்டை, சச்சரவும் உண்டாகலாம். மனம் ஒருநிலையில் இல்லாமல் போகலாம். குழப்பத்தில் சிக்கித் தவிக்க நேரலாம். வேதனைதரும் நிகழ்ச்சி களால் அதிர்ச்சிக்கு ஆளாகலாம்.

சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் ஆயுள் ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்தவேண்டிய நிலை உண்டாகும். பெண்களின் மாங்கல்ய ஸ்தானம் இதுவென்பதால் கணவனின் நிலையில் சங்கடங்கள் தோன்றலாம். உங்கள் செல்வாக்கிற்கு பல்வேறு இடர்ப்பாடுகளும், தம்பதியரிடையே கருத்து வேறுபாடும், உறவினர்களிடம் பகையும் உண்டாகலாம்.

இவையெல்லாம் பதினொன்றாமிட சனி பகவானால் உண்டாகப்போகும் பொதுப் பலன்களாகும். உங்கள் சுய ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலைக்கேற் பவும், தசாபுக்தி நாதர்களின் பலத்திற்கேற்பவும் இப்பலன்கள் மாறுபடும்.

2023 மார்ச் 29 அன்று உங்க ளுக்கு ஏழரைச்சனி தொடங்கினா லும், இரண்டாம் சுற்றை சந்திக்கப் போகிறவர்களுக்கு பொங்குசனியாக யோகப் பலன் களை வழங்கிடவுள்ளார் சனிபகவான்.

உங்களுக்கு லாபாதிபதியும் விரயாதி பதியும் சனிபகவானே என்பதால், தொடர்ந்து அவரை வழிபட்டுவர நன்மைகள் அதிகரிக் கும்.

செல்: 94443 93717

bala211022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe