சென்ற இதழ்வரை விருச்சிக லக்னம் 1-ஆம் பாவம்வரை பார்த்தோம். இனி மற்ற பாவங்கள் பற்றிக் காணலாம்.

2-ஆம் பாவம்

லக்னத்திற்கு 2-ஆம் பாவத்தைக்கொண்டு பொருளாதார நிலை, குடும்ப ஒற்றுமை, வாக்கு, பேச்சாற்றல், வலது கண் பார்வை ஆகியவற்றைத் தெளிவாக அறியலாம்.

விருச்சிக லக்னத்திற்கு தனகாரகன் குருவே தன ஸ்தானாதிபதியாகும். குரு தனக்கு நட்பு கிரகமான சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற கிரகச் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்றால் சிறப்பான பொருளாதார நிலை உண்டாகும். குரு தனித்தில்லாமல் கிரகச் சேர்க்கையுடன் அமைந்தால் செல்வம், செல்வாக் குடன் வாழக்கூடிய அற்புத அமைப்பு உண்டாகும்.

Advertisment

aadகுரு ஆட்சி, உச்சம் பெற்று, நட்பு கிரகச் சேர்க்கையுடன் இருந்தால், வாழ்நாள் முழுவதும் தாராளமான தனச்சேர்க்கை உண்டாவது மட்டுமின்றி, எந்த ஒரு பணக் கஷ்டமும் இல்லாமல் வசதிவாய்ப்புடன் வாழக்கூடிய அற்புத யோகம் அமையும்.

குரு பலம்பெற்று சூரியன் சேர்க்கை பெற் றால், பூர்வீகரீதியாகவும், தந்தைவழியிலும் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் உண்டாகும். குரு- சனி, சந்திரன் சேர்க்கைப் பெற்றால் தாய்வழியிலும், குரு, சுக்கிரன் சேர்க்கை பெற்றால் பெண்கள் மற்றும் மனைவிவழியிலும் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் உண்டாகும்.

2-ல் சுபகிரகங்கள் அமைவதும், குருவுக்கு 2-ஆம் வீட்டில் சுபகிரகங்கள் அமையப் பெறுவதும் தாராளமான தனச்சேர்க்கையை உண்டாக்கும். குரு வக்ரம் பெற்றாலோ, பலமிழந்து பாவகிரகச் சேர்க்கை பெற் றாலோ, சனி, ராகு- கேது போன்ற கிரகச் சேர்க்கை பெற்றோ இருந்தாலும், 2-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் பொருளாதாரரீதியாக கடுமை யான சங்கடங்கள் உண்டாகும். குரு 6, 8, 12-ல் மறைவதும், குருவுக்கு இருபுறமும் பாவிகள் அமைவதும், சனி பார்வை பெறு வதும் சிறப்பான அமைப்பல்ல.

Advertisment

2-ஆம் வீடு வாக்கு ஸ்தானம் என்பதால், 2-ஆம் அதிபதி குரு, கல்விக்காரகன் புதனின் சேர்க்கை பெற்றாலும், 2-ல் புதன், குரு அமையப்பெற்றாலும் சிறப்பான பேச்சாற்றல், வாக்கால்- பேச்சால் முன்னேறும் அமைப்புண்டாகும். குரு, லக்னாதிபதி செவ்வாய் சேர்க்கை பெற்று, இருவரும் பலம்பெற்று அமையப்பெற்றால் பூமி, மனைமூலம் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் உண்டாகும்.

2-ஆம் வீட்டில் குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய சுபகிரகங்கள் அமையப் பெற்றால், அமைதியான பேச்சாற்றல், நல்ல குடும்ப வாழ்க்கை உண்டாகும். 2-ல் செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்றால் வீண்முன்கோபம், எதிலும் அதிகாரத் துடன் பேசச்கூடிய அமைப்பு, மற்றவர்களை அதிகாரம் செய்யும் அமைப்புண்டாகும். சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் அமையப்பெற் றால் தேவையற்ற பேச்சு, குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். 2-ஆம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவகிரகங்கள் அமையப்பெற் றால், கடுமையான வார்த்தைகளைப் பேசும் சுபாவமும், பேச்சில் விஷத்தன்மையும் இருக்கும்.

2-ஆம் வீட்டைக்கொண்டு வலது கண்ணைப் பற்றிக் கூறலாம். 2-ல் சூரியன், சுக்கிரன் அமையப் பெற்றாலும், 2-ல் சனி, ராகு, செவ்வாய் போன்ற கிரகங்கள் அமையப்பெற்றாலும், 8-ல் சனி, ராகு, செவ்வாய் போன்ற பாவகிரகங்கள் அமையப் பெற்று 2-ஆம் வீட்டைப் பார்வை செய்தாலும், குரு நீசம்பெற்று சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும், 6, 12-ல் சனி, ராகு, சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்கள் பாவத்தன்மை யுடன் அமையப்பெற்றாலும் கண்களில் பாதிப் புண்டாகும். மேற்கூறிய பாவகிரகங்கள் 2, 6, 8, 12-ல் அமையப்பெற்று அதன் தசாபுக்தி வரும் காலங்களில் கண்களில் பாதிப்புண்டாகும்.

3-ஆம் பாவம்

மூன்றாம் வீட்டைக்கொண்டு சுயமுயற்சி, இளைய சகோதர அமைப்பு, வீரம், விவேகம் பற்றித் தெளிவாக அறியலாம்.

விருச்சிக லக்னத்திற்கு 3-ஆம் வீடானது சனியின் வீடான மகர ராசியாகும். லக்னாதிபதி செவ்வாய்க்கு சனி பகை கிரகம் என்பதால், உடன் பிறப்புகளிடம் ஒற்றுமை சுமாராக இருக்கும். 3-ஆம் வீட்டில் செவ்வாய் உச்சம் பெற்று அமை யப்பெற்று, சனி கேந்திர, திரிகோணங்களில் சுபர் பார்வையுடன் அமையப்பெற்றால் இளைய சகோதரரீதியாக அனுகூலம் மிகுந்த பலன்கள் உண்டாகும். சனி ஆட்சி, உச்சம் பெற்றாலும், குரு, சூரியன், செவ்வாய் போன்ற ஆண் கிரகச் சேர்க்கை பெற்று பலத்துடன் அமையப்பெற் றாலும் இளைய சகோதர பாக்கியமும், இளைய சகோதரவழியில் அனுகூலங்களும் உண்டாகும். சனி- சுக்கிரன், சந்திரன் போன்ற பெண் கிரகச் சேர்க்கை பெற்றாலும், 3-ஆம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் அமையப்பெற்றாலும் இளைய சகோதரி யோகம் உண்டாகும்.

சனி- ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற் றிருந்தாலும், பலமிழந்து அமையப்பெற்றிருந் தாலும், புதன் வீட்டில் அமையப் பெற்றிருந் தாலும், 3-ஆம் வீட்டில் ராகு, கேது போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும் இளைய சகோதர தோஷமாகும். இதனால் இளைய சகோதரர் இல்லாத அமைப்பு உண்டாகும். சகோதரகாரகன் செவ்வாய் நீசம் பெற்றாலும், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற் றாலும் சகோதர தோஷம் உண்டாகும்.

சனி, செவ்வாய் இருபாவிகளுக்கிடையே அமைவது, சுபர் பார்வையின்றி இருப்பது சகோதர தோஷமாகும். சனி- செவ்வாய், ராகு சேர்க்கை பெறுவது நல்லதல்ல. இதனால் உடன்பிறந்தவர்களை இழக்கநேரிடும். செவ்வாய் பலம்பெற்று சனி- சுக்கிரன் சேர்க்கை யுடன் பலமாக அமையப்பெற்றால், உடன் பிறந்தவர்களுடன் கூட்டுசேர்ந்து தொழில் செய்யக்கூடிய அற்புத அமைப்பு உண்டாகும்.

3-ஆம் வீடு சகோதர ஸ்தானம் மட்டுமின்றி முயற்சி ஸ்தானமுமாகும். உபஜெய ஸ்தானம் என்பதால், 3-ஆம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு, சூரியன் போன்ற பாவகிரகங்கள் அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தாலும், நட்பு கிரக சாரம் பெற்றாலும் முயற்சிகளில் வெற்றி, அனுகூலங்கள், எதிலும் தனித்து விளங்கக் கூடிய அமைப்பு உண்டாகும்.

3-ஆம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் அமையப் பெற்றாலும், சனி- சுக்கிரன், சந்திரன் சேர்க்கை பெற்று பலம்பெற்றாலும் கலை, இசை, நடனம், நாட்டியம் போன்றவற்றில் அதிக நாட்டம் உண்டாகும்.

4-ஆம் பாவம்

நான்காம் பாவத்தைக்கொண்டு வீடு, வாகனயோகம், கல்வி, தாய், சுகபோக வாழ்வு பற்றி அறியலாம்.

விருச்சிக லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி சனி. வீடு, வாகனக்காரகன் சுக்கிரன். இருவரும் பலம் பெறுவது சிறப்பான பலனைத் தரும். சுக்கிரன்- சனி இருவரும் ஆட்சி, உச்சம் பெற்றாலும், கேந்திர, திரிகோணங்களில் பலம்பெற்று அமையப்பெற்றாலும், நட்பு கிரகமான புதன் சேர்க்கை பெற்றாலும், சனி தனக்கு நட்பு கிரகமான புதன், சுக்கிரன் வீடான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் மற்றும் தனது வீடான மகரம், கும்பத்தில் அமையப்பெற்று சுபர் பார்வை பெற்றாலும் சொந்த வீடு யோகம், வாகன யோகம் உண்டாகும்.

சனி- சுக்கிரன் பலம்பெற்று குரு பார்வை பெறுவது மிகவும் விஷேசமான அமைப் பாகும். சனிக்கு 4-ஆம் அதிபதி, சந்திரனுக்கு 4-ஆம் அதிபதி, சுக்கிரனுக்கு 4-ஆம் அதிபதி பலம்பெறுவது மிகவும் உத்தமம். 4-ஆம் வீட்டில் சுபகிரகங்கள் அமையப்பெறுவதன்மூலம் அசையா சொத்து யோகம் உண்டாகும். சனி- செவ்வாய் சேர்க்கை பெற்று நட்பு கிரக வீட்டில் அமையப்பெற்று, சுபர் பார்வையுடன் அமையப்பெற்றால் பூமி, மனை யோகம் உண்டாகும். செவ்வாய் பூமிகாரகன் மட்டு மின்றி லக்னாதிபதி என்பதால், செவ்வாய் பலம்பெறுவதன்மூலம் பூமியோகம் பலமாக இருக்கும்.

சுக்கிரன் வாகனத்திற்குக் காரகன் என்பதால், சுக்கிரன் பலம்பெற்றால் வாகனங் கள் சிறப்பாக அமையும். சுக்கிரன், சனி சேர்க்கை பெற்று, சனி பலம்பெற்றால் பழைய வாகனங்களை வாங்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.

4-ஆம் வீட்டில் ராகு, கேது போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும், 4-ஆம் அதிபதி சனி நீசம்- பகை பெற்று அமையப்பெற் றாலும் சொந்த வீடு யோகம், மனையோகம் அமைவதற்கு இடையூறுகள் ஏற்படும். சனி தனக்கு பகை கிரகமான சூரியன், செவ்வாய், ராகு போன்ற கிரகச் சேர்க்கை பெற்று, சுபர் பார்வையின்றி அமையப்பெற்றால் சொந்த வீடு யோகம் அமைவதற்கு இடையூறுகள் ஏற்படும்.

சூரியன், செவ்வாய், ராகு 4-ல் அமையப் பெற்றால் பூமி, மனை, வீடு யோகம் இருந்தாலும், அதன்மூலம் வீண் வம்பு வழக்குகள், பிரச்சினைகள் உண்டாகும். சனி, சுக்கிரன் பலமிழந்து 6, 8, 12-ல் மறைவு பெற்றால் சொந்த வீடு யோகம் இருக்காது. வாகனங்கள் அமைவதற்கும் இடையூறுகள் ஏற்படும். சனி, குரு, சூரியன் சேர்க்கை பெற்று பலம்பெற்றால் பூர்வீகரீதியாக சொந்த வீடு யோகம், சொத்து யோகம் உண்டாகும்.

குரு 4-ஆம் வீட்டைப் பார்வைசெய்து, சுக்கிரன் பலம்பெற்றிருந்தால் மாளிகை போன்ற வீடு யோகம் உண்டாகும். 4-ஆம் வீடும், 4-ஆம் அதிபதியும் பாவிகள் சேர்க்கை மற்றும் பாவிகள் பார்வை இல்லாமலிருந்தால் அசையா சொத்து யோகம் உண்டாவது மட்டுமின்றி சுகபோக வாழ்க்கை உண்டாகும்.

சனி சுபர் வீட்டில் அமையப்பெற்று, சந்திரன், கேந்திர, திரிகோணங்களில் பலம்பெற்று அமையப்பெற்றால் தாய்க்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும். சனி, சந்திரன், சந்திரனுக்கு 4-ஆம் அதிபதி பலத்துடன் அமைவது தாய்க்கு நற்பலனை உண்டாக்கும். 4-ல் ராகு, கேது போன்ற பாவிகள் அமைவதும், சனி, சந்திரன் பலமிழந்திருப்பதும், சந்திரனின் வீடான கடகத்தில் பாவிகள் அமையப்பெறுவதும் தாய்க்கு சோதனை, தாய்வழியில் நிம்மதியில்லாத நிலை உண்டாகும். விருச்சிக லக்னத்திற்கு 9-ஆம் இடம் பாதக ஸ்தானம் ஆகும். 9-ஆம் வீடு சந்திரனின் வீடான கடகம் என்பதால், தாய்வழியில் அனுகூலமான பலன் கள் ஏற்படாது.

கல்வி ஸ்தானாதிபதி சனி ஆட்சி, உச்சம் பெற்று, குரு போன்ற சுபகிரகப் பார்வைப் பெற்று அமையப்பெற்றால், தொழில்நுட்பக் கல்வி, இயந்திரத் தொடர்புடைய கல்வியில் தேர்ச்சி யடையும் யோகம் உண்டாகும். சனி- சூரியன், செவ்வாய் போன்ற கிரகச் சேர்க்கை பெற்று, 4-ல் சூரியன், செவ்வாய் அமையப்பெற்றால் பொறியியல் தொடர்புடைய கல்வி யோகம் உண்டாகும்.

சனி பலம் பெற்று சந்திரன், ராகு, கேது போன்ற கிரகச் சேர்க்கை பெற்றால், மருந்து, மருத்துவத் தொடர்புடைய கல்வியும், சனி- குரு, செவ்வாய் சேர்க்கை பெற்றால் நிர்வாகத் தொடர்புடைய கல்வியும், சனி- குரு சேர்க்கை பெற்றால் சட்டக் கல்வியும், 4-ல் புதன் பலம்பெற்று அமையப்பெற்றால் கணக்கு, கம்ப்யூட்டர், வணிகவியல் தொடர்புடைய கல்வியும், சனி, சுக்கிரன் சேர்க்கை பெற்றால் எதையும் விவாதம்செய்யும் வலிமை, கலை தொடர்புடைய கல்வியும் உண்டாகும். 4-ல் பாவிகள் அமையப்பெற்றாலும், 4-ஆம் அதிபதி சனி பாவிகள் சேர்க்கை பெற்றாலும்- வக்ரம் பெற்றாலும் எதையும் அரைகுறையாக கற்பவராக இருப்பார். சனி- சந்திரன், கேது சேர்க்கை பெற்று உடன் செவ்வாய் இணைந்திருந்தால், அறுவை சிகிச்சை தொடர்புடைய கல்வி யோகம் உண்டாகும். சனி- புதன் சேர்க்கை பெற் றால் தொழில்நுட்பக் கல்வியில் சாதனைசெய்யக்கூடிய அமைப்பு உண்டாகும்.

4-ஆம் வீட்டை குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்வதும், சனி தனக்கு நட்பு கிரகமான புதன், சுக்கிரன் சேர்க்கை பெறுவதும், சுபர் பார்வையுடன் இருப்பதும் நற்பலனை உண்டாக்கும். சனி ஆட்சி, உச்சம் பெறுவது மட்டுமின்றி, லக்னத்திற்கு 2, 5-க்கு அதிபதியான குருவும் பலம்பெற்றிருந்தால், கல்வியில் சாதனை செய்வது மட்டுமின்றி, ஆராய்ச்சி செய்து பட்டம் பெறக்கூடிய அமைப்பு உண்டாகும்.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)

செல்: 72001 63001

__________________

மஹிஷாசுர மர்த்தினிக்கு 108 கிலோ குங்குமாபிஷேகம்!

வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 16-9-2019 திங்கட்கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை சூலினிதுர்க்கா ஹோமத்துடன் மஹிஷாசுர மர்த்தினிக்கு 108 கிலோ குங்குமத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.

குங்குமம் அனைவரையும் வசீகரிக்கச் செய்து, தெய்வீகத்தன்மையுடன் சுபத்தன்மை ஏற்படுத்தும். மருத்துவ குணமுள்ள குங்குமம் கொண்டு அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை செய்வதால் முகம், உடல் மற்றும் மனதுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். தீய சக்திகள் விலகும். ரத்தம் சம்பந்தமான நோய்கள் விலகும்.

நெற்றியில் குங்குமம் வைப்பதால் நரம்புகளின் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும். குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாக்கும். இது பெண்களுக்கு நல்லது. புருவத்தின் மத்தி சக்தி குவியுமிடம் சுழுமுனை, ஞானக்கண் என அழைக்கப்படுகிறது. இது அறிவுக்கு அப்பாற்பட்டு இன்னொரு நுண்ணறிவை எட்டவைக்கும். ஆற்றலை வெளிப்படுத்தும் ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை நெற்றிப் பொட்டில்தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு வெளிப்படக் காரணமாக அமைவதும் இந்த ஆக்ஞை சக்கரம்தான். இதைத் தூண்டிவிடும் பணியை குங்குமம் செய்யும். இத்தகைய சிறப்புவாய்ந்த குங்குமத்தைக்கொண்டு ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்த யாகத்தில் கலந்துகொள்வதால் சத்ரு, ரோகம், கடன் ஆகியவற்றால் உண்டாகும் பிரச்சினைகள், ஆவி, பில்லி, சூனியம், ஏவல் முதலான அமானுஷ்ய சக்திகளால் உண்டாகும் தொல்லைகள், சித்தப் பிரமை, பரம்பரையில் ஏற்பட்ட சாபங்கள், நாக தோஷம், புத்திர தோஷம் விலகும்.

மேலும் விவரங்களுக்கு:

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை- 632 513. வேலூர் மாவட்டம், தொலைபேசி: 04172- 230033, 230274.

அலைபேசி: 94433 30203. Email : [email protected]