மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் 9-ஆம் பாவங்கள் வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.
மிதுன லக்னம் 10-ஆம் பாவம் ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவத்தைக் கொண்டு தொழில், உத்தியோகத்தைப் பற்றித் தெளிவாக அறியலாம்.
மிதுன லக்னத்திற்கு ஜீவன ஸ்தானாதிபதி குரு ஆட்சி பெற்று வலுப்பெற்றால் செல்வம், செல்வாக்கு, உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் மற்றும் மற்றவர்களை வழிநடத்துவதிலும் ஆலோசனை கூறுவதிலும் கைதேர்ந்தவர்களாக விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். வங்கியில் பணிபுரியும் அமைப்பு, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இடங்களில் பணிபுரி யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். தனகாரகன் குரு என்றாலும் மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதி என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.
கூட்டுத்தொழிலிலில் ஈடுபடாமல் தனித்து செயல்பட்டால்தான் லாபத்தைப் பெறமுடியும். 10-ஆம் அதிபதி குரு, சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்றாலும், 10-ல் சூரியன், செவ்வாய் அமையப் பெற்று திக்பலம் பெற்றாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் கௌரவமானப் பதவிகள் வகிக்கக்கூடிய யோகம், சிறந்த நிர்வாகியாக விளங்கி பலரை வழிநடத்தும் அமைப்பு உண்டாகும்.
சனி பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகளை
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் 9-ஆம் பாவங்கள் வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.
மிதுன லக்னம் 10-ஆம் பாவம் ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவத்தைக் கொண்டு தொழில், உத்தியோகத்தைப் பற்றித் தெளிவாக அறியலாம்.
மிதுன லக்னத்திற்கு ஜீவன ஸ்தானாதிபதி குரு ஆட்சி பெற்று வலுப்பெற்றால் செல்வம், செல்வாக்கு, உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் மற்றும் மற்றவர்களை வழிநடத்துவதிலும் ஆலோசனை கூறுவதிலும் கைதேர்ந்தவர்களாக விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். வங்கியில் பணிபுரியும் அமைப்பு, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இடங்களில் பணிபுரி யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். தனகாரகன் குரு என்றாலும் மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதி என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.
கூட்டுத்தொழிலிலில் ஈடுபடாமல் தனித்து செயல்பட்டால்தான் லாபத்தைப் பெறமுடியும். 10-ஆம் அதிபதி குரு, சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்றாலும், 10-ல் சூரியன், செவ்வாய் அமையப் பெற்று திக்பலம் பெற்றாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் கௌரவமானப் பதவிகள் வகிக்கக்கூடிய யோகம், சிறந்த நிர்வாகியாக விளங்கி பலரை வழிநடத்தும் அமைப்பு உண்டாகும்.
சனி பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகளை வகிக்கும் உன்னத அமைப்பு உண்டாகும். 10-ல் அமையக்கூடிய சூரியன், செவ்வாயுடன், புதன் சேர்க்கைப் பெற்றால் பொறியியல் துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு, கம்ப்யூட்டர் துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.
குரு- செவ்வாய் சேர்க்கைப் பெற்று பலமாக இருந்தால் பூமி, மனை, ரியல் எஸ்டேட் துறைகளில் அனுகூலங்கள் உண்டாகி சம்பாதிக்கும் வாய்ப்பு, அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு உண்டாகும்.
குரு- சந்திரனுடன் சேர்க்கைப் பெற்றால் ஏஜென்ஸி, கமிஷன், உணவு வகைகள், நீர் தொடர்புடைய தொழில்களில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். குருவுடன் சந்திரன் இணைந்து உடன் புதன் அல்லது செவ்வாய் இருந்தால் கடல்சார்ந்த துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு, உணவகம் நடத்தும் வாய்ப்பு அமையும்.
குரு- புதனுடன் சேர்க்கைப் பெற்று பலமாக இருந்தால் சிறந்த அறிவாற்றலுடன் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, மற்றவர்களை வழிநடத்தக்கூடிய உன்னதத் திறன், வழக்கறிஞராகக் கூடிய அமைப்பு, பத்திரிகைத்துறை, எழுத்துத்துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு உண்டாகும்.
குரு- சுக்கிரனுடன் சேர்க்கைப் பெற்று 10-ல் இருந்தால் ஆடை, ஆபரணத்தொழில்கள், கலை சம்பந்தப்பட்ட பொருட்களை வியா பாரம் செய்வது, பெண்கள் உபயோகிக்கக்கூடிய பொருட்கள் விற்பனை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குரு- சுக்கிரனுடன் சனியும் சேர்க் கைப் பெற்றால் வாகனங்கள், டிராவல்ஸ் தொடர் புடைய தொழில், வெளியூர், வெளிநாட்டுத் தொடர் புடைய தொழில்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
குரு- சுக்கிரனுடன் புதன் அல்லது சந்திரன் சேர்க் கைப் பெற்றால் கலைத்துறை, சினிமாத்துறை, சினிமா சார்ந்த உட்பிரி வுத்துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து அதன்மூலம் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். வீடு, பங்களாக்களைக் கட்டி விற்பனை செய்யும் வாய்ப்பு உண்டாகும். செவ் வாய், ராகு அல்லது கேது சேர்க் கைப் பெற்றால் நவீனகரமான பொருட்களை வியாபாரம் செய்வது, தகவல் தொடர்புத்துறை, மருந்து, ரசாயனம் தொடர்புடைய தொழில் களில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
குரு பலவீனமாக இருந்து சனி, ராகு போன்ற பாவகிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் நிலையான வருமானங்களை அடையக்கூடிய தொழில்கள் அமை யாமல் கஷ்ட ஜீவனம் அடைய நேரிடும்.
சனி, ராகு சேர்க்கை 10-ஆம் வீட்டில் அமைந்து சுபர் பார்வையின்றி இருந்தால் சட்டச் சிக்கல்கள் நிறைந்த தொழில்கள் மூலம் சம்பாதிக்க நேரிடும்.
11-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு லாப ஸ்தானமான 11-ஆம் பாவத்தைக் கொண்டு தனலாபம், மூத்த உடன் பிறப்பு பற்றி அறியலாம்.
மிதுன லக்னத்திற்கு 11-ஆம் அதிபதி செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றோ, கேந்திர திரிகோணத்தில் அமையப்பெற்றோ, குரு பார்வை மற்றும் சேர்க்கைப் பெற்றோ இருந் தால் தாராளமான தனவரவு, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். செவ்வாய்- குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகச் சேர்க்கையுடன் வலுப் பெற்று அமையப்பெற்றால் மனைவி வழியில் தனவரவு உண்டாகும். செவ்வாய், குரு பலவீனமாக இருந்தாலோ, வக்கிரம் பெற்றிருந்தாலோ என்னதான் பாடுபட்டாலும் அதற்கான பலன்களையும், லாபங்களையும் அடைய இடையூறுகள் ஏற்படும்.
லாப ஸ்தானத்தில் குரு, சந்திரன், சுக்கிரன், புதன் போன்ற சுபகிரகங் கள் அமையப்பெற்றால் பொருளாதார ரீதியாக ஏற்றமிகு பலன் உண்டாகும்.
சகோதரகாரகன் செவ்வாயே 11-ஆம் வீட்டின் அதிபதி ஆகும். 11-ஆம் வீடு தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களைக் குறிக்கும் கிரகமான சூரியனுக்கு உச்ச வீடு ஆகும். 11-ஆம் வீட்டில் செவ்வாய், சூரியன், குரு சேர்க்கை பெற்று வலுப்பெற்றிருந்தால் மூத்த சகோதர யோகமும், சகோதரவழியில் பொருளா தார ரீதியாக லாபமும் உண்டாகும். 11-ஆம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் அமையப்பெற்று, செவ்வாய் பெண் ராசியில் அமையப்பெற்றால் மூத்த சகோதரி யோகம் உண்டாகும்.
11-ஆம் வீட்டில் ராகு, கேது, சனி அமையப்பெற்றால் சகோதர சிறப்பு இல்லாவிட்டாலும், பொருளாதார நிலையில் மேன்மையும், எதிலும் வெற்றியும் கிட்டும்.
12-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 12-ஆம் வீட்டைக்கொண்டு விரயம், அயன, சயன, போகத்தைப் பற்றியும், அயல்நாட்டுப் பயணம் பற்றியும் கூறலாம்.
மிதுன லக்னத்திற்கு 12-ஆம் அதிபதியான சுக்கிரன்-சனி சேர்க்கையுடன் பலம் பெற்றாலும், சனி-சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றாலும், சந்திரன் 12-ல் உச்சம் அமையப்பெற்று சனி- சுக்கிரன் இணைந் திருந்தாலும், 12-ஆம் வீட்டில் ராகு இருந்தாலும் அயல்நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
12-ஆம் வீட்டில் சுபகிரகங்கள் அமையப்பெற் றாலும், சுபர் பார்வை செய்தாலும் மன அமைதி, நிம்மதி யான உறக்கம், சிறப்பான கட்டில் சுகவாழ்வு உண்டாகும்.
செய்யும் செலவுகள் சுபச் செலவுகளாக இருக்கும். சுக்கிரனின் வீடான 12-ல் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும், சுக்கிரன் 6, 8, 12-ல் அமையப் பெற்றாலும், பாவிகள் சேர்க்கைப் பெற்று வலுவிழந் திருந்தாலும் வீண்விரயம், பெண்களால் நிம்மதிக்குறைவு ஏற்படும்.சுக்கிரன், சூரியன் இருவரும் பலமிழந்தோ, சனி- ராகுவுடன் இணைந்தோ 6, 8, 12-ல் இருந்தால் கண்களில் பாதிப்பு உண்டாகும்.
12-ல் பாவிகள் அமையப்பெற்று சுக்கிரன் பலவீன மாக இருந்தாலும், வக்ரம் பெற்றாலும் நிம்மதிக்குறைவு, உறக்கமின்மை, தேவையற்ற மனக்குழப்பம், இல்வாழ் வில் ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகும்.
(அடுத்த இதழில் கடக லக்னம்...)
செல்: 72001 63001