மேஷம்
மேஷ லக்னக்காரர்கள் ஜாதகத்தில் 5-க்குரிய சூரியன் 6, 8, 12-ல் மறைந்தால் ஆண் சந்ததி தடையாகும்.
செவ்வாய் 5-ல், சூரியன், குரு 8-ல் இருந்தால் நீண்ட நாட்களுக்குப்பின் வயோதிகத்தில் ஆண் குழந்தை பிறக்கும்.
5-க்குடையவர்- ராகு, கேது, சனி போன்றவராக இருக்கப்பெற்றால் சுமார் 45 வயதுக்குமேல், சிலருக்கு இருமுறை கருச்சிதைவுக்குப்பின் குழந்தையை எதிர்பார்க்கலாம்.
கருத்தரிப்பை நாடும் நபரின் ஜாதகத்தில் 5-ல் செவ்வாயும் புதனும் இணைந்து காணப்பட்டால் இரட்டைக் குழந்தை பிறக் கும்.
மங்கையரின் ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் 6 அல்லது 4-ல் காணப்பட்டால் குழந்தை பிறப்பது கேள்விக்குறிதான்.
ரிஷபம்
ரிஷப லக்னத்தாருக்கு ராகு மற்றும் செவ்வாய் 11-லும், சனி, சூரியன் லக்னத் திலும், சுக்கிரன் மேஷத்திலும் இருந்தால், குழந்தை பிறந்ததும் செவிப்புலன் (காது) கேட்கிறதா என சோதிக்கவேண்டும்.
ராகு 5-லும் அதற்கு 7-ல் கேதுவும் இருக்கப்பெற்று, காலசர்ப்பக் கெடுதலால் பிரசவகால சிக்கல் வரும். பரிகாரமாக பிரசவ மருத்துவமனை செல்லும்முன் பன்னீரால் (ரோஸ்வாட்டர்) முகத்தைக் கழுவி, கிழக்கு நோக்கி அடியெடுத்து வைத்துச் செல்லவேண்டும். சூரியன் அருளால் நல்லவை நடக்கும்.
லக்னத்தில் சூரியனும் சனியும் இருக்கப்பெற்று, 7, 10-ல் பகை கிரகங்கள் காணப்பட்டால் குழந்தைப்பேறு கிடைப்பது அரிது. குலதெய்வ வணக்கம் முக்கியமானது.
பெண்ணின் ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் 6 அல்லது 4-ல் காணப்பட்டால் குழந்தை பாக்கியத்தில் தடையேற்படும்.
மிதுனம்
மிதுன லக்னத்திற்கு 5-ஆம் வீட்டில் ராகு, சூரியன், செவ்வாய் இருக்கப்பெற்றால் சிசேரியன் அறுவை சிகிச்சையைத் தவிர்க்க இயலாது.
லக்னத்திற்கு 5-ல் சுக்கிரன், ராகு 11-ல் இருக்கப்பெற்றால் முதுமையில் குழந்தை பிறக்கும்.
ராகு- கேது அல்லது சனி 5-ல் காணப்படின் கர
மேஷம்
மேஷ லக்னக்காரர்கள் ஜாதகத்தில் 5-க்குரிய சூரியன் 6, 8, 12-ல் மறைந்தால் ஆண் சந்ததி தடையாகும்.
செவ்வாய் 5-ல், சூரியன், குரு 8-ல் இருந்தால் நீண்ட நாட்களுக்குப்பின் வயோதிகத்தில் ஆண் குழந்தை பிறக்கும்.
5-க்குடையவர்- ராகு, கேது, சனி போன்றவராக இருக்கப்பெற்றால் சுமார் 45 வயதுக்குமேல், சிலருக்கு இருமுறை கருச்சிதைவுக்குப்பின் குழந்தையை எதிர்பார்க்கலாம்.
கருத்தரிப்பை நாடும் நபரின் ஜாதகத்தில் 5-ல் செவ்வாயும் புதனும் இணைந்து காணப்பட்டால் இரட்டைக் குழந்தை பிறக் கும்.
மங்கையரின் ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் 6 அல்லது 4-ல் காணப்பட்டால் குழந்தை பிறப்பது கேள்விக்குறிதான்.
ரிஷபம்
ரிஷப லக்னத்தாருக்கு ராகு மற்றும் செவ்வாய் 11-லும், சனி, சூரியன் லக்னத் திலும், சுக்கிரன் மேஷத்திலும் இருந்தால், குழந்தை பிறந்ததும் செவிப்புலன் (காது) கேட்கிறதா என சோதிக்கவேண்டும்.
ராகு 5-லும் அதற்கு 7-ல் கேதுவும் இருக்கப்பெற்று, காலசர்ப்பக் கெடுதலால் பிரசவகால சிக்கல் வரும். பரிகாரமாக பிரசவ மருத்துவமனை செல்லும்முன் பன்னீரால் (ரோஸ்வாட்டர்) முகத்தைக் கழுவி, கிழக்கு நோக்கி அடியெடுத்து வைத்துச் செல்லவேண்டும். சூரியன் அருளால் நல்லவை நடக்கும்.
லக்னத்தில் சூரியனும் சனியும் இருக்கப்பெற்று, 7, 10-ல் பகை கிரகங்கள் காணப்பட்டால் குழந்தைப்பேறு கிடைப்பது அரிது. குலதெய்வ வணக்கம் முக்கியமானது.
பெண்ணின் ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் 6 அல்லது 4-ல் காணப்பட்டால் குழந்தை பாக்கியத்தில் தடையேற்படும்.
மிதுனம்
மிதுன லக்னத்திற்கு 5-ஆம் வீட்டில் ராகு, சூரியன், செவ்வாய் இருக்கப்பெற்றால் சிசேரியன் அறுவை சிகிச்சையைத் தவிர்க்க இயலாது.
லக்னத்திற்கு 5-ல் சுக்கிரன், ராகு 11-ல் இருக்கப்பெற்றால் முதுமையில் குழந்தை பிறக்கும்.
ராகு- கேது அல்லது சனி 5-ல் காணப்படின் கருச்சிதவை எதிர்கொள்ள நேரிடும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் 6 அல்லது 4-ல் இருக்கப்பெற்றால், அங்காரக தோஷம். எனவே பிள்ளைப்பேறு அரிது.
சூரியனும் சந்திரனும் ஐந்தில் இருக்கப்பெற்றால் குலதர்ம யோகம். தாயும் சேயும் நெடுங்காலம் சுகமாக வாழலாம்.
ஜாதகத்தில் 5-ல் செவ்வாயும் புதனும் இணைந்து காணப்பட்டால் இரட்டைக் குழந்தையை எதிர்பார்க்கலாம்.
கடகம்
லக்னத்தில் செவ்வாய், 5-ஆம் வீடு விருச்சிகம் என அமையப்பெற்றால் மூன்று ஆண் குழந்தையை எதிர்பார்க்கலாம்.
கடக லக்னத்திற்கு 5-ல் ராகு, செவ்வாய் இருக்கப்பெற்றால் ஆண் குழந்தை பிறக்கும். அதன்மீது உன்னிப்பான கவனம் வேண்டும். ஆரோக்கியக் குறைகள் வரலாம்.
லக்னத்திற்கு 5-ல் ராகு, சூரியன், செவ்வாய் காணப்பட்டால் ஐந்தாவது மாதம் முதல் மகப்பேறு மருத்துவர் ஆலோசனை, வருமுன் காக்க வழி பிறக்கும்.
லக்னத்திற்கு 5-ல் ராகு, செவ்வாய் இருக்கப்பெற்றால், ஈன்றெடுக்கும் குழந்தைகளால் அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது.
புதன் 2, 4, 6, 8, 10, 12-லும், சந்திரன், சுக்கிரன் ஐந்தாமிடத்திலும் காணப்பட்டால் தொடராக பெண் சந்ததியைத்தான் எதிர்பார்க்க இயலும்.
சிம்மம்
லக்னத்துக்குடையவர் குரு 8-ல் இருந்துகொண்டால், நல்ல ஆண் சந்ததியை எதிர்பார்க்கலாம்.
லக்னத்தில் சூரியன், சந்திரன் இருப்ப தோடு செவ்வாய், ராகு, சனியோடு காணப் பட்டால் ஆண் சந்ததி உருவாகாது.
ராகு, சூரியன், செவ்வாய் லக்னத்திற்கு 5-ல் இருந்தால் சுகப்பிரசவம் கடினம். நவீன சிசேரியன் தான் வெற்றிதரும்.
லக்னத்திற்கு 5-க்குடைய குரு ராகுவுடன் 11-ல் இருந்தால், பிள்ளைப்பேறு வயோதிகத் தில்தான்.
லக்னத்திற்கு 5-ல் ராகு அல்லது கேது, சனி இருக்கப்பெற்றால் கருவுற்ற மூன்றாம் மாதம் முதலே கவனமுடன் செயல்பட வேண்டும். கருச்சிதைவு (அபார்ஷன்) ஏற்படும்.
பெண்ணின் ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் இணைந்து 6-ல் அல்லது 4-ல் இருக்கப்பெற்றால் கருவுற முடியாது.
கன்னி
லக்னத்திற்கு 5-க்கு டைய சனிபகவான் பகை இடத்திலும் ராகு 11-லும் இருந்தால் குழந்தை பிறக்க நெடுநாள் காத்திருக்க வேண்டும்.
ராகு- கேது அல்லது சனி இருக்கும் 5-ஆமிடம் பகை இடமெனின் கருச்சிதைவு ஏற்படும்.
5-க்குடையவர் ரிஷபம், கன்னி, துலாம் என்றால் பெண் சந்ததிகள் அதிகம்.
செவ்வாய் மீனத்திலும் 7-ல் சனியும் இருக்கப்பெற்றால் குழந்தை உருவாவது கடினம்.
செவ்வாயும் புதனும் 5-ல் இருக்கப்பெற் றால், கருத்தரிப்பு மையம் மூலமாக செயற்கை முறையில் கருவுற்றால் இரட்டைக் குழந்தை பிறக்கும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் 6 அல்லது 4-ல் இருக்கப்பெற் றால், திருமணக் காலத்தில் ஆணின் ஜாதகத் தில் 5-ல் கிரகம் இருத்தல் நலம். இல்லையேல் குழந்தை தாமதமாகும்.
துலாம்
உங்களுடைய லக்னத்திற்கு 5-ல் சனி பகவான் இருக்கப்பெற்றால் ஐந்து ஆண் மகவைப் பெறலாம் என்பது ஜோதிடவிதி. லக்னத்திற்கு 5-க்குடைய சனி 6, 8, 12-ல் இருந்தால் ஆண் சந்ததி பெறுவது கடினம்.
ராகு, சூரியன், செவ்வாய் 5-ல் இருக்கப் பெற்றால், பிள்ளை பிரசவ மாகும் காலம்- சுகப்பிரச வம் என்பதை எதிர்பார்க்க இயலாது.
லக்னத்திற்கு 5-ல் சனி, 11-ல் ராகு இருக்கப்பெற் றால், திருமணமாகி பல ஆண்டுகள் சென்றபின் தான் குழந்தை பாக்கியம் பெற இயலும்.
ராகு, கேது அல்லது சனி 5-ஆமிடத்தில் காணப் பட்டு 8-ல் சூரியன் இருக்கப் பெற்றால் அனேகமாக பேறு காலத்திற்கு முன்பே குறைப்பிரசவம் ஏற்படும். இவர்கள் ராகு காலங்களில் கிணற்று நீரைப் பருகுவது கூடாது.
சூரியன் 8-லும் சனி லக்னத்திற்கு 5-லும் இருக்கப்பெற்றால் குழந்தையால் நன்மைகள் அரிது.
விருச்சிகம்
லக்னத்திற்கு 5-க்குரிய குரு 8-ல் இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டு.
லக்னத்திற்கு 5-க்குடைய குருபகவான் 1, 3, 5, 7, 9-ல் இருக்கப்பெற்றால் முதல் குழந்தை ஆண் மகனாக எதிர்பார்க்கலாம்.
லக்னத்திற்கு 5-ல் குருவும், செவ்வாயும் பரிவர்த்தனையாக ஜாதக அமைப்பு இருக்கப் பெற்றால் தத்துப் பிள்ளையை வளர்க்கலாம்.
லக்னத்திற்கு 5-க்குடைய குரு ரிஷபம், கடகம், கன்னியில் அல்லது துலாத்தில் இருக்கப்பெற்றால் முத-ல் பெண் குழந்தை பிறக்கும்.
லக்னத்திற்கு 5-ல் ராகுவும் 11-ல் கேதுவும் இருக்கப்பெற்று காலசர்ப்பப் பிடியில் ஜாதகம் காணப்பட்டால், பிரசவ காலத்தில் மனக்குழப்பம் மிகுதியாகும். கருவுற்ற காலத்தில் சமையல் கூடத்தில் உணவுண்ணல் நன்று. வாஸ்துரீதியாக வடமேற்கு அறையைத் தனதாக்கிக்கொள்ளல் நன்று.
தனுசு
லக்னத்திற்கு ஐந்திற்குரிய செவ்வாய் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய இடங்களில் இருக்கப்பெற்றால் முதலில் பெண் குழந்தை பிறக்கும்.
லக்னத்திற்கு ஐந்திற்குடைய செவ்வாய் 8-ல் இருந்தால் சந்ததிகள் குறைவு.
லக்னத்திற்கு 5-க்குரிய செவ்வாயுடன் ராகு காணப்பட்டால், ஆண் சந்ததி பிறந்தாலும் அதிக உதவிகளை அவர்களிடம் எதிர்பார்க்க இயலாது.
லக்னத்திற்கு 5-க்குடையவர் ரிஷபம், கடகம், கன்னி, துலாத்தில் இருந்தால் பெண் குழந்தைகள் அதிகமாகும்.
லக்னத்திற்கு 5-ல் செவ்வாயும் புதனும் இணைந்து காணப்பட்டால், ஆண்- பெண் இணைந்து இரட்டைக் குழந்தை பிறக்கலாம்.
லக்னத்திற்கு 5-ல் சூரியன், சந்திரன் இருவரும் இருக்கப்பெற்றால் குழந்தைகளால் அதிக நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
மகரம்
சந்திரன் ஐந்தில் இருக்கப்பெற்றால் ஒரே ஒரு ஆண் மகன் பிறப்பானாம்.
ஐந்துக்குடைய சுக்கிரன் 8-ல் காணப்பட் டால் குறைவான சந்ததிகள்தான் பெற இயலும்.
குரு எட்டிலும், செவ்வாய் 12-லும் இருக்கப்பெற்றால், தவமிருந்து நெடுநாள் சென்றபின் குழந்தை பாக்கியம் பெறலாம்.
லக்னத்திற்கு 5-ல் சுக்கிரன் இருக்கப்பெற் றால், குடும்பக் கட்டுப்பாடு செய்யாவிடில் ஐந்து பெண் குழந்தைகள் பிறக்கும். ஆண் சந்ததி அரிது.
லக்னத்திற்கு 5-க்குடையவர் ரிஷபம், கடகம், கன்னி, துலாமில் இருந்தால் முதலில் பெண் சந்ததி வந்துவிடும்.
லக்னத்திற்கு 5-க்குடையவர் 6, 12-ல் இருக்கப்பெற்றால் செயற்கைமுறை கரு உற்பத்திமூலம் சந்தான பாக்கியம் பெறஇயலும். இருப்பினும் குழந்தையின் ஆரோக் கியத்தில் கவனம் வேண்டும்.
கும்பம்
ஜாதகத்தில் சந்திரன் 9-ல் இருக்கப்பெற்றால் ஒரு மகன் உறுதி.
புதன் எட்டில் இருந்தால் குழந்தை தாமதமாகும்.
லக்னத்திற்கு 5-ல் புதன், அதனுடன் சந்திரன் இருக்கப்பெற்றால் நான்கு பெண் சந்ததிகள் வரும்.
ராகு, சூரியன், செவ்வாய் லக்னத்திற்கு 5-ல் இருக்கப்பெற்றால், சுகப்பிரசவம் கடினம்.
லக்னத்திற்கு 5-ல் புதன், 11-ல் ராகு இருக்கும் ஜாதக அமைப்பிருந்தால், குழந் தையை வயோதிகம்- அதாவது 45 வயதுக்கு மேலும் எதிர்பார்க்கலாம்.
சூரியன் 8-ஆமிடத்திலும் சனி 5-லும் காணப்பட்டாôல் ஆண் சந்ததி கடினம்.
சூரியனும், சந்திரனும் 5-லும் 10-ல் ஒரு சுபகிரகமும் இருக்கப்பெற்றால் குடும்பத்தில் நல்ல பிள்ளைகள் பிறக்கும்.
மீனம்
சந்திரன் 8-ல் இருந்தால் குழந்தை பாக்கியம் உறுதி.
கடகத்தில் சூரியன் மட்டும் இருக்கப்பெற் றால் குழந்தை பெற்றபின்பும் இன்னும் ஒரு திருமணத்தை எதிர்கொள்ள நேரிடுமாம்.
சுக்கிரன் மட்டும் கடகத்தில் இருந்தால் இரண்டாவது மனைவிமூலம்தான் ஆண் சந்ததி பெற இயலுமாம்.
லக்னத்திற்கு 5-ல் எந்த தீயகிரகமும் இல்லாதிருந்தால் திருமணமான பத்தாம் மாதமே பாலகனை எதிர்பார்க்கலாம் என்கிறது சாஸ்திரம்.
புதன் 2, 4, 6, 8, 10, 12-ல் இருக்கப்பெற்றால், அதிகமான பெண் வாரிசைதான் எதிர்பார்க்க இயலும். லக்னத்திற்கு 5-ல் சந்திரனும் சுக்கிரனும் காணப்பெற்றால் பெண் சந்ததிகளால் அதிக பெருமையை எதிர்பார்க்கலாம்.
செல்: 93801 73464