வாழ்க்கைக்கு வழிகாட்டும் 12 பாவக பலன்கள்! - திருக்கோவிலூர் பரணிதரன் சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/12-bhakti-benefits-guide-life-thirukovilur-paranidharan-1

ந்த லக்னத்தை வைத்தே ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைப் பலன்கள் அமைகிறது.

லக்னம் தொடங்கி 12 பாவகங்கள்

ஜாதகத்தில் லக்னம் என்பதே அனைத்திற்கும் முதன்மையும் மூலமுமானதாகும். இதையே ஜென்மம் என்கிறோம். ஜாதகரின் ஆயுள், உருவம், நிறம், குணம், ஆரோக்கியம், சிந்தனை, பதவி, புகழ், கீர்த்தி, வாழ்க்கையில் அனுபவிக்கும் சுகங்கள், இறைவனை வழிபடக்கூடிய அல்லது வெறுத்திடக்கூடிய மனநிலை, துக்கம், சந்தோஷம், சொந்த ஊரில் வாழ்வாரா? வெளியூரில் வாழ்வாரா? கோபக்காரரா? அமைதியானவரா? அவருடைய வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதையும், அவருடைய உடலின் தலையையும் லக்ன பாவத்தில் இருந்தே அறியமுடியும். ஜாதகத்தில் லக்னத்திற்கு அடுத்த வீடு இரண்டாம் பாவகமாகும். இந்த இடம்தான் ஜாதகரின் தன, குடும்ப, வாக்கு ஸ்தானமாகும். இந்த பாவகத்தை வைத்து ஜாதகரின் வசதி வாய்ப்பு, கல்வி, பேச்சு, உணவு, குடும்பம், சாஸ்திர ஞானம், பொன், பொருள் ஆபரணங்கள், வங்கி சேமிப்பு, பண வரவு, செலவு, எதிர்பாராத யோகங்களையும், கண் பார்வை, திக்கு வாய், முகம் ஆகியவற்றைப் பற்றியும் அறியமுடியும்.

ff

லக்னத்திற்கு மூன்றாவது இடம் மூன்றாம் பாவகமாகும். இந்த இடத்தை வைத்துதான் ஜாதகரின் தைரியம், வீரியம், இளைய சகோதரர்கள் போன்றவற்றையும் கடிதப் போக்குவரத்துகள், தகவல் பரிமாற்றங்கள், வீடு மாறுதல், அருகாமையில் வசிப்போர் மற்றும் ஜாதகர் வீரம் உள்ளவரா கோழையா என்பதையும், சங்கீத ஞானம், முன்னோர் கடன், மதபேதம், கனவுகள் பற்றியும் உடலில் காதுகள், தொண்டை, கைகள், நரம்பு மண்டலம் போன்றவற்றையும் அறியமுடியும்.

லக்னத்திற்கு நான்காவது இடம் நான்காம் பாவகமாகும். இந்த பாவகம்தான் மாதுர் ஸ்தானம், சுக ஸ்தானம், வாகன ஸ்தானமாகும். இந்த பாவகத்

ந்த லக்னத்தை வைத்தே ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைப் பலன்கள் அமைகிறது.

லக்னம் தொடங்கி 12 பாவகங்கள்

ஜாதகத்தில் லக்னம் என்பதே அனைத்திற்கும் முதன்மையும் மூலமுமானதாகும். இதையே ஜென்மம் என்கிறோம். ஜாதகரின் ஆயுள், உருவம், நிறம், குணம், ஆரோக்கியம், சிந்தனை, பதவி, புகழ், கீர்த்தி, வாழ்க்கையில் அனுபவிக்கும் சுகங்கள், இறைவனை வழிபடக்கூடிய அல்லது வெறுத்திடக்கூடிய மனநிலை, துக்கம், சந்தோஷம், சொந்த ஊரில் வாழ்வாரா? வெளியூரில் வாழ்வாரா? கோபக்காரரா? அமைதியானவரா? அவருடைய வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதையும், அவருடைய உடலின் தலையையும் லக்ன பாவத்தில் இருந்தே அறியமுடியும். ஜாதகத்தில் லக்னத்திற்கு அடுத்த வீடு இரண்டாம் பாவகமாகும். இந்த இடம்தான் ஜாதகரின் தன, குடும்ப, வாக்கு ஸ்தானமாகும். இந்த பாவகத்தை வைத்து ஜாதகரின் வசதி வாய்ப்பு, கல்வி, பேச்சு, உணவு, குடும்பம், சாஸ்திர ஞானம், பொன், பொருள் ஆபரணங்கள், வங்கி சேமிப்பு, பண வரவு, செலவு, எதிர்பாராத யோகங்களையும், கண் பார்வை, திக்கு வாய், முகம் ஆகியவற்றைப் பற்றியும் அறியமுடியும்.

ff

லக்னத்திற்கு மூன்றாவது இடம் மூன்றாம் பாவகமாகும். இந்த இடத்தை வைத்துதான் ஜாதகரின் தைரியம், வீரியம், இளைய சகோதரர்கள் போன்றவற்றையும் கடிதப் போக்குவரத்துகள், தகவல் பரிமாற்றங்கள், வீடு மாறுதல், அருகாமையில் வசிப்போர் மற்றும் ஜாதகர் வீரம் உள்ளவரா கோழையா என்பதையும், சங்கீத ஞானம், முன்னோர் கடன், மதபேதம், கனவுகள் பற்றியும் உடலில் காதுகள், தொண்டை, கைகள், நரம்பு மண்டலம் போன்றவற்றையும் அறியமுடியும்.

லக்னத்திற்கு நான்காவது இடம் நான்காம் பாவகமாகும். இந்த பாவகம்தான் மாதுர் ஸ்தானம், சுக ஸ்தானம், வாகன ஸ்தானமாகும். இந்த பாவகத்தை வைத்துதான் தாயாரின் நிலை, அந்த ஜாதகருக்கு வாழ்வில் கிடைக்கும் சுகங்கள், இல்லற சுகம், வாகன யோகம், வீடு, நிலம், கல்லூரி படிப்பு, வீடு, வாசல், ஸ்திர சொத்துக்கள், விளை நிலங்கள், நண்பர்கள், உறவினர்கள், துக்கம், புதையல், கிணறு, தோப்பு, மருமகன், உடலின் மார்பு, இதயப் பகுதியைப் பற்றியெல்லாம் அறியமுடியும்.

லக்னத்திற்கு ஐந்தாவது இடம் ஐந்தாம் பாவகமாகும். இந்த பாவகம்தான் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமாகும். அந்த ஜாதகர் போன ஜென் மத்தில் செய்த நன்மைகளையும் தீமைகளையும் இந்த பாவகத்தை வைத்து தெரிந்து கொள்ளமுடியும். குழந்தை பாக்கியம் உண்டா- இல்லையா? பூர்வீக சொத்துகள் உண்டா என்பதையும் கலைத் துறையில் அவருக்கு வாய்ப்பு உண்டா? சினிமா, லாட்டரி, டிராமா, ரேஸ், காதல் திருமணம் போன்றவற்றையும் இந்த பாவகத்தில் இருந்தே தெரிந்துகொள்ள லாம். கீர்த்தி ஸ்தானம், பிரதாப ஸ்தானம் என்றும் இந்த இடம் கூறப்படும். இந்த இடத்தை வைத்து ஜாதகரின் குண இயல்புகள், ஆத்திகரா? நாத்திகரா? பிரபுத்துவம், தாய், மாமன், மந்திர உபதேசம், யோக அப்பியாசம், வணங்க வேண்டிய தெய்வம், தெய்வ அனுக்கிரகம், நூல், நாவல் எழுதுதல், வேதம் ஓதுதல், அறிவுத்திறன், உடலில் வயிற்றுப்பகுதி, வயிற்றுக் கோளாறுகள் பற்றியெல்லாம் அறியமுடியும்.

லக்னத்திற்கு ஆறாவது இடம் ஆறாம் பாவகமாகும். இந்த பாவகம், ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகும். இந்த பாவகத்தை வைத்து ஜாதகருக்கு ஏற்படும் நோய், கவலைகள், துக்கங்கள், கடன், எதிரிகள், கெட்ட சம்பவங்கள், கோர்ட் வழக்குகள், மறதி, பசி, தாகம், விபத்து, சிறைபடுதல், கிரிமினல் விவகாரம், திருடு கொடுத்தல், அதிர்ச்சி தரும் சம்பவங்கள் ஆகியவற்றை அறிவதுடன் அடி வயிற்றையும் பற்றி அறியமுடியும்.

லக்னத்திற்கு ஏழாவது இடம் ஏழாம் பாவகமாகும். இந்த பாவகம்தான் களத்திர ஸ்தானம், போகஸ்தானம், நட்பு ஸ்தான மாகும். அந்த ஜாதகரின் வியாபாரம் பற்றி இந்த பாவகம் கூறும். இந்த பாவகத்தில் இருந்து காமம், போகம், ஆண் ஜாதகமாயின் மனைவியைப் பற்றியும் பெண் ஜாதகமாயின் கணவனைப் பற்றியும் மற்றும் திருமணம், இல்லற வாழ்வின் நிலை, யாத்திரை, கூட்டுத் தொழில் பற்றியெல்லாம் அறியலாம். உடம்பில் நாபிக்கு கீழ் உள்ள இடைப்பகுதியைப் பற்றியும் இந்த பாவகத்தை வைத்தே அறியமுடியும்.

லக்னத்திற்கு எட்டாவது இடம் எட்டாம் பாவகமாகும் இந்த பாவகம்தான் அஷ்டம ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், அவமான ஸ்தானமாகும். எதிர்பாராத தன லாப ஸ்தானத்தையும் இந்த பாவகத்தில் இருந்தே அறிய முடியும். இந்த பாவகத்தின் மூலம் ஜாதகரின் ஆயுள் காலம், அவருடைய மரணம் இயற்கையா? துர்மரணமா? என்பதையும் அவர் அடைந்திடக்கூடிய அவமானங்கள், கண்டங்கள், துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள், சிறைவாசம், லாட்டரி, புதையல் போன்ற எதிர்பாராமல் கிடைக்கும் தன லாபங்களையும், பிறப்பு உறுப்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளையும், அடிமை மற்றும் அகதியாய் இருக்கும் நிலையையும், உயிர்க்கொல்லி நோய், பால்வினைநோய் பற்றியும், பெண்கள் ஜாதகத்தில் இந்த பாவகத்தை வைத்து மாங்கல்ய பலத்தையும், விவாகரத்து, சோம்பேறித்தனம் ஆகியவற்றையும் அறியமுடியும். உடல் உறுப்பில் மர்ம ஸ்தானம் மற்றும் பிறப்பு உறுப்பு பற்றியும் இந்த பாவகத்தில் இருந்து அறியமுடியும்.

லக்னத்திற்கு ஒன்பதாவது இடம் ஒன்பதாம் பாவகமாகும். இந்த பாவகம் பிதுர் ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானமாகும். இந்த பாவகத்தின் மூலம் தகப்பனாரின் நிலை, ஜாதகரின் யோகம், பூர்வபுண் ணியம், சொத்துக் கள், குறிப்பாக தந்தைவழி சொத்து, வேள்வி, தேவாலய பிர திஷ்டை, கப்பல் யாத்திரை சாஸ்திர விவேகம், நீண்ட பிரயாணம், தீர்த்த ஸ்தல யாத்திரை, குதிரை, யானை, கறவை மாடுகள், குரு, கோவில் திருப்பணி, அட்டமசித்துகள், உயர் கல்வி பற்றியெல்லாம் அறியமுடியும். உடல் உறுப்பில் தொடைகளைப் பற்றி இந்த பாவகத்தில் இருந்து அறியலாம்.

லக்னத்திற்கு பத்தாவது இடம் பத்தாம் பாவகமாகும். இந்த பாவகத்தில் இருந்து ஜாதகரின் தொழில், ஜீவனம், அந்தஸ்து, செல்வாக்கு, தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு, தாயார், தகப்பனாருக்கு செய்யும் கர்மங்களின் நிலைகள் பற்றி அறியமுடியும். மேலும், அதிகாரம், அரசியல் செல்வாக்கு, யோகம், யாகம், போஜன ருசி, தகப்பனின் செய்பாவம் ஒழித்தல், அதிகாரம், அரசாங்க உத்தியோகம், மந்திர உச்சாடனம் பற்றியும், உடம்பில் முழங்கால்களைக் குறித்தும் இந்த பத்தாம் பாவகத்திலிருந்து அறியலாம்.

லக்னத்திற்கு பதினொன்றாவது இடம் பதினொன்றாம் பாவகமாகும். இந்த பாவகத் தில் இருந்து ஜாதகர் அடைந்திடக்கூடிய லாப நிலை, மூத்த சகோதரர் நிலை, இளையதாரம் பற்றி தெரிந்துகொள்ளமுடியும். மேலும் தொழில் வழியாகவும் பிற வழி களாலும் ஏற்படும் லாபங் களையும், பொருளீட்டல், சொத்துகள் அடைதல், தொலைத் தொடர்புகள் வழியே லாபம் காணுதல், கடல் பயணம், சுகங்கள் பற்றியும், உடலில் கணுக்கால் பற்றியும் இந்த பாவகத்தில் இருந்து அறியமுடியும்.

லக்னத்திற்கு பன்னிரண்டாவது இடம் பன்னிரண்டாம் பாவகமாகும். இந்த பாவகம் மோட்ச ஸ்தானம், விரய ஸ்தானமாகும். அயன, சயன, போக, பாக்கியம் குறித்தும் ஜாதகருக்கு உண்டாகக்கூடிய செலவுகள், நஷ்டங்கள், துன்பம், பாவங்கள், வறுமை, துரதிர்ஷ்டம், மறைமுக எதிர்ப்பு, சிறைவாசம், மறு பிறவி, மோட்சம், தற்கொலை, ராஜ துரோகம், ஜாதி மாறுதல், அந்நிய தேச வாசம், உடல் உறுப்பில் பாதங்கள் ஆகியவற்றை இந்த பாவகத்தில் இருந்து அறியலாம்.

பாவகங்களால் மாறும் பலன்கள்

ஒருவரின் ஜாதகம் என்று வருகிறபோது கிரக காரகர்களால் உண்டாகக்கூடிய பலன்கள் அவர்கள் அமருகின்ற பாவகத்தை வைத்து மாறுபடக்கூடும்.

சுப பலன்களை வழங்கிடக்கூடிய கிரகங்கள் பாதகாதிபதி வீட்டிலோ, மறைவு ஸ்தானங்களிலோ அமரும்போது அவர்கள் கொடுத்திடக்கூடிய நற்பலன்களை ஜாதகருக்கு வழங்கிட முடியாதவர்களாகி விடுகின்றனர், பாதக பலன்களை வழங்கிடக்கூடிய கிரகங்கள் சுப பாவகங்களில் அமரும்போது அந்த பாவகத்தின் பலனையும் எதிர்மறையாக்கி விடுகின்றனர். கிரக காரகன் அவனுக்குரிய ஸ்தானத்தில் இருக்கும்போது, உதாரணமாக களத்திரக்காரகன் ஒரு ஜாதகனின் களத்திர ஸ்தானத்திலேயே அமரும் நிலையில் அந்த ஜாதகனின் திருமண வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது.

கிரகங்கள் ஒருவருக்கு நன்மைகள் செய்ய நினைத்தாலும் அவர்கள் அமருகின்ற பாவகங்களில் அவர்களுக்குள்ள பாதக சாதக நிலைகளினால் அவர்கள் வழங்கிடும் பலன்கள் மாற்றம் பெறுகிறது.

இந்த நிலையில் கிரகங்கள் எல்லாம் அவர்களுக்குரிய பணியை, அவர்களின் காரகத்துவத்தை ஜாதகனுக்கு வழங்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

அதே நேரத்தில் லக்னம் தொடங்கி பன்னிரண்டு பாவகங்களும் ஒவ்வொரு ஜாதகருக்கும் உயிர் நாடியாகவே இருந்து தங்கள் பாவகத்திற்குரிய பணிகளின் மூலம் ஜாதகருக்கு பலன்களை வழங்கிவருகின்றனர்.

ஒவ்வொருவரின் பாவகங்களின் காரணமாக கிரக காரகர்களின் நிலைப்பாடு மாற்றம் பெறுவதால் ஜாதகத்தில் ஒன்பது கிரக காரகர்களை விட பன்னிரண்டு பாவகங்களே ஜாதகரின் வாழ்க்கையை வழிநடத்திடக் கூடியவையாக உள்ளது.

செல்: 94443 93717

bala151223
இதையும் படியுங்கள்
Subscribe