ஜோதிட சாஸ்திரம் என்பது கடல் போன்றது. அதற்குள் பன்னிரண்டு பாவகங் களும் ஒன்பது கிரக காரகர்களும் உள்ளனர். இந்த பாவகங்கள் பன்னிரண்டும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக அமைந்துவிடுகிறது.
ஒரு குழந்தை அதன் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் நேரத்தில் அது எந்த லக்னத்தை கொண்டுள்ளதோ அதை வைத்தே பாவகங்களின் நிலைப்பாடு உண்டாகிறது.
ஒரே நாளில் ஒரே ராசியில் பிறந்தவர் களுக்கும் லக்னத்தின் அடிப்படையில் பாவகங்கள் மாறுபடும்.
பாவகங்கள் என்று வருகின்றபோது லக்னம் அமர்ந்த இடத்தை முதல் பாவகமாக வைத்தே அந்த ஜாதகனுக்குரிய விதியைத் தீர்மானிக்கமுடியும்.
இந்த நேரத்தில் இந்த பன்னிரண்டு பாவகங்களையும் ஆட்சிபுரிபவர்களாக ஏழு கிரகங்கள் மட்டுமே இருக்கின்றனர். இந்த ஏழு கிரகங்களுடன் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஆகிய ஒன்பது கிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு காரகத் துவத்தை தமக்கென்று கொண்டுள்ளனர்.
இருந்தாலும், ஒரு ஜாதகனுக்கு கிரக கார கர்கள் வழங்குகின்ற பலன்களை தீர்மானிப் பவர்களாக பாவகர்களே உள்ளனர்.
அதனால் கிரக காரகனின் நிலையை அவன் அமர்ந்த பாவகத்தை வைத்து ஆழ்ந்து நோக்கவேண்டும்.
ஜோதிட சாஸ்திரம் என்பது கடல் போன்றது. அதற்குள் பன்னிரண்டு பாவகங் களும் ஒன்பது கிரக காரகர்களும் உள்ளனர். இந்த பாவகங்கள் பன்னிரண்டும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக அமைந்துவிடுகிறது.
ஒரு குழந்தை அதன் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் நேரத்தில் அது எந்த லக்னத்தை கொண்டுள்ளதோ அதை வைத்தே பாவகங்களின் நிலைப்பாடு உண்டாகிறது.
ஒரே நாளில் ஒரே ராசியில் பிறந்தவர் களுக்கும் லக்னத்தின் அடிப்படையில் பாவகங்கள் மாறுபடும்.
பாவகங்கள் என்று வருகின்றபோது லக்னம் அமர்ந்த இடத்தை முதல் பாவகமாக வைத்தே அந்த ஜாதகனுக்குரிய விதியைத் தீர்மானிக்கமுடியும்.
இந்த நேரத்தில் இந்த பன்னிரண்டு பாவகங்களையும் ஆட்சிபுரிபவர்களாக ஏழு கிரகங்கள் மட்டுமே இருக்கின்றனர். இந்த ஏழு கிரகங்களுடன் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஆகிய ஒன்பது கிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு காரகத் துவத்தை தமக்கென்று கொண்டுள்ளனர்.
இருந்தாலும், ஒரு ஜாதகனுக்கு கிரக கார கர்கள் வழங்குகின்ற பலன்களை தீர்மானிப் பவர்களாக பாவகர்களே உள்ளனர்.
அதனால் கிரக காரகனின் நிலையை அவன் அமர்ந்த பாவகத்தை வைத்து ஆழ்ந்து நோக்கவேண்டும்.
அந்த கிரக காரகன் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறார்? யாருடைய சாரத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதையெல்லாம் கவனித்துதான் ஒருவருடைய பலனைக் கூறமுடியும்.
பொதுவாக ஒரு கிரகத்தின் காரகத் தன்மையை வைத்து அவற்றையெல்லாம் அந்த கிரகம் ஜாதகனுக்கு செய்துவிடும் என்று எதிர் பார்த்துவிட முடியாது. அதற்கு காரணம் அந்த கிரகம் அமருகின்ற பாவகம் அந்த கிரகத்திற்கு எதிரான இடமாகவோ, பகையான இடமாகவோ, மறைவான இடமாகவோகூட இருக்கலாம். உதாரணமாக கிரக காரகம் என்று வருகின்றபோது, கிரகங்களின் காரகத்துவம் சூரியன்: தந்தை, ஆன்மா, மகன், அரசன், பெயர் மற்றும் புகழ், வெளிச்சம், அதிகாரம், அரண்மனை வாசம், அரசியல் செல்வாக்கு, அரசாங்க யோகம் போன்றவற்றுக்கெல்லாம் காரகமாகிறார்.
சந்திரன்: அம்மா, மனம், மகள், மாமியார், மனைவி, கலைஞர்கள், ஆடம்பரமான பொருட்கள், பயணங்கள், ஏரி, குளம், ஆறு, கடல், இடப்பெயர்ச்சி, இடமாற்றம், கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல், ஜோதிடம், வேதங்கள், பாதை மாறுதல், செய்தி, இயக்கம், ஒளி போன்றவற்றுக் கெல்லாம் காரகமாகிறார்.
செவ்வாய்: சகோதரம், தைரியம், வீரியம், இரண்டாம் இளைய சகோதரர், கணவன், போலீஸ், இராணுவம், பாதுகாப்புப்படை, பொறியாளர், விளையாட்டு வீரர், தொழிற் சங்கத் தலைவர், அறுவை சிகிச்சை, மருத்துவம், விவசாயம், சுரங்கங்கள், பெட்ரோலியம், வெடிமருந்து, எதிரி, வன்பொருள், ஆயுதங்கள், மின்மாற்றி, மின்மோட்டார், நிலம், போன்றவற்றுக்கெல்லாம் கரகமாகிறார்.
புதன்: மாமா, மாமனார், மூன்றாம் இளைய சகோதரர், பெண் நண்பர்கள், இளம் சகோதரி, மனைவி, வணிகம் மற்றும் வர்த்தகம், புத்தக விற்பனை மற்றும் பதிப்புத்துறை, கணக்காளர், கணக்கு ஆய்வாளர், கவிஞர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், ஜோதிடர், வழக்கறிஞர், ஓவியர், ஆசிரியர் பேராசிரியர், விரிவுரையாளர், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர், பொறியாளர், ராஜதந்திரம், மென்மையான விஷயங்கள், தகவல்துறை, பதிவுத்துறை, பேச்சு, நாவன்மை, அறிவு, செயல்பாடு, எண்ணங்கள், தந்திரங்கள் போன்றவற்றுக்கெல்லாம் காரகமாகிறார்.
வியாழன்: தனம், புத்திரர், ஜீவனம், சொந்த பந்தங்கள், நீதிபதி, வழிகாட்டி, ஆசிரியர், தொகுப்பாளர், கல்வி அமைச்சர், மேலாளர், ஆலோசகர், வழக்கறிஞர், கணக்காளர், தணிக்கையாளர், வேதங்கள், கோவில்கள், தத்துவம், கௌரவம், பெரும் மரியாதை, உண்மை, பொறுமை, அடக்கம் போன்றவற்றுக்கெல்லாம் காரகம் ஆகிறார்.
சுக்கிரன்: களத்திரம், சகோதரி, மகள், மைத்துனி, விலைமாது, இசை, நடனம், நடிப்பு, நிதி, வங்கி, நகைக்கடை, கால்நடைத்துறை, துணி வியாபாரம், ஃபேன்சி ஸ்டோர், உடல்சேர்க்கை, திருமணம், வீடு, இன்பம், வாகனம், ஆடம்பரம், வாசனை, செல்வம், மயக்குதல், இனிப்பு, போதை, அழகானதோற்றம், அழகு, இரகசிய விஷயங்கள், நடனம், அரங்கு, திரையரங்கு, மகளிர்குழு போன்றவற்றுக்கெல்லாம் காரகமாகிறார்.
சனி: மூத்த சகோதரர், அடிமைத்தனம், குறைந்த ஊதியம் பெறும் வேலை, தொழில், கேரியர், வேலை, துணிகள், இரும்பு, ஈயம், சுழல் காற்று, புயல், செங்கல்சூளை, சூதாட்டம், எண்ணெய் சுரங்கம், இரும்பு போன்றவற்றுக் கெல்லாம் காரகமாகிறார்.
ராகு: தந்தைவழி தாத்தா, வெளிநாட்டுப் பயணங்கள், மின்னணுவியல், வான் பயண வியல், நடிகர், புகைப்படம் எடுத்தல், திரைத்" துறை, புலனாய்வு அதிகாரி, பாதுகாப்புத் துறை, கடத்தல், திருட்டு, ஊழல், விபத்துகள், தொல்லைகள் போன்றவற்றுக்கெல்லாம் காரகம் ஆகிறார்.
கேது: தாய்வழி தாத்தா, ஜோதிடம், மந்திரம், மாந்திரீகம், மதம், மறைபொருள் ஆய்வு, கோவில், சட்டம், நூல், மது, செயல் தடை, இரகசிய நடவடிக்கை, தீர்வு, மருத்துவ மனைகள், பிரார்த்தனைக் கூடங்கள், எழுது தல், ரகசியம், சர்ச்சை, வழக்கு, தடைகள் போன்றவற்றுக்கெல்லாம் காரகம் ஆகிறார்.
இப்படி, ஒன்பது கிரகங்களும் தங்களுக் குரிய பணிகளாக பலவற்றைக் கொண்டு அவற்றை ஜாதகர்களுக்கு வழங்கிடக்கூடிய வர்களாக இருந்தாலும் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் அவர்கள் அமர்ந்துள்ள நிலைக்கேற்பவே தங்கள் பலன்களை வழங்கிடக்கூடியவர்களாக உள்ளனர்.
காலபுருஷ தத்துவத்தின்படி ஜாதகத்தில் பொதுவாக பன்னிரண்டு பாவகங்கள் இருந்தாலும், ஒருவர் பிறந்த நேரத்தை அடிப் படையாகக் கொண்டு அமையும் லக்னமே அவரின் ஜென்ம லக்னமாக, அவருடைய ஜாதகத்தின் முதல் வீடாக அமைகிறது.
அந்த முதல் வீடு என்பது ஒவ்வொரு வருக்கும் மேஷத்தில் இருந்து மீனம் வரையில் எதுவாகவும் இருக்கலாம்.
ஒரு நாளுக்குரிய இருபத்தி நான்கு மணி நேரத்தில் பன்னிரண்டு லக்கினங்களுக்குரிய காலங்கள் உள்ளடங்கியுள்ளன என்பதால், அந்த நாளில் ராசியும் நட்சத்திரமும் ஒன்றாகவே இருந்தாலும் ஒவ்வொருவருக் கும் லக்னம் என்பது வேறாகிவிடும்
தொடர்ச்சி வரும் இதழில்...
செல்: 94443 93717