பால சாகித்ய புரஸ்கார் விருது

award

 

 

வ்வொரு ஆண்டும், நாட்டின் அங்கீகரிக்கப் பட்ட 24 மொழிகளில் வெளியாகும் இலக்கியநூல்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதில், சிறுவர்களுக்கான நூல்களுக்கு பால சாகித்யா, இளைஞர்களுக்கான நூல்களுக்கு யுவ புரஸ்கார், மற்ற நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது

 

 

வ்வொரு ஆண்டும், நாட்டின் அங்கீகரிக்கப் பட்ட 24 மொழிகளில் வெளியாகும் இலக்கியநூல்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதில், சிறுவர்களுக்கான நூல்களுக்கு பால சாகித்யா, இளைஞர்களுக்கான நூல்களுக்கு யுவ புரஸ்கார், மற்ற நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது என வழங்கப்படுகிறது.

இந்தாண்டுக்கான பால புரஸ்கார் மற்றும்யுவ புரஸ்கார் விருதுகளுக்கு, அந்தந்த மொழிக்கு நிறுவப்பட்ட நடுவர் குழு பரிந்துரையை சாகித்ய அகாடமி தலைவர் மாதவ் கவுஷிக் டெல்லியில் ஆய்வு செய்தார்.

அதையொட்டி நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின், இந்தாண்டுக்கான விருது பட்டியல் வெளியிடப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், விஷ்ணுபுரம் கிராமத்தை சேர்ந்த பத்திரிகையாளர், எழுத்தாளர், சிறுவர் கதைசொல்-லி, கவிஞர் என, பன்முகம் கொண்ட விஷ்ணுபுரம் சரவணன் எழுதியுள்ள, ஒற்றைச்சிறகு ஓவியா என்ற சிறுவர் நாவல், தமிழ் மொழிக்கான பால புரஸ்கார் விருதுக்கு தேர்வாகி உள்ளது.

தமிழில் தொடர்ந்து சிறார் கதைகள், நாவல்கள் எழுதி வரும் விஷ்ணுபுரம் சரவணன், கயிறு நீலப்பூ, எலி-யின் வேட்டை உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்து, திரைப்பட உருவாக்கம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் லட்சுமிஹர் எழுதியுள்ள, கூத்தொன்று கூடிற்று என்ற சிறுகதை தொகுப்பு, யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகி உள்ளது. 

தெலுங்கு மொழியில் கங்கிசெட்டி சிவகுமாருக்கும், மலையாளத்தில் ஸ்ரீஜித் மூதேதாத்துக்கும் பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெறும் விழாவில், இவர் களுக்கு தலா 50,000 ரூபாய் ரொக்கப்பரிசு, செப்புப் பட்டயம் ஆகியவை வழங்கப்படும்.

gk010725
இதையும் படியுங்கள்
Subscribe