வரி வடிமைப்பியல் தமிழைப்போலவே கன்னடத்திலும் உள்ளமைதமிழ் மொழியின் வடிவமைப்பு முறையையே (ORTHOGRAPHY)இந்திய மொழிகள் அனைத்தும் பெற்றுள்ளன! அஃதாவது, இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பேசப்படும் மொழிகள் அனைத்திற்கும், மொழி-வடிவமைப்பு என்னும் எழுத்தியல் முறை முற்றிலும் தமிழ் மொழியின் மொழி- வடிவமைப்பு முறையைப் பின்பற்றியே அமைந்துள்ளது. அவ்வாறிருக்கும்பொழுது கன்னட மொழிக்கான எழுத்தமைப்பு முறையும் தமிழ் வரிவடிவ முறைமையைப் பின்பற்றியே உள்ளது என்பது வியப்பல்ல. எனவேதான், தமிழ்த்தாயின் நெடுங்கணக்கு போன்றே கன்னடச் சேயிலும் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், உயிர்மெய்யெழுத்து கள் அமைந்துள்ளன.
கவிராச மார்க்கத்தின் தமிழ் மொழிபெயர்ப்புமேலே கன்னடத்தின் முதல் நூலாகக் குறிக்கப்பெற்ற ஒன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த கவிராச மார்க்கம் என்பது இராட்டிரகூட மன்னன் நிருபதுங்க அமோகவர்சனின் படைப்பு. இதனை அவனது அவைக்களப் புலவரின் படைப்பாகவும் கூறுகின்றனர். இது கன்னட மொழியின் வளர்ச்சி, இலக்கிய இலக்கண மரபு களைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது.இதன் தமிழாக்கம், தண்.கி. வேங்கடா சலம் அவர்களால் எழுதப்பெற்று 2000 இல் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பெற்றது. முதல் நூல் என்று கருதும் வகையில் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார் ஆசிரியர். இந்நூல் அவர் காலமான பின்புதான் வெளிவந்தது.
உண்மையைச் சொன்ன கமலை எதிர்ப்பது ஏன்?
ஆனால், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் கன்னட மொழியினருடனான நெருக்கத்தைக் காட்டுவதற்காகக் கன்னடத்தின் தாய் தமிழ் என்றதற்குக் கன்னடர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலைத்துறையினர், அரசியல்துறையினர், நீதித்துறையி னர் என அனைத்துத் தரப்பாரும் எதிர்க்கின்றனர். ஆராய்ச்சி முறையில் விடையிறுக்காமல் வெறுப்பு நோக்கில் கண்டிக் கின்றனர். இதற்குக் காரணம், தமிழின் தாய்மை குறித்த பாடங்களை இந்திய மொழிகளில் வைக்காமைதான். இந்நேர்வில் நாம் கமலைப் பாராட்டவேண்டும். பொதுவாக எதையாவது சொல்லிவிட்டு எதிர்ப்பு வந்தவுடன் நான் அந்தப்பொருளில் சொல்லவில்லை. இதனால் யாரும் புண்பட்டிருந்தால் என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மழுப்புவார்கள். அவ்வாறில்லாமல் தான் உண்மையைத்தான் சொன்னேன் என்று உறுதியாக உள்ளமைக்கே பாராட்டு.
தமிழ்நாட்டில் உள்ள தமிழிசை போன்றவர்களே அரசியலுக்காக உண்மையைமறைத்துத்தவறாகத்தெரிவிக்கும் பொழுது உண்மையை உரைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
இஇஈ.(பி.பி.சி.) இணையத் தளத்தில் முரளிதரன் காசி விசுவநாதன், செவ்வியாகக், “கமல் சொல்வதுபோல் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததா?” என ஒரு படைப்பு வந்துள்ளது (04.06.2025). அதில் அவர், செக் நாட்டைச் சேர்ந்த இந்திய மொழியியல் அறிஞரான கமில் சுவலபில், தன்னுடைய பட்ங் நம்ண்ப்ங் ர்ச் ஙன்ழ்ன்ஞ்ஹய் நூலில் "தமிழும் கன்னடமும் பிரியும் இறுதிக் கட்டத்தில்" என்று குறிப்பிடுகிறார். இச்சொற்தொடர் மட்டுமே, தமிழிலிருந்து கன்னடம் தோன்றியது என்ற பொருளைத் தருகிறது. ஆனால் தமிழைத் தவிர, பிற முக்கியமான திராவிட மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றின் தொடக்கக் கால இலக்கியங்கள் வேறு ஏதோ மொழியில் இருக்கும் இலக்கியங்களைப் படி செய்தவை அல்லது முன்மாதிரியாக எடுத்துக்கொண்டவை என்கிறார் அவர். அந்த ஏதோ மொழிதான் தமிழ் மொழி என்பதை மறுப்பதற்கில்லை.
தமிழுடன் கூடுதல் நெருக்கம் கொண்ட கன்னடம்
ஆர். நரசிம்மாச்சார்யா எழுதிய கன்னட மொழியின் வரலாறு (ஐண்ள்ற்ர்ழ்ஹ் ர்ச் ஃஹய்ய்ஹக்ஹ கஹய்ஞ்ன்ஹஞ்ங்) என்ற நூல், அந்த மொழியின் தோற்றம் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், கன்னட மொழி தமிழுடன் கூடுதல் நெருக்கம்கொண்டது என்று குறிப்பிடுகிறது.
தமிழ், கன்னடத்திற்குத் தமக்கை மொழியா? தாய் மொழியா?
தொல் திராவிட மொழிக்கு நெருக்கமான மொழி தமிழ்தான் என்கிறார் தேசிய நாட்டுப்புற ஆதரவு மைய இயக்குநர் எம்.டி. முத்துக் குமாரசாமி. ஆகவே இப்போதைய கேள்வி, தமிழ் கன்னடத்துக்கு அக்காவா, அம்மாவா என்பதுதான். அக்கா என்றால் எல்லாரும் ஏற்கிறார்கள். ஆனால், இந்த அக்கா மொழி, அம்மா அளவுக்கு மூத்த மொழி என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது," என்றும் அவர் விவரித்தார். தத்தம் மொழியில் இருந்துதான் தமிழ் பிறந்ததாகப் பொய்யான செய்தியைப் பரப்புவோர் சிலர் இருந்தாலும் தமிழ்த் தாய்மையை ஏற்க மனமின்றி அதன் முன்மையை ஒப்புக்கொண்டு மூத்த உடன்பிறப்பு மொழியாகக் கூறும் பிற மொழியாளர் களும் உள்ளனர்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
(திருவள்ளுவர், திருக்குறள் - 423)
என நாம் நுணுகி ஆராய்ந்து பார்த்தால் தமிழே கன்னடம் முதலான மொழிகளின் தாய் என்பதை நன்கு தெளியலாம். தாய் மகளைப் போல் இளமையாகவும் அழகாகவும் பொலிவாகவும் இருந்தால் பார்ப்பவர்கள் இருவரும் அக்கா தங்கைபோல் இருப்பதாகக் கூறுவர். அதனால் தாய் அக்காவாகிவிட முடியாது. தாய்தாய்தான். அதுபோல்தான் இளமைச்செழிப்புடன் உள்ள தமிழ் தமக்கைபோல் தோன்றினாலும் தாய்தான்.
தமிழ் மரபுகளைக் கூறும் கவிராச மார்க்கம்
தமிழ்க் குடும்ப மொழிகளின் தாய்மொழி தமிழ் என்று மொழி வல்லுநர்கள் மட்டும் சொல்லவில்லை இந்திய மற்றும் உலக அகழ்வாராய்ச்சி வல்லுநர்களும் கல்வெட்டு ஆய்வாளர்களும் சொல்கிறார்கள் தமிழ் மொழிக்குடும்பத்தின் தாய்மொழி மட்டுமல்ல உலக மொழிகளின் தாய்மொழியும் தமிழ் தான் என்பதை நிறுவியிருக்கிறார்கள்.
இந்தியாவில் அகழ்வில் கிடைத்த பொருள்களில் உள்ள எழுத்துக்களில் தொன்மையானதும் அதிகம் கிடைத்திருக்கும் எழுத்துகளும் தமிழே! என்கிறார் ஆய்வறிஞர் அ.அரசேந்திரன்.
கன்னடத்தின் முதல் நூலாகக் கவிராச மார்க்கம் இருக்கும்போது கன்னடத்திற்கான பண்டை இலக்கண மரபுகள் இருக்கமுடியாது. எனவே, தமிழ் மரபுகளைப்பற்றியே நூலாசிரியர் கூறுகிறார். எனவேதான் சமற்கிருத மரபைப் பின்பற்றலாம், ஆனால் சமற்கிருதச் சொற்களைக் கலக்கக்கூடாது என்கிறார்.
கன்னடத்தில் சமற்கிருதம் கலப்பதற்கு எதிர்ப்புகன்னட மொழியில் சமற்கிருதக் கலப்பு குறித்துப் பின்வரும் நூற்பாவில் அதற்கு எதிராகத் தெரிவிக்கிறார் கவிராச மார்க்கம் நூலாசிரியர்.
தற்சமந் தன்னில் இணைந்து பிணைந்தகன்னட நடையினைக் கண்டு கைக்கொள்கநூலறி புலவர் நுவன்ற நெறியிது
வடமொழி கலந்து வழங்குதல் தகாது (51) சமற்கிருதச் சொற்களைக் கலந்து எழுதப் புலவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சமற்கிருதக் கலப்பு கடூரம் பயக்கும்
கன்னட மொழியில் வடெமாழிக் கலப்பு
காவிய அழகினைச் சிதைத்திடும் கண்டீர்
பின்வரும் பாடல் வடமொழி பிணைந்ததால்
பறைஒ- போலக் கடூரம் பயக்கும் (56)
சமற்கிருதக் கலப்பு குற்றம்
தெளிவுற இதனைத் தெளிந்து கொள் ளாமல்
கன்னட மொழியுடன் வடமொழி புணர்த்தித்
தொகைநிலை ஆக்குதல் கொதிக்கும் பாலில்
மோர்த் துளி சேர்ப்பதுபோலக் குற்றமாம் (58)
கன்னடப் புலவர் கன்னடத்தில் சமற்கிருதம் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் அதைக் கொதிக்கும் பாலில் மோர்த்துளி சேர்ப்பதுபோலக் குற்றம் என்றும் வன்மையாகத் தெரிவிக்கிறார்.
தமிழ்த்தாய்மையை உணராச் சேய்மொழியினர்
பொதுவாகத் தமிழ்க் குடும்ப மொழிகளைச் சேர்ந்தோர் தத்தம் மொழிகளில் உள்ள சமற்கிருதச் சொற்களை நீக்கிய பாடல்களைத் தங்களின் தனிமொழியாகக் கூறுவர். அஃதாவது தனிக்கன்னடம், தனித் தெலுங்கு, தனி மலையாளம் என்பர்.
அதுதான் தமிழ் என்று உணராமல் அவ்வாறு கூறுவர்.
அத்தவறான நம்பிக்கையால் தத்தம் மொழியைத் தமிழிலிருந்து தோன்றியதாகக் கூறக் காலங்காலமாக மனமின்றி இருக்கின்றனர்.
தமிழ் ஊர்விகுதிகளையுடைய கருநாடக ஊர்கள்
- அவை தமிழ் மண்தானே!
துறை, மலை, குளம், சேரி, ஏரி, ஊர், நகர், புரம், காடு, பட்டி, பொழில், தோப்பு, பாக்கம், பட்டினம், பட்டணம் முதலிய நூற்றுக்கும் மேற்பட்ட விகுதிகளைக் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள ஊர்களும் நகரங்களும் உள்ளன. அவைபோல் கருநாடக ஊர்ப்பெயர் விகுதிகளும் உள்ளன. சான்றுக்குச் சில பார்ப்போம்.
பெங்களூரு, கோலார், துமகூரு, மைசூரு, சிக்மகளூரு, சாமராசநகர், இராமநகரம், அச்சனூர், அடையாறு, கனகபுரம், குசால்நகர், கொல்லூர், தங்கவயல், பாகல்கோட்டை முதலிய பல ஊர்ப்பெயர்கள் தமிழ் ஊர்விகுதிகளுடனே உள்ளன. கருநாடக மாநிலம் என்பது ஒருகாலத்தில் தமிழ்நிலமாக இருந்ததுதான். தமிழ்நிலத்தில் வழங்கிய மொழி தமிழ்மொழியாகத்தானே இருக்கமுடியும்? அப்பகுதியில் உருமாறித் தோன்றிய கன்னடமொழி அப்பகுதி மூலமொழியாகிய தமிழில் இருந்துதானே வந்திருக்கும் என்பது இயற்கை நீதிதானே!
கன்னட எண்ணுப் பெயர்கள் யாவும் தமிழே! ஆயிரம் தமிழ்ச்சொல்லே!
கன்னடச் சொற்களைப் பார்த்தால் பெரும் பாலும் தமிழே எனத் தெளிவாகப் புரியும். அதற்குச் சான்றாக எண்ணுப்பெயர்களை இங்கே பார்ப்போம்.
சுன்னம் - சொன்னே
ஒன்று-ஒந்து
இரண்டு-எரடு
மூன்று- மூரு
நான்கு - நால்-நாலக்கு
ஐந்து-ஐது
ஆறு- ஆறு
ஏழு- ஏளு
எட்டு - என்டு
ஒன்பது- ஒம்பத்து
பத்து - ஃகத்து
நூறு - நூறு
எண்ணுப் பெயர்கள் தமிழில் இருந்து திரிந்ததை நாம் உணர்கிறோம். ஆனால் ஆயிரம் அவ்வாறு அல்ல எனக் கருதுவாரும் உள்ளனர். அது தவறு என்பதையும் பேரா.முனைவர் சி.இலக்குவனார் பின்வருமாறு கூறுகிறார். “ஆயிரம் என்னும் எண்ணிற்குக் கன்னடத்தில் சாவிர என்றும் தெலுங்கில் வேலு என்றும் பெயர்கள் வந்துள்ளமை எவ்வாறு என்று தெளியவில்லை.
கன்னடச் சாவிர (சவர என்பதும் உண்டு) வடமொழியின் சகசிர என்னும் சொல்லிலிருந்து வந்திருக்கக்கூடும் என்று அறிஞர் கால்டுவல் கருதுகின்றனர். தமிழ் ஆயிரமும் வடமொழிச் சகசிரத்திலிருந்து வந்திருக்கக்கூடுமென்று அவர் கூறுகின்றமை பொருத்தமுடைத்தன்று. இப் பேரெண்ணைத் தமிழ்க் குடும்பத்தினர் வடமொழியாளரிடருந்து கடன் பெற்றிருக்கக்கூடும் என்று அறிஞர் கால்டுவல் கருதுகின்றமையும் உண்மைக்கு மாறுபட்டது. தமிழில் நூறாயிரம், கோடி கோடிக்கு மேற்பட்ட ஆம்பல், வெள்ளம் முதலிய எண்கள் ஆரியர் தொடர்பு கொள்வதற்கு முன்பே இருக்கக் காண்கின்றோம்.
அவ்வாறு இருக்க ஆயிரம் என்ற எண்ணுப் பெயரை மட்டும் ஆரியர்களிடமிருந்து தமிழர் கடன் வாங்கி இருப்பர் என்பது எவ்வாறு பொருந்தும்?”
எனவே, கன்னட எண்ணுப் பெயர்கள் யாவும் தமிழில் இருந்து திரிந்தவையே எனலாம்.
கடலில் மறைந்த குமரிக்கண்டம்
தமிழின் தொன்மையை ஏற்பதன் மூலமும் தமிழின் தாய்மையை உணரலாம். இந்தியப் பெருங்கடலாகச் சொல்லப்படும் குமரிக்கடலில் மறைந்த நிலப்பகுதியே குமரிக்கண்டம் அல்லது இலெமூரியாக் கண்டம். இங்குதான் மனித இனம் தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர். இங்குள்ள மக்கள் பேசிய மொழி தமிழே என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். புறத் தமிழ்ப் பகைவர்களும் அகத்தமிழ்ப் பகைவர்களும் தமிழின் பெருமையை மறைக்கும் வகையில் குமரிக்கண்டம் பற்றிய ஆய்வுகளையே புனைகதைபோல் திரித்துக் கூறிவருகின்றனர். என்றாலும் உலகில் பல்வேறு பகுதிகளில் இப்போது கடல்கோள் சுனாமி என்ற பெயரில் நிகழ்ந்து வருவதையும் தமிழ்நாட்டில் 2004 திசம்பரில் நிகழ்ந்ததையும் பார்க்கும் நமக்குக் கடல்கோள் என்பது உண்மையே எனத் தெரிய வருகிறது. ஆழிப்பேரலை என்றாலும் அது கடல் கோள்தான்.
கடல்கோள் குறித்து இளங்கோஅடிகள்
சிலப்பதிகாரத்தில் தமிழ்த்தேசியப் பெரும் புலவர் இளங்கோ அடிகளும் இதுகுறித்துப் பின் வருமாறு தெரிவிக்கிறார்.
வடிவேலெறிந்த வான்பகை பொறாது
பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும்கொண்டு
தென்றிசையாண்ட தென்னவன் வாழி (சிலப்பதிகாரம் 11:17-22)
பஃறுளியாறும் பக்க மலைகளை அடுக்கடுக்காகக் கொண்ட குமரிமலையும் கடலால் கொள்ளப் பட்ட வரலாற்று உண்மையை இவ்வடிகள் மூலம் இளங்கோ அடிகள் உலகிற்குத் தெரிவிக்கிறார்.
இளங்கோஅடிகளே,
நெடியோன்குன்றமும்தொடியோள்பௌவமும்
தமிழ்வரம்பறுத்ததண்புனல்நல்நாட்டு
(சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2) என்றும் குறிப்பிடுகிறார்.
கடல்கோள் குறித்து அடியார்க்குநல்லார்
"தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதி காரத் தொடர்க்கு உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விரிவான விளக்கம் தருகிறார்.
"தென்பா- முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க." என்கிறார்.
காதம் என்றாலும் காவதம் என்றாலும் பத்து கல் அஃதாவது 16 புதுக்கல்(கி.மீ.) தொலைவு எனப் பொருள். 700 காவத ஆறு என்றால் 11,200 புதுக்கல் நீட்சியுடையது எனப் பொருள். இவ்வாறு ஆற்றின் பரப்பளவு, நாடுகளின் பெயர்கள் முதலியவற்றை அடியார்க்கு நல்லார் வரலாற்றுக் குறிப்பாகவே தருகிறார்.
கடலுள் புகுந்த புகார்குறித்து மணிமேகலை
மணிமேகலையில் சீத்தலைச்சாத்தனார் புகார் நகர் கடலில் புகுந்ததைக் கூறுகிறார். ஒருவேளை குமரிக்கண்டத்தின் பக்கவாட்டு நீட்சி புகார் வரை இருந்திருக்கலாமா என ஆராயவேண்டும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் எழுதப்பெற்ற காலம்தான் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. அவை அதற்குப் பல நூறு ஆண்டுகள் முன்னரே நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர். அவ்வாறாயின் குமரிக்கண்டம் கடல் கொண்டதுடன் இதையும் தொடர்பு படுத்தினால் தவறில்லை எனலாம்.
ஆரியப் புராணங்களிலும் தொன்மக்கதை களிலும் வரும் பகுத்தறிவிற்குப் பொருந்தாத கற்பனைகளையெல்லாம் வரலாற்றுச் செய்திகளாகத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவோர் தமிழ் இலக்கியங்கள் கூறும் வரலாற்றுச் செய்திகளையெல்லாம் கற்பனைக் கதைகளாகத் திரித்துக் கூறுகின்றனர். இதனை முதலில் படிக்க நேரும் வெளிநாட்டினரும் இவற்றை உண்மையாகக் கருதி உண்மையான தமிழக வரலாற்றைக் கற்பனையாகக் கூறி விடுகின்றனர்.
எனவே, மறைந்த நிலப்பகுதியின் பெயர் என்னவாகவும் இருந்திருக்கலாம். ஆனால் பாண்டிய மன்னன் ஆட்சி வரம்பில் இருந்த தமிழ்நிலம் கடலால் விழுங்கப்பட்டது என்பதே உண்மை. எனவே, அப்பகுதி மக்கள் தமிழ்மக்கள் என்பதும் அம்மக்கள் பேசிய மொழி தமிழே என்பதும் மிக உண்மை. எனவே, அங்கே இருந்த தமிழினமே கடல்கோள்களாலும் பூமித் தட்டு நகர்வுகளினாலும் சிதறிய புவிப்பரப்பில் அங்கு வாழ்ந்த மக்களும் சிதறி வாழ்ந்துள்ளனர்.
கன்னடத்திற்கும் தமிழே தாய்அதுபோல் கடலால் கொள்ளப்பட்ட தென்னாட்டில் பேசப்பட்ட தமிழ்மொழியே உலகெங்கும் பரவி பல மொழிகளாகக் கிளைத்துள்ளது எனலாம். அவ்வாறெனில் உலக மொழிகளின் தாய் தமிழ் என்பதே பெரும் உண்மை. உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகத் தமிழ் திகழ்கையில் கன்னடத்திற்கும் தமிழே தாய் என்பதும் உண்மைதானே!
தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது
கன்னட மொழி என்பது தமிழ்மொழியின் சேய் மொழிகளுள் ஒன்று என்பதைப் பேரா.அ.திருமலை முத்துசுவாமி (தமிழ்நாடும் மொழியும்) கூறுகிறார்.
இவர்போல் அறிஞர்கள் பலரும் தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என எழுதியும் பேசியும் வந்துள்ளனர்.
கன்னடச் சொற்கள் உணர்த்தும் தமிழ்த்தாய்மை
கன்னடச் சொற்களைப் பார்ததால் ஆராயாம லேயே அவை தமிழ் அல்லது தமிழில் இருந்து மாற்றம் பெற்றவை எனலாம். எனவே, கன்னடத்தின் தாய்த்தமிழ் என்பதுசொல்லாமலேவிளங்கும்.
அச்சொற்கள் சிலவற்றைப் பின்வருமாறு பார்ப்போம்
ஆடைஅணிப்பெயர்கள், இடப்பெயர்கள், உறவுப்பெயர்கள், ஐம்பூதப்பெயர்கள், கருவிப்பெயர்கள், கனிமப்பெயர்கள், காலப்பெயர்கள், சினைப் பெயர்கள், தட்டுமுட்டுப்பெயர்கள், நிறப்பெயர்கள், பறவைப்பெயர்கள், விலங்குப்பெயர்கள், நீர்வாழ்வனவற்றின் பெயர்கள், ஊர்வனவற்றின் பெயர்கள், பூச்சிகளின் பெயர்கள், மரம் செடி கொடிகளின் பெயர்கள் என்று நாம் பட்டியலிட்டுப் பார்த்தால் பெரும்பாலானவை தமிழாக அல்லது சிதைந்த தமிழாக அல்லது பேச்சுத்தமிழாக உள்ளமையை உணரலாம். ஆயிரம் கன்னடச் சொற்கள், தமிழ்-கன்னடச்சொற்கள், கன்னடம் - தமிழ்ச்சொற்கள் என்றவகையில்இணையத்தில் நாம் பார்த்தால் இவை எளிதில் புரியும். எனினும் சான்றிற்காக அவற்றில் சிறு பகுதியைப் பின்வருமாறு அறியலாம்.
இகரம் எகரமாக மாறுதல், ‘ப’ வரிசைச் சொற்கள் ஃக(ட்ஹ) வரிசைச்சொற்களாக மாறுதல், இறுதி மெய்யெழுத்து மறைதல், இறுதி எழுத்து எகரமாகமாறுதல், இறுதி எழுத்து உகரம் ஏறிவருதல், தமிழ்ப் பேச்சுவழக்காக மாறுதல் முதலிய காரணங்களால் கன்னடமாக மாறியுள்ளதை நாம் புரிந்துகொள்ளலாம்.
அகத்தி - அகசெ
அகத்தி - அகசெ
அகப்பை - அகப்பெ
அக்கா - அக்கா/ அக்க
அங்காடி- அங்காடி
அணை - அணெ
அண்டை - அண்டெ
அண்ணன் - அண்ண
அத்தன்- அச்சன் - அச்ச
அத்தி - அத்தி
அத்தை - அத்தெ
அந்தி - அந்து
அப்பம் - அப்ப
அப்பளம் - அப்பள
அம்மி - அம்மி
அம்மை - அம்ம
அம்மை - அம்ம
அறை - அறெ
ஆகாயம் - ஆகாசம்
ஆடாதோடை - ஆட்சோகெ
ஆண்டி - ஆண்டி
ஆதனை - ஆதலு
இடம் - இடெ
இடுக்கி - இடுக்களள்
இடுக்கு - இடுகு
இடை / நடு - நடு
இட்ட- - இட்ட-
இண்டை - இண்டெ
இதழ் - எசன்
இமை - எமெ
இரவு - இருள்
இராத்திரி - ராத்ரி
இரை - எரெ
இலந்தை -எலச்சி
இலுப்பை - இலுப்பெ
இலை - எலெ
இல்லை - இல்ல
ஈசல் - ஈச்சல்
ஈட்டி - ஈட்டி
ஈருள்ளி - ஈருள்ளி
ஈர் - ஈர்
உகிர் - உகுர்
உக்களம் - உக்கட
உரைகல் - ஒரகல்
உலக்கை ஒலக்கெ
உழுந்து - உத்து
உளி - உளி
உறி - உறி
ஊட்டம் - ஊட்ட
ஊட்டு - ஊட்ட
ஊமை - ஊமெ
எச்சில் - எஞ்சல்
எண்ணெய் - எண்ணெ
எருது - எத்தெ
எருமை - எம்மே
எலும்பு - எலுபு
ஏதோ - ஏனோ
ஏரி - ஏரி
ஐயன் - அய்ய
ஒடு - ஒடு
ஒட்டை - ஒட்டெ
ஒரல் - உரல்
ஔவை / அவ்வை - அவ்வ
ஓடம் - ஓட
ஓடு - ஓடு
ஓலை - ஓல
"எந்த மொழியும் முதல்முதலாக எழுதப்படும் போது மக்கள் எவ்வாறு பேசினார்களோ அவ்வாறே எழுதப்படும் என்பது ஒரு பொதுக்கருத்து. எனவே, கன்னட மொழி, முதல்முதலில் எழுதப்பட்டபோது, கொச்சைத் தமிழ்ச்சொல்லாகிய பேச்சுவழக்குத் தமிழ்ச்சொல்லைத் தனது எழுத்து வழக்குச் சொல்லாகக் கொண்டு எழுதப்பட்டது என்பது புலனாகும்." என்கிறார் பேரா.சுந்தரசண்முகனார் (தமிழ்க்காவிரி). மேற்குறித்த சொற்பட்டியல் இதனை நன்கு தெளி வாக்குகிறது. எனவே, தமிழே கன்னடமாகத் திரிந்தது என்பது வெள்ளிடைமலை.