Advertisment

மாரி செல்வராஜுக்கு பட்டம் சூட்டிய வைகோ

18 (5)

மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. 

Advertisment

இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ.55 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இப்படத்திற்கு திரை பிரபலங்கள் தொடர்ந்து பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் தொடங்கி, இயக்குநர்கள் வெற்றிமாறன், சேரன், வசந்தபாலன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராடியிருந்தார்.
சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இப்படத்தை பாராட்டியிருந்தார். 

Advertisment

இந்த நிலையில் மாரி செல்வராஜுக்கு வைகோ ‘இயக்குநர் திலகம்’ எனும் பட்டத்தை சூட்டியுள்ளார். அப்படி சூட்டி அவர் எழுதிய பாராட்டு சான்றிதழை வைகோவின் மகனும் எம்.பி-யுமான துரை வைகோ மாரி செல்வராஜிடம் கொடுத்தார். 

durai vaiko vaiko Bison mari selvaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe