அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் தீவிரம் காட்டி வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கி துபாய் முதல் போர்ச்சுக்கல் வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்கிறார். இதில் துபாய் மற்றும் ஸ்பெய்னில் நடந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்திருந்தார். மற்ற போட்டிகளில் கவனிக்கத்தக்க இடங்களை பிடித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது மலேசியாவில் நடக்கும் ஏசியன் லீ மேன்ஸ் தொடரில் பங்கேற்கிறார். இதற்காக கடந்த சில வாரங்களாக அங்கு முகாமிட்டுள்ளார். அங்கு அஜித்துடன் இயக்குநர் சிறுத்தை சிவாவும் ஏ.எல்.விஜய்யும் உடன் இருக்கின்றனர். மேலும் சிம்பு சமீபத்தில் அஜித்தை ரேஸ் களத்தில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்த நிலையில் ஏசியன் லீ மேன்ஸ் தொடர் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் அஜித்தின் அணி இரண்டு கார்களுடன் போட்டி போடுகின்றன. முதல் காரை அஜித்துடன் நரேன் கார்த்திகேயன் மற்றும் ஜூலியன் கெர்பி ஆகியோர் ஓட்டுகின்றனர். போட்டியில் இவர்கள் ஓட்டிய கார் பாதியிலே பழுதாகி நின்றது. மற்றொரு கார் மீது மோதியதில் இவ்வாறு நின்றாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்காரை அஜித் அணியின் ஊழியர்கள் சரி செய்தனர். இது குறித்து பேட்டியளித்த அஜித், “கவலைப்பட ஒன்றுமில்லை ரேஸ் என்றால் இப்படி நடக்கத்தான்செய்யும்” என பதிலளித்தார்.
இதையடுத்து அஜித்துடன் தெலுங்கு இளம் நடிகை ஸ்ரீலீலா சந்திப்பு மேற்கொண்டார். ரேஸ் டிராக்கில் ரசிகர்களுடன் அவரும் சென்று அஜித்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். இவர் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் புதுப் படத்தில் நடிக்கவுள்ளதாக முன்பு தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/16-32-2025-12-13-16-22-22.jpg)