விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை(09.01.2026) வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது. இதையடுத்து தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் படம் தள்ளிபோவதாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. மேலும் புது ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தது. 

Advertisment

இதனிடையே சான்றிதழ் வழங்காதது தொடர்பாக அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் வட்டாரத்தில் மத்திய பா.ஜ.க அரசு தான் தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு காரணம் என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி விஜய்க்கு ஆதரவு கொடுத்துள்ளனர். சினிமா வட்டாரத்தில் திரைத்துறை கஷ்டமாப்ன காலத்தில் இருப்பதாக விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டுகின்றனர். அந்த வகையில் இயக்குநர்கள் அஜய் ஞானமுத்து, ரத்ன குமார், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் நடிகர்கள் சிபி சத்யராஜ், ரவி மோகன், சிம்பு, சாந்தனு உள்ளிட்ட பலர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். 

Advertisment

இந்த நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அநியாயத்தின் உச்ச கட்டம். ஆனாலும் நீங்க பண்ணுங்க. அப்படி பண்ண பண்ணத்தான் அவங்க உயர்ந்துட்டு போவாங்க. ஏன்னா அவங்களை நாங்க கைவிட்ற மாட்டோம். பொங்கல் அன்னைக்கு படம் வரலைன்னா என்ன, படம் வர அன்னைக்கு தான் நமக்கு பொங்கல். சும்மாவே ஜன நாயகன் வேற லெவல் பிளாக்பஸ்டர் தான். என்னமோ நினைச்சு தெரியாம நீங்க பண்ண விஷயத்தால சினிமா வரலாற்றிலே, யாருமே மறக்க முடியாத எதிர்பார்க்காத சம்பவம் நாங்க பண்ணிக்காட்டுவோம். வெயிட் பண்ணுங்க. வெயிட் பண்ண நாங்க ரெடி. ஏன்னா வெயிட் பன்றதுக்கு படம் ஒர்த்து” என்றார்.