Skip to main content

டைம் டிராவல் அலப்பறைகள் கை கொடுத்ததா? - மார்க் ஆண்டனி விமர்சனம்

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

vishal mark antony movie review

 

நடிகர் விஷாலுக்கு இரும்புத்திரை படத்திற்குப் பிறகு எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஹிட் அடிக்கவில்லை. அதேபோல் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிம்புவை வைத்து இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' (ஏ.ஏ.ஏ) படம் செய்த சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே. இந்த இருவரும் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப கூட்டணி அமைத்து உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் இவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றியைக் கொடுத்ததா, இல்லையா?

 

எப்படியோ பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு 1975 ஆம் ஆண்டு டைம் டிராவல் செய்யும் டெலிபோனை கண்டுபிடிக்கிறார் செல்வராகவன். அதை வைத்து தன்னுடைய வாழ்வில் நடந்த துன்பமான நிகழ்வை மாற்றும் செல்வராகவன் சிறிது நேரத்திலேயே இறந்து விடுகிறார். இதைத் தொடர்ந்து இந்த டெலிபோன் 20 வருடங்களுக்குப் பிறகு 1995 ஆம் ஆண்டு ஆண்டனி விஷாலின் மகன் மார்க் விஷாலிடம் கிடைக்கிறது. மகன் மார்க் விஷால் இந்த டெலிபோனை பயன்படுத்தி தன்னுடைய வாழ்வில் நடந்த துன்பமான நிகழ்வை மாற்ற எடுக்கும் முயற்சியில் தன் கேங்ஸ்டர் அப்பா ஆண்டனி விஷாலின் தலையெழுத்தை மாற்றுகிறார். இதையடுத்து அப்பா ஆண்டனி விஷாலுக்கு என்னவாயிற்று? இதனால் மகன் விஷால் மார்க் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் என்ன? இவர்களுக்கு நண்பனாக இருக்கும் எஸ்.ஜே. சூர்யா வாழ்க்கை எவ்வாறு மாற்றி அமைக்கப்படுகிறது? என்பதே மார்க் ஆண்டனி படத்தின் அதிரடியான மீதிக் கதை.

 

vishal mark antony movie review


'ஏ.ஏ.ஏ' கொடுத்த பிளாக்பஸ்டர் தோல்விக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சரியான கம்பேக் கொடுத்து தியேட்டரை கைதட்டல், விசில்களால் அதிரச் செய்துள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். தன்னுடைய பலம் அறிந்து தனக்கு என்ன வருமோ அதைச் சிறப்பாகத் திரை எங்கும் படரச் செய்து தியேட்டரில் திருவிழாவை உண்டாக்கியிருக்கிறார். இன்று இளைஞர்களின் பல்சை சரியாகப் பிடித்து, அவர்களுக்கு காட்சிக்கு காட்சி என்ன பிடிக்குமோ அதைச் சரியாக கனித்து அதற்கேற்றார் போல் திரைக்கதை அமைத்து படம் முழுவதும் சரியான இன்டர்வலில் கூஸ்பம் மொமெண்ட்ஸ்களை அள்ளித் தெளித்து இருக்கிறார். இந்தப் படத்தின் டிரைலர் எந்த அளவு நமக்கு பரவசத்தையும், உற்சாகத்தையும் கொடுத்ததோ படமும் அதே அளவு பரவசத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து பார்ப்பவர்களுக்கு தியேட்டர் மொமென்ட்ஸ் மூலம் கொண்டாட்டத்தை கொடுத்திருக்கிறது. ஒரு கதையாக பார்க்கும் பொழுது இது ஒரு டைம் டிராவல் கதை என்றாலும் அதில் புதுமையான விஷயங்களை உட்புகுத்தி இதுவரை நாம் பார்க்காத ஒரு கதை அம்சத்துடன் கூடிய திரைக்கதையை உருவாக்கி அதை ரசிக்கும்படி கொடுத்து படத்தை ஜோராக கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இவ்வளவு குழப்பமான ஒரு திரைக்கதையை புரியும்படி அதையும் ரசிக்கும்படி கொடுத்ததற்கே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பாராட்டுக்கள். 

 

vishal mark antony movie review

 

தொடர் தோல்வி பாதையில் சென்று கொண்டிருந்த விஷால், சிம்புவை போல் டைம் டிராவல் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். சரியான நேரத்தில் சரியான கதையைத் தேர்ந்தெடுத்து அதற்கு ட்ரெண்டிங்கான திரைக்கதை மூலம் சரியான வடிவம் கொடுத்து அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். அப்பா மகன் என இரு வேடங்களில் வரும் விஷால் மகனைக் காட்டிலும் அப்பா வேடத்தில் பின்னிப் பெடலெடுத்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வரும் தந்தை விஷால் அதகளம். இவருக்கு சரி சம போட்டியாளராக களம் இறங்கி இருக்கும் எஸ்.ஜே. சூர்யா தான் இந்த படத்தின் முதன்மையான ஹீரோ என்றால் மிகை ஆகாது.

 

vishal mark antony movie review

 

அப்பா - மகன் என இரு வேடத்தில் வரும் எஸ்.ஜே. சூர்யாவும் காட்சிக்கு காட்சி தன்னுடைய அக்மார்க் நடிப்பை மிக மிக சிறப்பாக வெளிப்படுத்தி தியேட்டரில் கைதட்டல் மட்டும் விசில்களைத் தெறிக்கச் செய்து தனது நடிப்பால் திரையரங்கை அதிரச் செய்துள்ளார். இவரும் விஷாலும் விடாக்கண்டன் தொடக்கண்டனாக மாறி மாறி நடித்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கின்றனர். குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா தான் இந்த படத்தின் ஹீரோ அண்ட் வில்லன் என்று சொல்லும் அளவிற்கு காட்சிக்கு காட்சி நம்மை தன் காமெடி வில்லத்தனத்தால் பரவசப்படுத்துகிறார். இவரது ஸ்கிரீன் ப்ரெசென்ஸ், வசன உச்சரிப்பு, உடல் மொழி ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து இந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக மாற்றி இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிறகு இந்த படத்தின் மொத்த கிரெடிட்சையும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா தட்டிச் சென்றுள்ளார். இவருக்கு விருதுகள் நிச்சயம். சிறிது நேரமே வந்தாலும் செல்வராகவன் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். அதேபோல் விஷால், எஸ்.ஜே. சூர்யா உடன் பயணிக்கும்படியான கேரக்டரில் வரும் தெலுங்கு நடிகர் சுனிலும் ஜெயிலர் படம் போல் இந்த படத்திலும் கவனம் பெற்றுள்ளார். வில்லன் மற்றும் குணச்சித்திர நடிப்பில் கலந்து கட்டி அசர வைத்துள்ளார். முக்கிய பாத்திரத்தில் வரும் ஒய்.ஜி. மகேந்திரன், கிங்ஸ்லி, அபிநயா, ரித்து வர்மா, நிழல்கள் ரவி, பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் அவரவர் வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

 

ஜி.வி. பிரகாஷ் இசையில் அனைத்து பாடல்களுமே ஆட்டம் போட வைக்கும் ரகம். அதேபோல் பின்னணி இசையில் ரெட்ரோ ஸ்டைல் இசை அமைத்து தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக பழைய பாடல்களை உபயோகப்படுத்தும் விதம் சிறப்பாக அமைந்து பின்னணி இசைக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் பழைய பஞ்சுமிட்டாய் ரீமிக்ஸ் பாடல் வேற ரகம். இருந்தும் படம் மிகவும் சத்தமாக இருக்கிறது. அதை மட்டும் சற்று கன்சிடர் செய்து இருக்கலாம். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் விண்டேஜ் காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஹீரோவும் வில்லனும் இரட்டை வேடம் என்பதால், ஆக்சன் காட்சிகளும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

 

vishal mark antony movie review

 

தான் இதற்கு முன் இயக்கிய படங்கள் குடும்பத்துடன் சென்று பார்க்க முடியாத சூழலை உருவாக்கி இருந்திருந்தாலும், அதையெல்லாம் மார்க் ஆண்டனி மூலம் சரி செய்து, தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அதேபோல் இந்த படத்தின் டிரைலர் எந்த அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ அதே எதிர்பார்ப்பை இந்த படமும் பூர்த்தி செய்து இருக்கிறது. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடங்களிலும் பெரிதாக தொய்வில்லாமல் மிக  வேகமாகப் பயணித்து ரோலர் கோஸ்டர் ரைடு போல் படம் ஓடுகிறது. இதனால் சில இடங்களில் மட்டும் லாஜிக் மீறல்கள். ஆனால் அவை எதுவும் படத்தைப் பெரிதாகப் பாதிக்காததால் இந்த படம் வெற்றிகரமாக கரை சேர்ந்திருக்கிறது. 


மார்க் ஆண்டனி - ஏ விஷால் - ஆதிக் கம்பேக்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்” - விஷால் பகிரங்க குற்றச்சாட்டு 

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vishal allegation about theatre owners for not allocating theatres for rathnam movie

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வந்தனர். மேலும் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திருச்சி, தஞ்சாவூர் பகுதி திரையரங்குகளில் ரத்னம் படம் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விஷால் குற்றச்சாட்டு குறித்து பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், “சங்கத்தின் தலைவர் மீனாட்சி மற்றும் செயலாளர் சிதம்பரம் என்னுடைய ஃபோனை எடுக்க மறுக்கிறார்கள். என் நண்பர் சீனு சார், ரத்னம் படத்தை வடக்கு மற்றும் தெற்கு பதிகளில் வாங்கியிருக்கிறார். ஒரு திரைப்படம் வெளியாவதே பெரிய விஷயம். இந்த காலகட்டத்தில் இப்படி நீங்க பண்ணும் போது இதற்கு பெயர் கட்டப்பஞ்சாயத்து.   

இதில் முதலமைச்சர் திருச்சி கலெக்டர், எஸ்.பி, காவல் துறையினர் என அனைவருக்கும் நான் சொல்ல விருப்பப்படுவது, அவர்கள் செய்வது கட்டப்பஞ்சாயத்தை தவிர்த்து வேற எதுவும் கிடையாது. விஷாலுக்கே இந்த கதி என்றால் நாளைக்கு ஒரு புதுமுக நடிகருக்கு என்ன நடக்கும். நீங்க ஃபோன் எடுக்காமல் இருப்பது, தியேட்டர் ஒதுக்கப்படாமல் இருப்பது, அது உங்களுடைய அலட்சியம். ஆனால் அந்த அலட்சியத்தைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்” என கூறுகிறார். 

Next Story

“சாதியைத் தூக்கிப் பிடித்து எந்தக் காலத்திலும் படம் வந்தது கிடையாது” - ஹரி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
hari about caste related cinema in rathnam movir promotion

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். பின்பு திரையரங்கு ஒன்றில், ரசிகர்களைச் சந்தித்து பேசிய அவர், “ஒரு படம் நல்லாயிருக்கு என்றால் எந்த காலத்தில் ரிலீஸ் செய்தாலும் வருவோம் என வந்திருக்கிறீர்கள். அதற்கு நன்றியும் வாழ்த்துகளும். உங்களை மாதிரி ஆடியன்ஸ் இருக்கும் போது எங்களுக்கு நல்ல சினிமா எடுக்க வேண்டும் என தோன்றும். அந்த வகையில் என்னுடைய ரத்னம் படம் ரிலீஸாகிறது. முதல் முறையாக யோகி பாபு ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். ரோட்ல ஒரு பொண்ணுக்கு பிரச்சனை என்றால் விடக்கூடாது. இந்தக் காலத்தில் போலிஸுக்கு பயந்து கொண்டு எதுவுமே பண்ணுவதில்லை. ஆனால் பிரச்சனை என்றால் தட்டி கேக்கணும். அந்த மாதிரி தட்டி கேட்கும் வேலையை தான் விஷால் படத்தில் பண்ணியிருக்கார்” என்றார்.     

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரத்னம் படம் ஆக்‌ஷம் படம் என்றாலும் எமோஷனலும் இருக்கும். அதனால் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். நாட்டில் எவ்வளவோ அநியாயம் நடந்துட்டு இருக்கு. நிறைய பேரு கெட்டவனா மாறிட்டான். சூழ்நிலை மாற வைக்கிறது. போதை பொருள்களும் புழக்கத்தில் சுத்திட்டு இருக்கு. இதனிடையே நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவங்கிட்ட இருந்து நல்லவங்கள காப்பாத்தனும். மனிதனுக்கு மனிதன் தான் எதிரி” என்றார்.  

அவரிடம் சாதி வைத்து படமெடுப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சாதியை மையமாக வைத்து எடுப்பது என்பதை, அவரவர்களுக்கு தெரிந்ததை வைத்து படமாக்குகிறார்கள் என்று தான் நல்ல நோக்கத்தோடு பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட ஊரை வைத்து படமெடுத்தாலே அங்கிருக்கிற சாதி, இயல்பாகவே கதைக்குள் வந்துவிடும். யாருமே வேணும் என்று சாதி வைத்து படமெடுப்பேன், என் சாதிக்காரன் மட்டும் பார்த்தால் போதும் என நினைப்பதில்லை. எல்லாருமே படம் பார்க்கணும். பக்கத்து மாநிலங்களில் இருப்பவர்களும் படம் பார்க்க வேண்டும். 

சாதி உயர்ந்தது, சாதியை தூக்கிப் பிடியுங்கள் என யாருமே படமெடுக்க மாட்டார்கள். எந்தக் காலத்திலும் அப்படி வந்தது கிடையாது. படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டர் இருக்கும். அவன் அப்படித் தான் சாதி பற்றி பேசிட்டு இருப்பான். ஆனால் கடைசியில் மனம் திருந்துவது போல் தான் இருக்கும். சினிமாவைப் பொறுத்தவரை எல்லா இன மக்களும் வேலை பார்த்தால் தான் படமெடுக்க முடியும். எல்லா மக்களும் பார்த்தால் தான் ஒரு சினிமா வெற்றியடைய முடியும். அதனால் சினிமா என்பது மதம், சாதி, இனம், மொழி என எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது” என்றார்.