Skip to main content

பேய் காமெடி போதாதா... 'A' காமெடி தேவையா? சந்தானம் ரிடர்ன்ஸ்... 'தில்லுக்கு துட்டு 2' - விமர்சனம் 

Published on 08/02/2019 | Edited on 08/02/2019

சந்திரமுகி, காஞ்சனா, அரண்மனை படங்களின் பாணியில் வெளிவந்த தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ளது 'தில்லுக்கு துட்டு 2'. சந்தானம் ஹீரோவாகி, மாஸ் ஹீரோவாகி ஒரு பெரிய தோல்வியைக் கடந்து மீண்டும் வந்திருக்கும் படம். 

 

santhanam dhilluku dhuddu



'தில்லுக்கு துட்டு 2' படத்தில் டாக்டரான நாயகி ஷ்ரிதா சிவதாஸ் மீது யாரெல்லாம் காதல் கொண்டு 'ஐ லவ் யூ'  சொல்கிறார்களோ அவர்களை எல்லாம் பேய் அடித்துவிடுகிறது. இதற்கிடையே தன் மாமா மொட்டை ராஜேந்திரனோடு காலனியில் வசித்து வரும் சந்தானம், தினமும் குடித்துவிட்டு ஏரியா மக்களுக்கு பெரும் தொல்லை தருகிறார். இவரது தொல்லையிலிருந்து விடுபட இவரால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்ந்து திட்டமிட்டு நாயகி மீது சந்தானத்துக்கு காதல் வர செய்கின்றனர். இவரும் நாயகியிடம் தன் காதலை வெளிப்படுத்த 'ஐ லவ் யு' சொல்ல பேய் இவரை பிரித்து மேய்ந்துவிடுகிறது. இதன் பிறகு ஏன் நாயகி ஷ்ரிதாவிடம் 'ஐ லவ் யு' சொன்னால் பேய் அடிக்கிறது, பேய்க்கும் ஷ்ரிதா சிவதாஸுக்கும் என்ன சம்மந்தம், சந்தானம் பேயிடம் இருந்து தப்பித்து தன் காதலில் வெற்றிபெற்றாரா... என்பதே 'தில்லுக்கு துட்டு 2' படத்தின் மீதி கதை.

 

shritha shivdoss



நாம் நீண்ட நாட்களாகப் பார்த்து ரசித்து, அலுத்துப்போன பேய் காமெடி வகை படம் என்றாலும் படத்தின் கதையை சற்றே வித்தியாசப்படுத்தியதன் மூலம் நம்மை ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் 'லொள்ளு சபா' ராம் பாலா. பேய் காமெடி படங்களுக்கே உண்டான டெம்பிளேட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் பேய்க்கு இசையமைப்பாளர் ஷபீரும், காமெடிக்கு மொட்டை ராஜேந்திரனும் பொறுப்பேற்று அதை நன்றாக பூர்த்தி செய்துள்ளனர். ஷபீரின் பின்னணி இசைதான் கொஞ்சமேனும் திகில் என்ற உணர்வை கொடுக்கிறது. மொட்ட ராஜேந்திரனின் கதாபாத்திரம் பல இடங்களில் சிரிக்க வைத்தாலும், சில இடங்களில் ஏமாற்றத்தையும் தருகிறது. இருந்தும் சந்தானம், மொட்டை ராஜேந்திரன் மற்றும் குஞ்சு குட்டியாக நடித்திருக்கும் பிரஷாந்த் ராஜ் சேர்ந்து அடிக்கும் லூட்டி, அதிலும் குறிப்பாக முன் கிளைமாக்ஸ் காட்சிகள் உண்மையில் குலுங்கிச் சிரிக்க வைக்கின்றன.

சந்தானம் காட்சிக்கு காட்சி தன் வழக்கமான கவுண்ட்டர் வசனங்கள் மூலம் கவர முயற்சி செய்துள்ளார். படத்தின் பிற்பாதியில் இவர் பேய்களிடம் செய்யும் சில்மிஷம் நன்றாக ரசிக்கவைத்துள்ளது. இருந்தும் சந்தானம் தன் கதாப்பாத்திரத்தை இன்னும் அதிக ஈடுபாட்டுடன் செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தனக்கு எளிதில் வரும் பாத்திரமென்பதால் மிக அசால்டாக நடித்த தோரணை தெரிகிறது. நாயகி ஷ்ரிதா சிவதாஸ் தன் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை செய்துள்ளார். ஆனாலும் அவருக்கு பெரிய ரோல் எல்லாம் இல்லை. மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் ஊர்வசி, மாஸ்டர் சிவசங்கர், ராமர், பிபின், விஜய் டிவி தனசேகர், பிரஷாந்த் ராஜ், சி.எம் கார்த்திக் ஆகியோர் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொருவராய் பொறுப்பேற்று காட்சிகளுக்கு வலுசேர்த்துள்ளனர்.

 

oorvasi dhilluku dhuddu



ராம் பாலா, லொள்ளு சபாவில் திரைப்படங்களை தரமாகவும், தரைமட்டமாகவும் ஸ்பூஃப் செய்து ரசிக்கவைத்த இயக்குனர். அவர் படமெடுத்தால் காமெடி வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை 'தில்லுக்கு துட்டு' படத்திலேயே சற்று உடைத்து வழக்கமான சந்தானம் ஸ்டைல் கிண்டல் காமெடியால் சிரிக்கவைத்து படத்தை வெற்றியாக்கினார். ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் பல இடங்களில் தரக்குறைவான 'A' வகை நகைச்சுவையை வைத்து படத்தை நிரப்பியிருக்கிறார். ஷபிரின் பின்னணி இசை மிரட்டலாக இருந்து கதையோட்டத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. தீபக்குமார் பதியின் ஒளிப்பதிவில் காட்சிளில் நல்ல தரம்.

இந்தக் கதை சீரியஸான ஒரு பேய் படமாகவே வெற்றி பெற்றிருக்கக் கூடிய கதை. ஆனால், காமெடி அதிகரித்ததால் திகில் குறைந்துள்ளது. காமெடி ஓரளவுக்கு காப்பாற்றியுள்ளது.

தில்லுக்கு துட்டு 2 - படம் பார்க்கும் நம் 'தில்லுக்கு' 'துட்டு' அவர்களுக்கு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இங்க நான் தான் கிங்கு' - கமல்ஹாசன் வெளியிட்ட கலர்ஃபுல் போஸ்டர்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
kamalhaassan released the poster of santhanam movie Inga Naan Thaan Kingu

நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை தொடர்ந்து தற்போது ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில் நடித்துள்ளார். சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  'இங்க நான் தான் கிங்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலர்ஃபுல்லாக இந்த போஸ்டர் அமைந்துள்ள நிலையில் வருகிற கோடைக்கு இப்படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தானத்தின் முந்தைய படங்கள் போல காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.

Next Story

“கடவுள் நம்பிக்கையை அரசியல் பண்றது தப்பு” - சந்தானம்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
santhanam about god beleif in  Vadakkupatti Ramasamy success meet

டிக்கிலோனா படம் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் யோகி, மீண்டும் சந்தானத்தை வைத்து இயக்கியுள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2 ஆம் தேதி வெளியானது. முன்னதாக ட்ரைலர் வெளியானபோது, அதில் இடம்பெற்ற ஒரு வசனம் பெரியாரை அவதிக்கும் வகையில் இருந்ததாக சர்ச்சையானது. பின்பு இசை வெளியீட்டில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என சந்தானம் விளக்கமளித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் சந்தானம், மேகா ஆகாஷ், கார்த்திக் யோகி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சந்தானம் பதிலளித்தார். அப்போது ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், “எந்த கோயிலாக இருந்தாலும் கடவுளை வச்சு காசு பண்றது தப்பு. அதே மாதிரி கடவுள் நம்பிக்கை வச்சு அரசியல் பண்றதும் தப்பு. இதைத்தான் படத்தில் காட்டியிருக்கோம். கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்களுக்கு இருக்கு. இல்லாதவங்களுக்கு இல்லை. அதனால் இரண்டு பேருக்குமே பொதுவாகத்தான் வச்சிருக்கோம். என்னை பொறுத்தவரையில் கடவுள் என்பது இருக்கு. நான் சாமி கும்புடுகிறவன். ஒரு ஆன்மீகவாதி” என்றார்.