maamanithan movie review

ஒரு மனிதன் எப்போது, எப்படி மாமனிதன் ஆகிறான் என்பதை யதார்த்தத்தோடு சொல்லமுயற்சித்துஇருக்கிறார் இயக்குநர்.

Advertisment

பண்ணை புரம்கிராமத்தில்ஆட்டோஓட்டுநராகஇருக்கும் விஜய் சேதுபதி, மனைவி காயத்ரி மற்றும் மகன், மகளோடு வாழ்ந்து வருகிறார். தன்னை போல் இல்லாமல் தன் பிள்ளைகளாவதுநன்றாகப்படிக்க வேண்டும் என்று எண்ணிய விஜய் சேதுபதி, தனதுபிள்ளைகளைப்பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடிவெடுக்கிறார். இதற்காகரியல்எஸ்டேட்தொழிலில் இறங்கும் விஜய் சேதுபதியை அவரது முதலாளிஏமாற்றிவிட்டுத்தலைமறைவாகி விடுகிறார். விஜய் சேதுபதியை நம்பி நிலத்தின் மேல் பணம் போட்ட ஊர்க்காரர்களும் ஏமாந்துவிடுகின்றனர். இதனால் விஜய் சேதுபதி தன்முதலாளியைத்தேடி ஊரை விட்டு ஓடி விடுகிறார். விஜய் சேதுபதியை நம்பி தனியாக நிற்கும் அவரது குடும்பத்தின் நிலைஎன்னவானது?முதலாளியைத்தேடிச்சென்றவிஜய் சேதுபதிஅவரை கண்டுபிடித்து மீண்டும் தன் குடும்பத்தோடு இணைந்தாரா? இல்லையா? என்பதே மாமனிதன் படத்தின் மீதி கதை.

Advertisment

தர்மதுரைபடத்திற்குப்பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்துதர்மதுரையில்கொடுத்த அதேவெற்றியைக்கொடுக்கசீனுராமசாமி முயற்சி செய்துள்ள இப்படம், அதில் வெற்றி பெற்றதா என்றால்கேள்விக்குறியே! படம் ஆரம்பம் முதல் இறுதிவரை எந்த இடத்திலும் திருப்பம் எதுவும் இல்லாமல்ஃபிளாட்டாகவேசென்று முடிவதால் ஆங்காங்கே சில இடங்களில் அயர்ச்சி ஏற்படுகிறது. அதேபோல் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று கணிக்கக் கூடிய வகையிலான காட்சிகள் படம் முழுவதும் நிரம்பி வழிவதால் படத்திற்கு அது பெரியமைனஸ்ஆக மாறியுள்ளது. மற்றபடி கதாபாத்திர தேர்வு மற்றும் காட்சி அமைப்புகள் பல இடங்களில் நெகிழ்ச்சியாக அமைந்துள்ளது படத்திற்குப்ளஸ்ஆக அமைந்துள்ளது.

குறிப்பாக விஜய் சேதுபதி குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் பல இடங்களில் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்து பார்ப்பவர் கண்களை ஆங்காங்கேகலங்கச்செய்துள்ளது. படத்தில் நடித்துள்ள முக்கியகதாபாத்திரங்களைச்சிறப்பாக வேலை வாங்கி உள்ளார்இயக்குநர்சீனுராமசாமி.ஒவ்வொரு படத்திலும் அந்தந்த கதாபாத்திரமாகவே மாரி அதற்கு உயிர் கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி. இதற்கு முன் வெளியான படங்களில்கேங்ஸ்டர்ஆகவும்,லவ்வர்பாய்ஆகவும் நடித்து கவனம் ஈர்த்த விஜய் சேதுபதி இப்படத்தில் தந்தையாக நடிப்பதைக் காட்டிலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் எனலாம்.

maamanithan movie review

காட்சிக்குகாட்சி உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்திநெகிழச்செய்துள்ளார் நாயகியாக நடித்துள்ள காயத்ரி.விஜய் சேதுபதிக்குமனைவியாகவும், இரண்டுபிள்ளைகளுக்குத்தாயாகவும் அந்த கதாபாத்திரத்திற்கு எந்த அளவு நியாயம் செய்ய முடியுமோஅதைச்சிறப்பாகச்செய்து கவனம் ஈர்த்துள்ளார். சின்ன சின்னஉணர்ச்சிகளுக்குக்கூட சிறப்பானமுகபாவனைகளைக்கொடுத்து, நடிப்பதே தெரியாதஅளவிற்குச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த கதாபாத்திரம்அவருக்குத்திருப்புமுனையாக அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. விஜய் சேதுபதியின் நண்பராக வரும் குரு சோமசுந்தரம் அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி உள்ளார். இவரது கதாபாத்திரம் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. கேரளாவில் டீ கடை நடத்தும் பெண்ணாக வரும்ஜுவல்மேரி,ரியல்எஸ்டேட்முதலாளியாக வரும்ஷாஜிசென்மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் கே.பி.ஏசி லலிதா,அனிகாஆகியோர் அவரவருக்கான வேலையைநிறைவாகச்செய்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கும் இப்படத்தில் பாடல்களைஇன்னமும்கூடசிறப்பாகக்கொடுத்திருக்கலாம். மற்றபடி பின்னணி இசையில் உணர்ச்சிகரமானகாட்சிகளைச்சிறப்பாகக்கையாண்டுநெகிழச்செய்துள்ளனர்.

சுகுமாரின்ஒளிப்பதிவில் இசைஞானி இளையராஜாவின் சொந்த ஊரானபண்ணை புரம்அழகாகக்காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வியாபார நோக்கத்தோடு மட்டும் எடுக்கப்படும் காட்சிகள் எதுவும் இன்றி மிகவும் எளிமையாகவும், ராவாகவும்படத்தைக்கொடுத்தஇயக்குநர்சீனு ராமசாமிஅதை இன்னமும்சுவாரஸ்யமாகக்கொடுத்திருக்கலாம்.

மாமனிதன் - சுவாரஸ்யம் குறைவு