Love Today Review

Advertisment

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படம் மூலம் தமிழ்சினிமாவைதன் பக்கம்திரும்பிபார்க்க வைத்தஇயக்குநர்பிரதீப்ரங்கநாதன் இயக்கி தானேஹீரோவாகநடித்து வெளியாகி உள்ள படம்லவ்டுடே. ஏற்கனவே இப்படத்தின்ட்ரெய்லர்வெளியாகி மிகுந்தவரவேற்பைபெற்ற நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இப்படம் அதேவரவேற்பைபெற்றதா...?

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிரதீப்பும், பிராமண பெண்மணியானஇவனாவும்காதலிக்கின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர்நன்றாகதெரிந்தும், புரிந்தும் வைத்துக் கொண்டுள்ளனர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் இவர்கள் காதல் விஷயம்இவானாவின்அப்பாசத்யராஜுக்குதெரிய வர அவர் இவர்களின்காதலுக்குபச்சைகொடி காட்ட ஒருகண்டிஷன்போடுகிறார்.

பிரதீப்பின்செல்போனைஇவானாவிடமும்,இவானாவின்செல்போனைபிரதீப்பிடமும்ஒரு நாள் முழுவதும் வைத்துகொள்ள கட்டளையிடுகிறார் சத்யராஜ்.இருவரும்செல்போனைமாற்றிக் கொள்கின்றனர். பிறகுஒருவரை பற்றி ஒருவருக்குமுழுமையாகதெரியும் என்று நம்பிக்கொண்டிருந்த இருவரும்செல்போனில்உள்ளவிஷயங்களைபார்த்தவுடன் அதிர்ச்சியடைகின்றனர். இதையடுத்து அவர்களுக்குள் இருந்த காதல்என்னவானது? இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

Advertisment

ஒருகதையாகபார்க்கும் பொழுதுபெரிதாகதெரியவில்லை என்றாலும், திரைக்கதையின் வழியாக எந்த மாதிரியான கதையையும் சுவாரஸ்யமாக சொல்லிவிடலாம் என்பதைநிரூபித்துகாட்டியிருக்கிறார்இயக்குநர்பிரதீப் ரங்கநாதன்.

இன்றைய இளைஞர்களின்பல்சைசரியாககணித்தது மட்டுமல்லாமல் அதைசரியாகப் பிடித்துசிறப்பான திரைக்கதை மூலம் ஜனரஞ்சகமான படத்தைக்கொடுத்துபடத்தைகரை சேர்த்தது மட்டுமல்லாமல்தியேட்டரில்கை தட்டல்களை அள்ளி இருக்கிறது இந்தலவ்டுடேதிரைப்படம்.குறிப்பாககாதல் காட்சிகளிலும் சரி, குடும்ப சம்பந்தப்பட்டசென்டிமென்ட்காட்சிகளிலும்சரி, காமெடிகாட்சிகளிலும் சரி, சரியான அளவில் சரியான காட்சி அமைப்புகள் மூலம்தியேட்டரைகைதட்டல்கள் மூலம்அதிரச் செய்துள்ளார்இயக்குனர்பிரதீப்.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் அயர்ச்சி ஏற்படாதவாறு சிறப்பான திரைக்கதை மூலம் படம் வேகம் எடுத்துஜெட்போல் பயணித்து நிறைவானகிளைமாக்ஸ்காட்சியோடு முடிவடைந்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு காட்சிக்கு இடையே நடக்கும்டிரான்ஸ்சிஷனைசிறப்பாக அமைத்து ஒரு திரைக்கதை எப்படி இருக்க வேண்டுமோஅப்படிசிறப்பாக அமைத்து காட்சிகளுக்குள் இருக்கும் அழுத்தங்களையும் உணர்ச்சிகளையும் சிறப்பாகவெளிப்படுத்திக் காட்டிபீல்குட்ரொமாண்டிக்காமெடிமூவியாக இப்படம் வெளியாகி ரசிகர்களின்எதிர்பார்ப்பைபூர்த்தி செய்துள்ளது.

Advertisment

நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ்,பாக்யராஜ்போன்றவர்களைமிக்ஸ்செய்து நடித்து புதுமுகம் என்றஉணர்வைதர மறுக்கும் அளவுக்குசிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இப்படத்தின்இயக்குநரும், நாயகனுமான பிரதீப் ரங்கநாதன். சின்ன சின்ன முக பாவனைகள் மூலமும் வசன உச்சரிப்பு மூலமும் அளவானநடிப்பைசிறப்பாக வெளிப்படுத்திதியேட்டரில்கைதட்டல் பெற்று ரசிகர்களிடையே கவனமும் பெற்றுள்ளார். இவருக்கு இயக்கம் மட்டுமல்லாது நடிப்பிலும் பெரிய எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.

நாயகன் பிரதீப்புக்குஇணையாகசரியானடப்கொடுத்து நடித்திருக்கிறார் நாயகிஇவானா. எந்த இடத்தில் அனுதாபமான நடிப்பு வேண்டுமோ அந்த இடத்தில் அனுதாபத்தையும், எந்த இடத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் அழகாக அந்த நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை நாச்சியார் படத்திற்குப் பிறகு கவனம் பெற்றுள்ளார்.

இவரின் எதார்த்தமான நடிப்பும் அழகான வசன உச்சரிப்பும்படத்திற்குபக்கபலமாக அமைந்துள்ளது.இவானாவின்தந்தையாக வரும் சத்யராஜ் தனதுட்ரெட் மார்க்கானநக்கல் நையாண்டி கலந்தநடிப்பைசிறப்பாக வெளிப்படுத்தி திரைக்கதைக்கு வலு சேர்த்து இருக்கிறார். இவரைப் போலவே பிரதீப்பின் அம்மாவாக நடித்திருக்கும்ராதிகாகாட்சிக்குகாட்சி கைத்தட்டல் பெறும் வகையில்நடித்துபல இடங்களில் சிரிப்பலையை உண்டாக்கி இருக்கிறார். இவரின் அனுபவ நடிப்பு காட்சிகளுக்கு வேகம் சேர்த்து உள்ளது.

பிரதீப்பின் அக்காவாக நடித்திருக்கும்ரவீனாமற்றும் மாமாவாக நடித்திருக்கும் யோகிபாபுஆகியோர் இன்னொரு பக்கம் சிறப்பான நடிப்பை அளவாக வெளிப்படுத்தி காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளனர். கூடவே நண்பர்களாக நடித்திருக்கும் ஆஜித், கதிர், பாரத்ஆகியோர் தனது பங்குக்கு அவரவருக்கானவேலையைசிறப்பாகசெய்துவிட்டுசென்றிருக்கின்றனர்.

பாடல்களைகாட்டிலும் பின்னணி இசையில்பட்டையைகிளப்பி இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. ஒவ்வொரு காட்சிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த உணர்ச்சிகளை தன் இசை மூலம் சிறப்பாக வெளிப்படுத்திதியேட்டரில்மீண்டும் ஒருமுறை கைத்தட்டல் பெற்றுள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் காதல், குடும்பம்,காமெடிகாட்சிகள்சிறப்பாககாட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முதல் படத்தில் ஜெயம் ரவி போன்ற பெரியஹீரோவைவைத்துபடத்தை இயக்கி, அதில் வெற்றி பெற்ற ஒருஇயக்குநர், தனது இரண்டாவது படத்தில் தன்னையே கதாநாயகன் ஆக்கி அதில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் இதை ஒரு எளிய கதை மூலம்சிறப்பாகதிரைக்கதை அமைத்து, அதை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி செய்து மிகப்பெரிய டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்துகாட்டி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்இயக்குநர், நடிகர் பிரதீப் ரங்கநாதன்.

லவ்டுடே-பிளாக்பஸ்டர்!