‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கராத்தே பாபு’. இப்படத்திற்கு இணை எழுத்தாளராக ரத்ன குமார், பாக்கியம் சங்கர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக தாவூதி ஜிவால் நடித்துள்ளார். இவரை தவிர்த்து சக்தி வாசுதேவன், கே எஸ் ரவிக்குமார், நாசர், டிடிவி கணேஷ், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். 

Advertisment

இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. நாயகன் ரவி மோகன் டப்பிங் பணிகளை தொடங்கினார். தொடர்ந்து படத்தின் டீசர் அப்டேட் போஸ்டருடன் வெளியாகியது. அதில் இத்திரைப்படத்தில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே, எந்த தனிநபரையும் குறிப்பிடவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முன்னதாக ஒரு நிகழ்வில் ரவி மோகன், அமைச்சர் சேகர் பாபு படத்தின் தலைப்பை கேள்விபட்டு நான் தான் அந்த பாபு என கூறியதாக தெரிவித்திருந்தார். அதனால் அதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது போல் கூறப்பட்டது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் சட்டசபையில் ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் வாக்குவாதம் நடக்கிறது. பின்பு ரவி மோகன் கதாபாத்திரத்தை சிலர் கொலை செய்ய முயற்சிப்பது போல் காட்சிகள் வருகிறது. பின்பு அவர் கேங்கிற்கும் இன்னொரு கேங்கிற்கும் மோதல் நடப்பது போலவும் இறுதியில் யார் வென்றாகள் என்பதை மையப்படுத்தி அரசியல் ரிவெஞ் ட்ராமாவாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இதில் ரவி மோகன் பேசும், ‘நீ உன் தொழிலுக்காக அரசியல் பன்றவன், நான் அரசியலையே தொழிலா பன்றவன்’ வசனம் ஹைடைட்டாக அமைந்துள்ளது. கோடையில் படம் வெளியாகிறது.